உள்நாட்டுச் செய்திகள்
உள்நாட்டுச் செய்திகள்
இலங்கைக்கு உதவும் வகையில் மிலேனியம் செலஞ்ச் கோர்ப்பரேஷன் நிறுவனத்திடம் (எம்.சி.சி.) இருந்து தற்போது எந்த நிதியுதவி ஏற்பாடுகளும் இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஏற்கனவே குறித்த திட்டத்தை இலங்கைக்கு வழங்கியபோதும் அதனை ஏற்றுக்கொள்ளாமை ஏமாற்றமளித்தது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தூதர் ஜூலி சுங் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் எப்போதாவது இந்த நிதியுதவி திட்டம் இலங்கைக்கு வழங்கப்படலாம் என்றும் எனினும் தற்போதைக்கு எந்த நிதியுதவி ஏற்பாடுகளும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நிலையில் பெண்ணொருவர் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.
குறித்த பெண்ணை இராணுவத்தினர் உடனடியாக காசல் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான குறித்த பெண், இரண்டு நாட்களாக வரிசையில் காத்திருந்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வருகை தந்துள்ள மக்கள் இன்றும்(07) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
……………………
இலங்கையில் பாஸ்போர்ட் பெறுவதற்காக மட்டுமல்ல எரிபொருள், எரிவாயு , நாளாந்த உணவுப்பொருட்கள் என அனைத்திற்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டே இருக்கின்றனர். பிறப்புக்கள் மட்டுமல்ல 10ற்கும் மேலான மரணங்களும் இந்த வரிசைகளிலேயே சம்பவித்துவிட்டன என்பதே சோகம்.
இன்று வரை இந்த அரசாங்கமும்- அமைச்சர்களும்இந்த வரிசைக்கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இதனை வைத்து அரசியல் நடத்திக்கொண்டிருக்கின்றனர் என்பதே சோகமான உண்மை !
முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் 21 ஆம் திகதி இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் இடம் பெற்ற நிலையில்,ஆசிரியர் வரும் 21.07.2022 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, ஆசிரியரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெறவும், ஆசிரியரை மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் தொடர்பில் காவல்துறையினரிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் மாணவிகள் சிலர் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு, இரண்டு புதிய வழக்குகள் கடந்த 30.06.2022 அன்று நீதிமன்றுக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் குறித்த ஆசிரியர் மாணவி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து பாலியல் துஸ்பியோகம் செய்த குற்றச்சாட்டு காவல்துறையிடம் முன்வைக்கப்பட்ட நிலையில், மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டபோது மாணவி பாலியல் துஸ்பியோகத்துக்கு உள்ளாகியுள்ளமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் காவல்துறையினரால் பாலியல் துஸ்பியோக குற்றச்சாட்டில் தொடரப்பட்ட B/685/22 வழக்கு மற்றும் குறித்த ஆசிரியர் 13 வயது பதினோரு மாதங்களை உடைய மாணவி ஒருவரை பாலியல் துஸ்பியோகம் செய்த குற்றச்சாட்டு காவல்துறையினரிடம் முன்வைக்கப்பட்ட நிலையில், மாணவி வைத்திய பரிசோதனைக்கு உட்ப்படுத்தப்பட்டபோது மாணவி பாலியல் துஸ்பியோகத்துக்கு உள்ளாகியுள்ளமை வைத்திய பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் காவல்துறையால் பாலியல் துஸ்பியோக குற்றச்சாட்டு, சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்களில் தொடரப்பட்ட B/686/22 வழக்கு ஆகியன இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் சட்டத்தரணி எஸ். தனஞ்சயன் முன்னிலையாகியிருந்தனர்.
இதன் போது நீதிபதி ஆசிரியரை 21.07.2022 வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஆசிரியரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெறவும் ஆசிரியரை மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமங்க நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.
“இன்று முதல் உண்மையிலேயே நானும் போராட்டத்திற்கு என்னை தயார்படுத்திக்கொள்கிறேன். நான் அரசாங்கத்தினுள் வந்து 7 நாட்கள் ஆகிறது. இதில் என்ன நடக்கிறது என்று பார்த்தேன். நிதியமைச்சராக ரணில் விக்கிரமசிங்க ஆடும் இந்த அரசியல் விளையாட்டை நிறுத்த வேண்டும். ஏனென்றால் டொலர்களைக் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டத்தையும் இவர் நிறுத்துகிறார்.
நாட்டின் பணப்புழக்கம் குறித்து அவரிடம் எந்த திட்டமும் இல்லை. மக்களுக்கு எப்படி உணவளிப்பது என்பது பற்றி அவரிடம் எந்த திட்டமும் இல்லை. டொலர்களை எப்படி கொண்டு வருவது என்பது பற்றியும் எந்த திட்டமும் இல்லை. இந்த நேரத்தில் அவர் மக்கள் பிரச்சனைகளை சொல்லிக்கொண்டு திரியாமல் நிதியமைச்சர் என்ற விதத்தில் செயற்பட வேண்டும். உண்மையில் எனக்கு பிரதமர் பதவியில் எந்த பிரச்சனையும் இல்லை.
ஏனென்றால் பத்து வருட மல்டிபிள் விசா ஒரு மாதத்திற்கு முன்பே தயாரிக்கப்பட்டு, அமைச்சரவையில் அனுமதியும் பெறப்பட்டுள்ளது. இன்று ஒரு மாதமாக திறைசேரியில் வைத்துக் கொண்டுள்ளனர்.
ஏனென்றால் அவருக்கு ஒரு பழக்கம் உள்ளது, டொலர் வருவது என்றால் உடனே திட்டத்தை நிறுத்த வேண்டும்.
இலங்கை அரசாங்கம் புதிய வரவு செலவுத் திட்டத்தை தயாரித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியம், முன்வைத்துள்ள யோசனைகளை கருத்தில் கொண்டு இதனைத் தயாரிப்பதாக அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளர் ஹன்னா சிங்கர் – ஹம்டியுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலின் போது அமைச்சர் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக, குறிப்பாக எரிபொருள், உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு தொடர்பில் வதிவிட இணைப்பாளருக்கு விளக்கமளித்தார்.
இதன்போது ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் நிறுவனங்களின் மனிதாபிமான உதவியின் தற்போதைய நிலை குறித்து வதிவிட ஒருங்கிணைப்பாளர் விளக்கினார். ஐக்கிய நாடுகள் சபையால், இலங்கைக்கு வழங்கப்படும் உடனடி உதவிகளில் பெரும்போகத்துக்கான யூரியா, மருந்துப் பொருட்கள், விதைகள் மற்றும் பாடசாலைகளுக்கு ஊட்டமளிக்கும் வேலைத்திட்டம் என்பனவும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
………………….
இதே நேரம் சர்வதேசநாணயநிதியத்தின் கடன் ஒரு மாயவலை எனவும் கிரேக்கம் சூறையாடப்பட்டது போலவே இலங்கையும் மீள முடியா கடன்வலைக்குள் சிக்கும் அபாயம் IMF நிபந்தனைகளால் உண்டாகலாம் என பல தரப்புக்களும் அரசை எசசரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
நேற்றையதினம் பாராளுமன்ற அமர்வில் “அனுர குமார திசாநாயக்கவின் வேலை திட்டம் வெற்றி அளிக்கும் என்றால் அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணங்கினால் பிரதமர் பதவியை அனுர குமாரவிடம் ஒப்படைக்க தயார்” என்று இன்று நாடாளுமன்ற அமர்வில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் பதவியை ஏற்க தாம் தயாராகவிருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேசத்திற்கு மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். தற்போதைய அரசாங்கம் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேசத்திற்கு மத்தியிலும் நம்பிக்கை இல்லை. எனவே, தற்போது நம்பிக்கை மிகுந்த நிலையானதொரு ஆட்சிக்கான தேவை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் குறுகிய காலத்தில் நாட்டை மீட்டெடுக்க எம்மால் முடியும் எனவும் தெரிவித்தார்.
இதற்காக ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினா