செய்திகள்

செய்திகள்

செய்திகள்

“சனல் 4” காணொளி விவகாரம்: இலங்கையின் சட்டமா அதிபர் பிரித்தானியா பயணம்

170909mohan_peris.jpgஇலங்கை சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்ட்ட தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் பிரித்தானியாவிற்கான விஜயத்தை இன்று மேற்கொண்டுள்ளார்.
 
கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை, இலங்கை இராணுவம் துன்புறுத்தி படுகொலை செய்கின்ற காட்சி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அவர் அங்கு செல்வதாக அனர்த்த முகாமை மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய செல்லவுள்ள சட்டமா அதிபர், ஐக்கிய இராச்சியத்தின் பத்திரிகை முறையீட்டு ஆணைக்குழுவையும் சந்தித்து, இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. விசேட பிரதிநிதி இன்று வவுனியா நலன்புரி முகாம்களுக்குச் செல்கிறார்

170909-pascoe.jpgஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைத் தலைமைச் செயலர் லின் பாஸ்கோ கொழும்பு வந்தடைந்துள்ளார். இங்கு அவர் இரண்டு நாட்கள் தங்கியிருந்து போருக்கு பின்னரான சூழல் குறித்து அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இன்று வியாழக்கிழமை அவர் வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களுக்கு செல்லவுள்ளார். அரசுடனான பேச்சுவார்த்தைகளின் போது இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களின் மீள்குடியேற்றம் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது. அது தொடர்பில் விரைவான ஒரு நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்க்கிறது.

அமெரிக்க உளவுத்துறையால் தனது வாழ்க்கைக்கு ஆபத்தென்கிறார் ஈராக் ஊடகவியலாளர்

170909.jpgசிறையி லடைக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் கடும் சித்திரவதைக்குள்ளானதாக விடுதலையான ஈராக் ஊடகவியலாளர் முன்நடார் அல் செய்தி தெரிவித்தார். விடுதலையான பின்னர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடொன்றை முன்நடார் அல் செய்தி நடத்தினார்.

இதன் போது தான் சிறையில் எதிர்கொண்ட இன்னல்கள் கொடுமைகள் பற்றி விளக்கினார். குளிர்ந்த நீரில் அமிழ்த்து வைக்கப்பட்டதுடன் மின்சாரத் தாக்குதலுக்குள்ளானதாகவும் சவுக்கையால் மிகப் பலமாக அடிக்கப்பட்டதாகவும் ஈராக் ஊடகவியலாளர் விளக்கினார். விடுதலையான பின்னரும் கூட தனக்கு அச்சுறுத்தல்கள் தொடரும் அபாயமுள்ளது.

அமெரிக்காவின் உளவுத்துறை அரசுக்கெதிரான நடவடிக்கையில் இறங்கியதாக என்மீது போலிக் குற்றங்களைச் சுமத்த வாய்ப்புள்ளது.  எனவே எந்த நேரமும் நான் கொலை செய்யப்படலாம். இதனால் எனது விடுதலை எனக்கு சுதந்திரத்தையளித்துள்ளதாக நினைக்க முடியாது சிறையில் என்னைக் கொடுமைப்படுத்திய ஈராக் இராணுவ அதிகாரிகளை எனக்குத் தெரியும்.

தேவையேற்படும்போது அவர்களின் பெயர்களை வெளியிடுவேன். ஈராக்கில் அவர்கள் (அமெரிக்க இராணுவம்) பொதுமக்களைக் கொலை செய்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதனால் எனது மன உணர்வை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மீது செருப்பை வீசிய முன்நடார் அல் செய்தி மூன்று வருட சிறைத் தண்டனைக்குள்ளானார் பின்னர் ஒருவருடமாக இத்தண்டனை குறைக்கப்பட்டது. நன்னடத்தை காரணமாக ஒன்பது மாதங்களின் பின் நேற்று இவர் விடுதலையானமை குறிப்பிடத்தக்கது.
 

“இலங்கைக்கு எதிராக போர் குற்ற விசாரணை வந்தால் சாட்சியம் கூற தயார்”: தமிழ்வாணி

170909damilvany-gnanakumar.jpgஇலங் கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது பலர் உயிரிழந்தது தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன.  அப்படியாக போர் குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறுமாயின் அது தொடர்பில் சாட்சியம் அளிக்க தான் தயாராகவுள்ளதாக போரின் இறுதிகாலத்தின் வன்னிப் பகுதியில் தங்கியிருந்த லண்டனில் இருக்கும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழ் பெண்மணி தமிழ்வாணி ஞானகுமார் BBC தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்

2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போர் முடியும் வரை வன்னிப் பகுதியிலும், அதன் பின்னர் இம்மாதத்தின் முதல் வாரம் வரை வடக்கே வவுனியாவில் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்கியிருந்தாகக் கூறும் அவர் அப்போது இடம் பெற்ற நிகழ்வுகள் குறித்து தனது கருத்தினை தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்

தனது உறவினர் ஒருவரை சந்திக்க விஸ்வமடு பகுதிக்கு விடுமுறைக்காக சென்றதாக் கூறும் அவர், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விசாக் காலம் முடிந்த பிறகும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக தொடர்ந்து அங்கு தங்கியிருந்து பணியாற்றியதாகக் கூறியுள்ளார் 

போர் இடம் பெற்ற காலகட்டத்தில் வன்னிப் பகுதியில் இடம் பெற்ற கடுமையான மோதல்களில் பல மக்கள் உயிரிழக்க நேரிட்டதை தான் நேரில் கண்டதாகவும், காயப்பட்ட மக்களுக்கு உதவ முடியாமல் மருத்துவமனைகள் மிகவும் சிரமப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்

மருத்துவ துறையில் ஓரளவு பயிற்சி உள்ளதாக கூறும் அவர், போர் காலத்தில் அங்கு இருக்க நேரிட்ட சமயத்தில் அங்கு காயப்பட்டு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்ததாகவும் கூறியுள்ளார்

இலங்கையில் போர் முடிந்து விட்டாலும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன – சந்திரிகா

chandrika.jpgஇலங் கையில் உள்நாட்டு போர் முடிந்து விட்டாலும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இவர் ஒரு வார பயணமாக கேரளா வந்தார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின்னர் திருவனந்தபுரம் வந்த அவர், தலைமை செயலகத்தில் முதல்வர் அச்சுதானந்தனை சந்தித்து பேசினார். பின்னர் சந்திரிகா குமாரதுங்க நிருபர்களைச் சந்தித்தபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கேரளாவுக்கு வர நான் பலமுறை திட்டமிட்டிருந்தேன். ஆனால், இப்போது தான் வர முடிந்தது. இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்த பின்னரும் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.  அங்கு எனது கட்சி தான் ஆட்சியில் உள்ளது. ஆனாலும் இன்னும் அங்கு முழு அமைதி திரும்பவில்லை. இலங்கையில் மக்கள் பீதியுடன் தான் வழ்ந்து வருகின்றனர். அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்களால் அங்கு நிம்மதியாக வாழ முடியாத நிலை காணப்படுகின்றது என்றார். 

ஜீ.எஸ்.பி சலுகை: ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பேச்சு நடத்த ஜனாதிபதி பணிப்பு

sarath-amunugama.jpgஜீ. எஸ். பி. பிளஸ் நிவார ணத்தைத் தொடர்ந்து பெறு வது தொடர்பாக ஐரோப் பிய நாடுகளுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்து மாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.  ஆடைத் தொழிற்துறை சார்ந்த வியாபாரிகளின் பங்களிப்புடன் இந்த நிவாரணத்தை மீளப் பெற தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுவதாக பிரதிநிதி அமைச்சரும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான சரத் அமுனுகம தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

ஜீ. எஸ். பி. பிளஸ் எம க்குக் கிடைப்பதை தடுக்க முற்பட்ட ரணில் விக்கிரம சிங்க, இன்று கரு ஜயசூரிய மூலமாக ஜீ.எஸ்.பி. பிளஸ் நிவாரணத்தை வழங்குமாறு கோரியுள்ளார். ஏன் ஐ.தே.க. தலைவருக்கு இந்தக் கோரிக்கையை முன் வைக்க முடியாது. இந்த வருட இறுதி வரை ஜீ.எஸ்.பி பிளஸ் நிவாரணம் எமக்குக் கிடைக்க உள்ளது. தொடர்ந்து இந்த நிவாரணத்தை பெற சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

ஜீ.எஸ்.பி. பிளஸ் கிடைக்கும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாடு சிறந்த நிலை யில் உள்ள நாடாகும். நாம் வறிய நாடல்ல. எமது நாட்டின் தனிநபர் வருமானம் 1500 அமெரிக்க டொலராகும்.  இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற நிலை யில் இருந்து முன்னேறி மத்திய நிலையை அடைந்துள்ளது. வறிய நாடுகளுக்கே ஜீ.எஸ்.பி. பிளஸ் நிவாரணம் வழங்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதிய கடன் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளன.

பொருளாதாரம் தொடர்பாக ரணில் கூறி வரும் எதிர்வு கூறல்கள் ஒரு போதும் நடந்தது கிடையாது. இலங்கைக்குக் கிடைக்கும் உதவிகளை தடுக்க அவர் முயன்ற போதும் அவை தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.

மூன்று மாதத்துக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்யும் அளவு நிதியே வெளிநாட்டுக் கையிருப்பில் இருக்கும். ஆனால் தற்பொழுது 4 மாதங்களுக்கு போதிய நிதி எமது கையிருப்பில் உள்ளது. இந்தத் தொகை விரைவில் 6 மாதத்துக்கு போதியதாக உயரும். 1977 இல் ஒரு கிழமைக்குத் தேவையான நிதியே கையிருப்பில் இருந்தது.

தற்பொழுது வட்டி வீதம் குறைந்துள்ளது. பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் இருந்து ஒற்றை இலக்கமாக குறைந்துள்ளது. இலங்கை திறைசேரி உண்டியல்களை கொள்வனவு செய்ய எட்டு வங்கிகள் முன்வந்துள்ளன.

உள்நாட்டு நெல் உற்பத்தி 23 வீதத்தால் அதிகரித்துள்ளது. இதனால் இறக்குமதிச் செலவு குறைந்துள்ளது. எமது பொருளாதாரம் ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது. பணவீக்கம் குறைந்து வருவதோடு ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்து வருகிறது. அரச ஊழியர்களின் தொகையை 10 இலட்சத்தில் இருந்து 6 இலட்சமாகக் குறைக்க ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் முயற்சி செய்யப்பட்டது.

ஆனால் நாம் 10 இலட்சமாக இருந்த அரச ஊழியர்களின் தொகையை 12 இலட்சமாக அதிகரித்துள்ளோம். அரச ஊழியர்களை அழிக்க முயன்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரச ஊழியர்கள் குறித்து பேச அருகதை கிடையாது என்றார்.

வயதுக்கும் சாதனைக்கும் சம்பந்தமே இல்லை – சச்சின் டெண்டுல்கர்

sachin-tendulkar.jpgகப்டன் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தலைசிறந்த அணிகளுள் ஒன்று என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார். இந்திய கிரிக்கெட் அணியில் “மேட்ச் வின்னர்கள் இல்லை என்ற குறை நீண்ட நாட்களாக இருந்தது. தற்போது அணியில் அதிக அளவில் மேட்ச் வின்னர்கள் வந்துள்ளனர். வெளிநாடுகளில் இந்தியா தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருவதன் ரகசியம் இதுவே.

துடுப்பாட்டத்திலோ அல்லது பந்து வீச்சிலோ திறமையானவர்கள் அணியில் இருக்கும் போது அணிக்கு வெற்றி நிச்சயம்தான். இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது. போட்டியின் போது குறைகள் அங்கொன்றும்,  இங்கொன்றுமாக இருந்தன. இருந்தபோதும் மொத்தத்தில் இந்தியா சிறப்பாக விளையாடியது.

கடந்த 20 வருடங்களாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறேன். இதில் தோனி தலைமையிலான இந்திய அணி தலைசிறந்த அணிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. நான் யாருடைய தலைமையையும் ஒப்பிட்டுப் பேசவில்லை. ஏற்கெனவே சிறந்த அணிகள் இருந்துள்ளன. அதில் ஒன்றுதான் இது என்று கூறுகிறேன்.

36 வயதில் நான் 44 வது சதம் அடித்துள்ளேன். இலங்கை மூத்த வீரர் சனத் ஜயசூரியா 40 வயதிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். இதிலிருந்து வயது என்பது ஆண்டுகளின் எண்ணிக்கைதான். வயதுக்கும் சாதனைக்கும் சம்பந்தமே இல்லை. எந்த வயதிலும் சிறப்பாக விளையாடி சாதனை படைக்க முடியும். அணிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதுதான் முக்கியம்.  நீங்கள் அணிக்காக சாதனை படைத்தீர்களா என்பது முக்கியம்.

என்னுடைய இந்த 44வது சதம் மறக்க முடியாத சதங்களுள் ஒன்றாகிவிட்டது. இதை என்னுடைய சிறப்பான சதம் என்று சொல்வேன். இலங்கையில் இறுதி ஆட்டத்தை விளையாடுவது கடினமாக இருந்தது. அங்குள்ள சீதோஷ்ண நிலை மிகவும் மோசமாக இருந்தது. அதிகப்படியான வெப்பத்தால் விளையாடுவதற்கு சிரமப்பட்டோம். ஆனால் அதையெல்லாம் நாங்கள் உடைத்தெறிந்து விளையாடினோம்.

நீங்கள் மனதளவில் உறுதியாக இருக்கும்போது நீங்கள் நிச்சயம் ரன் குவிக்க முடியும். அதைத்தான் நான் இலங்கையுடனான ஆட்டத்தில் செய்தேன்.நான் இன்னும் எத்தனை நாட்கள் விளை யாடுவேன் என்ன லட்சியத்தை கொண்டுள்ளேன் என்பது முக்கியமல்ல. கிரிக்கெட்டை எந்த அளவுக்கு நேசித்து அதை விளையாடுகிறேன் என்பதுதான் முக்கியம். இலங்கையுடனான இறுதி ஆட்டத்தின் போது நாங்கள் 319 ஓட்டங்கள் குவித்தோம். ஆனால் இலங்கையின் துவக்கம் அதிரடியாக அமைந்தது.

நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த சர்வதேச மட்டத்தில் சதி

109009dalss.jpgஎந்த வகையிலாவது நாட்டின் தலைமைத்துவத்தை மாற்றி நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த சர்வதேச மட்டத்தில் சதி முன்னெடுக்கப்படுகிறது.  ராஜதந்திர சேவையில் இருந்து ஓய்வு பெற்ற இருவருடன் இணைந்து எதிர்க் கட்சியில் உள்ள இரு அரசியல்வாதிகள் இவ்வாறு சதி செய்து வருகின்றனர். இவர்கள் தொடர்பான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் டலஸ் அலஹப்பெரும தெரிவித்தார்.

மகாவலி நிலையத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, பிரிவினைவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட போது வேறு உருவங்களில் இலங்கைக்கு எதிரான சதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. 2005 ல் ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யவும் அவரை தோற்கடிக்கவும் சதி செய்யப்பட்டது.

இந்த வருட முதற்பகுதியில் ஜனாதிபதியை கொலை செய்தாவது பிரபாகரனை காப்பாற்ற சதி முன்னெடுக்கப்பட்டது. இந்த சதிகள் யாவும் வெற்றிகரமாக தோற்கடிக் கப்பட்டன. ஆனால் இன்று பல்வேறு வடிவங்களில் இலங்கைக்கு எதிரான சதிகள் முன்னெடுக்கப்படுகின்றன. யுத்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் குற்றம்சாட்டி இலங்கைக்கு எதிராக சதி செய்யப்படுகிறது. ஐ.தே.க. தலைவர் ஒருவரும் எந்தக் கட்சிக்கும் இல்லாத அரசியல்வாதி ஒருவரும் இதில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தின் மீது சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தி ஏற்படுத்தவும் அதனூடாக நாட்டின் தலைமைத்துவத்தை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை மீது அவதூறு ஏற்படுத்தவே செனல்-4 தொலைக்காட்சியினூடாக சதி செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஐ.தே.க. கோரியது. இந்தக் குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்பட்ட நிலையில் ஐ.தே.க. அதுகுறித்து எதுவுமே வாய்திறக்காது உள்ளது.

செனல்-4 சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட ஒத்திவைப்பு விவாதத்தில் ஐ.தே.க. எம்.பிக்கள் எவரும் பங்கேற்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின்படியே எந்த ஐ.தே.க. உறுப்பினரும் இந்த விவாதத்தில் கலந்து கொள்ள வில்லை என ஐ.தே.க. எம்.பிக்கள் சிலர் தெரிவித்தனர்.

புலிகள் கொழும்பில் விமானத்தாக்குதல் நடத்தி வந்த போது மிக்-29 ரக விமானங்களை கொள்வனவு செய்ய அரசு தீர்மானித்தது. ஆனால் இந்தக் கொள்வனவில் மோசடி இடம்பெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி மிக் கொள்வனவை தடுக்க முயற்சி செய்தன.

மிக்-29 ரக விமானங்களை கொள்வனவு செய்வதால் புலிகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதாலே எதிர்க் கட்சியிலுள்ள சிலர் செயற்கையான முறையில் சதி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள புலி முக்கியஸ்தர் ஒருவர் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். இதனுடன் தொடர்புடையோரின் விபரங்கள் விரைவில் பகிரங்கப்படுத்தப்படும்.

செனல்-4 தொலைக்காட்சியின் பொய்யான குற்றச்சாட்டுக்கு எதிராக பிரித்தானியாவில் இலங்கையர் போராட்டம் நடத்தினர். இதற்கு அங்குள்ள இலங்கை ஊடகவியலாளர்கள் உரிய பிரசாரத்தை வழங்கினர்.

அத்தகைய ஊடகவியலாளர்களில் ஒருவரான ஜனக அலஹப்பெருமவுக்கு ஐரோப்பாவில் இயங்கும் புலிகள் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இவரை அச்சுறுத்தி 139 தொலைபேசி அழைப்புக்கள் கிடைத்துள்ளன. இதில் 26 அழைப்புகள் பொலிஸாரினால் அடையாளங் காணப்பட்டுள்ளன. அரசியல் தேவைகளுக்காக நாட்டை காட்டிக்கொடுப்பதையும் நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தவும் ஐ.தே.க. தலைவர் முயற்சி செய்கிறார்.

அரசியல் ரீதியில் விவாதிக்கப்படுவதையும் விமர்சிப்பதையும் முகம்கொடுக்க நாம் தயாராக உள்ளோம். ஆனால் நாட்டைக் காட்டிக்கொடுத்து ஆட்சி பீடமேற முயல வேண்டாமென ஐ.தே.க. தலைவரை கோருகிறோம் என்றார்.

அம்பாறையில் இன்று காலை போக்குவரத்து தடை : அதிரடிப் படையால் நிலைமை சீரடைந்தது

அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் இன்று காலை வீதிகளில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டும் கற்கள் மற்றும் மண் குவிக்கப்பட்டும் ஒரு குழுவினரால் போக்குவரத்து தடை ஏற்படுத்தப்பட்டது. எனினும் விசேட அதிரடிப் படையினர் சில மணித்தியாலங்களுக்குள் இவற்றை அகற்றியதால் நிலைமை சீரடைந்தது.

அக்கரைப்பற்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகம் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் ஆதரவாளர்கள் என கூறப்படுபவர்களே இந்த போக்குவரத்துத் தடைகளை ஏற்படுத்தியிருக்கலாம் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக காலையில் அக்கரைப்பற்று – கல்முனை வீதி, சம்மாந்துறை – நாவிதன்வெளி வீதி, அக்கரைப்பற்று – பொத்துவில் வீதி ஆகிய பிரதான வீதிகளில் போக்குவரத்து சில மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தன.

இருப்பினும பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் தொடர்ந்தும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக இ.போ.ச. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வீதியில் திருக்கோவில் ஊடாக போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதை ஒரு குழுவினர் தடுத்து வருவதாகவும் இதனையடுத்தே இச்சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவ் அதிகாரி மேலும் குறிப்பிட்டார். 

டென்னிஸ்: தரவரிசையில் கிலிஸ்டர்சுக்கு 19வது இடம்

150909kilista.jpgபெல்ஜியம் வீராங்கனை 26 வயதான கிம்கிலிஸ்டர்ஸ் குழந்தை பெற்றுக்கொண்டு இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் டென்னிசுக்கு திரும்பினார். நீண்ட நாள் டென்னிசை விட்டு விலகியதால் அவர் தரவரிசையில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் மீண்டும் டென்னிசுக்கு திரும்பிய அமெரிக்க ஒபனை வென்று சாதனை படைத்த அவருக்கு தரவரிசையில் 19வது இடம் வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் டாப் 10க்குள் நுழைவதை அவர் குறிக்கோளாக கொண்டிருக்கிறார்.

ரஷியாவின் தினரா சபீனா முதலிடத்திலும், அமெரிக்காவின் செரீனா, வீனஸ் முறையே அடுத்த இரு இடங்களிலும் உள்ளனர். இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா 74வது இடத்தில் இருந்து 63வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

ஆண்கள் தர வரிசையில் பெடரர் தொடர்ந்து நம்பர் – 01 அரியணையில் உள்ளார். 2வது இடத்தில் இருந்த இங்கிலாந்தின் அன்டி முர்ரே 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அமெரிக்க பகிரங்கத்தில் 4வது சுற்றிலேயே வெளியேறியதால் முர்ரேவுக்கு இந்த சரிவு ஏற்பட்டிருக்கிறது- 3வது இடத்தில் இருந்த ஸ்பெயினின் ரபெல் நடால் மீண்டும் 2வது இடத்துக்கு வந்துள்ளார். அமெரிக்க பகிரங்கத்தில் பட்டத்தை வென்ற ஆர்ஜன்டினாவின் டெல்போட்ரோ ஒரு இடம் முன்னேறி 5வது இடத்தை பெற்றுள்ளார்.

அமெரிக்க பகிரங்க ஆண்கள் இரட்டையர் பட்டத்தை வென்ற இந்தியாவின் லியாண்டர் பயசின் தரவரிசையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் தொடர்ந்து 8 வது இடத்திலேயே நீடிக்கிறார். அவருடன் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த மற்றொரு இந்திய வீரர் மகேஷ் பூபதி 6வது இடத்தில் உள்ளார்.