தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் சமர்பிப்பேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதேநேரம் ஆசியாவில் ஊழல் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இலங்கை உளளதாகவும் – ஊழல் தொடர்பான IMF விசாரணைகள் இலங்கையில் நடந்தே தீரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.