யாழ்ப் பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான பாதுகாப்புப் பயண அனுமதி (கிளியரன்ஸ்) இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவை தேவையில்லை எனவும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்காக இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த பாதுகாப்புப்பயண அனுமதி (கிளியரன்ஸ்) இன்று புதன்கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளதென, வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டார். அதன்படி இதுவரை காலமும் நடைமுறையிலிருந்த கிளியரன்ஸ் நடைமுறை புதன் கிழமை முதல் நீக்கப்பட்டுள்ளது. யாழிலிருந்து கொழும்ப செல்வோர் தமது அடையாள அட்டையின் மூன்று போட்டோப் பிரதியினை காண்பித்துக் கொழும்பு செல்ல முடியும்.
மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும் கனரக வாகனங்கள்; நாவற்குழி அரச களஞ்சிய சாலையில் அனுமதியினைப் பெற்று வாகனத் தொடர் அணியுடன் கொழும்பு செல்ல முடியும்” என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது பிறந்த நளையும் ஜனாதிபதியாகப் பதவியேற்று நான்கு வருடப் பூர்த்தியையும் முன்னிட்டு யாழ் பிரதேச மக்களுக்கு வழங்கும் பரிசாக இந்தத் தடையை நீக்க அனுமதித்துள்ளார் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.