இலங்கையில் கவனிப்பில்லை – அன்பளிப்பு யானையை மீளப்பெற்றது தாய்லாந்து !

இருபது வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சக் சுரின் என்ற யானை நோய்வாய்ப்பட்டு மோசமான உடல் நிலைமையை கொண்டிருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக ஜூலை மாதம் தாயகம் திரும்பவுள்ளது.

இதற்காக புதிய கூண்டு கட்டப்பட்டு விமான ஏற்பாடுகள் முடிந்த பிறகு ரஷ்ய விமானம் ஒன்றில் ஜூலை முதலாம் திகதியன்று சக் சுரின் இலங்கையிலிருந்து புறப்படவுள்ளது.

சக் சுரின் என்ற ஆண் யானைக்கான கூண்டு உட்பட அனைத்தும் தற்போது தயாராகிவிட்டதாக தாய்லாந்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சனா சில்பா ஆர்ச்சா தமது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நோய்வாய்ப்பட்ட யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக தாய்லாந்து கால்நடை மருத்துவர்கள் குழு ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இதன்போது சங்கிலியால் பிணைக்கப்பட்டு நிகழ்வுகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுவதால் இந்த யானை நோய்வாய்ப்பட்டதாக குறித்த மருத்துவக்குழு கண்டறிந்து அதனை சிகிச்சைக்காக தாய்லாந்துக்கு கொண்டு செல்லும் பரிந்துரையை செய்திருந்தது. இதற்கமைய சக் சுரின் என்ற யானை மீண்டும் சிகிச்சைக்காக தாயகம் திரும்பவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *