மொகமட் அமீன்

மொகமட் அமீன்

மேல் மாகாணசபைக்கான தேர்தல் இன்றாகும். தேர்தலில் 60% வாக்குப்பதிவு – முஹம்மட் அமீன்.

election.jpgஇன்று சனிக்கிழமை மேல்மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறுகின்றது. காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்கெடுப்பு மாலை 4.00மணிவரை நடைபெறும். கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களிலுள்ள 2769 வாக்குச் சாவடிகளிலும் இவ்வாக்கெடுப்பு நடைபெறுகின்றன.

மேல் மாகாண சபைக்கு 102 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இத்தேர்தலில் 2378 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் 17 கட்சிகளும், 13 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. கம்பஹா மாவட்டத்தில் 11 கட்சிகளும், 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதோடு களுத்துறை மாவட்டத்தில் 10 கட்சிகளும், 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

கொழும்பு,கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலுள்ள 38 இலட்சத்து 20 ஆயிரத்து 214 பேர் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கும் இன்றைய தேர்தலின் பாதுகாப்பு கடமைகளுக்காக 17,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 12,000 அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

319 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணப் படவுள்ளதோடு தபால் மூல வாக்குகள் எண்ணுவதற்கு 19 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கையிலுள்ள மாகாணசபைகளுள் மக்கள் தொகை கூடிய மாகாணசபையும், பிரதிநிதிகள் எண்ணிக்கை அதிகரித்த மாகாணசபையும் மேல்மாகாண சபையாகும்.

மேல்மாகாணசபையின் கொழும்பு மாவட்டம் பொதுவாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு சார்புடைய மாவட்டமாகவே இருந்துவருகின்றது. இந்தத் தேர்தலில் இலங்கையில் தற்போது நடைபெறும் யுத்தம் தென்பகுதி மக்களின் மனோநிலை எப்படிப்பட்டதென்பதை வெளிப்படுத்துவதாக அமையலாமென கருதப்படுகின்றது. தேர்தல் பிரசார காலங்களில் சில அடாவடித்தனங்களும் தேர்தல் விதிமுறை மீறல்கள் நடைபெற்றன. ஆனால்,  இன்று தேர்தல் நடைபெறும் நேரத்தில் தேர்தல் வன்முறைகள் இடம்பெறாதுவிடின் மக்களின் மனோநிலையை அளவிடக்கூடிய ஒரு அளவுகோலாக இத்தேர்தல் அமையலாமென தேர்தல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வடமாகாணத்தில் இடம்பெற்றுவரும் யுத்த நிலையின் தென்பகுதி மக்களின் கருத்துக் கணிப்பாகவும் இத்தேர்தலைக் கொள்ள முடியுமென இவர்கள் கருதுகின்றனர். எவ்வாறாயினும் தேர்தல் நடைபெறும் முறையைப் பொறுத்தே இக்கருத்துக் கணிப்பை அளவிடலாம் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன், வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர்கள் காலையிலேயே சென்று வாக்களிக்குமாறும் தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இத்தேர்தலின் போது குறிப்பாக வாக்குச் சாவடியினுள் புகைப்படம் பிடிப்பதற்கோ செய்திகள் சேகரிப்பதற்கோ எந்தவொரு ஊடகத்திற்கும் அனுமதி இல்லை எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

இரு தடவைகள் அல்லது பல தடவைகள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டவர்கள் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் மட்டுமே வாக்களிக்க வேண்டும்.

இன்று இரவு எட்டு மணிக்குப் பின்னர் தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்படுவதுடன், நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார். வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும் வாக்காளர்கள் தம்மை உறுதிப்படுத்தக் கூடிய தேர்தல் ஆணையாளரினால் ஏற்றுக் கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்ட அடையாள அட்டையை உடன் எடுத்துச் செல்லுமாறும் தேர்தல் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் வாக்களிப்பு நிலையங்களில் குழப்பம் விளைவிக்க வேண்டாம் எனவும், குழப்பம் விளைவிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் பதிவான வாக்குகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படும் என்றும் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடந்து முடிந்த வடமேல் மாகாண தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தின் நாயக்கர் சேனை வாக்குச் சாவடியின் வாக்குகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டு மறுவாக்குப் பதிவு நடத்தப்பட்டமையையும் நினைவு கூர்ந்தார்.

மேல்மாகாண தேர்தல் தொடர்பான செய்திகள் தேசம்நெற் வாசகர்களுக்காக உடனுக்குடன் திரட்டித் தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலின் புதிய நிலவரங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்தும் இதே தலைப்பின் கீழ் இணைக்கப்பட்டு வரும்.

இணைப்பு -01

தேர்தல் ஆரம்பமாகி நான்கு மணி நேரம் முடிவடையும் நிலையில் கொழும்பு கம்பஹா தேர்தல் மாவட்டங்களில் சுமுகமாக வாக்களிப்பு நடைபெறுவதாக தேசம் நெட்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுவரை கொழும்பு மாவட்டத்தில் 18 வீதமானோரும், கம்பஹா மாவட்டத்தில் 25 வீதமானோரும் வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னைய தேர்தலுடன் ஒப்பு நோக்கும் போது வாக்களிப்பு மந்தமாக இடம்பெறுவதையே அவதானிக்க முடிந்தது.

களுத்துறை மாவட்டத்தில் சில வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. இதனால் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. களுத்துறை மாவட்டத்தில் சராசரி வாக்களிப்பு வீதம் 20க்கும் குறைவு என களுத்துறையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணைப்பு -02

மேல்மாகாண சபைத் தேர்தலில் 55 தொடக்கம் 60 சத வீதம் வரையான வாக்குப் பதிவு

மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (25) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி அது முடிவடைந்த நேரமான மாலை 4.00 மணிவரையான காலப் பகுதிக்குள் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் இடம் பெறவில்லையென தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று நடைபெற்ற மேல்மாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பு 55 தொடக்கம் 60 வீதமாகக் காணப்பட்டதாகவும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை, தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தபால் மூல முடிவுகளை இன்று நள்ளிரவுக்குப் பின்னர் அறிவிக்கக் கூடியதாகவிருப்பதுடன். ஏனைய முடிவுகளை நாளை (26) அதிகாலையில் 3.00 மணியிலிருந்து வெளியிட முடியுமெனவும் தேர்தல்கள்; திணைக்களம் நம்பிக்கை தெரிவித்தது.

பெப்ரல் அமைப்பு கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பு மாவட்டத்தில் 53 சதவீதமான வாக்குகளும் களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் 60 சத வீதமான வாக்குகளும் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பு (கபே) இன்றைய தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், 49 சிறு,சிறு சம்பவங்கள் இடம்பெறிருந்தாலும் அமைதியானதாகவும் உற்சாகமானதாகவும் வாக்களிப்பு இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளது.

இணைப்பு -03

மேல் மாகாண சபை தேர்தலில் 60% வாக்குப்பதிவு

sri-lanka-election.jpgமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு  அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது. காலை வேளையில் வாக்களிப்பு மந்தமாக இருந்தபோதிலும், நண்பகலுக்கு பின்னர் சுறுசுறுப்படைந்திருந்ததாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

களுத்துறை, கொழும்பு, கம்பஹா ஆகிய மூன்று மாவட்டங்களிலுமாக 60% வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு.பி. சுமணசிறி தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தில் 65% வாக்குப் பதிவும், கம்பஹா மாவட்டத்தில் 60% வாக்குப் பதிவும் கொழும்பு மாவட்டத்தில் 53% வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை இடம் பெற்ற வாக்குப் பதிவு சுமுகமாக நிறைவடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

தேர்தல் நடைபெற்ற மூன்று மாவட்டங்களிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், இராணுவத்தினரும் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

தெரிவு செய்யப்படவுள்ள 102 உறுப்பினர்களில் 43 பேர் கொழும்பு மாவட்டத்திலும், 39 பேர் கம்பஹா மாவட்டத்திலும் 20 உறுப்பினர்கள் களுத்துறையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள், எண்ணும் நிலையங்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டன. தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இரவு 11 மணிக்குப் பின்னர் அறிவிக்க தேர்தல்கள் தலைமையகம் ஏற்பாடு செய்திருந்தது. இறுதி முடிவுகள் காலை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்திலுள்ள கொழும்பு வடக்கு, மத்தி, கிழக்கு, மேற்கு, தெஹிவளை, இரத்மலானை, பொரளை, கொலன்னாவ, கோட்டே, மஹரகம, ஹோமாகம, மொறட்டுவை, கடுவெல, அவிசாவளை, கெஸ்பாவ ஆகிய 15 தொகுதிகளில் 43 பேரைத் தெரிவு செய்யவென 15, 60,593 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, களனி, மகர, நீர்கொழும்பு, கட்டான, திவுலப்பிட்டிய, மீரிகம, மினுவாங் கொடை, அத்தனகல, கம்பஹா, ஜா-எல, பியகம, தொம்பே ஆகிய 13 தொகுதிகளில் 39 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவென 14, 58, 295 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.

களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை, பண்டாரகம, ஹொரணை, புளத்சிங்கள, மத்துகம, களுத்துறை, பேருவளை, அகலவத்தை ஆகிய எட்டுத் தொகுதிகளில் 20 பேரைத் தெரிவு செய்ய 8,1, 326 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு  அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது. காலை வேளையில் வாக்களிப்பு மந்தமாக இருந்தபோதிலும், நண்பகலுக்கு பின்னர் சுறுசுறுப்படைந்திருந்ததாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

களுத்துறை, கொழும்பு, கம்பஹா ஆகிய மூன்று மாவட்டங்களிலுமாக 60% வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு.பி. சுமணசிறி தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தில் 65% வாக்குப் பதிவும், கம்பஹா மாவட்டத்தில் 60% வாக்குப் பதிவும் கொழும்பு மாவட்டத்தில் 53% வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை இடம் பெற்ற வாக்குப் பதிவு சுமுகமாக நிறைவடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

தேர்தல் நடைபெற்ற மூன்று மாவட்டங்களிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், இராணுவத்தினரும் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

தெரிவு செய்யப்படவுள்ள 102 உறுப்பினர்களில் 43 பேர் கொழும்பு மாவட்டத்திலும், 39 பேர் கம்பஹா மாவட்டத்திலும் 20 உறுப்பினர்கள் களுத்துறையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள், எண்ணும் நிலையங்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டன. தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இரவு 11 மணிக்குப் பின்னர் அறிவிக்க தேர்தல்கள் தலைமையகம் ஏற்பாடு செய்திருந்தது. இறுதி முடிவுகள் காலை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்திலுள்ள கொழும்பு வடக்கு, மத்தி, கிழக்கு, மேற்கு, தெஹிவளை, இரத்மலானை, பொரளை, கொலன்னாவ, கோட்டே, மஹரகம, ஹோமாகம, மொறட்டுவை, கடுவெல, அவிசாவளை, கெஸ்பாவ ஆகிய 15 தொகுதிகளில் 43 பேரைத் தெரிவு செய்யவென 15, 60,593 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, களனி, மகர, நீர்கொழும்பு, கட்டான, திவுலப்பிட்டிய, மீரிகம, மினுவாங் கொடை, அத்தனகல, கம்பஹா, ஜா-எல, பியகம, தொம்பே ஆகிய 13 தொகுதிகளில் 39 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவென 14, 58, 295 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.

களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை, பண்டாரகம, ஹொரணை, புளத்சிங்கள, மத்துகம, களுத்துறை, பேருவளை, அகலவத்தை ஆகிய எட்டுத் தொகுதிகளில் 20 பேரைத் தெரிவு செய்ய 8,1, 326 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

நாளை மேல்மாகாணசபைத் தேர்தல்

sri-lanka-election.jpgநாளை சனிக்கிழமை மேல் மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் 17 கட்சிகளும், 13 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. கம்பஹா மாவட்டத்தில் 11 கட்சிகளும், 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதோடு களுத்துறை மாவட்டத்தில் 10 கட்சிகளும், 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

நாளை காலை 7.00மணி முதல் 4.00மணிவரை வாக்களிப்பு நடைபெறும். வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தேசம்நெற் க்குத் தெரிவித்தது. 319 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ண ப்படவுள்ளதோடு தபால் மூல வாக்குகள் எண்ணுவதற்கு 19 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேல்மாகாணசபையின் கொழும்பு மாவட்டம் பொதுவாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு சார்புடைய மாவட்டமாகவே இருந்துவருகின்றது. இந்தத் தேர்தலில் இலங்கையில் தற்போது நடைபெறும் யுத்தம் தென்பகுதி மக்களின் மனோநிலை எப்படிப்பட்டதென்பதை வெளிப்படுத்துவதாக அமையலாமென கருதப்படுகின்றது. தேர்தல் பிரசார காலங்களில் சில அடாவடித்தனங்களும் தேர்தல் விதிமுறை மீறல்கள் நடைபெற்றன. ஆனால், நாளையதினம் தேர்தல் நேரத்தில் தேர்தல் வன்முறைகள் இடம்பெறாதுவிடின் மக்களின் மனோநிலையை அளவிடக்கூடிய ஒரு அளவுகோலாக இத்தேர்தல் அமையலாமென தேர்தல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வடமாகாணத்தில் இடம்பெற்றுவரும் யுத்த நிலையின் தென்பகுதி மக்களின் கருத்துக் கணிப்பாகவும் இத்தேர்தலைக் கொள்ள முடியுமென இவர்கள் கருதுகின்றனர். எவ்வாறாயினும் தேர்தல் நடைபெறும் முறையைப் பொறுத்தே இக்கருத்துக் கணிப்பை அளவிடலாம் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேல்மாகாண தேர்தல் கடமைகளில் 43 ஆயிரம் அரச ஊழியர்கள் – தேர்தல்கள் செயலகம் தகவல்

மேல்மாகான சபைத் தேர்தல் கடமைகளுக்காக 43 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 12, 180 அரச ஊழியர்கள் தேர்தல் மத்திய நிலையங்களில் கடமையாற்றவுள்ளனர். இதுதவிர வாக்கு எண்ணும் நிலையங்களில் 8,000 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கம்பஹா மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக 12, 000 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு வாக்கு எண்ணும் பணிகளுக்காக 1,500 பேர் பணியாற்றவுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் 10,000 ஊழியர்கள் சேவையாற்றவுள்ளனர். இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளுக்காக 2,500 வாகனங்கள்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச டிஜிட்டல் நூலகம் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

images.jpgஉலகின் எந்த பகுதியில் உள்ளவர்களும் அரிய தகவல்களை தேடி பெற்றுக் கொள்ள வசதி செய்வதற்காக, பிரான்சின் பாரிஸ் நகரிலிருந்து செயல்படும் யுனெஸ்கோ அமைப்பு இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது.  பழமையான புத்தகங்கள் வரைபடங்கள் சினிமா ஒலி வடிவங்கள் புகைப்படங்ள் உள்ளிட்ட தகவல்கள் இந்த டிஜிட்டல் நூலகத்தின் மூலம் பொதுமக்கள் பார்வையிடுவதுடன் அவற்றினை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விலை மதிப்பற்ற பழங்கால சீன பெர்ஷிய புத்தகங்கள் மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரிய புகைப்படங்களை இங்கு காண முடியும் என இணையத்தள வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கூகுள் புக் சேர்ச் மற்றும் ஈரோப்பியானியா போன்றவற்றுக்கு அடுத்தபடியாக உருவாக்கப்பட்டுள்ள மூன்றாவது பிரதான டிஜிட்டல் நூலகத்தின் முகவரி www.wdl.org   என்பதாகும். உலகின் பல்வேறு நூலகங்களில் இருந்து இதற்கு தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளன.

மேற்கத்திய நாடுகளின் தகவல் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலிருந்தும் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

அராபிக் சீனா ஆங்கிலம் பிரெஞ்சு போர்ச்சுக்கீஸ் ரஷ்யன் ஸ்பெனிஷ் ஆகிய ஏழு மொழிகளில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிற மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்களையும் இந்த தளத்தில் வாசிக்க முடியும்.   பிரேசில் பிரிட்டன் சீனா எகிப்து பிரான்ஸ் ஜப்பான் ரஷ்யா சவுதி அரேபியா அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள நூலகங்கள் மற்றும் பண்பாட்டு நிறுவனங்களில் இருந்தும் தகவல்கள் திரட்டப்பட்டு இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த இணையத்தளமானது உலகின் மிகப்பெரிய நூலகமான அமெரிக்காவின் காங்கிரஸ் நூலகத்தில் பணியாற்றும் ஜேம்ஸ் பில்லிங்டனின் யோசனையில் உருவாக்கப்பட்டது. எதிர்வரும் 2010ம் ஆண்டுக்குள் ஒரு கோடி புத்தகங்களை இந்த இணையத்தளத்துடன் இணைக்கவுள்ளனர். இதற்கு ஒத்துழைக்கும் படி 60க்கும் மேற்பட்ட நாடுகளிடம் யுனெஸ்கோ வேண்டியுள்ளது.

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக 90 முறைப்பாடுகள்

election_ballot_cast.jpgமாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள மேல் மாகாணத்தில் தேர்தல் வன்முறைகள் தொடர்பாக  இதுவரை  90 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவை தொடர்பாக துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் தேர்தல் பிரிவுக்குப் பொறுப்பான  பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரத்ன தெரிவித்தார். பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் சிறு சிறு சம்பவங்கள் தொடர்பாகவே கூடுதல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். இவற்றில் தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், காரியாலயங்கள் மீதான தாக்குதல்கள் என்பனவும் அடங்குகின்றன.

வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட திகதியில் இருந்து கடந்த 5 வாரங்கள் வரையான காலப்பகுதிக்குள் குறைந்தளவு சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளே பொலிஸ் தேர்தல் பிரிவுக்கு கிடைத்துள்ளன.

இவை குறித்த துரித விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வன்முறைச் சம்பவங்கள் குறைவாகவே இடம்பெற்றிருப்பதால் தேர்தல் தினத்திலும் குறைந்தளவு சம்பவங்களே இடம்பெறும் என எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் கூறினார்.

வன்முறையுடன் முடிந்தது முதல் கட்ட தேர்தல்- 17 பேர் பலி

india-election.jpgஜார்க் கண்ட், பீகார், சட்டீஸ்கர், ஒரிசா ஆகிய மாநிலங்களில் நக்சலைட்கள் பெரும் தாக்குதல் நடத்தியதில் 17 பேர் கொல்லப்பட்டதன் பின்னணியில் முதல் கட்ட தேர்தல் வன்முறையுடன் முடிந்தது. 124 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடந்தது. எதிர்பார்த்தது போலவே நக்சலைட்கள் தங்களது கைவரிசையை சற்று பலமாகவே இன்று காட்டி விட்டனர்.

சட்டீஸ்கர், பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடந்த பெரும்பாலான தொகுதிகளில் நக்சலைட்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் மொத்தமாக 17 பேர் உயிரிழந்தனர்.

கேரளா, அருணாச்சல் பிரதேசம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் தேர்தல் அமைதியாக நடந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்திலும், பீகாரிலும் வாக்குப் பதிவு மந்தமாக இருந்தது. இங்கு குறைந்த அளவிலான வாக்குப் பதிவே இருக்கும் எனத் தெரிகிறது.

அதேபோல ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகியவற்றிலும் வாக்குப் பதிவு மந்தமாக காணப்பட்டது. இரு்பினும் கேரளாவில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இருந்தது.

நக்சலைட்டுகள் ஆதிகம் உள்ள தொகுதிகளில் மட்டும் 3 மணியளவிலேயே வாக்குப் பதிவு முடிந்து விட்டது. பிற தொகுதிகளில் 5 மணியளவில் வாக்குப் பதிவு முடிவுக்கு வந்தது. முதல் கட்ட தேர்தலில் 60 சதவீதத்திற்கும் மேலான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதுவரை 77 வன்முறைச் சம்பவங்கள் பதிவு இனிவரும் தினங்களில் மேலும் அதிகரிக்கும் நிலை

caffe.jpgமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை 77 வன்முறைச் சம்பவ முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தேர்தலை கண்காணிப்பதற்கான கபே அமைப்பு தேர்தலுக்கு இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில் வன்முறைச் சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் அவ்வமைப்பின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் கருத்து தெரிவிக்கையில்;

நாம் தேர்தல் தொடர்புடைய முறைப்பாடுகளை கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி முதல் நேற்று புதன்கிழமை 15 ஆம் திகதிவரை பதிந்தும் அவதானித்தும் வருகின்றோம். மொத்தமாக 77 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம். இதில் கம்பஹா மாவட்டத்திலே அதிகூடியதான 32 முறைப்பாடுகளை பதிவு செய்த நிலையில் இதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டம் உள்ளது. களுத்துறை மாவட்டத்தில் நாம் 15 முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம்.

இந்த 77 முறைப்பாட்டில் தாக்குதல் சம்பவங்கள் 54 ஆகவுள்ளதுடன் அச்சுறுத்தல் தொடர்பில் 3 இனையும் பதிவு செய்துள்ளோம். நாம் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகமென அதிகளவான தகவலை பெற்றபோதும் எம்மால் இவ்விரண்டு தொடர்பில் முறையே 10 முறைப்பாடுகளையே எம்மால் ஊர்ஜிதப்படுத்த முடிந்தது.

தேர்தல் தொடர்பிலான பெரியளவான வன்முறைகள் 50% மானவைக்கு இரு பிரதான கட்சிகளே காரணமாகும். இந்நிலையில் இரு பிரதான கட்சித் தலைவர்களிடம் தமது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் வன்முறையில் ஈடுபடாதிருப்பதற்கு உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டுமெனக் கபே கேட்டுள்ளது.

ஆந்திரா, கேரளா உட்பட 17 மாநிலங்களில் முதல்கட்ட வாக்களிப்பு இன்று

india-election.jpgபாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்டமாக ஆந்திரா, கேரளா உட்பட 17 மாநிலங்களில் 124 தொகுதிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரங்கள் முடிவடைந்தன.

நாடு முழுவதிலும் உள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 16ம் திகதி இன்றும், 2ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23ம் திகதியும், 3ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 30ம் திகதியும், 4ம் கட்ட தேர்தல் மே 7ம், திகதியும் 5ம் கட்ட தேர்தல் மே 13ம் திகதியும் நடைபெறுகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்றத் தொகுதிகளுக்கும் மே 13ம் திகதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் கேரளா, ஆந்திரா உட்பட 17 மாநிலங்களை சேர்ந்த 124 தொகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

ஆந்திர மாநிலத்தில் 22, கேரளாவில் 20, உத்தரப் பிரதேசத்தில் 16, மராட்டியத்தில் 13, பீகாரில் 13, சத்தீஷ்காரில் 11, ஒரிசாவில் 10, ஜார்கண்டில் 6, அசாமில் 3, மேகாலயாவில் 2, அருணாசல பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கும், காஷ்மீர், அந்தமான், மணிப்பூர், லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணி, நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது. தெலுங்கு தேசம் கூட்டணியில் இரு கம்யூனிஸ்டு கட்சிகளுடன், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் பா. ஜனதா கட்சியும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.

ரயில்வே மந்திரியும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், பீகார் மாநிலம் சரண் தொகுதியில் முதல் கட்டத் தேர்தலை சந்திக்கிறார். உத்தரப் பிரதேச மாநிலத்தில், பா. ஜனதா தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி (வாரணாசி), யோகி ஆதித் யநாத் (கோரக்பூர்), காங்கிரஸ் சார்பில் மத்திய மந்திரி மகாவீர் பிரசாத் (பஸ்கான்), சமாஜ்வாடி கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் நீரஞ்சேகர் (பல்லியா) ஆகியோர் முதல் கட்ட தேர்தலை சந்திக்கும் முக்கிய தலைவர்கள் ஆவர்.

முதல் கட்டத் தேர்தலை அமைதியாக நடத்துவதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநில, மத்திய பொலிஸ் படையினருடன் பதற்றம் நிறைந்த மற்றும் நக்சலைட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளில் துணை இராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் 124 தொகுதிகளிலும் மொத்தம் 1715 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 122 வேட்பாளர்கள் பெண்கள். அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் தொகுதியிலும் சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூர் தொகுதியிலும் தலா 32 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

முதல் கட்ட பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் 154 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒரிசா மாநிலத்தில் 70 சட்ட சபைகளுக்கும் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

கம்பஹா, களுத்துறையில் ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகம்

caffe.jpgமேல் மாகாண சபை தேர்தலுக்காக கம்ஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டது குறித்து ஆராய்வதற்கு நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) நடவடிக்கை எடுத்திருப்பதாக அதன் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.

மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் :

மேல் மாகாண சபைத்தேர்தல் வன்முறை தொடர்பாக நாம் கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி முதல் கண்காணித்து வருகிறோம். இந்நிலையில் சனிக்கிழமை வரை நாம் மொத்தமாக 69 சம்பவங்களைப் பதிவு செய்துள்ளோம். இதில் 54 சம்பவங்கள் தாக்குதல் சம்பவங்களாகும்.  தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டமை மற்றும் சொத்துக்கள் துஷ்பிரயோகம் தொடர்பாக முறையே 10 முறைப்பாடுகளைப் பெற்ற அதேவேளை அச்சுறுத்தல் சம்பவங்கள் மூன்றும் தமக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தில் பெயர், விலாசம், என்பன மாற்றப்பட்டு பல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் கம்பஹா, மற்றும் களுத்துறை மாவட்டங்களில் எவ்வளவு தொகை இவ்வாறு மேலதிக வாக்காளர் அட்டை விநியோகிக்கப்பட்டது என்பது குறித்து ஆராயவுள்ளோம் என்றார்.

தேர்தல் வன்முறைகளை கட்டுப்படுத்தாவிடின் எதிர்வரும் நாட்களில் மோசமாக அதிகரிக்கும் அபாயம் – பவ்ரல்

எதிரணி அரசியல் கட்சிகளுக்கெதிராக இடம்பெற்றுவரும் வன்முறைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதகாரிகள் உடனடியாக மேற்கொள்ளாதுவிட்டால் எதிர்வரும் நாட்களில் இன்னும் மோசமான வன்முறைகள் இடம்பெறும் சூழ்நிலை ஏற்படுமென தேர்தலைக் கண்காணிப்பதற்கான அமைப்பான பவ்ரல் எச்சரித்துள்ளது.

அத்துடன் சுயாதீன பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழு ஆகியன இல்லாத நிலையில் மேல்மாகாண சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளதால் அதனை நீதியானதும் நேர்மையானதாகவும் நடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பு கலாசார, சமய உறவுகளுக்கான நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்த பவ்ரல் அமைப்பின் பணிப்பாளரான ரோஹண ஹெட்டியாராச்சி மேலும் கூறியதாவது;

எமது அமைப்பு வேட்பு மனு கையளிப்பு ஆரம்பித்த நாள் முதலே தேர்தல் கண்காணிப்பை மேற்கொள்கின்றது. நாம் முதல் கட்டமாக தேர்தல் செயற்பாட்டை நெறிப்படுத்தும் வகையில் முக்கிய பொறிமுறையான நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளோம்.

இரண்டாம் கட்டமாக அக்குழுவில் தேர்தல் ஒருங்கிணைப்புக்கான பிரதான ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிப்பதுடன், அவரையும் உள்ளடக்கும் தேர்தல் குழுவொன்றை பவ்ரல் தலைமை அலுவலகத்துடன் இணைந்து ஏற்படுத்துவதாகும். தேர்தல் பிரசாரத்தின் போது கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் நாளாந்தம் இடம்பெற்றுவரும் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளையும் தகவல்களையும் ஆராய்வதற்கான அலுவலகத்தையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்.

எமது நடவடிக்கைக் குழு தேர்தல் தினத்தன்று தேர்தல்கள் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயலாற்றும். கொழும்பு கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை இணைத்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலகங்கள் நிறுவப்படவுள்ளன. இந்நிலையில், இவற்றுக்கென மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஒருங்கிணைப்பாளருக்கு உதவும் பொருட்டு தொகுதிவாரியாக பிரதேச ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து நாம் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். இதேவேளை, இம்மாகாணத்திலுள்ள 2,299 வாக்குச் சாவடிகளுக்கு தலா ஒருவர் வீதம் எமது கண்காணிப்பாளரை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இவர்களுக்கான செயலமர்வுகளையும் மாவட்டம் தோறும் நடத்தவுள்ளோம்.

இதற்கு மேலதிகமாக தேர்தல் தினத்தன்று 40 நடமாடும் வாகனங்களை சேவையில் ஈடுபடுத்தி 200 நடமாடும் கண்காணிப்பாளர்கள் மூலம் வாக்கெடுப்பு நிலையங்களுக்கு அப்பாற்பட்ட பிரதேசங்களைக் கண்காணிப்பதற்காக சேவையில் ஈடுபடுத்துவதும் எமது திட்டங்களாகும்.

மேலும், எமது ஒருங்கிணைப்பாளர்களுடன் தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் இடம்பெறும் சர்வகட்சி நடவடிக்கை கூடம் தேர்தல் செயலகத்தில் இயங்கும். அதேவேளை, பிரதேச ரீதியாக நிறுவப்படும் பிரதேச சர்வகட்சி நடவடிக்கை கூடத்திலும் எமது பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர்.

தபால் மூலமான வாக்களிப்பு, பிரசார நடவடிக்கைகள் சார்ந்த சில சம்பவங்கள் தவிர்ந்த ஏனைய பாரதூரமான சம்பவங்கள் இடம்பெறாது அமைதியான முறையில் இடம்பெற்றது. நாம் அவதானித்ததன் பிரகாரம் 70% வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. இது அதிகரிக்கலாம்.

இதேவேளை, தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். குறிப்பாக சட்ட முறையற்றவிதத்திலான சுவரொட்டிகள், பதாகைகளை அகற்றுவதற்கு நடவடிக்கையெடுத்ததுடன், வாக்களிப்பின் போது அடையாளத்தை உறுதிப்படுத்தும் அடையாள அட்டை, பாஸ்போட், சாரதி அனுமதிப்பத்திரம், ரயில்வே பருவகாலச் சீட்டு, தற்காலிக அடையாள அட்டை, தபால் அடையாள அட்டை என்பவற்றுக்கு அனுமதியளித்துள்ளார்.

இத்தேர்தலில் பணம் மற்றும் அரசியல் பலம் கொண்டவர்கள் அநேகர் மத்தியில் இவை இரண்டுமற்ற வேட்பாளர்கள் கவனிக்கப்படாமல் போவது ஜனநாயக பண்பல்ல. இந்த பண அரசியல் பலம் உள்ளவர்களால் 500 மில்லியன் ரூபா சுவரொட்டிகள் அச்சிடப்பட்டு உள்ள நிலையில், இதனை அகற்றுவதற்கு 5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.பொலிஸார் இட்ட முறையற்ற பிரசாரத்தை அகற்றும் போது மீண்டும் அவை ஒட்டப்படுகின்றன. இதனை நிறுத்த கட்சியின் கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை ஒத்துழைப்பு அவசியம்

அத்துடன் பிரச்சினை ஏற்படும்போது சர்வகட்சி மூலம் உடனடியாக தீர்வு காண்பது போல் இதற்கும் தீர்வைக் காணவேண்டும். குறிப்பாக எவ்வித அரசியல் அடிப்படையும் அற்ற கட்சிகளும் குழுக்களும் பெயரளவில் மாத்திரம் தேர்தலில் களமிறங்குவதை மட்டுப்படுத்தாத யாதேனும் செயற்பாடொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் நீண்டதோர் வேட்பாளர்களின் எண்ணிக்கையுடைய ஆவணத்தை இல்லாமல் செய்யமுடியும் என்பதை சுட்டிக் காட்டுகின்றோம்.2,378 வேட்பாளர்களில் 19 பேரே பெண்களாவர், இது கவலைக்குரியது. வேட்பாளர் பெயர்ப் பட்டியலில் குறைந்தது 30 பெண்களை தெரிவு செய்யும் வகையில் அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும். பெண்கள் நிலைமை தொடர்பில் இந்த குறைவான எண்ணிக்கையான வேட்பாளர்கள் மூலம் பாரதூரமான பலவீனமுள்ளதை நாம் காண்கின்றோம். இதற்கு உடன் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

எமது கண்காணிப்பின்போது கொலைச்சம்பவம் ஒன்றுடன் 13 தாக்குதல் சம்பவங்களை பதிவுசெய்துள்ளோம். மொத்தமாக 38 முறைப்பாடுகளை பெற்றுள்ளோம். ஜே.வி.பி. ஆதரவாளர் கொல்லப்பட்டமை, அவர்களது அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளமையை நாம் பதிவுசெய்துள்ள நிலையில், எதிரணி அரசியல் கட்சிகளுக்கு எதிரான வன்செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்கு குறித்த அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும்.

இல்லாவிட்டால் வருடப்பிறப்புக்கு பின்னர் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதுவிடின் நிலைமை இன்னும் மோசமாகும்.

17 ஆவது அரசியலமைப்பு இல்லாத நிலையில் சுயாதீன பொலிஸ் மற்றும் தேர்தல் ஆணைக்குழு இல்லாது முன்னர் போன்று தேர்தல் இடம்பெறுவதால் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் இடம்பெற அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும்.

கிழக்கின் யுத்த நடவடிக்கைகள் காரணமாக 49 ஆயிரம் பெண்கள் விதவைகளாகியுள்ளனர் -மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லா

hisbullah.jpgகிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் காரணமாக இதுவரை 49 ஆயிரம் பெண்கள் தமது கணவர்களை இழந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

ஒலுவில் மஹாபொல நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கிழக்கு மாகாண அபிவிருத்தி நடவடிக்கைகளை மக்கள் முன் கொண்டு செல்லும் வெலைத்திட்டம் பற்றி அம்பாறை மாவட்ட மூவின ஊடகவியலாளர்களுக்கும் விளக்கமளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்; இந்த நாட்டிலுள்ள எந்தவொரு மாகாண சபையிலும் இல்லாத பெரும் சாதனையொன்று இம் மாகாணத்தில் நிகழ்ந்து வருகின்றது. மூவினங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் ஒரே மேடையில் ஒற்றுமையாக இருந்து கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின மக்களினதும் தேவைகளை அறிந்து சேவையாற்றுவதற்காக ஒரே கருத்தில் செயலாற்றி வருகின்றோம்.

கடந்த 20 வருடத்திற்கும் மேலாக யுத்த மேகம் சூழ்ந்திருந்த இந்த மாகாணத்தில் சுதந்திர காற்றை சுவாசிக்க வாய்ப்பளித்த எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு நாம் அனைவரும் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் நடந்த யுத்த சூழ்நிலைகாரணமாக 49000 விதவைகள் உள்ளனர் இதில் யுத்தம் காரணமாக 24,000 பேர் கணவனை இழந்துள்ளனர். இவற்றுள் 19,000 பேர் 40 வயதிற்குட்பட்ட இளம் பெண்கள், 12,000 பேர் 3 பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் எதிர்காலம் என்ன என்பதை பற்றியும் இவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கும் கிழக்கு மாகாண சபை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நாட்டின் அரிசி உற்பத்தியில் மிகவும் முன்னோடியாகத் திகழ்ந்த கிழக்கு மாகாணம் கடந்த கால அசாதாரண சூழ்நிலைகாரணமாக அரிசி உற்பத்தியில் 12 வீதத்தையே பூர்த்தி செய்கிறது.

கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் பல ஆண்டு காலமாக பயிர் செய்யப்படாத நிலங்களை பொன் விளையும் பூமிகளாக மாற்றுவதற்காக மானிய அடிப்படையில் உரம், வயலை உழுவதற்கு ஏக்கருக்கு 2000 ரூபா நன்கொடை, இலவச விதை நெல், என்பனவற்றை வழங்கியதன் மூலம் கடந்த ஆறுமாதங்களில் ஒரு இலட்சத்து முப்பத் தோராயிரம் ஏக்கர் நிலம் மேலதிகமாக பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்பட்டதனால் 30 வீத நெல் உற்பத்தியை கண்டுள்ளது.

இது கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் கிடைத்த வெற்றிகளுள் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.