செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மேல் மாகாணசபைக்கு புதிய உறுப்பினர்கள்

மேல் மாகாணசபையின் புதிய உறுப்பினர்களாக 5 பேர் இன்று(04) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். பொதுத்தேர்தலையடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்பும் வகையிலேயே புதிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் இடம்பெற்றது. ஸ்ரீ.ல.சு.க. கொழும்பு மாவட்டம் அஜ்மல் மவ்ஜுத், ஸ்ரீ.ல.சு.க. களுத்துறை மாவட்டம் எம்.எம்.எம்.அம்ஜாத், களுத்துறை மாவட்ட முன்னாள் எம்.பி. லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன, மற்றும் உதயசாந்த பெரேரா, சுதத் மத்துமகமகே ஆகியோரே மேல் மாகாண சபையின் புதிய உறுப்பினர்களாவர்

ஜீ. எஸ். பி. பிளஸ் வரிச்சலுகை; பேச்சுவார்த்தையில் இலங்கைக்கு சாதகம்

glpeiris.jpgஜீ.எஸ்.பி.  பிளஸ் வரிச்சலுகை சம்பந்தமாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பேச்சு வார்த்தைகள் இலங்கைக்குச் சாதகமாக வுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

மேற்படி வரிச்சலுகையைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகத் தெரிவித்த அமைச்சர் வெளி நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரொமேஸ் ஜயசிங்க தலை¨யிலான குழு முதற்கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளதெனவும் குறிப்பிட்டார்.

இதற்கென வெளிநாட்டமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவில் நிதியமைச்சின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, நீதியமைச்சின் செயலாளர் சுஹந்த கே. கம்லத், சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் ஐரோப்பிய யூனியனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கண்டி மாவட்ட ஐ.ம.சு.மு. எம்.பிக்களுடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு

பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அலரிமாளிகைக்கு இன்று வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

நாவலப்பிட்டியில் இடம் பெற்றதாக கூறப்படும் தேர்தல் வன்முறைகளை ஆராய் வதற்காக நியமிக்கப்பட்ட குழு ஜனாதிப தியிடம் நேற்று தனது அறிக்கையை சமர்ப் பித்ததனையடுத்தே ஜனாதிபதி கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ. கருணாஜீவ தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவே நாவலப்பிட்டி தேர்தல் தொகுதி தொடர்பாக ஆராய்ந்து ஜனாதிபதியிடம் நேற்று அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கையில் விசாரணைகளுடன் போட்டியாளர்களின் கருத்துக்களும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றம் இன்று முதல் 4 தினங்கள் கூடும்

parliament.jpgபாராளு மன்றத்தை இன்று (4) முதல் நான்கு தினங்கள் கூட்டுவதற்கு நேற்று (3) நடத்தப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி பாராளுமன்றச் செயலாளர் நாயகம் பி. டி. திஸாநாயக்க தெரிவித்தார்.

புதிய பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்களின் முதலாவது கூட்டம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. இதன் போது இன்றும் நாளையும் அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கான விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது. 6 ஆம் திகதி ஒழுங்கு விதிகளும் 7 ஆம் திகதி அனுதாபப் பிரேரணையும் இடம் பெறும் எனவும் அவர் கூறினார்.

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு மன்னிப்பு – ஜனாதிபதி தீர்மானம்

tissainayagam.bmpபுலிகளி டமிருந்து நிதி பெற்றமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலையாகியுள்ள ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு மன்னிப்பு வழங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழத்தை எதிர்கொள்ள அரசு தயார் – அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அறிவிப்பு

glpeiris.jpgஇலங் கைக்கு வெளியே புலிகளினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நாடுகடந்த தமிழீழ அரசினை எதிர்கொள்வதற்க அரசு தயாராகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இவ்விடயத்தினை கையாளுவது தொடர்பாக உலகம் பூராகவும் உள்ள இலங்கையின் தூதுவர்கள், உயரிஸ்தானிகர்களுக்கு அறிவுறுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமது அமைச்சுப் பொறுப்புக்களை இன்று வெளிவிவகார அமைச்சில் கையேற்ற வைபவத்தின்போதே அமைச்சர் பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டில் இனவாதத்தை தூண்டும் விதத்தில் கட்டுரைகளை எழுதினார் என நீதிமன்றினால் 20 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்திற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கிய தகவலையயும் அமைச்சா; இங்கு தெரிவித்தார்.

விதவைகள் மறுவாழ்வு திட்டம்; ரூ. 25 கோடி வழங்க இந்தியா இணக்கம்

hisbullah.jpgவடக்கு,  கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 25 கோடி ரூபாவை வழங்க இணக்கம் தெரிவி த்துள்ளதாக பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சராகப் பதவியேற்ற பின் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா இந்தியத் தூதுவர் அசோக்காந்தை உத்தியோகபூர்வ மாக சந்தித்துப் பேச்சு நடத்தி யுள்ளார்.

இப்பேச்சுவார்த்தையின்போதே மேற்படி இணக்கம் காணப்பட்டுள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்தார். தாம் தமக்கான அமைச்சுப் பொறுப்பை கையேற்ற பின் முதல் நடவடிக்கையாக வட கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கை மேம்பாடு சம்பந்தமாக இந்தியத் தூதுவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறிய பிரதியமைச்சர் இப் பேச்சுவார்த்தையின் பயனாக உடனடியாக 25 கோடி ரூபா நிதியை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளதெனவும் குறிப்பிட்டார்.

கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகள் 49, 000 பேர் உள்ளனர். இவர்களில் ஆயிரம் பேருக்கு சுய தொழில்களை மேற்கொள்வதற்கு மேற்படி 25 கோடி ரூபா நிதியும் செலவிடப்படவுள்ளது.

இதேபோன்று ஏனைய நாடுகள் சர்வதேச அமைப்புகளுடனும் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வடக்கு, கிழக்கில் வாழும் பெண்கள், சிறுவர்கள் அதிலும் குறிப்பாக யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதே தமது நோக்கமாகுமெனவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

இன்று உலக ஊடக சுதந்திர தினம்; உலகில் 97 ஊடகவியலாளர் 2009ல் பலி

secretary-general.jpgஉலக ஊடக சுதந்திர தினம் இன்றாகும். இத்தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்- கீ- மூன் விடுத்துள்ள செய்தியில் ஊடகங்களில் பணிபுரியும் அனைவரையும், பாதுகாக்கவேண்டியது அனைத்து அரசாங்கங்களினதும் கடமையாகும்.

அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை புரிவோர் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்படுவதும் இந்த பாதுகாப்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, பேச்சு சுந்திரம் ஒரு அடிப்படை மனித உரிமையாகும். உலகளாவிய மனித உரிமைகள் பிரகடணத்தின் 19 ஆவது ஷரத்தில் இது உள்ளடக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 97 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலை களுக்கு நான் பலத்த கண்டனம் தெரிவிக்கி ன்றேன். இந்த கொலைகளுக்கு காரண மானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று பான். கீ மூன் தனது செய்தியில் கூறியுள்ளார்.

தற்போதைய சூழலுக்கேற்ப அவசரகால சட்டத்தில் திருத்தம் – சபையில் நாளை சமர்ப்பிக்க அரசு தீர்மானம்;

pr-mahi.jpgதற்போதைய சூழ்நிலைக்கேற்ப அவசரகால சட்டத்திலுள்ள சில சரத்துக்களில் திருத்தங்களைச் செய்து நாளை 4ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஆளுங்கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதம், ஆயுத விடயங்கள் மற்றும் காலத்துக்குத் தேவையான சில ஷரத்துக்களுடன் மட்டுமே இம்முறை அவரசரகால சட்டம் விவாதத்திற்கு உட்படுத்தவுள்ளது. நாளையும் நாளை மறுதினமும் இதன் மீதான விவாதம் இடம்பெற்று வாக்களிப்புக்கு விடப்படு மென அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கி ன்றன. பாராளுமன்றம் நாளை 4ம் திகதி கூடுவதை முன்னிட்டு ஆளும் கட்சி பாராளுமன்றக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பிரதமர் டி. எம். ஜயரட்ன உட்பட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், எம்.பிக்கள், கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் அவசரகாலச் சட்டம் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டன.

பாராளுமன்றத்தில் வாய் மூல விடைக்களுக்கான வினாக்கள் வேளையின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களே பதிலளிக்க வேண்டுமென்ற பணிப்புரையை ஜனாதிபதி இங்கு விடுத்துள்ளார். இதன்கென அமைச்சர்கள் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகும் நாட்களில் 9.30 மணிக்கு சபைக்கு சமுகமளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். நேற்றைய இந்த ஆளுங் கட்சிப் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது அமைச்சுக்களின் வாகனங்களை ஒப்படைத்தல் சம்பந்தமாகவும் கவனத்தில் கொள்ளப்பட்டன.

முன்பிருந்த அமைச்சுக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமைச்சுக்களுக்குப் பாரமளிக்க வேண்டிய வாகனங்களை இதுவரை ஒப்படைக்காமலுள்ளன. இவற்றை விரைவாக ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். வாகனங்களை ஒப்படைக்கும் பட்சத்தில் புதிய அமைச்சுக்க ளுக்குத் தேவைப்படும் வாகனங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித் துள்ளார். இதற்கிணங்க வாகனங்களை ஒப்படைப்பதற்கு அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். நேற்றைய இக் கூட்டத்தின் போது பாராளுமன்றத்திற்கான புதிய சபைத் தலைவர் மற்றும் ஆளுங் கட்சியின் பிரதம கொறடா ஆகியோர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சபை முதல்வர் நிமல்;பிரதம கொறடா தினேஷ்

parliament.jpgஏழாவது பாராளுமன்றத்தின் சபை முதல்வராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நியமனங்களை மேற்கொண்டார்.

ஆளும் கட்சியின் முதலாவது பாராளுமன்றக் குழு கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே பாராளுமன்ற சபை முதல்வராக நீர்ப்பாசன நீர்முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய இக்கூட்டத்தில் பிரதமர் டி.எம். ஜயரட்ன உட்பட ஆளும் கட்சியின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பான பல்வேறு விடயங்களும் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.