வாள்வெட்டில் ஈடுபட்ட மகனை மீட்க பொலிஸ் அதிகாரிக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட தாய் கைது !

வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் கைதான மகனை விடுவிப்பதற்காக பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்க முட்பட்ட   தாய் கைது செய்யப்பட்டுள்ளார் .

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்

கடந்த 21 ம் திகதி ஏறாவூர் பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  ஐயங்கேணி மற்றும் வந்தாறுமூலை சேர்ந்த இரு  குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக

இதன் போது  இருவருக்கு வாள்வெட்டு  காயம் ஏற்பட்டுள்ளது.

ஐயங்கேணி பகுதியிலிருந்து தாக்குதலுக்கு சென்று கைவிட்டு தப்பியோடிய மோட்டார் சைக்கிளை மட்டக்களப்பு – கொழும்பு  ரயில் தண்டவாளத்தில்  தீயிட்டு கொளுத்தியமை காரணமாக மட்டக்களப்பு -கொழும்பு   ரயிலானது 9 நிமிடம்  தாமதித்து  சென்றுள்ளது

இந்த சம்பவங்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  எதிரிமான்ன ஆலோசனைக்கு அமைய  ஏறாவூர் பொலிஸ்  நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ்  பரிசோதகர் யோ .விஜயராஜா தலைமையில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில்

மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்திய சந்தேக நபர்கள் நால்வரும் வாளால் வெட்டி காயம் ஏற்படுத்திய மூவரும் அன்றைய தினமே கைது செய்யப்பட்டு ஏறாவூர் நிதீமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் .

மேலும்  வாளால் வெட்டிய சம்பவம் தொடர்பில் நேற்று 23 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார் . இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விடுவிப்பதற்காக அவரது  45 வயது மதிக்கத்தக்க  தாய் மற்றும் 23 வயது மதிக்கத்தக்க மற்றுமொருவரும்  ரூபா 20 ஆயிரம் பணத்தை  பொலிஸ் பரிசோதகர்  வை. விஜயராஜாவிற்கு  இலஞ்சமாக வழங்கி  கடமைக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ்விருவரும்  கைது செய்யப்பட்டதுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை  மேற்கொணடு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *