தந்தையை வெட்டிப் படுகொலை செய்த 17,19 வயது மகன்கள் – யாழ்ப்பாணத்தில் கொடூரம் !

மிருசுவிலில் நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் உதவி காவல் கண்காணிப்பாளர் ஜரூளின் கட்டளைக்கு இணங்க யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவை சேர்ந்த காவல் பரிசோதகர் மேனன், உப பரிசோதகர் பிரதீப் ஆகிய காவல்துறை அதிகாரிகளின் தலைமையில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையிலேயே உயிரிழந்தவரின் இரண்டு மகன்களையும் இவர்களது நண்பனையும் கைதுசெய்து கொடிகாம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு கைதானவர்கள் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் 17 மற்றும் 19 வயதுடைய மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையின் விசாரணைகளின் போது, தந்தை தங்களோடு மோசமாக நடந்து கொண்டதாலேயே அவரைக் கொலை செய்துள்ளதாக  மகன்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் மிருசுவில் கரம்பகம் எல்.ஆர். தோட்டத்தில் இன்று பின்னிரவில் தோட்டக் குடிசையில் தங்கியிருந்த குடும்பஸ்தர் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய சிவசோதி சிவகுமார் என்ற குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டிருந்தார். இவர் கடந்த இரண்டரை வருடங்களாக மனைவியை பிரிந்து தோட்டக் குடிசையிலேயே தனிமையில் வாழ்ந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே அவர் தங்கியிருந்த குடிசையில் வைத்தே அவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையின் விசாரணைகளின் போது சம்பவ இடத்திற்கு சென்ற சாவகச்சேரி நீதவான் ஏ.யூட்சன், மரண விசாரணையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *