“பயிர்களை மேயும் ஆசிரியர்கள் என்ற வேலிகள் ” – பாடசாலை மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்று வன்புணர்வு செய்த பாடசாலை ஆசிரியர் !

மாணவியொருவரை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம், அம்பாந்தோட்டை – மயூரபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மாணவியின் தந்தை வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், அம்பாந்தோட்டை துறைமுக காவல்துறையினரால் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 28 ம் திகதி பாடசாலைக்குச் செல்வதாகக் கூறிச்சென்ற குறித்த சிறுமி வீடு திரும்பாததால் அவரது தந்தை இது குறித்து விசாரித்துள்ளார்.

மாணவி பல்லகஸ்வெவ சந்தியில் மகிழுந்து ஒன்றில் ஏறிச் செல்வதைக் சிலர் கண்டதாக தந்தைக்கு கூறியுள்ளனர்.

இந்தநிலையில், மாணவியைத் தேடி பெற்றோர் பல்லகஸ்வெவ சந்திக்கு சென்றபோது, ​​அவர் வீடு திரும்பியுள்ளார்.

பின்னர், மாணவியிடம் நடத்திய விசாரணையின்போது, ஆசிரியர் ஒருவர் தன்னை விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய பாடசாலை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது போன்ற பல முறைப்பாடுகள் அடுத்தடுத்து இலங்கையின் பல பகுதிகளிலும் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் முல்லைத்தீவில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களை வாங்கி கொடுத்து அந்த மாணவர்களூடாக சக வகுப்பு மாணவிகளூ வன்புணர்வுக்கு உட்படுத்தி காணொளியாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் 05.03.2023 அன்று  கைது செய்யப்பட்டிருந்தார்.

இது போல் இந்த வருடம் ஜனவரி மாதம் ஹொரவபொத்தானை பகுதியில் 10 வயதான சிறுமியை பலவந்தப்படுத்தி தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவமும் நினைவில் கொள்ளத்தக்கது.

இதே போல பத்து வயது  மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தெரிவித்து பாடசாலை ஆசிரியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் 46 வயதான ஆசிரியரே கைது செசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பிரச்சினைகளுக்கான இறுக்கமான தண்டனைகள் எதுவும் இல்லாமை தான் ஆசிரியர்கள் சுதந்திமாக இந்த பாலியல் சேட்டைகளில் ஈடுபட முக்கியமான காரணமாகும். கடந்த 2016ல் யாழ்ப்பாணம் பெரிய புலம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளின் போது அதிபர் கூட கைது செய்யப்பட்டு இருந்தார். ஆனால் அதன் பின்பு அந்த வழக்கு என்ன ஆனது..? என்ற பேச்சே இல்லாமல் போய்விட்டது.

இது போல ஆசிரியர்களின் மாணவிகள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான பல செய்திகள் உடனடியாக வெளிவந்தாலும் கூட குறித்த ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகள் எத்தகையதாக உள்ளது என அறியவே முடிவதில்லை.

இப்படியாக அரச அதிகாரிகள் என்ற பெயரில் ஆசிரியர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி ஆசிரியர் சங்கம் போராடுவதாக இதுவரை தெரியவில்லை. இந்த ஆசிரியர்கள் தான் ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையை உருவாக்க போகிறார்கள் என பெற்றோர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எதிரான இறுக்கமான சட்டங்கள் கொண்டுவரப்படும் வரை இங்கு எதுவும் மாறப்போவதில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *