ஒரை மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் 170 மில்லியன் அமெரிக்க டொலர்கள் !

பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் இலங்கையின் வருமானம் 170 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இது ஜனவரி மாத புள்ளிவிவங்களை விட 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாகும்.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, பெப்ரவரி 2022 இல், சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் இலங்கைக்கு 169 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன.

இதற்கிடையில், ஜனவரி 2023 இல் 102,545 வருகைகள் மற்றும் 2022 பெப்ரவரியில் 96,507 பதிவு செய்யப்பட்ட சுற்றுலா பயணிகளின் வருகையுடன் ஒப்பிடுகையில், பெப்ரவரி 2023 இல் 107,639 ஆக அதிகரித்துள்ளது.

ரஷ்யா, இந்தியா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவை பெப்ரவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான முக்கிய ஆதார நாடுகளாக இருந்தன.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, மார்ச் மாதத்தில் ஏற்கனவே 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அதன்படி, இந்த வருடத்தின் மூன்று மாதங்களிலும் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *