சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

நடுவரை திட்டிய நடப்பு சாம்பியன் செரீனா அமெரிக்க ஓபனில் இருந்து வெளியேற்றம்

serena-williams.jpgஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் தண்டனை புள்ளியால் தோல்வியை சந்தித்தார். இதன்மூலம் இரண்டு ஆண்டுகளின் பின் டென்னிஸ் களம் திரும்பிய பெல்ஜியத்தின் கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 13 ஆவது நாளான நேற்று முன்தினம் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அமெரிக்காவின் 2 ஆம் நிலை வீரõங்கனை செரீனா வில்லியம்ஸுடன் கிம்கிளிஜ்ஸ்டர்ஸ் பலப்பரீட்சை நடத்தினார்.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் வெற்றிபெற இரண்டு புள்ளிகள் தேவைப்படும் நிலையில் செரீனா வில்லியம்ஸ் எல்லை கோட்டைத் தாண்டி விளையாடியதாக நடுவரால் அறிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த செரீனா நடுவரை மோசமான வார்த்தையால் திட்டினார். இதனைத் தொடந்து நடுவர் இது குறித்து போட்டி மத்தியஸ்தரிடம் முறையிட அவர் தண்டனை புள்ளியாக கிம் கிளிஜ்ஸ்டர்ஸுக்கு ஒரு புள்ளியை வழங்க செரீனா இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்தார். இதன்போது செரீனா தன்னை கொலைசெய்து விடுவதாக குறிப்பிட்டார் என்று நடுவர் குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே இந்த போட்டியின் முதல் சுற்றின்போது செரீனா ஆடுகளத்தில் மோசமாக நடந்துகொண்டார். இதற்காக அவர் நடுவரின் எச்சரிக்கைக்கு உள்ளான நிலையிலேயே மீண்டும் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இதன்படி கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் கிரோலின் வொஸ்னிக்கை சந்திக்கவுள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் யோசனையை பரிசீலிக்க ஐசிசி முடிவு

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தற்போதுள்ள நடைமுறையை முறையை மாற்றி இரு அணிகளுக்கும் தலா ஒரு இன்னிங்ஸ் என்பதற்கு பதிலாக, 25 ஓவர்களாக பிரித்து 2 இன்னிங்ஸ் வழங்க வேண்டும் என்ற சச்சின் டெண்டுல்கரின் யோசனை பரிசீலனை செய்ய உள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் அதிரடியான பிரபலத்தால் 50 ஓவர் (ஒருநாள்) போட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற கருத்து சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

இதனால் 50 ஓவர் போட்டியை மேலும் விறுவிறுப்பு ஏற்படுத்தும் வகையில் இரண்டு 25 ஓவர்களாக பிரித்து விளையாட வேண்டும் என்று ஒரு சில நாட்களுக்கு முன் டெண்டுல்கர் யோசனை தெரிவித்திருந்தார். இந்த யோசனைக்கு ஒரு சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவும், கபில்தேவ் உள்ளிட்ட ஒரு சிலர் எதிர்ப்பும் கிளம்பியது.

இந்நிலையில் சச்சினின் யோசனை குறித்து சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பு (ஐ.சி.சி) மேலாளர் (கிரிக்கெட்) ரிச்சர்ட்சன் கூறுகையில், சச்சினின் யோசனை நல்லது தான். இந்த யோசனையை தென்ஆப்ரிக்கா பரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும். பகலிரவு போட்டியை பொறுத்தமட்டில் ஒரு அணிக்கு பகலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பும், மற்றொரு அணிக்கு இரவில் பேட்டிங் செய்யும் வாய்ப்பும் கிடைக்கிறது.

இதனால் ஒரு அணிக்கு சாதமாக சூழலும், எதிரணிக்கு சாதகமற்ற சூழலும் ஏற்படுகிறது. பூவா-தலையா ஜெயித்து முதலில் ஆடும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதை முன்கூட்டியே கணித்து விட முடிகிறது.

சச்சினின் யோசனை குறித்து ஐ.சி.சி. கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். 20 ஓவர் போட்டி பிரபலத்தால் 50 ஓவர் போட்டிக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியமானதாகும். அதே நேரத்தில் 25 ஓவர்களாக பிரித்து ஆடுவதால் பேட்ஸ்மேன்கள் அதிக ரன் குவிக்க முடியாத நிலையும் ஏற்படும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் மழையால் பாதிப்பு

அமெரிக்காவில் நடந்து வரும் யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முக்கிய போட்டிகள் கனமழை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வரும் இப்போட்டிகள் மழை காரணமாக நேற்று முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டிகள் நாளையும், இறுதிப்போட்டி 14ஆம் தேதியும் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பெண்களுக்கான அரையிறுதிப் போட்டிகளும் ஒத்திவைக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொம்பெக் கிண்ண முக்கோண தொடரின் மூன்றாவது ஆட்டம் – இலங்கை அணி 139 ஓட்டங்களால் வெற்றி

120909sanath-jayasuriya.jpgகொம்பெக் கிண்ண முக்கோண தொடரின் மூன்றாவது  போட்டி இந்திய – இலங்கை அணிகளுக்கிடையில் இன்று ஆர்.பிரேமதாச மைதானத்தில் இலங்கை நேரப்படி 2.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.

 முதலாம் இரண்டாம் போட்டிகளில் முறையே இலங்கை இந்திய அணிகளுடன் நியூசிலாந்து அணி தோல்வியுற்றதால் கொம்பெக் கிண்ண முக்கோண தொடரில் நியூசிலாந்து அணி வெளியேறியது.

இன்றைய ஆட்டத்தில் நாணய சுழற்சியில் இலங்கையணி வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்துள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் போட்டி ஆரம்பமாகும்.

இப்போட்டியில் முக்கிய நிகழ்வுகளை இதே பக்கத்தில் பின்னூட்டமாக இணைக்க தேசம் நெட் விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

முதலாவது இனிங்சில் இலங்கையணி பெற்ற ஓட்ட விபரங்கள் வருமாறு

Sri Lanka 307/6 (50.0 ov)
Sri Lanka won the toss and elected to bat

Sri Lanka innings
 TM Dilshan  c †Dhoni b Sharma  23 
 ST Jayasuriya  lbw b Nehra  98 
 DPMD Jayawardene  st †Dhoni b Pathan  17
 KC Sangakkara*†  lbw b Harbhajan Singh  5 
 AD Mathews  st †Dhoni b Raina  19 
 SHT Kandamby  not out  91
 CK Kapugedera  run out (Singh)  36 
 KMDN Kulasekara  not out  3
 
 Extras (lb 4, w 10, nb 1) 15     
      
Total (6 wickets; 50 overs; 240 mins) 307 (6.14 runs per over)
To bat T Thushara, SL Malinga, BAW Mendis 
Fall of wickets1-57 (Dilshan, 8.4 ov), 2-94 (Jayawardene, 14.5 ov), 3-102 (Sangakkara, 17.4 ov), 4-172 (Jayasuriya, 29.1 ov), 5-176 (Mathews, 30.5 ov), 6-259 (Kapugedera, 46.1 ov) 
        
 Bowling
 A Nehra 9 0 62 1
 RP Singh 8 0 58 0 
 I Sharma 10 0 67 1
 Harbhajan Singh 10 1 37 1 
 YK Pathan 7 0 45 1 
 Yuvraj Singh 3 0 20 0
 SK Raina 3 0 14 1

இன்று ஆர்.பிரேமதாச மைதானத்தில் கொம்பெக் கிண்ண முக்கோண தொடரின் மூன்றாவது  போட்டியில் இலங்கை அணி வெற்றி 139 ஓட்டங்களால் விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது

India innings (target: 308 runs from 50 overs)
 
 KD Karthik  c †Sangakkara b Thushara  16
 SR Tendulkar  c Mendis b Kulasekara  27
 R Dravid  b Mathews  47 
 Yuvraj Singh  c †Sangakkara b Malinga  16
  SK Raina  c †Sangakkara b Mathews  0 
 MS Dhoni*†  b Mathews  8 
 YK Pathan  c †Sangakkara b Mathews  1 
 Harbhajan Singh  b Mathews  4
 RP Singh  not out  19  
 A Nehra  b Mathews  1
 I Sharma  c sub (WU Tharanga) b Mendis  13 
 Extras (b 1, lb 1, w 14) 16     
      
Total (all out; 37.2 overs) 168 (4.50 runs per over)

Fall of wickets1-32 (Karthik, 5.4 ov), 2-67 (Tendulkar, 14.1 ov), 3-105 (Yuvraj Singh, 19.6 ov), 4-108 (Raina, 20.4 ov), 5-126 (Dravid, 24.5 ov), 6-129 (Dhoni, 26.1 ov), 7-130 (Pathan, 26.3 ov), 8-135 (Harbhajan Singh, 28.6 ov), 9-139 (Nehra, 30.2 ov), 10-168 (Sharma, 37.2 ov) 
        
 Bowling  
 KMDN Kulasekara 8 1 35 1
 T Thushara 6 0 34 1
 SL Malinga 8 0 33 1
 TM Dilshan 2 0 17 0  
 AD Mathews 6 0 20 6
 ST Jayasuriya 2 0 5 0  
 BAW Mendis 5.2 0 22 1 

அவுஸ்திரேலியா அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி

999cri.jpgஇங்கி லாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை இழந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அந்த அணிக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அசத்தி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்து உள்ளது.

ஏற்கனவே முதல் 3 ஆட்டங்களிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்த நிலையில் 4 வது ஒரு நாள் போட்டி இன்று லோர்ட்சில் நடக்கிறது.

England 220 (46.3 ov)
England won the toss and elected to bat

 England innings
 AJ Strauss*  c Bracken b Hauritz  63
 JL Denly  c White b Lee  11 
 RS Bopara  lbw b Hauritz  26 
 MJ Prior†  b Lee  29 
 OA Shah  c Ferguson b Watson  39 
 EJG Morgan  st †Paine b Bracken  13
 LJ Wright  b Lee  12 
 SCJ Broad  b Lee  2 
 AU Rashid  b Lee  4 
 TT Bresnan  not out  11  
 RJ Sidebottom  b Johnson  2 

 Extras (b 1, lb 1, w 2, nb 4) 8     
      
 Total (all out; 46.3 overs) 220 (4.73 runs per over)
Fall of wickets1-29 (Denly, 4.5 ov), 2-96 (Bopara, 18.3 ov), 3-111 (Strauss, 24.4 ov), 4-146 (Prior, 32.1 ov), 5-174 (Morgan, 39.3 ov), 6-200 (Wright, 43.1 ov), 7-202 (Broad, 43.3 ov), 8-206 (Shah, 44.1 ov), 9-212 (Rashid, 45.3 ov), 10-220 (Sidebottom, 46.3 ov)  

Bowling
 B Lee 9 1 49 5 
 NW Bracken 8 0 40 1
 MG Johnson 8.3 0 42 1
 SR Watson 8 0 46 1 
 NM Hauritz 10 0 23 2
 MJ Clarke 3 0 18 0 6.00 

 இன்று லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 4வது போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி 7 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது

 Australia innings

 SR Watson  lbw b Bresnan  26
 TD Paine†  c †Prior b Rashid  51 
 RT Ponting*  c Bopara b Bresnan  48 
 MJ Clarke  not out  62   
 CJ Ferguson  not out  23   
 
Extras (b 1, lb 1, w 7, nb 2) 11      
      
Total (3 wickets; 43.4 overs) 221 (5.06 runs per over)

Did not bat CL White, MEK Hussey, NM Hauritz, MG Johnson, B Lee, NW Bracken 
Fall of wickets1-51 (Watson, 9.4 ov), 2-108 (Paine, 18.6 ov), 3-168 (Ponting, 34.4 ov) 
        
 Bowling
 SCJ Broad 9 0 43 0  
 RJ Sidebottom 7.4 0 41 0
 TT Bresnan 8 1 41 2 
 AU Rashid 10 0 56 1
 OA Shah 3 0 12 0
 LJ Wright 6 0 26 0

செமென்யா சர்ச்சை கையாளப்படும் விதம் கவலையளிக்கிறது: தென்னாப்பிரிக்க அமைச்சர்

caster_semenya_testosterona.jpgதென்னா பிரிக்க ஓட்டப் பந்தய வீரங்கனையான காஸ்டர் செமென்யா சூழ்ந்துள்ள அவரது பாலினம் குறித்த சர்ச்சை, அருவருக்கத்தக்க வகையிலும் தார்மீகமற்ற முறையிலும் கையாளப்பட்டுள்ளது என்று தென்னாபிரிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தடகள சம்மேளனங்களின் சர்வதேச அமைப்பின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட சோதனைகள், பெர்லின் சர்வதேச தடகளப் போட்டிகளில் தங்கம் வென்ற செமென்யாவின் உடலுக்குள் ஆண் விரைகள் இருப்பதையும், அவருக்கு சூலகம் இல்லாதிருப்பதையும் காண்பிப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்களில் வெளியான செய்திகள் கூறுகின்றன.  ஆனால், இது தொடர்பாக தென்னாபிரிக்காவுக்கு எந்தவிதமான தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று தென்னாபிரிக்க அமைச்சர் மக்கென்கெஸி கூறியுள்ளார்.

தீர்க்கமான போட்டியில் இந்திய அணி வெற்றியீட்டியது

110909-india.jpgகொம்பெக் கிண்ண முக்கோண தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய – நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் இன்று ஆர்.பிரேமதாச மைதானத்தில் இலங்கை நேரப்படி 2.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இப்போட்டியில் முக்கிய நிகழ்வுகளை இதே பக்கத்தில் பின்னூட்டமாக இணைக்க தேசம் நெட் விசேட ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

முதல் போட்டியில் இலங்கையிடம் தோல்வி அடைந்த நியூஸிலாந்து அணி தொடரின் இறுதிப் போட்டி வாய்ப்பு தக்கவைத்துக்கொள்ள இன்றைய தினம் கட்டாயம் வெற்றிபெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நியூஸிலாந்து இன்றைய தினம் தோல்வி அடைந்தால் இலங்கை இந்திய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் இந்திய அணி தனது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இல்லாமல் இன்று களமிறங்குகிறது. இதனால் நியூஸிலாந்துடனான போட்டியில் சச்சின் டென்டுல்கர் மற்றும் டினேஷ் கார்த்திக் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.

அத்துடன் முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய ஒருநாள் அணிக்காக விளையாட இன்று களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

New Zealand 155 (46.3 ov)
Compaq Cup – 2nd Match

  New Zealand innings (50 overs maximum)
 BB McCullum†  lbw b Nehra  3 
 JD Ryder  lbw b Nehra  0 
 MJ Guptill  c Dravid b Yuvraj Singh  22
 LRPL Taylor  c †Dhoni b Singh  11 
 GD Elliott  c †Dhoni b Yuvraj Singh  22 
 JDP Oram  c & b Sharma  24 
 NT Broom  c Raina b Yuvraj Singh  21
 DL Vettori*  b Sharma  25
 KD Mills  b Singh  6 
 IG Butler  c Harbhajan Singh b Nehra  6 
 SE Bond  not out  10 
 
 Extras (lb 4, w 1) 5     
      
Total (all out; 46.3 overs) 155 (3.33 runs per over)
Fall of wickets1-1 (Ryder, 0.3 ov), 2-4 (McCullum, 2.2 ov), 3-19 (Taylor, 5.5 ov), 4-51 (Guptill, 14.6 ov), 5-66 (Elliott, 20.3 ov), 6-101 (Oram, 28.1 ov), 7-116 (Broom, 32.1 ov), 8-134 (Mills, 37.6 ov), 9-142 (Vettori, 42.3 ov), 10-155 (Butler, 46.3 ov) 
        
 Bowling
 A Nehra 8.3 0 24 3
 RP Singh 8 2 22 2 (1w) 
 I Sharma 10 2 26 2
 Yuvraj Singh 10 0 31 3
 Harbhajan Singh 8 0 39 0
 SK Raina 1 0 4 0
 YK Pathan 1 0 5 0

கொம்பெக் கிண்ண முக்கோண தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி- நியூஸிலாந்து அணியை 6 விக்கட்டுகளினால் வெற்றியீட்டியது

முதல் போட்டியிலும் இரண்டாவது போட்டியிலும் தோல்வி அடைந்த நியூஸிலாந்து அணி தொடரின் இறுதிப் போட்டி வாய்ப்பு இழக்கிறது.

இலங்கை இந்திய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டன

India innings (target: 156 runs from 50 overs)
 
 KD Karthik  lbw b Mills  4
 SR Tendulkar  c Guptill b Vettori  46
 R Dravid  lbw b Oram  14 
 Yuvraj Singh  c Guptill b Vettori  8
 MS Dhoni*†  not out  35
 SK Raina  not out  45 
 
 Extras (lb 3, w 1) 4     
      
Total (4 wickets; 40.3 overs) 156 (3.85 runs per over)

To bat YK Pathan, Harbhajan Singh, RP Singh, A Nehra, I Sharma 
Fall of wickets1-7 (Karthik, 2.3 ov), 2-67 (Dravid, 18.1 ov), 3-71 (Tendulkar, 19.2 ov), 4-84 (Yuvraj Singh, 23.6 ov) 
        
 Bowling
 KD Mills 5.3 1 25  
 SE Bond 10 3 30 0  
 IG Butler 4 0 25 0  
 DL Vettori 10 0 33 2
 JDP Oram 7 1 19 1
 GD Elliott 2 0 9 0
 MJ Guptill 2 0 12 0

India won by 6 wickets (with 57 balls remaining)

கேமராமேனை அடிக்கவில்லை: ஹர்பஜன் சிங் விளக்கம்

கேமராமேனை நான் அடிக்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறினார். ஹர்பஜன் சிங், புதன்கிழமை பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்தபோது கேமராமேனை அடித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வியாழக்கிழமை அவர் கூறியதாவது: நான் கேரமாமேனை அடிக்கவில்லை. விமானநிலையத்துக்கு நான் வந்து காரிலிருந்து இறங்கியபோது எனது தலையில் வேகமாக ஏதோ பட்டது. அது கேமரா என்று அறியாமலேயே அதை நான் தள்ளிவிட்டேன். நான் அவரை அடிக்கவில்லை என்றார் அவர்.

ஐ.ரி.என். ஊடகவியலாளர் சுரேஷ் விபத்தில் மரணம்

110909itn-rep.jpgசுயாதீன தொலைக்காட்சி சேவையின் ஊடகவியலாளரான சுரேஷ் விக்கிரமசிங்க (35) நேற்று (10) தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கடந்த முதலாம் திகதி வாகன விபத்துக்குள்ளான சுரேஷ் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தார்.

ஊடகவியலாளரான சுரேஷ¤ம் அவரது மனைவியும் கோட்டே பெத்தகான சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வேளை எதிரே வந்த டிப்பர் வாகனமொன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகன சாரதியின் தவறின் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

சுரேஷ் விக்கிரமசிங்கவின் மனைவியான வாசனா விக்கிரமசிங்க இவ்விபத்தினால் காயங்களுக்குள்ளாகி சிகிச்சைபெற்றுவரும் நிலையில், சுரேஷ் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சத்திரசிகிச்சைப் பிரிவின் கீழ் சிகிச்சை பெற்றுவந்தார்.

சுரேஷ் விக்கிரமசிங்க கடந்த 2001 ஆம் ஆண்டு சுயாதீன தொலைக்காட்சி சேவையில் இணைந்துகொண்டார். செய்தி வாசிப்பாளர், செய்தி தயாரிப்பாளர், செய்தி சேகரிப்பாளர் என்ற பல்வேறு திறமைகளைக் கொண்டிருந்த சுரேஷ், சிறந்த புகைப்பட கலைஞருமாவார். இவர் ஒரு பட்டதாரியாவார்.

உயிரிழந்துள்ள ஊடகவியலாளரான சுரேஷின் பூதவுடல் கொஸ்கம, பஹலகமவிலுள்ள 372/2 இலக்கத்தைக் கொண்ட அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13ஆம் திகதி நடைபெறும்.

ஆடம்பர ஹோட்டல்களை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் – அமெரிக்கப் புலனாய்வுத்துறை அறிக்கை

உல்லாசப் பயணிகளைக் கவரும் ஆடம்பர ஹோட்டல்களைத் தாக்க பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ முகாம்கள், அரசியல் தலைவர்களை தாக்குவது கடினமா கவுள்ளதால் பயங்கரவாதிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் 2001 ம் ஆண்டு தாக்கப்பட்ட பின் பயங்கரவாதத்துக் கெதிரான இராணுவ நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டன.

பாதுகாப்புகளும் கடுமையாக்கப்பட்டன.  இதனால் பயங்கரவாதிகளின் இராணுவ, அரசியல் இலக்குகள் தோல்வியடைகின்றன. சில தாக்குதல்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. எனவே ஆடம்பர ஹோட்டல்களைத் தாக்கவும் வெளிநாட்டுப் பயணிகளைக் கடத்தவும் பயங்கரவாதிகள் தீர்மானித்துள்ளனர்.

குறிப்பாக அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் ஹோட்டல்களும், நலன்களுமே தாக்குதலுக் குள்ளாகலாமென அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.