ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு எதிராக போராட்டம் – விமல் வீரவன்சவை கைது செய்ய உத்தரவு !

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பிடியாணை பிறப்பித்துள்ளது. இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது 2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராத் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, ​​விமல் வீரவன்ச இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார். இந்தநிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 11ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *