“நல்லிணக்க ஆணைக்குழு குறித்த இறுதி நகல்வடிவம் கூட்டமைப்பிடம் சமர்ப்பிக்கப்படும்.” – நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்த இறுதி நகல்வடிவை அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பிடமும் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமும் சமர்ப்பித்த பின்னர் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளதுடன் நகல்வடிவு அடுத்தமாத இறுதிக்குள் தயாராகிவிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் அனுமதியளித்ததும் ஆணைக்குழு டிசம்பர் மாதம் முதல் செயற்பட ஆரம்பிக்கும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 53 வது அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நடவடிக்கைகள் துரிதமாக்கப்பட்டுள்ளன,.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *