செய்திகள்

செய்திகள்

செய்திகள்

அதிகார துஷ்பிரயோகம் செய்தவர் என்பதை பொன்சேகா ஏற்க வேண்டும் -வைராக்கிய அரசியலையும் கைவிடக் கோரிக்கை

mahindananda.jpgசரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரச நிதியைத் தவறாகக் கையாண்டதாலேயே அவர் இன்று சிறைக் கைதியாகியுள்ளார் என மஹிந்தானந்த அலுத்கமகே எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்: சரத் பொன்சேகா தாம் அரசியல் சிறைக்கைதி என தன்னை வர்ணிப்பதை விடுத்து அவர் இராணுவத் தளபதி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் வைராக்கிய அரசியலைக் கைவிடவேண்டும்.

30 நாடுகள் பங்கேற்கும் ஆசிய பசுபிக் மாநாடு ஜூனில் கொழும்பில் – ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வு

ஆசிய பசுபிக் அமைப்பின் 9வது வட்ட மேசை மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் நடை பெறவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவிருக்கும் இந்த மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுமார் 32 நாடுகளைச் சேர்ந்த 150க்கு மேற்பட்டோர் இலங்கை வரவுள்ளனர். இம் மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு இன்டர்கொன்டினல் ஹோட்டலில் நடைபெற்றது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் திலக் கொலரே, அமைப்பின் தலைவர் கலாநிதி அந்தனி ச்யு, சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் பத்மினி பட்டுவிட்டகே, 09வது வட்டமேசை மாநாட்டுக்கு தலைமை வகிக்கவிருக்கும் பொறியி யலாளர் சேன பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஸ்திரமான நுகர்வு மற்றும் உற்பத்தி எனும் தொனிப்பொருளிலேயே இம்மாநாடு நடத்தப்படவுள்ளது. ஆசிய பசுபிக் வட்டமேசை மாநாடு தெற்காசிய நாடொன்றில் நடைபெறவிருப்பது இதுவே முதல் தடவையாகுமென கலாநிதி அந்தனி க்யூ தெரிவித்தார்.

இம்மாநாட்டினை இலங்கையில் நடத்துவதன் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த பல புத்திஜீவிகளின் அனுபவங்களை பரிமாறிக்கொள்ள முடிவதுடன், உல்லாசப் பயணிகளுக்கான வருகையை அதிகரிக்க முடியுமெனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனது உரையில் கூறினார்.

ஆசிய பசுபிக் அமைப்பின் 7வது வட்ட மேசை மாநாடு வியட்நாமிலும் 08வது மாநாடு தன்சானியாவிலும் நடைபெற்றன. அப்போது தீர்மானிக்கப்பட்டதற்கமைய 09வது மாநாடு இலங்கையில் ஜூன் 10 முதல் 12 வரை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இதில் அங்கத்துவம் வகிக்கும் பிலிப்பைன்ஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, சீனா, வியட்நாம், கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இலங்கை வரவுள்ளனர். இவர்களது அனுபவங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் நாட்டிலுள்ள அதிகூடிய வளங்களைப் பயன்படுத்தி சூழல் மாசடையாத வகையில் சிறந்த பொருட்கள் உற்பத்தி செய்வது தொடர்பான நுட்பங்களை அறிந்து கொள்வதே மாநாட்டை நடத்துவதற்கான எமது இலக்கு என பொறியியலாளர் சேன பீரிஸ் கூறினார்

இறுதிப் போரின் நாட்கள் நினைவு கூரப்படுகின்றன!

Wanni_Warஇறுதிக்கட்டப் போரினால் மக்கள் அதிகம் கொல்லப்பட்ட மே மாதப் பகுதியை விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டதற்காகவும், அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதையொட்டியும் மே மாதம் 18ம் திகதி இலங்கையின் தலைநகரமான கொழும்பில் வெற்றி ஊர்வலம் ஒன்று நடத்தப்பட அரசாங்கத்தினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேவேளை, வன்னியில் இறுதிக் கட்டப் போரினால் உயிரிழந்த தங்கள் உறவினர்களின் முதலாம் ஆண்டு நினைவுகளை வன்னி மக்கள் கண்ணிருடனும், துயரின் வேதனைகளுடனும் நினைவு கூருகின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகைகளில் இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட உறவினர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்வலி விளம்பரங்கள் அதிகளவில் பிரசுரமாகி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

குற்றச்செயல்களோடு, வதந்திகளும் யாழ்ப்பாண மக்களை அச்சமடைய செய்கின்றன!

Jaffna Townயாழ்குடா நாட்டில் இடம்பெறும் கடத்தல், கொலை, கொள்ளைச் சம்வங்களையடுத்து வதந்திகளும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. கடத்தல், கொள்ளை, கொலை செய்யப்பட்டதான உண்மையற்ற வதந்திகள் ஒரு சிலரால் உருவாக்கப்பட்டு அவை காட்டுத்தீ போல மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன.  கடந்த சில தினங்களாக வடமராட்சிப் பகுதியில் இருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்கிற வதந்தி பரவியதால் வடமராட்சி மற்றும் யாழ்ப்பாண மக்கள் அதிர்ச்சிக்கும் பரபரப்பிற்கும் உள்ளாகினர். வடமராட்சியில் இரு தினங்களாக மக்கள் ஆறு மணிக்குப்பிறகு விடுகளை விட்டு வெளியே வருவதில்லை. வணிக நிலையங்கள் நேரகாலத்திற்கே மூடப்படுகின்றன. ( தொடரும் கடத்தல் சம்பவங்களால் யாழ். குடாநாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்! : விஸ்வா )

 இதே வேளை, யாழ்.குடாநாட்டில் நடைபெறும் குற்றச்செயல்களைத்  தடுக்க சிறிலங்கா காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து செயற்படுவர் என யாழ். பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர். எனினும் கடந்த 2ம் திகதி  நெல்லியடியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் 25 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சமட்பவத்தையடுத்து, பொது மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் யாழ்.குடாநாட்டில் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இதன் காரணமாக பலர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இலங்கையின் தென்பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் கூட செல்லத் தொடங்கினர். போரின் முடிவின் பின்னர் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. கொழும்பு மற்றும், தென்பகுதிகளுக்குச் சென்று வாழ்ந்த யாழ்ப்பாணத்தவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப ஆரம்பித்தனர். மேற் குறிப்பிட்ட படுகொலைச் சம்பவமானது  யாழ்ப்பாணத்தில் கொலை கலாசாரம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கி விட்டதோ என்ற கேள்வி எழுப்பியுள்ளது  மக்கள் இதனால் அச்சம் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

அவசரகால சட்டத்தின் சில விதிகள் நீக்கம்.

glpeiris.jpgஅவசரகால சட்டத்தின் சில விதிகள் நீக்கப்பட்டுள்ளதாக இன்று பாராளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அறிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் தேவையற்றவை எனக் கருதப்படும் அவசரகால விதிமுறைகளே இப்போது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் எவ்வாறாயினும் அவசரகால சட்டத்தை இப்போதைக்கு முழுமையாக நீக்கமுடியாது என்றும் கூறினார். அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவற்றைத் தெரிவித்தார்.

மேல் மாகாணசபைக்கு புதிய உறுப்பினர்கள்

மேல் மாகாணசபையின் புதிய உறுப்பினர்களாக 5 பேர் இன்று(04) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். பொதுத்தேர்தலையடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பும் வகையிலேயே புதிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது. ஸ்ரீ.ல.சு.க. கொழும்பு மாவட்டம் அஜ்மல் மவ்ஜுத், ஸ்ரீ.ல.சு.க. களுத்துறை மாவட்டம் எம்.எம்.எம்.அம்ஜாத், களுத்துறை மாவட்ட முன்னாள் எம்.பி. லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன, மற்றும் உதயசாந்த பெரேரா, சுதத் மத்துமகமகே ஆகியோரே மேல் மாகாண சபையின் புதிய உறுப்பினர்களாவர்

ஜீ. எஸ். பி. பிளஸ் வரிச்சலுகை; பேச்சுவார்த்தையில் இலங்கைக்கு சாதகம்

glpeiris.jpgஜீ.எஸ்.பி.  பிளஸ் வரிச்சலுகை சம்பந்தமாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பேச்சு வார்த்தைகள் இலங்கைக்குச் சாதகமாக வுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

மேற்படி வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகத் தெரிவித்த அமைச்சர் வெளி நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரொமேஸ் ஜயசிங்க தலை¨யிலான குழு முதற்கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளதெனவும் குறிப்பிட்டார்.

இதற்கென வெளிநாட்டமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவில் நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, நீதியமைச்சின் செயலாளர் சுஹந்த கே. கம்லத், சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கண்டி மாவட்ட ஐ.ம.சு.மு. எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு

பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அலரிமாளிகைக்கு இன்று வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நாவலப்பிட்டியில் இடம் பெற்றதாக கூறப்படும் தேர்தல் வன்முறைகளை ஆராய் வதற்காக நியமிக்கப்பட்ட குழு ஜனாதிப தியிடம் நேற்று தனது அறிக்கையை சமர்ப் பித்ததனையடுத்தே ஜனாதிபதி கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ. கருணாஜீவ தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவே நாவலப்பிட்டி தேர்தல் தொகுதி தொடர்பாக ஆராய்ந்து ஜனாதிபதியிடம் நேற்று அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கையில் விசாரணைகளுடன் போட்டியாளர்களின் கருத்துக்களும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றம் இன்று முதல் 4 தினங்கள் கூடும்

parliament.jpgபாராளு மன்றத்தை இன்று (4) முதல் நான்கு தினங்கள் கூட்டுவதற்கு நேற்று (3) நடத்தப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பி. டி. திஸாநாயக்க தெரிவித்தார்.

புதிய பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்களின் முதலாவது கூட்டம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இதன் போது இன்றும் நாளையும் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது. 6 ஆம் திகதி ஒழுங்கு விதிகளும் 7 ஆம் திகதி அனுதாபப் பிரேரணையும் இடம் பெறும் எனவும் அவர் கூறினார்.

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு மன்னிப்பு – ஜனாதிபதி தீர்மானம்

tissainayagam.bmpபுலிகளி டமிருந்து நிதி பெற்றமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலையாகியுள்ள ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு மன்னிப்பு வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று தெரிவித்துள்ளார்.