கடந்த ஐந்து நாட்களில் வாகன விபத்துக்களினால் 25 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஐந்து நாட்களில் 265 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வாகன சாரதிகள், குறிப்பாக இளைய சாரதிகள் வாகனத்தை கையாளும் போது கவனமாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.