குருந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரையை பார்வையிட்டார் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி!

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையினை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

நீதிபதியுடன், சட்டமா அதிபர் திணைக்களத்தினர், பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்கள் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

குருந்தூர் மலைக்கு நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா காவல்துறையினர் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தின் எழுத்துமூல அறிக்கைக்காக வழக்கு விசாரணைகளை 2023.08.08 ஆம் திகதிக்கு தவணையிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *