கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

பாக். உளவுப் பிரிவு இந்தியாவுக்குள் இலங்கை ஊடாக நுழையும் சாத்தியம்

p-chidambaram.jpgபாகிஸ் தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. இலங்கை ஊடாக தென்னிந்தியாவுக்குள் ஊடுருவும் அபாயம் குறித்து இந்திய அரசு ஆராய்வதாகத் தெரிவித்துள்ள இந்திய உள்துறை அமைச்சர் பி.சிதம்பரம் இதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தமது அரசு எடுத்துள்ளதாகத்தெரிவித்துள்ளார்.

“இன்னமும் இது குறித்த தெளிவான தகவல் எதுவும் இல்லை. எனினும் இதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது” என அவர் ராஜ்யசபையில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உளவுப் பிரிவு தென்னாசியாவின் பல நாடுகளில் செயற்படுவதை தாங்கள் அறிந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வருவதற்காக விஸாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் அனைவரும் மிகவும் உன்னிப்பாக பரிசீலிக்கப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.           

யுத்தத்தை எதிர்க்காத – புலத்து புலி எதிர்ப்பு மையம் : சேனன்

Wanni_Warசிறு பத்திரிகை சூழலில் தனிக்காட்டு ராஜாக்களும் குழுவாத போக்குகளும் மலிந்திருப்பது தமிழுக்கு புதிதில்லை. இருப்பினும் இவர்கள் இடதுசாரியம் சார்ந்த அடக்குமுறைகளுக்கு! அதிகாரத்துக்கு எதிரான போக்குகளை கொண்டவர்களாக இருந்ததுண்டு. அந்தக்காலம் மலை ஏறிக்கொண்டிருப்பதை தற்போது அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

தற்போது ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அழிவை எதிர்கொண்டுள்ள மிகமோசமான சூழலில் புலம்பெயர்ந்த அரசியல் / இலக்கிய பிதாமக்களின் பிற்போக்குத்தனங்கள் மேல் ஆயிரம் சூரியன் வெளிச்சம் விழுந்துள்ளது. தம்மை இடதுசாரியம் சார்ந்தவர்களாக காட்டிக்கொள்பவர்களாகவும் ஒடுக்கப்படும் விளிம்பு மக்களுக்காக கதைப்பவர்களாயும் பினாத்தித் திரியும் பலர் இன்று என்ன செய்கிறார்கள்? பேசுகிறார்கள்? என்பதை உற்று கவனியுங்கள். இவர்கள் தமக்கு மீறிய முற்போக்கு / அரசியல் இலக்கிய போக்குகள் எதுவும் புலத்தில் தலையிடாமல் பார்த்துக் கொள்வதில் இதுவரை மிக கவனமாக இருந்து வந்துள்ளார்கள்.

தொண்ணூறுகளுக்கு முந்திய போராட்ட இரகசியத்தை, குழுகுழுத்து மையங்கள் எழுப்பினரே அன்றி இவர்கள் ‘மாற்றை’ உருவாக்கவில்லை. இவர்கள் ‘போராட்ட இரகசியம்’ வெறும் கழிவிரக்கம் கொண்டவையாகவும் சுயபுலம்பல்களாகவும் இன்றுவரை இருந்துவருகிறது. இவர்கள் கட்டமைத்தவை யாவும் புலி எதிர்ப்பு மையவாதத்தை சார்ந்தவையே. பழைய இயக்க சகவாசம், மக்கள் விடுதலை பற்றிய தெளிவற்ற போக்கு, மார்க்சிய எதிர்ப்பு என்று எல்லாம் பின்னிப் பிணைந்ததுடன் புலி எதிர்ப்பு மையம் சுழல்கிறது.

இலக்கியம் என்று பார்த்தாலும் இதுவரை வந்தவைகளில் பெரும்பாலானவை வெறும் குப்பைகளே. உருப்படியாக எழுதுபவர்களும் புலிஎதிர்ப்பு மையத்துக்குள் வலிந்த இழக்கப்படுகிறார்கள். தொண்ணூறுகளுக்கு பிந்திய கொடுமைகள் – மக்கள் பல கோணங்களில் எதிர்கொண்ட கடும் இன்னல்கள் இவர்தம் இலக்கியங்களில் பார்க்க முடியாது.

சொந்த நாட்டிலேயே அகதி வாழ்வு, முஸ்லிம் மக்கள் பிரச்சினை, சிங்கள பேரினவாதமும் தமிழ் தேசியவாதமும் இன்று கண்டுள்ள புதிய எல்லைகள், மலையக மக்கள் பிரச்சினைகள் எதுவுமே இவர்கள் இலக்கியங்களில் பார்க்க முடியாது. இன்றும் முஸ்லிம் பிரச்சினைகளை முஸ்லிம்களும், மலையக மக்கள் பிரச்சினைகளை மலையக மக்களும் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் பற்றி அண்மையில் கவிஞர் இளைய அப்துல்லா ஒரு கவிதை சி.டி. வெளியிட்டுள்ளது இவர்களில் பலருக்குத் தெரியாது. யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. பசீரின் கவிதைப் புத்தகத்தின் உயிர்நாடி பேசப்படவேயில்லை. ஆனால் மிகமோசமாக எழுதும் பலரது ‘புலி எதிர்ப்பு’ கவிதைகள் முக்கியத்துவம் பெறுவதை நாம் அவதானிக்க முடியும்.

அத்துடன் புலம்பெயர்ந்திருக்கும் நாடுகளில் சுற்றிவர நிகழும் ஒடுக்குமுறைகள் சுத்தமாக கவனிக்கப்படுவதில்லை. அமெரிக்க ஐரோப்பிய கண்டங்களில் நிகழும் பூகம்பங்களும், ஒடுக்கப்படும் மக்கள் சார்ந்த போராட்டங்கள் எதுவும் இவர்கள் கவனத்தை ஈர்த்ததில்லை. ‘புலி எதிர்ப்பு தமிழ்ர்’ என்ற குறுகிய பண்பாட்டு வலையத்துக்குள் இவர்களின் கற்பனைகள் சுழல்கின்றன. புலம்பெயர் இலக்கியம் வெறும் புலம் ஏங்கும் இலக்கியம் மட்டுமே. புலம்பல் இலக்கியம் என்றும் சொல்லலாம். 83க்கு முந்திய  – சிலசமயம் 90களுக்கு முந்திய – பழைய குட்டைகளையே இன்றும் கிளறிக் கொண்டிருக்கும் இவர்கள், தற்கால தலைமுறை தமிழர்களின் உணர்வலைகளுக்கு ஏற்பனும் நெருங்கி வரமுடியாதவர்கள்.

போராட்டங்கள் நடத்தும் நாடுகளில் இருந்து சிறந்த போராட்ட இலக்கியங்கள் எழுந்துள்ளதை நாம் பார்க்க முடியும். ஆனால் இலங்கை மக்கள் மத்தியில் இதுவரை அவதானத்துக்கு உந்தி நடப்பவை எல்லாம் புலம் ஏங்கும் இலக்கியங்கள் மட்டுமே. யாரும் எழுதவில்லை என்பதல்ல அதன் அர்த்தம். புறவயக் காரணிகளின் ஆழமையான காரணியாக புலம் ஏங்குதல் இருக்கிறது என்பதுமல்ல அதன் அர்த்தம். பல ‘எழுத்துக்கள்’ கவனிக்கப்படவில்லை என்பதுதன் உண்மை.

புலிகள் வளங்கிய ‘துரோக முத்திரை’ என்ற பொதுமையத்தை நோக்கி ஆளுமைகளை விரயம் செய்யும் இவர்கள், இறுக்கமான கதையாடலில் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஒருபடம் பார்த்தால் பல படங்கள் பார்த்ததற்கு சமன் என்பது போல்தான் புலம்பெயர் இலக்கியமும் போர்முளக்களுக்குள்ளல் இயங்குகிறது. துரோக முத்திரை எதிர்ப்பிலக்கியத்தில் தவறில்லை. ஆனால் அதுமட்டுமே மையமாக இருக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கும் இவர்கள் மடத்தனம்தான் புரியவில்லை.

பல முக்கிய போராட்ட இலக்கியங்கள் அடக்குமுறையுடன் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அற்புதமான கவிதைகள் பல எழுதியவர்களின் உயிர்களை போராட்டம் கவ்விக்கொண்டு விட்டது. அவர்களும் அவர்தம் இலக்கியங்களும் மறக்கப்படுவது ‘அதிகாரத்துக்கான அம்புலோதி’ பாற்பட்ட சிந்தனை போராட்டத்திலேயே நிகழ்கிறது.

தற்போது இடதுசாரிகள் மேல் ‘மத்திதர வர்க்க நக்கலை’ வளர்த்துக் கொண்டிருக்கும் இவர்கள் மக்களில் இருந்து அன்னியப்பட்ட குறுக்குழு வாதங்களில் ஈடுபடுவதையே தொழிலாக கொண்டுவருகிறார்கள். இதை தமிழ்நாட்டுக்கும் கடத்தி தம் சுயவிலாசத்தை நீட்டப் பார்க்கிறார்கள். புலத்தில் தலித்தியம் சார்ந்த விழிப்பு எழுப்பியமைக்கு இந்த மிதாமக்களே காரணம். இன்றும் இவர்கள் பல முட்டுக்கட்டைகளை கட்டமைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். புலி எதிர்ப்பு இலக்கியம் மட்டுமே புரட்சிகர இலக்கியமாக இருக்க முடியும் என்ற தமது அறிவிலி நிலைப்பாட்டை மோட்டுத்தனமாக இலக்கியவாதிகள் மேல் திணித்துவரும் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பலர். குறிப்பாக சமீப காலங்களில் அகதியாக புலம்பெயர்ந்த இளவயதினர் பலர் தமக்கு சம்மந்தே இல்லாத தனக்கு முந்திய போர்முலக்களை பின்பற்ற அழுத்தப்படுவது கேலிக்கிடமானது. அதேபோல் பல இளவயதினர் வலது சாரியத்துக்கு பலிகடாக்களாக்கப்படுவதன் புண்ணியமும் இவர்களையே சாரும்.

இந்த போக்கு இன்று இவர்களை ‘மக்கள் எதிர்ப்பு’ ஸ்தானத்தில் நிறுத்தியுள்ளது. யுத்தவெறி இலங்கை இராணுவத்தின் கொடுமை இவர்களையும் வெளிக்காட்டியுள்ளது. புலிகள் இராணுவ ரீதியாக பாரிய தோல்வியை காணும் இத்தருணத்தில் – தெற்கின் சிங்கள பேரினவாதம் பேயாட்டம் ஆடும் இத்தருணத்தில் – ஆயிரக்கணக்கில் மக்கள் அழிவை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தல், இந்த புலம் பெயர் புண்ணாக்குகள் என்ன செய்கின்றன? தமிழ்நாட்டிலும் உலகெங்கும் மக்கள் லட்சக்கணக்கில் ஒடுக்குமுறைக்கு எதிராக திரளக்கூடிய இத்தருணத்தில் இவர்கள் உல்லாசமாக இருக்கிறார்கள். புலிகள் நசுக்கப்பட்டு போர் ஓயட்டும் என்று காத்திருக்கிறார்கள். இலங்கை அரசைப்போல் போர் முடிதலுக்கு காலவரையறை கணித்து ஆடி ஆவணிக்கு பிறகு கூட்டங்கள்போட திட்டங்கள் போடுகிறார்கள்.

புலி மைய வாதத்தில் புதைந்துள்ள இவர்கள் மக்கள் போராட்ட நடவடிக்கைகளுக்கு எதிரானவர்கள். தனிநபர்கள் தெனாவட்டைக் காட்டி புகழ் சவாவி காய்கிறார்கள்.
மக்கள் போராட்டம் அவசியமான கட்டத்தில் நீங்கள் எங்கே? ஒடுக்கப்படுபவர்களுக்கான உங்கள் குரல் எங்கே? மக்களை மிரட்சியுடன் பார்த்தேன் ஒதுக்குகிறீர்கள்? சுத்தி நின்று மக்கள் இவர்கள் காதுகளில் ‘உ’ என்று கூவியும் இவர்கள் தூக்கத்தால் எழ மறுக்கிறார்கள். அவர்கள் கருனாவின் – பிள்ளையானின் அதனை வளர்க்கும் பேரின வாதத்தின் மடியில் நிம்மதியாய் தூங்குகிறார்கள். ஒரு சதத்துக்கும் உதவாத உங்களை சரித்திரம் சரிக்கும் காலம் வந்துவிட்டது.

பின்குறிப்பு : அவர்கள் / இவர்கள் என்ற பெரும் சொல்லாடலில் பல முகங்களை – பெயர்களை மைப்படுத்தியிருப்பினும் அவசியமேற்படின் அவற்றை பிரசுக்க எந்த தயக்கமும் இல்லை.

‘புதுக்குடியிருப்பு முற்றாக சுற்றிவளைப்பு’ – இராணுவப் பேச்சாளர்

armyvictory.gifபுதுக் குடியிருப்பு நகருக்குள் பிரவேசித்துள்ள பாதுகாப்புப் படையினர் புலிகளிடம் எஞ்சியுள்ள 66 சதுர கிலோமீற்றர் பிரதேசத்தை முற்றாக மீட்டெடுக்கும் இறுதிக் கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பின் வட திசையில் இருந்து தென் திசை வரையான பிரதேசம் முழுவதையும் பாதுகாப்புப் படையினர் முழுமையாக சுற்றிவளைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் பிடியில் உள்ள புதுக்குடியிருப்பு முழுவதையும் விடுவிக்கும் இறுதிக்கட்ட நடவடிக்கையில் இராணுவத்தின் 58வது, 53வது படைப் பிரிவுகளும், இராணுவத்தின் நான்காவது அதிரடிப் படையும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதுக்குடியிருப்பின் நுழைவாயிலில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் முன்னேற்றங்களை தடுக்கும் முயற்சியில் புலிகள் தம்மிடமுள்ள எல்லா வளங்களை பாவித்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த பிரிகேடியர், படையினர் புலிகளின் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துக் கொண்டு புலிகளின் முன்னரங்கு நிலைகளை தகர்த்து, தாக்கியழித்த வண்ணம் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் குறிப்பிட்டார்.

புலிகள் தங்களுக்குள்ள இறுதித்தளமான புதுக்குடியிருப்பை தக்க வைத்துக்கொள்ளும் இறுதிக்கட்ட முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அவை தோல்வியில் முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்னும் ஒரு சில தினங்களுக்குள் பாதுகாப்புப் படையினர் புதுக்குடியிருப்பு நகர் முழுவதையும் விடுவித்து விடுவர் என்று நம்பிக்கை தெரிவித்த இராணுவப் பேச்சாளர், புதுக்குடியிருப்பு நகர் முழுமையாக இராணுவத்தினரிடம் விழும் பட்சத்தில் புலிகளுக்கு புதுக்குடியிருப்பு காட்டுப் பகுதியில் உள்ள சிறு சிறு மறைவிடங்கள் மாத்திரமே எஞ்சும் என்றும் தெரிவித்தார்.

‘தமது சொந்த இடங்களை விட்டு வெளியேற பெரும்பாலான வன்னி மக்கள் விரும்பவில்லை’- வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம்

kanakaratnam.gifஇலங்கை யில் மோதல்கள் நடக்கும் பகுதிகளில் தொடர்ந்தும் தங்கியிருப்பவர் அந்தப் பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் கனகரட்ணம். தனக்கு வாக்களித்த மக்களை தனியே விட்டுவர மனம் இல்லாதாதால் தான் இடம்பெயர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரவில்லை என்று கூறுகிறார் அவர்.

அவலங்கள் ஏற்பட்ட போதிலும் மக்கள் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் தொடர்ந்து நடத்தப்படும் ஷெல் தாக்குதல்களில் தினமும் சராசரி 30 முதல் 35 பேர் வரை கொல்லப்படுகின்றனர். அவ்வாறு மரணங்கள் ஏற்பட்ட போதிலும் அங்கு வாழும் மக்கள் வேறு இடங்களுக்கு வெளியேற விரும்பவில்லை.தொடர்ந்தும் அங்கேயே வசிக்க விரும்புகிறார்கள். முல்லைத்தீவில் தங்கியிருக்கும் அவர் அங்கிருந்து பி.பி.ஸி. தமிழோசைக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வியிலேயே இப்படிக் கூறியுள்ளார்.

அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயங்கள் என அறிவிக்கப்பட்ட புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் போன்ற பிரதேசங்களிலேயே மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் பதுங்கு குழிகளுக்குள்ளேயே வசிக்கின்றனர். அப்பகுதிகளில் உணவு இல்லை என்றே கூறலாம். ஒரு நாளுக்கு மூன்று லொறி களில் உணவுப்பொருள்கள் அனுப்பப்பட்ட போதிலும் அவை போதுமானவையல்ல. இதுவரை 5 லொறி உணவுப் பொருள்களே அனுப்பப்பட்டுள்ளன  என்றார் கனகரத்தினம்.

முல்லைத்தீவில் வாழும் மக்களின் நிலை தொடர்பாக  பி.பி.ஸி. செய்தியாளரின் கேள்விக்கு பதில் கூறுகையில்: யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் போன்ற பல பகுதிகளையும் சேர்ந்த சுமார் 4 லட்சத்து 19 ஆயிரம் பேர் முன்னர் வசித்தனர். இப்போது இறந்தவர்கள், வெளியேறியவர்களைத் தவிர்த்து 3லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர் என்றார்.

விடுதலைப் புலிகள் மக்களை வெளியேற விடாமல் தடுக்கின்றனர். வெளியேறுவோரை சுட்டுக் கொல்கின்றனர் எனக் கூறப்படுகிறதே எனக்கேட்ட போது அது தவறான தகவல் எனவும் வெளியேற முனைந்த மக்கள் இராணுவப் பகுதிக்கு செல்லும் போது போரின் இடையில் சிக்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுவதை  90வீதம் தாம் நம்புவதாகவும்  என்றும் தெரிவித்தார்

நிவாரணக் கிராமங்களிலுள்ளவர்கள் இன்று முதல் சுயமாக சமைக்க வழி

navy_rg.jpgவன்னியி லிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு சமையல் உபகரணங்கள் மற்றும் சமையலுக்குத் தேவையான சகல உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளதுடன் இன்று முதல் அவர்கள் சுயமாக சமைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருஞானசம்பந்தர் தெரிவிக்கையில்;

நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுக்கு இதுவரை சமைத்த உணவுகளே வழங்கப்பட்டு வந்தன. இன்று முதல் அவர்கள் சுயமாகவே சமைக்கத் தொடங்குவர் எனத் தெரிவித்தார். வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியாவில் 14 நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சகல அடிப்படைத் தேவைகளும் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருவதுடன் இதுவரை காலமும் சமைத்த உணவுகளே வழங்கப்பட்டு வந்தன.

இவர்கள் சுயமாக சமைப்பதற்கு வசதியாக உலக உணவுத் திட்டம் அரிசி உட்பட சமைப்பதற்கான உணவுப் பொருட்களையும் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதுவராலயம் ஆகியன சமையலுக்கான உபகரணங்களையும் வழங்கியுள்ளன.

இதனைத் தவிர ஏனைய பொருட்களை பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. தேவை ப்படுமளவுக்கு குடி தண்ணீர் நீர்த்தாங்கிகள் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன எனவும் மேலும் தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்கத் தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உணவுப் பொருட்கள் போதியளவில் உள்ளதால் தற்போது எந்த உணவுப் பொருள் தட்டுப்பாடுமில்லை யெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் பாரிய முகாம், ஆயுத கிடங்கு புதுக்குடியிருப்பில் படையினர் வசம் -பிரிகேடியர்

uthaya_nanayakara_.jpgபுதுக் குடியிருப்பு நகருக்குள் பிரவேசித்துள்ள பாதுகாப்புப் படையினர் அங்குள்ள புலிகளின் பாரிய முகாம் மற்றும் ஆயுதக் கிடங்கு ஒன்றை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்தின் நான்காவது அதிரடிப் படைப் பிரிவினருக்கும் புலிகளுக்கும் இடையில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. புலிகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். படையினரின் கடுமையான தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத புலிகள் அந்த பாரிய முகாமையும், பாரிய ஆயுதக் கிடங்கையும் கைவிட்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னேறிச் சென்ற இராணுவத்தினர் இந்த முகாமையும், ஆயுதக் கிடங்கையும் கைப்பற்றியுள்ளனர். வன்னி மனிதாபிமான இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினர் புலிகளின் வசமிருந்த பாரிய முகாம்களையும், பெருந்தொகையான ஆயுதங்களை மீட்டெடுத்த போதிலும், இதுவரை காலம் கைப்பற்றப்பட்டதிலும் பார்க்கக் கூடுதலான கனரக ஆயுதங்களைக் கொண்ட பாரிய முகாம் இதுவாகும் என்றும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

பெரும் எண்ணிக்கையிலான கனரக ஆயுதங்கள் முதற் தடவையாக மீட்டெடுக்கப்பட்ட பிரதேசம் புதுக்குடியிருப்பு என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். 120 மி. மீ. ரக கனரக மோட்டார் – 03, 81 மி. மீ. ரக மோட்டார்கள் – 45, 60 மி. மீ. ரக மோட்டார்கள் – 43, கொமோண்டோ மோட்டார் – 25, 60 மி. மீ. ரக மோட்டார்களுக்கு பொருத்தப்படும் குழல்கள் – 14, தகடுகள் – 35, இலகுரக இயந்திர துப்பாக்கிகள் – 800, பெருந்தொகையான ரி – 56, ரி – 81 ரக துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான உபகரணங்களையும் இந்த முகாமிலிருந்து படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினர் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள புலிகளின் பாதுகாப்பு அரண்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

படையினரின் கடுமையான தாக்குதல்களில் கொல்லப்பட்ட எட்டு புலிகளின் சடலங்களையும், ரி – 56 ரக துப்பாக்கிகள் – 14, தொலைத் தொடர்பு கருவி – 01, ஆர். பி. ஜி. குண்டு – 02, கிளேமோர் குண்டுகளையும் மீட்டெடுத்துள்ளனர். இதுதவிர புதுக்குடியிருப்பு வடக்கு பகுதியில் புலிகளால் பயன்படுத்தப்பட்ட பக்கோ இயந்திரங்கள் மூன்றையும் இராணுவத்தினர் தாக்கியழித்துள்ளனர்.

இதேவேளை, இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப் படைப் பிரிவினர் புதுக்குடியிருப்பு மேற்கு பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைக் குண்டுகள் – 300, உழவு இயந்திரம் – 01, ட்ரக் வண்டி – 01, மோட்டார் சைக்கிள் – 01, ஜெனரேட்டர்கள் – 02, தண்ணீர் பம்புகளையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

சீனாவிலும் தீக்குளிப்பு

china.jpgசீன தலைநகர் பீஜிங்கின் மையத்துக்கு அருகில் கார் ஒன்றுக்குள்ளே மூன்று பேர் தமக்கு தாமே தீ மூட்டிக்கொண்டனர். ஆயினும் அவர்கள் மூவரும் காப்பாற்றப்பட்டுவிட்டனர்.

ஏதோ ஒரு பிரச்சினை தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிக்க இந்த மூன்று பேரும் தலைநகருக்கு வந்ததாகக் கூறும் சீன அதிகாரிகள், ஆனால், அந்தப் பிரச்சினை என்னவென்பதற்கான சமிக்ஞை எதுவும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர்.

இன்று திபெத்தியர்கள் தமது புது வருடத்தை அனுட்டிக்கின்றனர். சீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வருடாந்த தேசிய காங்கிரஸுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள வேளையில் இந்த தீக்குளிப்பு இடம்பெற்றுள்ளது.

அண்மைக்காலங்களில் சிறு எண்ணிக்கையிலான மக்கள் பல் வேறு காரணங்கள் குறித்து பொதுக்கவனத்தை ஈர்ப்பதற்காக சீனாவில் தீக்குளிப்பில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

ஏ.ஆர். ரகுமானுக்கு டாக்டர் பட்டம்

ar-ragman.jpgடெல்லி யிலுள்ள அலிகார் முஸ்லீம் பல்கலை கழகம், ஆஸ்கார் விருதுகளை பெற்ற ஏ.ஆர். ரகுமானுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது. மார்ச் 25ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

ஏ.ஆர். ரகுமானுடன் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டா, வேளாண் விஞ்ஞானி எம்,எஸ் சாமிநாதன் ஆகியோருக்கும் டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

இலங்கை தமிழருக்காக 2 கோடி கையெழுத்து வேட்டை

united-people.jpgஇலங்கை யில் போரைநிறுத்த ஐ.நா.சபை தலையிட வலியுறுத்தி 2 கோடி பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை பட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் ச.ராமதாஸ் சென்னையில் திங்கட்கிழமை தொடக்கி வைத்தார். தமிழ் மக்கள் மீதான போரை நிறுத்த இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என ஐ.நா.செயலாளர் நாயகம் அமெரிக்க ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி ஆகியோரை வலியுறுத்தி 2 கோடி மக்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பும் இயக்கத்தை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தொடங்கியுள்ளது.

அதற்கான படிவங்களில் பா.ம.க.நிறுவுனர் ராமதாஸ் முதல் கையெழுத்திட்டு அந்த இயக்கத்தை தொடக்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு,  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டனர்.

இது குறித்து வைகோ கூறியதாவது; “தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கையெழுத்து படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் இடம்பெற்றுள்ள அமைப்புகள் தமிழகம் முழுவதும் 2 கோடி மக்களை சந்தித்து, கையெழுத்து பெறும் பணியில் தீவிரமாக ஈடுபடும். பின்னர் அனைத்து படிவங்களும் தொகுக்கப்பட்டு ஐ.நா.செயலாளர் நாயகம் மற்றும் அமெரிக்க, ரஷ்ய நாட்டு ஜனாதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றார் வைகோ.

386 சிவிலியன் நோயாளர்கள் கப்பல் மூலம் திருமலை வருகை

trico-hospital.gifமுல்லை தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் காயமடைந்த நிலையிலுள்ள 386 சிவிலியன்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஐ. சி. ஆர். சி.யின் கப்பல் ஐந்தாவது தடவையாகவும் சிவிலியன்களை திருகோணமலைக்கு அழைத்து வந்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

ஐ. சி. ஆர். சியின் கொடியுடன் கூடிய ‘எம். வி. க்ரீன் ஓசன்’ எனும் கப்பலே கடற்படையினரின் பூரண ஒத்துழைப்புடன் சுகயீனம் மற்றும் காயங்களுக்குள்ளாகியுள்ள 386 சிவிலியன்களை நேற்று முன்தினம் (24) திருகோணமலைக்கு அழைத்து வந்திருந்தது.

திருகோணமலைக்கு வந்த சிவிலியன்களுக்கான உடனடி மருத்துவ சிகிச்சைகளை கடற்படையின் மருத்துவ குழுவினர் அளித்தனர். பின்னர் இவர்கள் உடனடியாக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியக் குழுவினர் இவர்களுக்கான சிகிச்சைகளை முன்னெடுத்து வருகின்றனர். மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டு திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிப்பதற்கு தேவையான அனைத்து மருந்துப் பொருட்களும் அங்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேநேரம் மருத்துவர்களும் போதியளவில் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐ. சி. ஆர். சி முதல் தடவையாக கடந்த 10ம் திகதி செவ்வாய்க்கிமை 356 சிவிலியன்களையும் இரண்டாவது தடவையாக கடந்த 12ம் திகதி 403 சிவிலியன்களையும் மூன்றாவது தடவையாக கடந்த 16ம் திகதி 440 சிவிலியன்களையும் நான்காவது தடவையாக கடந்த 20ம் திகதி 397 சிவிலியன்களையும் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.