இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2,090 கிலோ கஞ்சாவை மதுரையில் பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆந்திராவில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு முதல் கடத்தி வரப்பட்ட 2,090 கிலோ கஞ்சாவை மதுரை நகர பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

குறித்த கஞ்சா தொகையானது இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளது.

ராஜ்குமார் மற்றும் ஜெயக்குமார் என அடையாளம் காணப்பட்ட இரண்டு கஞ்சா வியாபாரிகளை மதுரை நகர பொலிஸார் தேடி வந்ததாக பொலிஸ் துணை ஆணையர் (மதுரை வடக்கு) பி.கே. அரவிந்த் தெரிவித்துள்ளார்.

இரகசிய தகவலின் பேரில், கீரைத்துறையில் இருந்து வந்த பொலிஸார், ரிங் வீதியில் வாகனங்களை சோதனை செய்து, ஒரு காரை மறித்துள்ளனர். அந்த வாகனத்தில் 40 கிலோ கஞ்சாவை கண்டுபிடித்த பொலிஸார் , எல்லீஸ் நகரை சேர்ந்த பி.ராஜ்குமார் (33) என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பண்ணையில் 2 ஆயிரம் கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தலைமை பொலிஸ் அதிகாரி ஜி.பெத்துராஜ் தலைமையிலான பொலிஸார் , பண்ணையை சோதனையிட்டதில், பிக்-அப் வேனில் கடத்தப்பட்ட பொருட்களை கண்டுபிடித்தனர்.

மேலும், ஜீவா நகரைச் சேர்ந்த கே.சுகுமாரன் (27), தூத்துக்குடியை சேர்ந்த ஆர்.ராஜா (33), பி.சுடலைமணி (21), எம்.மகேஷ்குமார் (29), எம்.முத்துராஜ் (26) ஆகிய 5 பேரையும் போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். .

ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வரவழைக்க ஜெயக்குமார் ஏற்பாடு செய்து, அரோன் என்பவர் மூலம் தூத்துக்குடி கடலோரப் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர். மேலும் இந்த போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த முயன்றுள்ளனர்.

இதேவேளை ஜெயக்குமார் மற்றும் அரோனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அப்போது, ​​லொரியில் 50 கிலோ கஞ்சா வைத்திருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

மேலும், மூன்று வாகனங்களில் இருந்து, எட்டு மொபைல் போன்கள், வைஃபை மற்றும் பணம் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் மீது போதைப்பொருள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *