தனது மகளின் தலையில் அசிட் ஊற்றிய தந்தை !

தனது மகளின் தலையில் அசிட் ஊற்றிய தந்தைக்கும் பட்டதால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவரது  மகளும்வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் அதிக மது அருந்தி காணப்பட்டமையும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

குறித்த நபர் அதிக மதுபோதையில் வீட்டுக்குச் சென்று தனது  மகள் மற்றும் குடும்பத்தினரை துன்புறுத்துவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர் 25 வயதுடைய பெண்  என்பதுடன் சந்தேகநபர் 52 வயதுடையவராவார்.

சந்தேக நபர் புலத்சிங்கல பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றுபவர் என்பதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *