செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சோதனைச் சாவடிகள் பெருமளவில் அகற்றம்

batticheckpoint.gifஇலங் கையின் கிழக்கு மாகாணத்தில் நெடுஞ்சாலைகளிலுள்ள காவல் துறையினரின் சோதனைச் சாவடிகளும், வீதித்தடைகளும் கனிசமான அளவில் தற்போது அகற்றப்பட்டுள்ளதால், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்கள் எளிதாகியுள்ளன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் இருபதுக்கும் அதிகமான வீதித்தடைகள் அகற்றப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மட்டக்களப்பு கொழும்பு இடையேயான பயண நேரம் பாதியளவாக குறைந்துள்ளதாக வாகன ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர். முன்னர் போல கெடுபிடிகள் ஏதுமின்றி தங்களால் பயணிக்க முடிவதாகவும் பயணிகள் கூறுகிறார்கள்.

வவுனியா மாவட்ட முதலாவது மீள்குடியேற்றம் அடுத்தவாரம் – அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தகவல்

risadbadurudeen.jpgவவுனியா மாவட்டத்தில் நடத்தப்படுகின்ற முதலாவது மீள்குடியேற்ற நடவடிக்கை அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா வடக்கு உதவி அரச அதிபர் பிரிவிலுள்ள எட்டு கிராமங்களில் மக்களை மீளக்குடியமர்த்தும் இந்த நடவடிக்கைகள் தொடர்பான விசேட கூட்டம் அண்மையில் நடைபெற்றதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வவுனியாவுக்கு வடக்கே புலிகளின் பிடியிலிருந்த சுமார் 20 கிராம சேவகர் பிரிவுகளைச்சார்ந்த  எட்டு கிராமங்களில் முதற்கட்டமாக மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் நடத்தப்படுகின்ற முதலாவது மீள்குடியேற்ற நடவடிக்கை இதுவாகும் என்பதுடன் வவுனியாவுக்கு வடக்கே மூன்றாம் கட்டமாக நடை பெறும் மீள்குடியேற்ற நடவடிக்கையாகும். முதற்கட்டமாக மன்னார் சிலாவத்துறையிலும்ää இரண்டாம் கட்டமாக மன்னார் முசலியிலும் இடம்பெற்றிருந்தது.

வவுனியா வடக்கு பிரதேசத்தின் நெடுங்கேணி தெற்கு கிராமசேவகர் பிரிவிலுள்ள மருதன்குளம், புளியங்குளம் கிராமசேவகர் பிரிவிலுள்ள கலீமடு, புலியன்குளம்,  கனகராயன்குளம், குஞ்சுகுளம்,  பரந்தன், நெடுஞ்கேணி,  மன்னார்குளம் ஆகிய எட்டு கிராமங்களிலுள்ள மக்களே மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர

ஈழத்தை மட்டுமே வென்றெடுப்பதற்கு புலிகள் முயன்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது – பிரதமர்

pmsrilaka.jpgவன்னி யில் ஆயுதங்கள், பணம், நகைகள் தொகை தொகையாக மீட்கப்படுவதனால் புலிகளின் ஆட்டம் என்னவென்பது தற்போது புரிகின்றது. அதுமட்டுமல்லாது புலிகள் ஈழத்தை மட்டுமே வென்றெடுப்பதற்கு முயன்றனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்று பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்தார்.

தென்னிலங்கை மக்களை தமிழர்கள் அன்று இருண்ட கண்ணாடி கொண்டே பார்த்தனர். எனினும் இன்று அவநம்பிக்கையை அழித்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலமாக சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவோம் என்றும் அவர் சொன்னார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றில் அழுதவண்ணம் உரையாற்றிய பத்மினி பா.உ.

11padmini.gifவவுனியா தடுப்பு முகாம்களில் தங்கியுள்ள மக்கள் படுகின்ற அவலநிலைகளை எடுத்துக்கூறி உணர்ச்சி வசப்பட்டு உரையாற்றிக் கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன் ஒரு கட்டத்தில் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார்.  மக்கள் குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள்,பெண்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் போதே கண்ணீர் விட்டு அழுது தனது உரையை விட்டு விட்டு  உரையாற்றினார்.

சர்வதேசத் திடமிருந்து நற்பெயரைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையே இன்று மேலோங்கியுள்ளது. எனது பாராளுமன்ற அனுபவத்தின் படி அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களின் வாயை மூடுவதற்கே பயன்பட்டுள்ளது. மூன்று இலட்சம் தமிழ் மக்கள் விருப்பமின்றி அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மக்களின் பெறுமதியான சொத்துக்கள் அழிந்துவிட்டன.

இத்தனை அழிவுக்குப் பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும். விரும்பியோ விரும்பாமலோ நாடு யுத்தத்துக்கு முன்னுரிமையளித்து வந்தது. எனினும் இனியாவது பிரச்சினைக்குத் தீர்வுகாணப் பட வேண்டும். முகாம்களில் வாழும் மூன்று இலட்சம் மக்கள் படும் அவஸ்தைகளினால் முழு தமிழ் சமூகத்தின் மனங்களும் உளைச்சலுக்குள்ளாகியுள்ளன. இம்மக்கள் சுதந்திரமாகவும் அச்சமின்றியும் வாழ வழிவகை செய்ய வேண்டும்.

முகாம்களிலுள்ளவர்களை அவர்களது உறவினர்கள் பொறுப்பேற்க முன்வந்தால் அதற்கான அனுமதி வழங்கப்படவேண்டும். அப்போது அங்குள்ள அடர்த்தி குறைந்து நோய்களும் இறப்புக்களும் குறைவடையும். பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பத்மினி சிதம்பரநாதன் மேற்கண்டவாறு கூறினார்.

கிழக்கிலுள்ள வைத்தியசாலையில் சோதனைக் குழுக்களை அமைக்க திட்டம்

hizbullah.jpgகிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் திடீர் பரிசோதனைகளை மேற்கொள்ள பரிசோதனைக் குழுவொன்று ஏற்படுத்தப்படவுள்ளது. கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருகோணமலை மாவட்ட சுகாதர சேவையை மேம்படுத்தல் தொடர்பான கூட்டத்தின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

கிழக்கு மாகாணத்திலுள்ள சில வைத்தியசாலைகளில் கடமை நேரத்தில் வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு அதிகரித்து வருவதால், வைத்தியசாலைப் பரிசோதனைக் குழுவொன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் விடுத்துள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்டே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபையின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள், சுகாதரத் துறையின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் உடனுக்குடன் மீள்குடியமர்வு – அமைச்சர் அமீர் அலி

ameerali.jpgநிலக் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும் இடம்பெயர்ந்துள்ள மக்கள் உடனுக்குடன் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் எம்.எஸ். எஸ். அமீர் அலி நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

எதிரணியினர் குறிப்பிடுவது போல் இடம்பெயர்ந்துள்ள மக்களைத் தொடர்ந்தும் முகாம்களில் வைத்திருக்கும் எண்ணம் அரசாங்கத்திற்குக் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார். அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வவுனியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கி இருக்கும் நலன்புரி நிலையங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படாதிருப்பதற்காக மல்வத்து ஓயாவிலிருந்து 50 லட்சம் லீட்டர் நீரைப் பெற்றுக்கொள்ளும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. இடம்பெயர்ந்துள்ள மக்களின் தேவைகள் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.

இருப்பினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் காலத்திற்குக் காலம் வெவ்வேறுவிதமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.  இது வழக்கமானது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் எமது ஜனாதிபதி உறுதியாக இருக்கிறார். இது தெளிவானது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் இனியாவது இனவாதம் பேசுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியில் தமிழர் எவருமே அங்கம் வகிக்கவில்லை என்பது அபத்தமானது. அச்செயலணியில் இரண்டு தமிழ் அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றனர். இதனைக்கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இல்லையெனக் கூறுவது எமக்கு கவலை அளிக்கிறது.
 

பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கான் முகமது மரணம்

_khan_muhammed_cricket.jpgபாகிஸ் தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கான் முகமது தமது 81 வது வயதில் லண்டனில் மரணமடைந்தார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சார்பில் முதல் இந்திய விக்கெட்டை வீழ்த்தியவர் என்கிற பெருமையை பெற்றவர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முதல் முறையாக இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் விளையாட 1952 ஆம் ஆண்டு சென்றது.

1952 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டில்லியிலுள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்கியது.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணியின் சார்பில் முதலில் பந்து வீசியவர் கான் முகமது. அதாவது பாகிஸ்தான் அணியின் சார்பில் ஒரு டெஸ்ட் போட்டியில் முதலில் பந்து வீசியவர் என்கிற பெருமையை அவர் பெற்றார்.

முதலில் இந்தியா ஆடியது. துவக்க ஆட்டக்காரர்களாக பன்கஜ் ராயும், வினூ மன்கட்டும் களம் இறங்கினர். இந்திய அணி தனது முதன் இன்னிங்ஸில் 19 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இந்திய அணியின் முதல் விக்கெட் வீழ்ந்தது.

கான் முகமது வீசிய பந்தில், பன்கஜ் ராய் 7 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் சார்பில் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தியவர் என்ற புகழ் கான் முகமதுக்கு கிடைத்தது.

தனது டெஸ்ட் வாழ்க்கையில் மொத்தமாக 13 போட்டிகளில் விளையாடிய அவர் 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இன முரண்பாட்டுக்கு அடிப்படையான மொழிப் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை – அமைச்சர் டியூ குணசேகர

duegunasekara.jpgஇன முரண்பாட்டுக்கு அடிப் படையான மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது, என அரசியலமைப்பு தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டியூகுணசேகர பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

இதனடிப்படையில் சகல அரச நிறுவனப் பிரிவுகளிலும் மொழி செயற்படுத்தல் அதிகாரி களை நியமிக்கத் தீர்மானித்துள்ளதுடன் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை ஓரிரு தினங்களில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் தமதுரையில் மேலும் தெரிவித்த தாவது;

33 வருட பயங்கரவாதம் 27 வருட யுத்தம் இவை முழு மையான முடிவுக்கு வரும்வரை அவசரகால சட்டத்திற் கான தேவை இருக்கும். நாம் என்றும் யுத்தத்தை விரும்புபவர்களல்ல. யுத்தத் தைத் தவிர்க்கக்கூடியவற்றை நாம் பலமுறை மேற் கொண்டுள்ளோம்.

யுத்தம் முடிவுக்கு வரவேண்டும், தீர்வொன்று காணப்பட வேண்டுமென்பதற்கு அன்றே 13வது திருத்தச் சட்டத் திற்குச் சபையில் ஆதரவு வழங்கியவன் நான். 13வது திருத்தத்தில் மொழிப் பிரச்சினையும் அடங்குகிறது. இதற்கான அடிப்படைகளை நாம் இனங்கண்டுள்ளதுடன், அதற் குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரச நிறுவனங்களின் சகல பிரிவுகளிலும் மொழி செயலாற்றலை நடைமுறைப்படுத்தும் வகையில் அதிகாரி களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை இரண்டொரு தினங்களில் சமர்ப்பிக்கவுள்ளேன். இதன்படி தமிழில் அனுப்பப்படும் கடிதமொன்றுக்கு இனி சிங்களத்தில் பதில் அனுப்புவது நடைபெறாது. அவ்வாறு செயற்படும் அதிகாரிகளை இனங்கண்டு உரிய நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன்.

பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் பாராளுமன்றத்தில் உள்ள பத்துக்குமேற்பட்ட கட்சிகளும் ஒருமைப்பாட்டுடன் செயற்படவேண்டும். ஜே. வி.பி. யே இன்று சிங்கள இன வாதத்திற்கு இடமளிக்கக்கூடாதென சபையில் கூறுகிறது. இதனை நாம் வரவேற்கிறோம். பாராட்டுகிறோம். யுத்தம் வட, கிழக்கை மட்டுமல்ல இதர சகல பிரதேசங்களையும் பாதித்துள்ளது. சகல மக்களையும் பாதித்துள்ளது என்பதை சகலரும் உணரவேண்டும்.

எமது தொடர்புகளெல்லாம் ஏகாதிபத்திய நாடுகளுடன் மட்டும்தான் என ஐ. தே. க எம்.பி. ஜோசப் மைக்கல் பெரேரா சபையில் கூறினார். இதை நான் மறுக்கிறேன். இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை ஆரோக்கியமானதாகவே உள்ளது.

நாம் சகல நாடுகளுடனும் ஒப்புரவுடன் செயற்பட்டு வருகிறோம். எனினும் எமது நாட்டுக்குப் பாதிப்பு ஏற்படும் விடயங்களில் நாம் கவனமாகச் செயற்படுவது அவசியம். இதனால் தான் அரசாங்கம் நாட்டுக்குச் சாதகமான தீர்மானத்தை இது விடயத்தில் மேற்கொண்டது. இந்தியா போன்ற அயல்நாடுகளை எமக்கு ஆதரவாக திருப்புவ தற்கும் இத்தகைய தீர்மானங்களே முக்கியமானதாக அமைந்தன எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பாம்புக்கடியால் இலங்கையில் 33 ஆயிரம் பேர் பாதிப்பு

images-snakes.jpgஇலங் கையில் பாம்புக் கடியினால் மக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் நாடாள?விய ரீதியில் 33 ஆயிரம் பேர் பாம்புக்கடிக்குள்ளாகியதாக அடிப்படைப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகளவில் பின் தங்கிய கிராமவாசிகளே பாம்புக்கடியினால் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பாக கவனம் செலுத்தாவிடின் மோசமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.

மேலும், பாம்பு கடித்தவர்கள் நவீன சிகிச்சை வசதிகளை உடைய வைத்தியசாலைகளை அணுகாது அபாயகரமான பாரம்பரிய சிகிச்சைகளையே மேற்கொண்டுள்ளதாக களனிப் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட வருடாந்த கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், பாம்புக் கடியால் உயிரிழந்தவர்களில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படாதோர் தொகை குறிப்பாக கிராமிய மட்டத்தில் பதிவு செய்யப்படவில்லை.  மின்சார வசதியற்ற கிராம மக்களே அதிகளவில் அரையிருள் வேளைகளில் பாம்புக்கடிக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாட்டில் சகல இன மத மக்களுக்குமான உரிமைகள் வழங்கப்பட்டாலே தேசியக் கொடியை நாம் உயர்த்துவது அர்த்தமுள்ளதாகும். – விஜித ஹேரத்

06arliament.jpgநாட்டில் சகல இன மத மக்களுக்குமான உரிமைகள் வழங்கப்பட்டாலே பயங்கரவாதத்தை ஒழித்து தேசியக் கொடியை நாம் உயர்த்துவது அர்த்தமுள்ளதாகும். அதற்கான முதற்படியை அரசு உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரக்கணக்கான விதவைகள், பெற்றோரை இழந்த சிறுவர்கள், பிள்ளை களை இழந்த பெற்றோர்கள் உள்ளனர். அவர்களுக்கான எதிர்கால வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும். அத்துடன் நாட்டின் பிரதான பிரச்சினையை இனங்கண்டு அதனைத் தீர்க்க அரசு உரிய கவனம் செலுத்தவேண்டும்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணி வழங்கிய ஆதரவினைப் போலவே மிஞ்சியுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளைத் துடைத்தெறியும் வரை அவசரகால சட்டத்துக்கும் பூரண ஆதரவினை வழங்கும். அதற்குப் பின்னரும் அவசரகாலச் சட்டம் தொடருவதை ஜே. வி.பி. அனுமதிக்காது. ஏனெனில் அது மக்களைப் பாதிப்பதாகவே அமையும். அவசர காலச்சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே விஜித ஹேரத்: (ஜே. வி. பி. எம்.பி) மேற்கண்டவாறு கூறினார்.