இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – புதிதாக 8 பேர் அடையாளம் !

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவளை நாட்டில் கடந்த 12ஆம் திகதி இரண்டு கொரோனா மரணங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும் நேற்று (சனிக்கிழமை) 08 பேர் கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் 672,283 பேர் கொரொனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே நேரம் அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனம் ஙகொரோனா அச்சுறுத்தல் தொடர்பான அவசர நிலை முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *