யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது !

யாழ். நகரில் அண்மையில் இரவு வேளை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு வாள்வெட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 மற்றும் 20 வயதுடைய கொக்குவில் மற்றும் சுதுமலை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் கடை மூடப்பட்டிருந்த நிலையில், குறித்த இளைஞர்கள் கடையில் யூஸ் தருமாறு கோரியதாகவும் கடை பூட்டியதன் காரணமாக உரிமையாளர் தர மறுத்ததன் காரணமாக ஏற்பட்ட தகராறு காரணமாக தாக்குதல் மேற்கொண்டதாக கைதுசெய்யப்பட்ட நபர்கள் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலை 6 பேர் கொண்ட குழு மேற்கொண்டதாகவும் அதில் மூவர் தலைமறைவாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *