செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ரி.எம்.வி.பி. தனித்துப் போட்டி

asath.jpgகிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கிலும் தனித்து போட்டியிட நேற்று தீர்மானம் எடுத்திருப்பதாக கட்சியின் பேச்சாளர் ஆஸாத் மெளலான தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே தனித்துப் போட்டியிடுவதென கட்சி தீர்மானம் எடுத்திருந்தது. அம்பாறை உட்பட கிழக்கில் மூன்று மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. இதற்கான வேட்பு மனு நாளை சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் கட்சிப் பேச்சாளர் ஆஸாத் மெளலானா கூறினார்.

‘நகரத்தை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டம்: கொழும்பு நகரத்தை 5 வாரத்தில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

colo-town.jpg‘நகரத்தை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தை 5 வார காலத்தில் அபிவிருத்தி செய்து முடிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். ‘நகரை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டம் நேற்று (21) கொழும்பில் ஜனாதிபதி மாளிகையில் ஆரம்பமாகியது. இங்கு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

கொழும்பில் ஆரம்பமாகும் இத்திட்டம் படிப்படியாக நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் விஸ்தரிக்கப்படும். ஆசியாவின் பெருமைக்குரிய நாடாக இலங்கையை மாற்றியமைக்கவேண்டுமானால் அனைத்து நகரங்களும் பெருமளவு அபிவிருத்தி செய்யப்பட்டு அலங்காரம் மிக்க நகரங்களாக மாற்றப்படவேண்டும் என்று கூறினார்.

‘நகரை கட்டியெழுப்புவோம்’ வேலைத் திட்டத்தின் முதல்கட்டமாக கொழும்பு நகரை அண்டியுள்ள குடிசை மற்றும் குறைந்த வசதிகளுடன் கூடிய வீட்டுத் தொகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான வசதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் செயற்படுத்தப்படும்.

நகரத்தை கட்டியெழுப்புவோம். துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் முதற்கட்டமாக கொழும்பு நகரை அடுத்துள்ள தோட்ட மற்றும் குறைந்த வசதி கொண்ட 354 வீட்டுத் தொகுதியின் பொது வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன.

ஆரோக்கிய வசதி மற்றும் பொது குளிக்கும் இட வசதி, உள்ளே செல்லும் வழிகள் மற்றும் கழிவு கால்வாய்த் திருத்துதல், மின்சார மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்தல் மற்றும் நகரத்தின் பொது வசதிகளை மேம்படுத்தல் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படவுள்ளன.

கெரவலப்பிட்டிய அனல்மின் நிலைய இறுதிக்கட்ட பணி பூர்த்தி – 25ம் திகதி ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்

கெரவலபிட்டிய அனல் மின் நிலையத்தின் 100 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட இறுதிக் கட்டம் பூரணப்படுத்த ப்பட்டு எதிர்வரும் 25ம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எதிசக்தி அமைச்சின் ஆலோசனையின் பேரில் 300 மெகாவாட் மின் உற் பத்தி திறன் கொண்ட கெரவல பிட்டிய அனல் மின் நிலையத்தின் முதலாவது கட்டமாக 200 மெகா வொட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட பிரிவு கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டது.

அதனையடுத்து 100 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டாவது கட்டம் தற்போது பூரணப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சிவாஜிலிங்கம் தலைமையில் புதிய கட்சி?

sivaji.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தலைமையில் கட்சி ஒன்று உருவாக்குவதற்கு கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் ஆராய்ந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜி லிங்கம், செ.கஜேந்திரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் அக் கட்சிக்கு எதிரான புதிய கட்சியொன்று உருவாக்குவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இக் கட்சி எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிருப்தியாளர்கள் அங்கம் வகிப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தெலுங்கானா விவகாரத்தில் மேலும் ஒரு மாணவர் தீக்குளித்து பலி

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை தனியாக பிரிப்பதில் உள்ள தாமதத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது தீக்குளித்த மாணவர் இறந்துவிட்டதாக ஐதரபாத் நகர போலீசார் கூறுகின்றனர்.

thelungana.bmpதெலுங்கானாவை தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று கோரி நூற்றுக்கணக்கான மாணவர்கள் டிசம்பரில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

வன்முறைகள் தொடர்ந்ததன் காரணமாக புதிய மாநிலத்ததை அமைக்கும் பணிகளை மத்திய அரசு நிறுத்தியது. தகவல் தொழில்நுட்பம், மற்றும் மருந்து நிறுவனங்கள் பல அமைந்துள்ள ஐதராபாத் தெலுங்கானாவின் பகுதியாக இருக்க வேண்டும் என்று ஆர்பாட்டக்காரர்கள் விரும்புகின்றனர்

யெமெனில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்திலீடுபட்டோர் கைது

யெமெனில் பாதுகாப்புக்கு அச் சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டோர் சிலரைப் பொலிஸார் கைது செய்தனர்.

இவர்கள் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் அர சைக் கண்டிக்கும் துண்டுப் பிரசுரங்கள் பதாகைகளை வைத்திருந்தனர். ஷியா கிளிர்ச்சியாளர்களின் நடமாட்டமுள்ள நகரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி களேபரம் பண்ணிய 16 பேரையே பொலிஸார் கைது செய்தனர்.

அல்கைதாவின் தூண்டுதலில் இவர்கள் ஆர்ப்பாட்ட த்திலீடுபட்டதாக பொலிஸார் கூறினர். யெமென் ஷியா கிளர்ச்சியாளர்களுக்கும். யெமென் அரசுக்கு மிடையே அண்மையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது என்றாலும் இவை இன்னும் பூரணமாக அமுலுக்கு வரவில்லை. இதனால் இவ்வா றான கைதுகள் இடம்பெறுகின்றன. எனவே சர்வதேசம் இந்த ஒப்பந் தத்தைப் பயனுள்ளதாக்க முன்வர வேண்டுமெனக் கோரிக்கை விடப் பட்டுள்ளது.

யெமெனில் 2004ல் ஷியா முஸ்லிம்கள் போராட்டத்தை ஆரம்பித் தனர். இன்று வரை தொடரும் யுத்தத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியும் இடம்பெயர்ந்து முள்ளனர். யெமெனப் புனரமைப்பதற்கான மாநாடு இம்மாதம் 27, 28ம் திகதிகளில் சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.

அ.இ.மு.கா. 6 மாவட்டங்களில் ஐ.ம.சு.மு.வுடன் இணைந்து போட்டி

ameer.jpgஅகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஆறு மாவட்டங்களில் போட்டியிடுவதாக அ.இ.மு.கா. தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம். எஸ். எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை, வன்னி, குருணாகல், அநுராதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களிலேயே இம்முறை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுகின்றது.

அ.இ.மு.கா. சார்பாக மேற்படி ஆறு மாவட்டங்களிலிருந்தும் 05 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகுவர் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். முஸ்லிம் மக்களின் ஆதரவு எமக்கு நிறையவே உண்டு. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மக்கள் நன்கு அறிவர்.

ஆதலால் மக்களின் ஆதரவுடன் நாம் அமோக வெற்றியீட்டிவோமெனவும் முன்னாள் அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

இதேவேளை பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ.ம.சு.மு.வின் முதன்மை வேட்பாளராக முன்னாள் அமைச்சர் அமீர் அலி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அநுராதபுரம் வடக்கு: 60 குளங்களை புனரமைக்க ஜனாதிபதி ரூ.10 கோடி ஒதுக்கீடு

அநுராதபுர மாவட்டத்தின் வடக்குப் பகுதி எல்லையில் அமைந்துள்ள அறுபது குளங்களைப் புனரமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்துக்கோடி ரூபாவை வட மத்திய மாகாண சபைக்கு ஒதுக்கித் தந்துள்ளதாக வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க தெரிவித்தார்.

கடந்த முப்பது வருட காலமாக புனர¨க்கப்படாமலிருந்த இக் குளங்கள் தூர்ந்த நிலையிலிருப்பதை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்தே ஜனாதிபதி இந் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

முதற் கட்டமாக பட்டிகல, ருவன்மடுவ, மிகஸ்வெவ, கலபிட்டவெவ, கம்பிலியாவ, கிவுள்வெவ ஆகிய குளங்களின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆறு குளங்களும் புனரமைக்கப்பட்டதும் இப் பகுதியிலுள்ள இரண்டாயிரம் ஏக்கர் நிலத்தில் நெற் செய்கை மேற்கொள்ளப்படும் என வட மத்திய மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பீ. எஸ். லியனகே தெரிவித்தார்.

ரூபவாஹினி நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து இராஜினாமா

karu.jpgதேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கருணாரத்ன பரனவிதான தமது பதவிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுவதற்காகவே அவர் தனது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான அவர் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் பெட்பர்ட் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவராவார். இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுளை தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலேயே கருணாரத்ன பரனவிதான இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார்.

முள்ளிக்குளம் பகுதியில் சி 4 ரக வெடிமருந்து மீட்பு

மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் இராணுவத்தின் கஜபா ரொஜிமெண்ட் பிரிவு படை வீரர்கள் நேற்று முன்தினம் மேற்கொண்ட தேடுதலின் போது சி-4 ரக வெடி மருந்து 387 கிலோ கிராம் மீட்டெடுத்திருப்பதாக இராணுவ பேச்சாளர் அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த வெடிமருந்து 37 மூடைகளில் பொதியிடப்பட்டு பிளாஸ்ரிக் நீர்த் தாங்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே படை வீரர்கள் மீட்டெடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். அண்மைக்காலத்தில் பாதுகாப்பு படையினர் மீட்டெடுத்த அதிக நிறைகொண்ட வெடிபொருள் இது வாகும் என்றும் குறிப்பிட்டார்.