தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பிக்கு 3 மாதங்கள் விடுமுறை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அவரது கோரிக்கைக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்குவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்தார்.
இதே நேரம் கடந்த வருடம் பாராளுமன்ற அமர்வுகளுக்கு குறைந்த அமர்வுகளுக்கு சமூகளித்தோருக்கான பட்டியலில் இரா.சம்பந்தன், சித்தார்த்தன் ஆகிய எம்.பிக்கள் முன்னிலையிலிருந்தமை குறிப்பிடத்தக்கது. இரா.சம்பந்தனுடைய உடல்நிலை அவருடைய பாராளுமன்ற அமர்வுகளுக்கு பெரிய தடையாக உள்ளது என குறிப்பிடப்பட்டு வரும் நிலையில் சம்பந்தன் தன்னுடைய பதவியை – இடத்தை புதிய தலைமுறை இளைஞர்களுக்காக விட்டுக்கொடுக்க முன்வர வேண்டும் என சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.