செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஆறு வருடங்களில் சீனி உற்பத்தியில் நாடு தன்னிறைவு – அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க தெரிவிப்பு

181009cbrathnayakesss.jpgஎதிர்வரும் ஆறு வருடங்களில் சீனி உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச்செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க நம்பிக்கை தெரிவித்தார். கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு 25 வருடங்கள் பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்.

நாட்டின் கரும்புச் செய்கையின் மேம்பாட்டுக்காக பல ஆக்கபூர்வமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரும்புச் செய்கையில் சிறந்த அறுவடையைப் பெறுவதற்கான நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொக்கும் திட்டம் ஒன்றை கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

தற்போது நாட்டில் 15000 ஏக்கர் நிலப்பரப்பில் கரும்புச் செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இதில் கூடுதலான உற்பத்தி மொனராகலை மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றது. கரும்பு உற்பத்தியை மேலும் நான்கு மாவட்டங்களுக்கு வியாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலதிக பயிர்ச்செய்கை தொடர்பான அமைச்சர் சீ.பி.ரத்னாயக்க தெரிவித்தார்.

அதன்படி அம்பாறை,  பதுளை, அநுராதபுரம்,  குருணாகல் ஆகிய மாவட்டங்களிலும் கரும்புச் செய்கை விஸ்தரிக்கப்படவுள்ளது. இப்பிரதேசங்களில் 5 தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன. கரம்புச்செய்கைக்கு ஏற்ற மண்வளம்கொண்ட வடக்கின் கிளிநொச்சி பகுதியையும் தெரிவு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை கரும்புச் செய்கையின் இடைக்கால உற்பத்திகளான எத்தனோல் எரிபொருள்,  உரம் மற்றும் விலங்கின உணவுப் பொருள் உற்பத்திகளை அதிகரிக்கவும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

கரும்பு உற்பத்திக்கான செலவினங்களைக் குறைக்கும் வகையில் கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் நவீன உபகரணங்களையும்; வெளிநாட்டு உயிரி நோய் தடுப்பு நடவடிக்கையையும் அறிமுகம் செய்துள்ளது.

இவ்வாறான திட்டத்தின் மூலம் இன்னும் 6 வருடங்களில் சீனி உற்பத்தியில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்யலாம் என அமைச்சர் தெரிவிக்கின்றார்.
 

புத்தளம் மாவட்ட குளங்கள் புனரமைப்பு!

sri-lanka.jpgபுத்தளம் மாவட்டத்தில் உள்ள கருவெலகஸ்வௌ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தூர்ந்து போயுள்ள சிறிய நீர்ப்பாசனக்குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.  தேசத்தை கட்டியெழுப்பும்  தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு இந்த புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் எதாவெட்டுறுவௌ, கோண்கஸ்வௌ,  கொலம்பகஸ்வௌ,  கோன்வௌ, பளுகஸ்வௌ போன்ற குளங்களே புனரமைக்கப்படவுள்ளன.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமிய மதரஸாக்களில் ஆங்கில மொழிக் கல்வி

000181009.jpgஇந்தியா வின் மேற்கு வங்க மாநிலத்தின் இஸ்லாமிய மதப் பள்ளிக்கூடங்களான மதரசாக்களில் உள்ள ஆசிரியர்கள், அங்கு ஆங்கிலத்தை முக்கிய மொழியாக பயன்படுத்த ஆரம்பிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10 மதரசாக்கள் இந்த முயற்சியை இந்தக் கல்வியாண்டின் தற்போதை தவணையில் ஆரம்பிக்கும் என்று சிறுபான்மையின விவகார அமைச்சர் அப்துஸ் சத்தார் தெரிவித்துள்ளார்.

மீதமுள்ள 566 மதரசாக்களும் இந்தத் திட்டத்தை இன்னும் சில வருடங்களில் ஆரம்பிக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆங்கிலத்தின் பயன்பாடு இல்லாமல் மாணவர்கள் மிகத் தரமான கல்வியைப் பெற முடியாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.மேற்கு வங்கத்தில் மதம் சார பள்ளிக்கூடங்களில் ஆங்கிலம் ஏற்கனவே பயன்படுத்தப்படுகின்றது.

யாழ்- பருத்தித்துறை வீதி புனரமைப்புக்கு ரூ. 169 மில். நிதி

யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதி யில் புத்தூர் சந்தியிலிருந்து வல்லைப் பிரதேசம் வரையான 5 ண கிலோ மீற்றர் நீளமான வீதி ஆசிய அபிவிரு த்தி வங்கியின் 169.5 மில்லியன் ரூபா நிதி உதவியினால் அகலமாக்கி புனர மைக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் வீதியின் இரு மருங்கிலும் 7 மீற்றர் தூரம் அகலமாக் கப்படுகின்றது.

கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம் : மாலைதீவு அரசு தீர்மானம்

2222maldives.jpgகடலுக்கு அடியில் முதல் தடவையாக அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்த மாலைத்தீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

உலகம் வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றங்கள் ஆகியவற்றை வலியுறுத்தும் நோக்கில் இந்த விசித்திர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து ஆறு மீற்றர் ஆழத்தில் நீச்சல் உபகரணங்களுடன் மாலைத்தீவு அமைச்சரவை அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தை நடத்தவுள்ளனர். உலக காபனீரொட்சைட் வெளியீட்டு அளவைக் கட்டுப்படுத்தக் கோரி விசேட ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது.

கடலுக்கு அடியில் மாநாடு நடத்துவது தொடர்பில் மாலைதீவு அமைச்சர்களுக்கு விசேட பயற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

14 பேரைக் கொண்ட மாலைதீவு அமைச்சரவையில் 3 அமைச்சர்கள் மட்டும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. குறித்த மூன்று அமைச்சர்களும் நீருக்கு அடியில் மாநாடு நடத்தக் கூடிய அளவுக்கு மருத்துவ ரீதியில் தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலைதீவு ஜனாதிபதி நசீட் கடலுக்கு அடியில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தத் திட்டமிட்டுள்ளார். அனைத்து அமைச்சர்களுக்கும் விசேட பயற்சிகள் அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அடுத்த இலக்கு இந்தியாதான்: தலிபான்கள் மிரட்டல்

taliban_gther.jpgபாகிஸ் தானில் தாக்குதல் நடத்திய தலி பான்கள் தங்களின் அடுத்த இலக்கு இந் தியா தான் என மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தலிபான் களின் தலைவர் மசூத் தெரிவித்துள்ளான்.

தலிபான் இயக்கத்தின் புதிய தளபதி ஹக்கீமுல்லா மசூத் பேசும் காட்சியை இங்கிலாந்தில் உள்ள ஒரு செய்தி சேனல் ஒளிபரப்பியது. அதில் அவன் கூறியதாவது,

பாகிஸ்தான் இராணுவம் மற்றும் பொலிசாருடன் நாங்கள் (தலிபான் தீவிர வாதிகள்) போரிட்டு வருகிறோம். ஏனெ னில், அமெரிக்க உத்தரவுக்கு ஏற்ப அவர் கள் செயல்படுகின்றனர். அமெரிக்க உத்தரவுகளை பின்பற்றுவதை அவர்கள் நிறுத்த வேண்டும்.

அப்படி நிறுத்தினால், நாங்களும் எங்களுடைய தாக்குதல்களை நிறுத்துவோம். பாகிஸ்தானுக்குள் ஒரு இஸ்லாமிய நாடு உருவாக்குவதே எங்களுடைய லட்சியம். அப்படி ஒரு நாட்டை பெற்றதும், எல்லை வழியாக இந்தியாவுக்குள் நாங்கள் செல்வோம் அங்கு, இந்தியர்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்துக்கு (தீவிரவாத செயல்களுக்கு) நாங்கள் உதவி செய்வோம் என்று ஹக்கிமுல்லா மசூத் கூறினான்.

ஜப்பான் சுற்றுலாப் பயணிகளை அதிகரிக்கத் திட்டம்!

busஇலங்கை வரும் ஜப்பான் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய சுற்றுலாத்துறை அமைச்சு விசேட திட்டம் ஒன்றை வகுத்தள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் நந்தன குணத்திலக்க இலங்கைக்கான ஜப்பான் தூதுவருடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதி சொகுசு ரயில் சேவை மற்றும் உள்ளுர் விமான சேவை ஆகியன ஆரம்பிக்கப்பட்டுள்ளதை ஜப்பான் ஜப்பான் மக்கள் வரவேற்பதாக ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் வருடாந்தம் நடைபெறும் ஜப்பான் சர்வதேச சுற்றுலா மாநாட்டில் இலங்கையை பிரதிநிதிப்படுத்தம் வகையில் பங்குபற்றிய அமைச்சர் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டுக்காக ஜப்பானில் மேற்கொள்ளப்படுவது போன்று பல திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மொழிப் பிரச்சினையினால் சட்டத்துறையில் சில நெருக்கடிகள்; தீர்வு காண நடவடிக்கை – அமைச்சர் மிலிந்த யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு

மொழிப் பிரச்சினையினால் சட்டத் துறையில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண துரித நடவடிக்கை எடுக் கப்படுமென நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட தெரி வித்தார்.யாழ்ப்பாணத்துக்கான உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண் டிருந்த அமைச்சர் மிலிந்த மொரகொட அங்கு புத்திஜீவிகள் மத்தியில் உரையா ற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் நீதித்துறையை விரிவு படுத்துவதற்காக அமைச்சு மேற்கொண் டுள்ள செயற்றிட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் புதிதாக ஐந்து நீதிமன்றக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நடவ டிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார். நேற்று முன்தினம் பருத்தித்துறைக்கு விஜயம் செய்த அமைச்சர் வதிரியில் இயங்கும் நீதிமன்றத்தில் வைத்தே இவ்வாறு கூறினார்.

அமைச்சர் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்திற்கும், நீதவான் நீதிமன் றத்திற்குமான சுமார் 1.2 மில்லியன் ரூபா பெறுமதியான கணனிகள் உபகர ணங்கள், தளபாடங்களை கையளித்தார்.இவ்வைபவத்திலே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ. விக்னராஜா, சாவகச்சேரி மாவட்ட நீதிபதி ஏ. பிரேம் சங்கர், ஊர்காவற்றுறை நீதிபதியும் பருத் தித்துறை மேலதிக மாவட்ட நீதிபதி யுமான ஜோய் மகாதேவா உட்பட சட்டத் தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இரு கனடா எம்பிக்களுக்கு இலங்கை வர விசா மறுப்பு

2222patrick_paul.jpgகனடா கன்ஸர்வேட்டிவ் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை வருவதற்கு விசா வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பற்றிக் பிரௌன் மற்றும், போல் கலேன்ட்ரா ஆகியோருக்கே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இலங்கையின் வவுனியாவில் அமைந்துள்ள தடுப்பு முகாம்களைப் பார்வையிடுவதற்காக இலங்கை வரவிருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு விசா மறுக்கப்பட்ட விடயம் கனேடிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் தாம் இடம்பெயர்ந்தோரின் நிலையைப் பார்வையிடவிருந்ததாக பற்றிக் பிரௌன் தெரிவித்துள்ளார். 

நிவாரணக் கிராமங்களிலிருந்த 96 பல்கலை மாணவருக்கு இந்து மாமன்றம் நிதி உதவி

நிவாரணக் கிராமங்களிலிருந்து மீண்டும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் வந்து சேர்ந்த மேலும் 96 பட்டதாரி மாணவர்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் வாழ்க்கை நிலைப்படுத்தல் கொடுப்பனவாக ஒவ்வொருவருக்கும் தலா 10000/= ரூபா வீதம் நிதியுதவி செய்துள்ளது.

இது தொடர்பான வைபவம் வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மாமன்ற யாழ். பிராந்திய அலுவலகத்தில் மாமன்ற உபதலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத்தின் சார்பாக சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ். விஜய்குமார் கலந்துகொண்டார். ஆறு திருமுருகன், மாமன்ற யாழ். இணைப்பாளர் . ஸ்ரீஸ்கந்தமூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்குரிய கொடுப்பனவை வழங்கினார்கள்.