பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரை  விற்பனை செய்தவர் கைது !

பாடசாலை மாணவர்களுக்கும் மேலதிக வகுப்பு மாணவர்களுக்கும் கஞ்சா கலந்த போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை  விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில்  ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடம் காணப்பட்ட  கஞ்சா கலந்த 25 போதைப்பொருள், 202 போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக நம்பப்படும்  20,500 ரூபா பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப்படை தலைமையக முகாமின்  விசேட அதிரடிப்படை பிரிவு (கொழும்பு வலயம்) அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பு   மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *