விளையாட்டுச் செய்திகள்
விளையாட்டுச் செய்திகள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த உமர் குல், தற்போது நடைபெற்றுவரும் பாகிஸ்தான் தேசிய ரி-20 கிண்ண தொடர், முடிந்ததும் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ராவல்பிண்டியில் தெற்கு பஞ்சாப் (பாகிஸ்தான்) அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடும் பலூசிஸ்தான் அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
தனது ஓய்வு குறித்து 36 வயதான உமர் குல், டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
‘மிகவும் கனமான இதயத்துடனும், நிறைய சிந்தனைகளுக்கும் பிறகு, இந்த தேசிய ரி-20 கிண்ண தொடருக்குப் பிறகு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் விடைபெற முடிவு செய்துள்ளேன்’ என பதிவிட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் பாகிஸ்தான் அணிக்காக இறுதியாக 2016ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.
உமர் குல், பாகிஸ்தான் அணிக்காக 47 டெஸ்ட் போட்டிகள், 130 ஒருநாள், 60 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2002ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண தொடரில் விளையாடிய உமர் குல், 2003ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்டில் கடைசியாக 2013ஆம் ஆண்டு விளையாடினார். ஒருநாள், ரி-20 சர்வதேச போட்டிகளில் கடைசியாக 2016ஆம் ஆண்டு விளையாடினார்.
2007ஆம் ஆண்டு ரி-20 உலகக் கிண்ண தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக இருந்தார். அதேபோல 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி ரி-20 உலகக் கிண்ண தொடரில் வென்றபோதும் அதே பெருமை அவருக்குக் கிடைத்தது.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் கொரோனா வைரஸ் எதிரொலியாக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தப்பட்டது. முன்னணி வீராங்கணைகள் பலரும் கலந்து கொள்ளாத சூழலில் போலந்து நாட்டை சேர்ந்த இகா ஸ்வியாடெக் தகுதிச் சுற்றில் போட்டியிட்டு வென்று மெயின் டிராவில் போட்டியிட்டார்.
தரவரிசை பட்டியலில் 54வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் தொடர்ந்து வெற்றி பெற்று இறுதி சுற்றிற்கு முன்னேறினார்.
பரப்பரப்பான இறுதி போட்டியில் சோபியா கெனினை 6 – 4, 6 – 1 நேர் செட் கணக்கில் தோற்கடித்தார். போலந்து நாட்டில் இருந்து டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெறும் முதல்வீரர் இகா ஸ்வியாடெக் என்பது குறிப்பிடதக்கது.
பிரெஞ்சு ஒபனில் மிக இளம் வயதில் பட்டம் வென்ற வீராங்கனைகள் வரிசையில் இகா ஸ்வியாடெக் நான்காம் இடம் பிடித்துள்ளார் இதற்கு முன் மோனிகா செலஸ் (16), அரங்ஸா சான்சேஸ் (17), ஸ்டெபி கிராப் (17) ஆகியோர் வென்றுள்ளனர்.
ஐ.பி.எல் தொடரின் பெங்களூருவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடச் செய்த பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்களில் 4 இலக்குகளை இழந்து 169 ஓட்டங்களைகள் எடுத்தது. அணித்தலைவர் கோலியின் அதிரடியால், கடைசி 5 பந்துப்பரிமாற்றங்களில் அந்த அணிக்கு 74ஓட்டங்க கிடைத்தன. கடந்த சில போட்டிகளில் சரியாக ஓட்டங்கள் குவிக்காத கோலி, சென்னைக்கு எதிராக அதிரடி காட்டி 52 பந்துகளில் 90 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
பின்னர் 170 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு, துவக்கம் சரியாக அமையவில்லை. டூ-ப்ளெஸிஸ் 10 பந்துகளில் 8 ஓட்டங்களுக்கும், வாட்சன் 18 பந்துகளில் 14 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். மூன்றாவது வீரராக களமிறங்கிய ராயுடு 42 ஓட்டங்களும், ஜெகதீசன் 33 ஓட்டங்களும் சேர்த்து ஆறுதல் அளித்தனர். அடுத்து வந்த தலைவர் தோனி உட்பட யாரும் நிலைத்து நிற்காததால், சென்னை அணி 132 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்து 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
நேற்று இரவு ஷார்ஜாவில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் 22வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க விரர்கள் ஷிகர் தவான் 5 ஓட்டங்களிலும், பிரித்வி ஷா 19 ஓட்டங்களிலும் ,ஆட்டமிழந்தனர். அணித்தலைவர் ஷ்ரேயாஸ் 22 ஓட்டங்களிலும் , ரிஷப் பண்ட் 5 ஓட்டங்களிலும் ரன்அவுட் முறையில் வெளியேறினர். பொறுப்புடன் ஆடிய ஸ்டொய்னிஸ் 39 ஓட்டங்களும், ஹெட்மையர் 45 ஓட்டங்களும் எடுத்தனர். இறுதியில் டெல்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்கள் எடுத்தது.
தொடர்ந்து 185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 34ஓட்டங்களிலும், பட்லர் 13ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். தலைவர் ஸ்மித் 24 ஓட்டங்களிலும் ராகுல் திவாட்டியா 29 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களிலும்ஆட்டமிழந்ததால், ராஜஸ்தான் அணி 19 புள்ளி 4 ஓவரில் 138 ஓட்டங்களுக்கு தன்னுடைய முழுமையான இலக்குகளையும் இழந்தது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. .
டெல்லி அணியில் 4 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்கள் மட்டும் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இப்போட்டியில் டெல்லிஅணி வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
ஐ.பி.எல் தொடரின் 22-வது போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைவர் வார்னர் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய வார்னரும், பேர்ஸ்டோவ் ஜோடி, துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வார்னர் 52 ஓட்டங்களிலும், பேர்ஸ்டோவ் 97 ஓட்டங்களிலும், ரவி பிஷோனியின் பந்து வீச்சில் அடுத்தடுத்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறிய போதிலும், ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை குவித்தது.
202 ஓட்டங்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 9ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து தலைவர் கேஎல் ராகுல், சிம்ரன் சிங் இருவரும் சொற்ப ஓட்டங்களில் ஆவுட் ஆகினர். மறுமுனையில் பொறுப்புடன் ஆடிய நிகோலஸ் பூரண், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 17 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். தொடர்ந்து 37 பந்துகளில் 77 ஓட்டங்கள் குவித்த பூரண், ரஷித் கான் பந்து வீச்சில் வெளியேறினார். ஐதராபாத் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பஞ்சாப் வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால், 16.5 பந்துப்பரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 132 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இப்போட்டியில் 55 பந்தில் 97 ஓட்டங்களை குவித்த ஐதராபாத் அணியின் ஜானி பேர்ஸ்டோவ்-க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி புள்ளிகள் பட்டியலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியது..இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் அணி 5 போட்டிகளில் தோல்வி அடைந்து, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழையும்.
இந்த நிலையில் சார்ஜாவில் நேற்றிரவு 4-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதின. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக உடல்தகுதியுடன் இல்லாததால் முந்தைய ஆட்டத்தின் ‘ஹீரோ’ அம்பத்தி ராயுடுவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, கொரோனாவில் இருந்து மீண்ட ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டார்.நாணயச்சுழற்சியில் வென்ற சென்னை அணித்தலைவர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தும், புதுமுக வீரர் ஜெய்ஸ்வாலும் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். ஜெய்ஸ்வால் 06 ஓட்டங்களுடன் தீபக் சாஹரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன், ஸ்டீவன் ஸ்மித்துடன் கைகோர்த்தார்.
இருவரும் சென்னை பந்து வீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக சஞ்சு சாம்சன் சிக்சர் மழை பொழிந்தார். ஜடேஜாவின் ஒரு ஓவரில் 2 சிக்சர்கள் அடித்த அவர், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லாவின் பந்து வீச்சில் 3 சிக்சர்களை விளாசி மிரள வைத்தார். அத்துடன் 19 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார்.
அணியின் ஓட்டம் 132 ஆக உயர்ந்த போது சஞ்சு சாம்சன் 74 ஓட்டங்களில் (32 பந்து, ஒரு பவுண்டரி, 9 சிக்சர்) ஆட்டமிழந்தார். அடுத்த வந்த டேவிட் மில்லர் ஓட்டமெதுவுமின்றி ஆட்டமிழந்தார். 19-வது பந்துப்பறிமாற்றத்தின் போது ஸ்டீவன் ஸ்மித் 69 ஓட்டங்களில் (47 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டம் இழந்தார்.
20பந்துப்பறிமாற்ற முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்கள் குவித்தது. ஜோப்ரா ஆர்ச்சர் 27 ஓட்டங்ளுடனும் (8 பந்து, 4 சிக்சர்), டாம் கர்ரன் ஓட்டங்ளுடனும் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் சாம் கர்ரன் 3 இலக்குகளும், தீபக் சாஹர், நிகிடி, பியுஷ் சாவ்லா தலா ஒரு இலக்குமாக கைப்பற்றினர்.
அடுத்து 217 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. பவர்-பிளே வரை தாக்குப்பிடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 33 ஓட்டங்களிலும்(21 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), முரளிவிஜய் 21 ஓட்டங்களிலும் (21 பந்து, 3 பவுண்டரி) பெவிலியன் திரும்பினர்.
இமாலய ஸ்கோரை பார்த்து மலைத்து போன சென்னை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தன. பாப் டு பிளிஸ்சிஸ் மட்டும் கடுமையாக போராடினார். உனட்கட்டின் ஒரே ஓவரில் 3 சிக்சர் விரட்டியடித்தார். அவரது அதிரடியால் ரன்ரேட் கணிசமாக உயர்ந்தது. பிளிஸ்சிஸ் 72 ஓட்டங்களில் (37 பந்து, ஒரு பவுண்டரி, 7 சிக்சர்) அவரும் ஆட்டமிழந்தார்.
அதே சமயம் தடுமாற்றத்துடன் ஆடிய கேப்டன் டோனி, டாம் கர்ரன் வீசிய கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல் அளித்தார். 20 ஓவர்களில் சென்னை அணியால் 6 விக்கெட்டுக்கு 200 ரன்களே சேர்க்க முடிந்தது.
இதன் மூலம் ராஜஸ்தான் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தொடரை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது.