யுத்தம் முடிவடைந்த காலப்குதி தொடங்கி கவனிக்கப்படாத பிரச்சினையாக இருந்து வருவது காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விவகாரமாகும். யுத்தம் முடிந்து மூன்று அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்துள்ள போதும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் எந்த ஒரு அறிவிப்புமே வெளியாகியிருக்கவில்லை. காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேசம் தொடர்ந்தும் வலியுறுத்தியதால் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டது. எனினும் அது இயங்கியதாக தெரியவில்லை.
இது ஒரு புறமிருக்க காணாமலாக்கப்பட்டவர்களை தேடி அவர்களுடைய உறவினர்கள் தொடர்டச்சியான போராட்டங்களை 1000 நாட்களை கடந்தும் மேற்கொண்டு வருகின்ற நிலையில் அண்மையில் ஐ.நா தொடரில் பேசிய ஜனாதிபதி கோத்தாபாய இறந்தவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கவுள்ளதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எனினும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. இந்த நிலையில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு செலுத்துவதற்காக 300 மில்லியன் ரூபாயை ஒதுக்க முன்மொழியப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
உங்களிடம் கையளித்த பிள்ளைகளை தாருங்கள் என கேட்டோரிடம் பணம் தருவதாக பஷில்ராஜபக்ஷ கூறியிருப்பது தமிழ்மக்களை் தொடர்பான ராஜபக்ஷக்களுடைய மனோநிலையையே காட்டியுள்ளது.