கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்றவர் மரணம் !

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் 1 மற்றும் 2ஆம் கட்ட மனித பரிசோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

மேலும், இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் இறுதிகட்ட மருத்துவ பரிசோதனை இங்கிலாந்து, இந்தியா, பிரேஸில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த பரிசோதனையில் ஆயிரக்கணக்கான தன்னாவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பிரேஸில் நாட்டில் ஒக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்துள்ளார். ரியோ டி ஜெனிரோ நகரில் வசித்துவந்த 28 வயதுடைய தன்னார்வளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால், அந்த தன்னார்வலர் உயிரிழந்ததற்கான காரணங்கள் குறித்து பிரேஸில் அரசோ, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமோ, அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனமோ எந்த பதிலும் அளிக்கவில்லை.

மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரனை நடத்த பிரேஸில் சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தடுப்பூசி பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஆனால், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்த விவகாரம் குறித்து பதிலளிக்கவில்லை.

எவ்வாறிருப்பினும் பிரேஸிலில் ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

அச்சுறுத்தும் கொவிட் 19 – கொரோனா பாதிப்பால் பார்வையை இழந்த 11வயது சிறுமி!

டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தனது கொரோனா வைரஸ் நோயாளியான 11 வயது சிறுமி ஒருவருக்கு மூளை நரம்பு பாதிப்பைத் ஏற்பட்டு உள்ளது என்றும் இது அவரது பார்வை மங்கலாகிவிட்டது எனவும் கூறி உள்ளது.
குழந்தை நரம்பியல் பிரிவு மருத்துவர்கள் சிறுமியின் உடல்நிலை குறித்து ஒரு அறிக்கையைத் தயாரித்து வருகிறார்கள். அது விரைவில் வெளியிடப்படும்.
இதுகுறித்த வரைவு அறிக்கை கூறியதாவது:-
11 வயது சிறுமி ஒருவர் கொரோனா நோய்த்தொற்றால்தூண்டப்பட்ட அக்யூட் டெமிலினேட்டிங் நோய்க்குறி (ஏடிஎஸ்) இருப்பதைக் கண்டுபிடித்தோம். குழந்தை வயதினரிடையே பதிவான முதல் பக்கவிளைவு இதுவாகும் என்று கூறியுள்ளது.
குழந்தை நரம்பியல் பிரிவின் தலைவர் டாக்டர் ஷெபாலி குலாட்டி கூறியதாவது:-
இந்த சிறுமி பார்வை இழப்புடன் எங்களிடம் வந்தார் எம்.ஆர்.ஐ  சோதனை ஏ.டி.எஸ் பாதிப்பை காட்டியது, இது ஒரு புதிய பக்கவிளைவாகும். இருப்பினும், வைரஸ் மூளை மற்றும் நுரையீரலை பெரும்பாலும் பாதிக்கிறது என்பதை இப்போது நாம் அறிவோம்.
ஏடிஎஸ் என்பது  நரம்புகள் மெய்லின் எனப்படும் பாதுகாப்பு அடுக்குடன் மூடப்பட்டிருக்கும், இது மூளையில் இருந்து வரும் செய்திகளை உடலின் வழியாக விரைவாகவும் சுமுகமாகவும் நகர்த்த உதவுகிறது.
மெய்லின் பாதிப்பால் மூளை சமிக்ஞைகளை சேதப்படுத்தும் மற்றும் பார்வை, தசை இயக்கம், புலன்கள், சிறுநீர்ப்பை மற்றும் குடல் இயக்கம் போன்ற நரம்பியல் செயல்பாடுகளின் வரம்பை பாதிக்கும் என கூறப்படுகிறது.

நான்கு கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு – அமெரிக்காவில் 83 இலட்சமாக அதிகரித்தது !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது . தற்போது உலகின் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.99 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.98 கோடியைக் கடந்தது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 71 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11.14 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதே நேரத்தில் அமெரிக்காவில் மேலும் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 83 லட்சத்தைக் கடந்துள்ளது. அங்கு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 24 ஆயிரத்து 277 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 54 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகில் 11 லட்சத்தைக் கடந்தது கொரோனா உயிர்ப்பலி !

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ்  தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள நிலையில் இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.91 கோடியைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.92 கோடியைக் கடந்தது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 லட்சத்தைக் கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மாதந்தோறும் 1½ கொரோனா தடுப்பூசியை கோடி தயாரிக்க ரஸ்யா முடிவு !

நாளுக்கு நாள் வேகமாக பெரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த வழி தெரியாது உலக நாடுகள் ஒருபுறம் திணறிக்கொண்டிருந்தாலும் கூட சிலநாடுகள் கொரோனாவுக்கான மருந்தை உருவாக்கும் முயற்சியில் இறுதிக்கட்ட நிலையில் உள்ளன.

இந்நிலையில் ரஸ்யா தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் முன்னணியிலுள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக ‘ஸ்புட்னிக்-வி’ என்ற தடுப்பூசியை ரஸ்யா உருவாக்கி, அதன் இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையை நடத்தி வருகிறது.

இந்த தடுப்பூசியை நவம்பர் மாதம் 8 லட்சம் ‘டோஸ்’, டிசம்பர் மாதம் 15 லட்சம் ‘டோஸ்’, ஜனவரியில் 30-35 லட்சம் ‘டோஸ்’ தயாரிக்க ரஸ்யா திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் வசந்த காலத்தில் (மார்ச், ஏப்ரல், மே) தடுப்பூசி தயாரிப்பை மாதந்தோறும் 1½ கோடி ‘டோஸ்’ அளவுக்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தொழில், வர்த்தக மந்திரி டெனிஸ் மந்துரோவ் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் கொரோனா தொற்று 6 லட்சத்தைக் கடந்தது – 3 அடுக்கு பொதுமுடக்கம் அமுல் !

பிரித்தானியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 6 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை 42,875 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிப்பு அடைந்துள்ளோர் பட்டியலில் பிரித்தானியா 12-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் 3 அடுக்கு பொது முடக்கத்தை அமல்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
தொற்று விகிதங்களைப் பொறுத்து நடுத்தரம், அதிகம் மற்றும் மிக அதிகம் என 3 அடுக்குகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
முதல் அடுக்கு: கொரோனா பாதிப்பு நடுத்தரம்
இங்கு பார்கள், விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு இரவு 10 மணி ஊரடங்கு உத்தரவு. இறுதிச் சடங்கு, திருமணம் போன்றவை தவிர 6 பேருக்கு மேற்பட்டோர் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் அனைத்து இடங்களும் இதில் அடக்கம்.
இரண்டாம் அடுக்கு : பாதிப்பு அதிகம்
கொரோனா பரவலால் பாதிப்பு அடைந்த மான்செஸ்டர், போல்டன், நாட்டிங்ஹாம், லங்காஷயர், மேற்கு யார்க்ஷயர், லீட்ஸ், வெஸ்ட் மிட்லாண்ட்ஸ், பர்மிங்காம், நாட்டிங்ஹாம்ஷைர் உள்பட பல்வேறு இடங்கள் அடங்கும்.
மூன்றாம் அடுக்கு – பாதிப்பு மிக அதிகம்
மக்கள் ஒன்றுகூடும் எவ்வித நிகழ்வும் அனுமதிக்கப்படாது. மதுபான விடுதி, கேளிக்கை விடுதிகள் முற்றிலுமாக மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
ஜிம்கள், கேசினோக்கள், சிகையலங்கார நிபுணர்கள் மற்றும் அழகு நிலையங்கள் மூடப்பட வேண்டுமா? என்று உள்ளூர் அரசியல்வாதிகள் முடிவு செய்யலாம்.
இப்பகுதிகளில் அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது. லிவர்பூல் நகர மண்டலம் முழுவதும் இதில் அடங்கும். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்துக்கு நிதியுதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நாட்டை முடக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை – கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டியது அவசியம்“ – ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல .

“தற்போது உக்கிரமடைந்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், நாட்டை முடக்கும் எண்ணம் இல்லை“ என ஊடகத்துறை அமைச்சரும் ஊடகத்துறை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டியது அவசியம் எனவும் மேலும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக பிரதம தொற்று நோயியல் தடுப்பு பிரிவு நிபுணத்துவ வைத்திய நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர ‘கொரோனா வைரஸ் தொற்று அச்சம் உலகம் முழுவதும் காணப்படுவதாகவும் அதனை இலங்கையில் மாத்திரம் கட்டுப்படுத்தி முழுமையாக ஒழிக்க முடியாது என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுக் கொடுக்க நீதிமன்றத்திற்கு வாய்ப்பளிக்கப்படும் வகையிலான வர்த்தமானி வெளியீடு” – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

“தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை பெற்றுக் கொடுக்க நீதிமன்றத்திற்கு வாய்ப்பளிக்கப்படும் வகையிலான வர்த்தமானி வெளியிடப்படும்” என  சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்புக்காக சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள பரிந்துரைகள் பாதுகாப்பு வழிமுறைகளை சட்டமாக்கி வர்த்தமானியில் வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்  எதிர்வரும் இரு தினங்களில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக புதிய சட்டம், வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக வௌியிடப்படும் எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இந்நாட்டு மக்களின் சுகாதார நிலைமையை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நோய் தொற்று காணப்படும் பிரதேசங்களில் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்களில் சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நான் எதிர்வரும் இரண்டு தினங்களில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட எதிர்பார்த்துள்ளேன்.

குறித்த பிரதேசங்களில் முகக்கவசங்கள் அணியாதவர்களுக்கு, சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு, சில வளாகங்களில் நுழையும் போது உடல் வெப்பத்தை அளவீடு செய்ய இடமளிக்காத நபர்களுக்கு எதிராக குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் நோய் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள பிரதேசங்களில் குறித்த சுகாதார வழிகாட்டல்களை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாவுக்கு குறைந்த அபராதம் மற்றும் 6 மாத சிறைத்தண்டனை ஆகிய இரண்டு தண்டனையோ அல்லது ஒரு தண்டனையோ நீதி மன்றத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையிலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி – 43 பேர் தனிமைப்படுத்தலில் !

திருகோணமலை, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியைச் சேர்ந்த 43 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என கந்தளாய் பிரதேச செயலாளர் தெரிவித்தார். கந்தளாய் பிரதேச கொரோனா நிலைமை தொடர்பான ஊடக சந்திப்பு இன்று(9) கந்தளாய் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இந்த தகவலை வழங்கினார்.

வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பெண், கொழும்பில் இருந்து கந்தளாய்க்கு கடந்த மாதம் 26ஆம் திகதி சென்றதாகவும் பின்னர் 28ஆம் திகதி அவர் மீண்டும் கொழும்பிற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கொழும்பில் வைத்தே கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண், கந்தளாய் பகுதியில் தங்கியிருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகியவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார். மேலும், கந்தளாய் பிரதேசத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொடர்பாக முரணான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் ஊடகங்களின் ஊடாக உண்மையான தகவல்கள் சென்றடைய வேண்டும் என தெரிவித்தார்.

“சீனா சிறந்த வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதனைப் போன்று இலங்கையையும் கொண்டு வருவதே எனது குறிக்கோள்” – சீன தூதுகு்குழுவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

சீனா சிறந்த வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதனைப் போன்று இலங்கையையும் கொண்டு வருவதே எனது குறிக்கோள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் பணியகத்தின் உறுப்பினரும்,வெளியுறவு ஆணையத்தின் இயக்குநருமான யாங் ஜீச்சி (Yang Jiechi) தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழுவை இன்று (09.10.2020) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சந்தித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு தொடர்ந்தும் உதவியளிப்பதாக சீன உயர் மட்ட குழுவினர் இதன் போது தெரிவித்துள்ளனர்.

சீனா-இலங்கை இருதரப்பு உறவுகள் ஏற்கனவே மிகவும் திருப்திகரமான நிலையில் உள்ளன. இந்த நட்பைப் பேணுவதும் வளர்ப்பதும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் முன்னுரிமையாகும். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச அரசாங்கங்களில் இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றில் சீனா உறுதியாக நிற்கிறது என்றும் சீனக் குழு இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்தது.

தனது நான்கு நாடுகளின் ஆசிய சுற்றுப்பயணத்தில் இலங்கை முதல் நாடு என்றும், சீன ஜனாதிபதி இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கு அதிக முன்னுரிமை அளித்துள்ளார் என்றும் அவர் ஜனாதிபதியிடம் கூறினார்.

இதேவேளை தற்போதைய சீன- இலங்கை உறவுகளின் நிலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரவேற்றார்.