இலங்கை சிறைகளில் 259% ஆக எகிரிய நெரிசல்!

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 11,762 கைதிகள் மட்டுமே அடைக்கப்படக்கூடிய சிறைச்சாலைகளில் தற்போது 26,791 கைதிகள் உள்ள நிலையில், சிறைச்சாலைகளில் நெரிசல் 259% ஆக அதிகரித்துள்ளதாக பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.

சில சிறைகளில் நெரிசல் 300 முதல் 400% வரை அதிகரித்துள்ளதாக சமீபத்தில் கோபா குழு தெரிவித்துள்ளது.

அனைத்து சிறைச்சாலைகளிலும் 11,762 கைதிகளை மட்டுமே அடைக்க முடியும் என்ற போதிலும், 26,791 கைதிகள் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

17,502 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளடன் , 9,289 பேர் தண்டனைக் கைதிகளாக உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

1,309 கைதிகள் நீதிமன்றங்கள் விதித்த அபராதத் தொகையைச் செலுத்த முடியாமல் சிறைகளில் வாடுவதும் தெரியவந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *