இணைய வழி பிரமிட் திட்டத்தால் நேர்ந்த விபரீதம் – பாடசாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்த ஆசிரியர்!

அம்பாந்தோட்டையில் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விடயம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

38 வயதான ஸ்ரீநாத் தர்ஷன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

கரஸ்முல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலையின் விளையாட்டு அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இணையத்தின் மூலமாக பிரமிட் திட்டத்தில் சிக்கி பணத்தை இழந்த ஆசிரியர், இவ்வாறு தற்கொலை செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இவர் வரஸ்முல்ல பலலேகந்த வடக்கு, கனுமுல்தெனிய பாடசாலையில் விளையாட்டு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த முதலாம் திகதியில் இருந்து காணாமல் போயிருந்த அவர், ​​விளையாட்டு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் கரஸ்முல்லை அறிவித்ததன் பேரில் காவல்துறையினர் சென்று சடலத்தை அகற்றியுள்ளனர்.

இந்த ஆசிரியர் இறப்பதற்கு முன்னர் சிவப்பு பேனாவால் எழுதிய கடிதம் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கவர்ச்சிகரமான வட்டிக்காக சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் பெருமளவு பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும், பணம் கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்துள்ளதாகவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 

மேலும் பிரமிட் திட்டத்தில் அதிக பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும் பலன் கிடைக்காவிட்டால் உயிரை மாய்க்கவுள்ளதாகவும் ஒரு மாதத்திற்கு முன்பு நண்பரிடம் கூறியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதேசமயத்தில், இவர் பிரமிட் திட்டத்தில் பணம் முதலீடு செய்திருப்பது அவரது மனைவி அல்லது உறவினர்களுக்கு தெரியாது.

இது தொடர்பான தகவல்களை கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கரஸ்முல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அம்பாந்தோட்டை பிரதேசத்தில் பலர் இந்த சட்டவிரோத பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களில் காவல்துறை உத்தியோகத்தர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

பணத்தை முதலீடு செய்த பலர் பணத்தை இழந்துள்ளதாகவும், இது தொடர்பாக காவல்துறையினருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தங்காலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்னவின் ஆலோசனையின் பேரில் கரஸ்முல்ல காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *