எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

எதிர்காலத் தேர்தல்களில் படையினரையும் வேட்பாளர்களாக நிறுத்த ஜனாதிபதி விருப்பம்

nimal-sripala.jpgவடக்கில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டிருந்த தேசத்தை உறுதியாக நின்று போராடிக் கைப்பற்றிய இராணுவத்தினரை எதிர்காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் நிறுத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த விருப்பத்தை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கடந்த வாரம் குருநாகல் மக்களுக்கு முதன்முதலில் அறிவித்துள்ளார். அங்கு இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வக்கீல்கள் சங்கத்துடனான சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் மேற்படி முடிவு பற்றி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்; இன்று நாட்டின் பாதுகாப்பிற்காகவும் நாட்டின் இறைமையை காப்பாற்றுவதற்காகவும் நேர்மையாக போராடும் வீரர்களை அரசியலில் பங்கேற்க வைக்க ஜனாதிபதி விரும்புகிறார் எதிர்காலத்தில் இடம்பெறும் அனைத்துத் தேர்தல்களிலும் இராணுவத்தில் பணிபுரிந்த அதிகாரிகள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவதுடன் அவர்கள் அரசியலில் உற்சாகத்துடன் பங்குபற்றுவதற்கும் ஊக்கமளிக்கப்படுவர்.

அத்துடன் இந்த இராணுவ அதிகாரிகளை அரசியலில் பிரவேசிக்குமாறு ஜனாதிபதி கேட்டுள்ளார். மேலும் நாட்டு மக்களுக்கு நேர்மையாக பாதுகாப்பளித்து வரும் இவ்வீரர்களை அரசியலில் பங்குபற்ற செய்ய எடுக்கப்பட்ட முடிவு வரவேற்கத்தக்கதாகும். அத்துடன் வடமேல் மாகாணத்தில் இராணுவ வீரர்கள் நிச்சயம் அதிகளவான வாக்குகளைப் பெறுவர் எனவும் அங்கு இராணுவத்தினருக்கு சிறந்த வரவேற்புள்ளதெனவும் தெரிவித்தார்.

கண்டியில் இன்று – அரச பொங்கல் விழா

pongal-02.jpgதைப்பொங்கல் பண்டிகையையொட்டி ‘பிரஜா சக்தி’ அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ‘அரச பொங்கல் விழா’ இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காலை 10.00 மணிக்கு கண்டி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், மத்திய மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள், மாகாண அமைச்சர்கள் பலரும் இப்பொங்கல் விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. அமைச்சர் தொண்டமானால் வழி நடத்தப்படும் ‘பிரஜா சக்தி’ அமைப்பு இவ்விழாவுக்கான விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் மலையகத்தின் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளும் இப்பொங்கல் விழாவில் இடம் பெறவுள்ளன.

அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த முயல்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

president.jpgஅரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக் கூடிய விதத்தில் செயற்படும் சக்திகளை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாதுகாப்புதரப்புக்கு உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் இறுதிக் கட்டத்துக்கு படைத்தரப்பு முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில் சில தீய சக்திகள் அரசுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் சதித்திட்டத்தை மேற்கொண்டுள்ளதாகச் சுட்டிகாட்டியிருக்கும் ஜனாதிபதி எத்தகைய சவால்களுக்கும் முகங்கொடுக்ககூடிய பலம் அரசுக்கு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

செவ்வாய்க்கிழமை இரவு அலரிமாளிகையில் இடம்பெற்ற நாட்டிலுள்ள சட்டதரணிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்ட தகவல்களை வெளியிட்டிருக்கின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் செவ்வாய்யிரவு ஜனாதிபதியைச் சந்தித்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டியதோடு இதற்குக் கட்சி இன வேறுபாடுகளலின்றி அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் விடுத்துள்ளது.

போரின் தீர்க்கமான கட்டத்துக்கு வந்துள்ள நிலையில் யுத்தத்தை மலினப்படுத்தி அரசாங்கத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதத்தில் அண்மைக்காலமாக ஊடகநிறுவனங்கள் தாக்கப்படுவதும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுமுள்ளனர். இறுதியாக சிரேஷ்ட ஊடகவியலாளரும் , சட்டதரணியுமான லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவை அனைத்துக்குமே அரசு மீதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அரசுக்கு உள்ளூர் மட்டத்திலும் சர்வதேச ரீதியிலும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதே இந்த சதிகாரிகளின் திட்டமாகும். இதனை அரசு கடுமையாகக் கண்டிக்கிறது.  இத்தகைய மிலேச்சத்தனமான படுகொலையைச் செய்தவர்களை கண்டு பிடித்து நாட்டு மக்களுக்கு பகிரங்கப் படுத்துவோம். ஊடக நிறுவனம் தீவைப்பு ,லசந்த விக்கிரமதுங்க படுகொலை என்பன தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைவில் கண்டு பிடிக்குமாறு நான் பாதுகாப்புத் தரப்புக்கு பணிப்புரை விடுத்துளேன். அரசாங்கம் ஜனநாயக விரோதச் செயலிலீடுபடவில்லை. அதேபோன்று இனிமேல் ஜனநாயகத்துக்கு கலங்கம் ஏமற்பட இடமளிக்கப்படவும்மாட்டாது. இவ்விடயத்தில் அரசு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கதீர்மானித்துள்ளது எனவும் ஜனாதிபதி ராஜபக்ஷ சட்டத்தரணிகள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிக்கு பிரசாரம் செய்ய தொனிப்பொருள் எதுவும் இல்லாத நிலையிலேயே “சிரச’ தாக்குதல், லசந்த படுகொலை – அமைச்சர் ராஜித சேனாரட்ன

stop-terr-media.jpg
கிளிநொச்சியை அரசு வெற்றிகொண்டபின் எதிர்க்கட்சியினரின் பிரசாரத்துக்கு எதுவுமில்லாத நிலையிலேயே சிரச மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன் லசந்தவும் கொல்லப்பட்டார். அரசுக்கு எவ்வித இலாபமும் இல்லாத இச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப் படுவார்களென அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். மகாவலி கேந்திர நிலையத்தில்  செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்; “அரசாங்கம் கிளிநொச்சியை வெற்றிகொண்டுள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் சிரச ஊடகம் மற்றும் சண்டே லீடர் பிரதம ஆசிரியர் லசந்த மீதான தாக்குதல் தொடர்பில் அரசு மீது குற்றம் சுமத்துவதை ஏற்க முடியாது. அரசு படிப்படியாக வெற்றி ஈட்டி வருகின்ற நிலையில் இதனை சகிக்க முடியாமலே எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். சிரச மற்றும் லசந்த மீதான தாக்குதல்தாரிகளை அரசாங்கம் நீதியின் முன்நிறுத்தி உண்மையை தெரியப்படுத்தும். இவை தொடர்பில் உரிய விசாரணையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி, லசந்தவின் நெருங்கிய நண்பர். லசந்த தனது திருமணத்துக்கு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி வரமுடியாது என தெரிவித்ததுடன் அவரது பாரியார் சகிதம் விருந்துக்கு வருமாறு லசந்தவை அழைத்துள்ளார். இதேபோல் லசந்த நோய்வாய்ப்பட்ட சமயம் ஜனாதிபதி தனது தனிப்பட்ட வைத்தியரை அனுப்பி சிகிச்சையளித்துள்ளார். லசந்தவுடன் ஜனாதிபதி இணைந்து பணியாற்றியுள்ளார். இவ்வாறு லசந்தவுக்கும் ஜனாதிபதிக்கும் நெருக்கமான உறவு இருந்த நிலையில் எதிர்க்கட்சியினர் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.

இவ்வாறு வீணான குற்றங்களை சுமத்தி புலிகளுக்கு சக்தியளிக்க வேண்டாம். ரணில் விக்கிரமசிங்க இருக்கின்ற சமயமே பிரேமதாஸ கொலை செய்யப்பட்டார். புலிகள் தோல்வியில் இருக்கும் சமயம் சதி வேலைகளில் ஈடுபடுவர். மகேஸ்வரன் மீதான தாக்குதல் தொடர்பிலும் அரசு மீது பழிபோடப்பட்டது. அமைச்சரான நான் ஜனாதிபதியை சந்திப்பதை விட அதிகமாக மகேஸ்வரன் சந்திப்பார். இதனை நான் மகேஸ்வரனிடமே கேட்டுள்ளேன். கிளிநொச்சிக்கு பின்னர் எதிர்க்கட்சியினர் பேசுவதற்கு எதுவும் இல்லாத நிலையிருந்தது. கடந்த ஆறாம் திகதி பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் விவாதத்துக்கு எடுக்கப்படவிருந்த சமயம் சிரச தாக்கப்பட்டது. அதுபோல் 8 ஆம் திகதி அரசு மீது நம்பிக்கையில்லா விவாதம் நடைபெறவிருந்த சமயம் லசந்த சொல்லப்பட்டார்.

இவை அரசின் இலாபத்துக்காக இடம்பெற்றதா அல்லது வேறுயாருடைதோ இலாபத்துக்காக இடம்பெற்றதா என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இத்தாக்குதலால் அரசுக்கும் ஜனாதிபதிக்கும் எந்த இலாபமும் இல்லை. விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். லசந்த தாக்குதல் தொடர்பில் மங்கள சமரவீர மற்றும் சந்திரிகா ஆகியோர் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியின் போதே ரிச்சர்ட் டி சொய்ஸா கொலை இடம்பெற்றது. அப்போது ரணில் விக்கிரம சிங்க அரசிலிருந்தார். சந்திரிகா ஆட்சியில் அவருக்கு நெருக்கமாகவிருந்த மங்கள சமரவீர அமைச்சராக விருந்த போதே லசந்த இரு முறை தாக்கப்பட்டார். ரோகண குமார படுகொலை செய்யப்பட்டார். இவர்களின் தலைமையிலேயே இவை இடம்பெற்றன. மங்கள சமரவீரவே ஊடக மாபியாவென தெரிவித்த நிலையில் இப்போது ஊடக சுதந்திரம் இல்லையென கூறுகின்றார். வெட்கமில்லாது இப்போது கதைக்கின்றனர். தோல்வியுற்று இறுதிக் கட்டத்திலுள்ள புலிகளுக்காக இவர்கள் சதி செய்கின்றனர்’.

கல்வி அமைச்சின் செயலாளர் பண்டாரவுக்கு எதிராக விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

secretary_.jpgகல்வி அமைச்சின் செயலாளர் நிமால் பண்டாரவை சேவையில் இருந்து இடைநிறுத்துமாறு, ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் சிபார்சு செய்துள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தவென ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். வட மேல் மாகாண சபை செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாகவே, நிமால் பண்டாரவை சேவையில் இருந்து இடைநிறுத்துமாறு புலனாய்வு பிரிவு சிபார்சை தெரிவித்திருந்தது.

காணி விவகாரம் தொடர்பில், அரசாங்கத்தின் ஒரு தொகைப் பணத்தை கல்வி அமைச்சின் செயலாளர் மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டு தொடர்பாகவே, ஜனாதிபதியின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. பண்டார, வட மேல் மாகாண சபையின் செயலாளராக இருந்த காலத்தில், அரசாங்கத்தின் 10.25 மில்லியன் ரூபா பணத்தை அவர் மோசடி செய்ய முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம் இந்த நிலத்தை கைமாற்றிய விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள ஏனைய அதிகாரிகளுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கும் ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவு சிபார்சு செய்துள்ளது.

முறைகேடுகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் வட மேல் மாகாண சபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஹெரலியவல தொழிற்சாலை தொகுதியை விஸ்தரிப்பதற்கான அஸ்வத்துவத்த நில கொள்வனவு தொடர்பில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பாகவே,ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த நிலத்துக்கான பெறுமதியை அரச மதிப்பீட்டாளர்கள் 10 மில்லியன் ரூபாவாக கணிப்பிட்டுள்ள நிலையில், இக் காணியை 20.25 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்ய நிமால் பண்டார முயற்சிகளை மேற்கொண்டமையும் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது. அரச மதிப்பீட்டாளரின் அறிக்கை கிடைக்கும்வரை இந்த காணி விவகாரத்தை இடைநிறுத்தி வைத்துள்ளதாகவும் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். இக் காணி விவகாரம் தொடர்பான கணக்காய்வுகளின்போதும், நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி தீக்குளிக்க முயற்சி

perijar.jpgஇலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னை மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தைகள் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் (15)  தீக்குளிக்க முயன்ற பெரியார் தி.க.வை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரபரப்புக்கு பெயர்போன கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் (15) காலை தீக்குளிப்போம் என்று பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த சிலர் அறிவித்து இருந்தனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமிஷனர் கே.சி.மஹாலி உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர்கள், சுந்தரவடிவேல், பழனிசாமி, ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சவுந்தர் ராஜன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், உள்பகுதியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். அதோடு தீயை அணைக்கும் கருவிகளையும் கொண்டு வந்து தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. மதியம் 12.40 மணியளவில் 3 திசைகளில் இருந்து 3 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் வந்து கையில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதை பார்த்த காவலர்கள் ஓடிச்சென்று அவர்கள் 3 பேரையும் தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் ஈழத்தமிழர்கள் தாக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று ஆவேசமாக முழக்கமிட்டனர்.

இதையடுத்து தீக்குளிக்க முயன்ற 3 பேரையும் காவலர்கள் கைது செய்தனர். அவர்களது விபரம் :- பெரியார் ஜெகன் (30),ஈரோடு மாவட்ட பெரியார் திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளர், சம்பூகன் என்ற சண்முகம் ,.பெரியார் தி.க. திருப்பூர் நகர செயலாளர். கோபிநாத் (26), திருப்பூர் பெரியார் திராவிடர்கழகம்.. கைதான 3 பேரும் பந்தயச்சாலை காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஆபிரகாம் லிங்கனின் நினைவிடத்திற்கு பராக் ஒபாமா விஜயம்: அவரைப் பின்பற்ற உறுதி

obama.jpgஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளை வைத்தே பராக் ஒபாமா பதவியேற்கவுள்ளார். ஆப்ரகாம் லிங்கன் அதிபராகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர் எவ்வித மதிய உணவு சாப்பிட்டாரோ அதே போல தானும் சாப்பிட ஒபாமா முடிவெடுத்துள்ளார். ஆப்ரகாம் லிங்கனின் வழியை பின்பற்றி வருபவர் பராக் ஒபாமா. இதனால் அவரது வழியிலேயே தானும் பதவியேற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்வாகியுள்ள ஒபாமா வரும் 20ம் திகதி முறைப்படி பதவியேற்றுக் கொள்ளவுள்ளார். பதவியேற்பு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர். பதவியேற்றுக் கொண்ட பின்னர் ஒபாமா தனது மதிய உணவை நாடாளுமன்ற குழுவினருடன் சேர்ந்து சாப்பிட உள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்காவின் துணை அதிபர், அவரது குடும்பத்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 200க்கும் மேலான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் ஒபாமா தனது குடும்பத்தாருடன் ஆப்ரகாம் லிங்கனின் நினைவிடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில் :- என்னை கவர்ந்த மாபெரும் தலைவர் ஆப்ரகாம் லிங்கன் என்று பெருமிதத்துடன் கூறினார்.

லண்டன் இல. தூதரகம் முன்பாக சண்டே லீடர் ஆசிரியரின் படுகொலைக்கு எதிரான போராட்டம் இன்று மாலை 4:30ற்கு : த ஜெயபாலன்

Alan_Johnsonசண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை ஜனவரி 16 மாலை 4:30 மணிக்கு இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக கண்டனப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இக்கண்டனப் போராட்டத்தை தேசம்நெற், கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல், எக்சைல் ஜேர்னலிஸ்ட் நெற்வேர்க் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. நேற்று ஜனவரி 15 பிரித்தானியப் பிரதமரின் அலுவலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் கண்டனப் போராட்டம் ஒன்றை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சண்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்காவின் படுகொலையைக் கண்டிக்கும் இந்தப் போராட்டத்தில்  தேசம்நெற் கட்டுரையாளர்கள் செய்தியாளர்கள் கருத்தாளர்கள் வாசகர்கள் கலந்துகொண்டு இலங்கை அரசின் ஊடக ஒடுக்குமுறைக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும் என தேசம்நெற் கேட்டுக்கொள்கிறது.

லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலை சர்வதேச கண்டனத்தை இலங்கை அரசுக்கு எதிராகத் திருப்பி உள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் மீதான தனது வெற்றிக்குள் லசந்தவின் படுகொலையை இலங்கை அரசு மறைக்க முற்பட்டாலும் அதனையும் மீறி சர்வதேச ஊடகங்களில் லசந்தவின் படுகொலையில் இலங்கை அரசை அம்பலப்படுத்தி உள்ளது.

Chronicle of a death foretold
The Economist Jan 15th 2009

As the Tamil Tigers face defeat, Sri Lanka’s freedoms are also under threat

He was a brave campaigning journalist. And like too many brave campaigning journalists in Sri Lanka, he is now dead. But at least from the grave he has left an eloquent warning to the government, led by a man he called “friend”, President Mahinda Rajapaksa: that as the army grinds relentlessly towards final triumph in a 25-year civil war, the very foundations of the democratic free society it should be fighting for are in jeopardy.

http://www.economist.com/opinion/displayStory.cfm?story_id=12932312&source=hptextfeature

‘We know who is behind my death’: Sri Lankan editor continues fight from grave
The Guardian, Jonathan Steele, Tuesday 13 January 2009

It is being called “the voice from the grave”, a remarkable and accusing article written by one of Sri Lanka’s best-known journalists and published days after he was murdered in a hail of gunfire.
In a 2,500 word editorial, Lasantha Wickrematunge foresees his own death, hints at the identity of the killers from within the ranks of Sri Lanka’s government, and lays out a gripping and detailed account of what he sees as his country’s descent into persecution of citizens and flouting of democracy.

http://www.guardian.co.uk/world/2009/jan/13/sri-lankan-journalist-sunday-leader

“Today is a day when one remains speechless. Maybe we should have spoken before this. Today it is too late. Today is a day when humanity has lost a major voice of truth. But he will live in his work.”
German ambassador Jurgen Weerth

Grievous blow to Sri Lankan media
BBC News – By Alastair Lawson, 8 January 2009
 
The murder of Sri Lankan newspaper editor Lasantha Wickramatunga highlights the claim often made by human rights groups that the country is one of the most dangerous places in the world for journalists to operate.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7817793.stm

Dying for Journalism: Lasantha Wickrematunge of Sri Lanka
TIME – By Jyoti Thottam / Colombo Thursday, Jan. 08, 2009

His death has galvanized the growing anger among the press and other civil-society groups in Sri Lanka about restrictions on free expression in the country and intimidation of the media.

http://www.time.com/time/world/article/0,8599,1870440,00.html

சண்டே லீடர் ஆசிரியரின் படுகொலையை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கிறது.
தேசம்நெற் 8 ஜனவரி 2009

இலங்கை அரசாங்கம் தொடர்பாகவும் தற்போது முன்னெடுக்கப்படும் யுத்தம் தொடர்பாகவும் மிகுந்த விமர்சனத்தைக் கொண்டிருந்த லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையை தேசம்நெற் வன்மையாகக் கண்டிக்கிறது. ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் இலங்கையில் நாளாந்த நிகழ்வுகளாகி வருகின்றது. ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இலங்கையும் தற்போது உள்ளது என்பதை லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளது.

http://thesamnet.co.uk/?p=6193

மேலுள்ளவை சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலையை சர்வதேச ஊடகங்கள் எவ்வாறு நோக்குகின்றன என்பதைக் காட்டுகின்றது. லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலை இலங்கையில் ஊடகங்களின் ஊடகவியலாளர்களின் நிலையை பிரதிபலித்து உள்ளது. ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இலங்கை குறிப்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு எவ்வளவு அபத்தானது என்பதனை தனது மரணத்திற்குப் பின்னும் தனது சமாதியில் இருந்து லசந்த விக்கிரமதுங்க நிரூபித்து உள்ளார்.

Protest_15Jan09லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு ஒரு வாரகாலத்தில் ஜனவரி 15 அன்று பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்திற்கு முன் அப்படுகொலையைக் கண்டிக்கும் கண்டனப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. லண்டனில் உள்ள பெரும்பாலான தமிழ் ஊடகங்களைச் சார்ந்த ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் சக ஊடகவியலாளனின் படுகொலையைக் கண்டித்தனர். ஒரு பேப்பர், லண்டன் குரல், லண்டன் உதயன், தீபம் பிபிசி, லண்டன் தமிழ் வானொலி, ரிபிசி, சண்றைஸ் வானொலி, தேசம்நெற் ஆகிய ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் உட்பட பலர் கலந்துகொண்டு இலங்கையின் ஊடக ஒடுக்கு முறைக்கு எதிரான கண்டணத்தை வெளிப்படுத்தினர்.

Ananthy_Pearl_On_Protestஎக்சைல் ஜேர்னலிஸட் நெற்வேர், ரிபொட்டேர்ஸ் வித்அவுட் போர்டர்ஸ், இன்ரநசனல் பெடரேசன் ஒப் ஜேர்னலிஸ்ட், இன்ரநசனல் அசோசியேசன் போர் ரமிழ் ஜேர்னலிஸ்ட் ஆகியன இக்கண்டனப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. தேசம்நெற் இப்போராட்டத்திற்கு தனது முழுமையான ஆதரவை வழங்கி இருந்தது.

இக்கண்டனப் போராட்டத்தில் கடந்த ஆண்டு காசாவில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த பிபிசி உலக செவை ஊடகவியலாளர் அலன் ஜோன்சனும் கலந்து கொண்டு லசந்த விக்கிரமதுங்காவின் படுகொலையைக் கண்டித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உயிராபத்தையும் பொருட்படுத்தாது தமது கடமையைச் செய்யும் சக ஊடகவியலாளர்களுக்கு தங்கள் தார்மீக ஆதரவை லண்டனில் வாழும் ஊடகவியலாளர்கள் வழங்கி இருந்தனர். கடுமையான குளிருக்கும் மத்தியில் இன மத பேதம் இன்றி வேறு வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்து முரண்பாடுகளை உடையவர்களும் கலந்துகொண்டு லசந்தவின் படுகொலையைக் கண்டித்தனர்.

ஊடக ஒடுக்கு முறைக்கு எதிரான இப்போராட்டங்கள் உண்மைகளை உறங்க வைக்கும் இலங்கை அரசின் முயற்சிகளுக்கு தடைக்கற்களாக அமையும்.

புலிகளின் 5 ஆவது ஓடு பாதையும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

airstrip-1501.jpgபுலிகளின் 5ஆவது விமான ஓடுபாதையையும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவத்தின் 632ஆவது படையணி இரணைமடுக்குளத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள விமான ஓடுபாதையை நேற்று மாலை கைப்பற்றியுள்ளதாகவும், இந்த விமான ஓடுபாதை 50 மீற்றர் அகலமும், 1000 மீற்றர் நீளமும்; கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடர்ந்த காட்டுப் பகுதிக்கு நடுவில் அமைக்கப்பட்டிருக்கும் மேற்படி விமான ஓடுபாதையைச் சுற்றி பதுங்கு குழிகளும், பாதுகாப்பு அகழிகளும் வெட்டப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானுக்கெதிராக தாக்குதல் நடத்தவும் ராணுவம் தயார் – இந்திய ராணுவ தளபதி தீபக் கபூர்

deepak.jpgபாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ராணுவத்தை குவித்து வரும் நிலையில், எந்த முடிவை எடுக்கவும் இந்தியா தயாராக உள்ளது. கடைசி சான்ஸாக தாக்குதல் நடத்தவும் ராணுவம் தயார் என்று இந்திய ராணுவ தளபதி தீபக் கபூர் தெரிவித்துள்ளார்.

ராணுவ உயர் அதிகாரிகளுடன் ராணுவ தளபதி தீபக் கபூர் நேற்று ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதட்டம் அதிகரித்துள்ளது. ஆனால் இதுகுறித்து பீதியைக் கிளப்ப தேவையில்லை.

பாகிஸ்தான் தனது பழங்குடி மாகாண எல்லையிலிரு்நது படைகளை கிழக்குப் பிராந்தியத்திற்கு (இந்தியாவுடனான எல்லைப் பகுதி) அனுப்பும் என எதிர்பார்க்கிறோம். தற்போது அவர்கள் கிழக்குப் பகுதி நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இதை இந்திய ராணுவம் ஏற்கனவே உணர்ந்துள்ளது. அவர்களின் திட்டத்தையும் நாங்கள் அறிந்து வைத்துள்ளோம். இருப்பினும் இப்போதைக்கு பயப்படும்படியாக எதுவும் இல்லை.

இருப்பினும் இந்தியா அனைத்து வாய்ப்புகளையும் எதிர்நோக்கியுள்ளது. தூதரக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் அதை இந்தியா சமாளிக்கும். அதேசமயம், கடைசிக் கட்டமாக தாக்குதல் வாய்ப்பையும் நாங்கள் மனதில் வைத்துள்ளோம். ஆனால் அது கடைசிக் கட்டம்தான் என்றார் கபூர்.