மேல் மாகாண சபைத் தேர்தலை இலக்காக வைத்து எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்திற்கு சேறுபூசும் வகையில் இனவாத சுவரொட்டிகளை வெளியிட ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு குழுவினர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார்.
இந்த சுவரொட்டிகளை அரசாங்கம் வெளியிடும் சுவரொட்டிகள் போல் வெளியிடுவதற்கு அவர்கள் திட்டமிட்டிருப்பதும் தெரியவந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேல் மாகாண சபைக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார செய்தியாளர் மாநாடு கொழும்பு – 7 யிலுள்ள மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில், மேல் மாகாண சபைக்கான ஐ.ம.சு. முன்னணியின் தேர்தல் பிரசாரம் வெற்றிகரமான முறையில் மூன்று மாவட்டங் களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த மாவட்டங்களில் ஐ.ம.சு. முன்னணியின் தேர்தல் பிரசாரத்திற்குப் போட்டியாக ஐ.தே.க. வோ, ஜே.வி.பி. யோ கிடையாது.
ஐ.தே.க.வுக்குள் உட்கட்சி பூசல் காரணமாக அக்கட்சித் தலைவரால் கூட தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டிரு க்கிறது. இதனால் ஐ.தே.க.வின் பிரதேச மட்ட கட்சியின் செயற்பாட்டாளர்கள் தேர்தல் நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியு ள்ளனர். அனேகர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்கின்றனர். ஜே.வி.பியின் தீவிர செயற்பாட்டாளர்கள் கூட ஐ.ம.சு. முன்னணிக்கு ஆதரவான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
மேல் மாகாண சபைக்கான ஐ.தே.க.யி னதும், ஜே.வி.பி. யினதும் பிரசார நடவடிக்கைகள் பாரிய பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் தான் அரசாங்கத்தினதும், ஐ.ம.சு.முன்னணியினதும் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலான இனவாத சுவரொட்டிகளை அரசாங்கம் வெளியிடுவது போன்று வெளியிட ஐ.தே.க.வின் ஒரு குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர்.
மேல் மாகாணத்தில் வாழுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை இலக்காக வைத்தே இப்படியான சேறுபூசும் சுவரொட்டிகளை வெளியிட அவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். இந்த விடயத்தில் மக்கள் விழிப்பாக இருப்பது அவசியம் என்றார். இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்கள் தினேஷ் குணவர்தன பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.