5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுதலை !

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றக்கு அழைத்து செல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்திற்கு காவல் நிலைய பொறுப்பதிகாரியின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு சரீர பிணை வழங்கப்பட்டுள்ளது.

மருதங்கேணி சம்பவம் தொடர்பில் கைதான கஜேந்திரகுமார் எம்.பி. 5 லட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அதே நேரம் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  அவரை விடுவிக்க கோரி இன்றையதினம்(07.06.2023) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கட்சி ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், வாய்களில் கருப்பு துணிகளை கட்டி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் முகமாக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *