செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச தலைவர் இலங்கை விஜயம்

jakob-kellenberger.jpgசர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜகொப் கௌன்பேக்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவின் விசேட அழைப்பினை ஏற்று இலங்கை வந்த ஐ.சி.ஆர்.சி. தலைவருடன் சங்கத்தின் தெற்காசிய நடவடிக்கைகளுக்கான பிரதம அதிகாரி ஜக்குவாஸ் டி மையோவும் இலங்கை வந்துள்ளார்.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை வந்த ஐ.சி.ஆர்.சி. குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைவரம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் செயற்பாடு என்பன தொடர்பில் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், வடக்கில் போர் இடம்பெற்று வரும் சூழலில் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பான ஐ.சி.ஆர்.சி. வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு அமைச்சர் ரோஹித பாராட்டுத் தெரிவித்துள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பல்லி
    பல்லி

    இது வன்னிக்காயின் நல்ல பிரயாணம்.
    கொழும்புக்காயின் தேவையற்ற பயணம்.

    Reply