இலங்கையர்களுக்கு இத்தாலியில் தொழில்வாய்ப்பு !

இத்தாலியில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக இலங்கைத் தொழிலாளர்களுக்கான புலம்பெயர் தொழிலாளர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை துரிதப்படுத்துவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கும் அந்நாடு இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முதன்மையான பங்களிப்பு சுற்றுலாத் துறை எனவும், அது இத்துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் எனவும் இத்தாலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *