கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

சிஐஏவின் இயக்குநராக பனீட்டா நியமனம்

leon-panetta.jpgஅமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏவின் புதிய இயக்குநராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த லியோன் பனீட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஆட்சியின்போது வெள்ளை மாளிகை பணியாளர் குழுத் தலைவராக இருந்தவர் பனீட்டா.

இந்த நிலையில் இவரை புதிய சிஐஏ இயக்குநராக ஒபாமா அரசு அறிவித்துள்ளது.

இந்த நியமனத்தை செனட் குரல் வாக்கெடுப்பு மூலம் அங்கீகரித்துள்ளது. பனீட்டாவுக்கு புலனாய்வுப் பணியில் நேரடி அனுபவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் வீட்டில் விழுந்து நொறுங்கிய விமானம் – பலர் பலி

bombardier-dash-8-q400.jpgஅமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு அருகில் உள்ள பஃபலோ நகரில் வீடுகள் மீது பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 3 இந்தியர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

விபத்தில் சிக்கிய அந்த காண்டினன்டல் ஏர்லைன்ஸ் (Continental Airlines Flight 3407) விமானம் 60 பயணிகளுடன் நியூஜெர்சி மாகாணத்தின் நெவார்க் நகரிலிருந்து நயாகரா நீர்விழ்ச்சி அருகே உள்ள பஃபலோ விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தது. விமான நிலையத்தை நெருங்கிய நிலையில் க்ளியரன்ஸ் சென்டர் என்ற புறநகரில் வீடுகளின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது.

விழுந்த வேகத்தில் விமானம் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 60 பேருமே பலியாயிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மேலும் வீடுகளில் இருந்தவர்களின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. விபத்துக்குள்ளான அந்த விமானம் 74 இருக்கைகள் கொண்ட பம்பார்டியர் (Bombardier Dash 8 Q400) வகையைச் சேர்ந்தது

அமெரிக்காவில் உள்ள ‘தமிழ் பவுண்டேஷன்’ தடை செய்யப்பட்டுள்ளது.- அமெரிக்காவுக்கு இலங்கை பாராட்டு

u-s-a-flag.jpgஅமெரிக் காவின் மெரிலான்ட் பகுதியில் செயற்பட்டுவந்த தமிழ்கள் அமைப்பின் சொத்துக்களை முடக்குவதாக அமெரிக்க திறைசேரி அறிவித்துள்ளது. அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணிவந்ததாகக் கூறியே இந்த அமைப்பை அமெரிக்கா தடைசெய்துள்ளது.

இந்த அமைப்புடன் எந்தவிதமான வங்கிச் செயற்பாடுகளையோ, வர்த்தகச் செயற்பாடுகளையோ பேணக்கூடாதென அமெரிக்கா அறிவித்துள்ளது.

“தமிழீழ விடுதலப் புலிகளும் ஏனைய பயங்கரவாத அமைப்புக்களைப் போன்றதொரு அமைப்பே. அறக்கட்டளைகளை உருவாக்கி நிதிசேகரித்து அவற்றை வன்முறையுடன்கூடிய தமது கொள்கைகளுக்காகப் பயன்படுத்துகின்றனர்” என அமெரிக்க திறைசேரியின் வெளிநாடுகளின் சொத்துக்களைக் கட்டுப்படுத்தும் அலுவலகத்தின் பணிப்பாளர் அடம் சுய்பின் கூறினார்.

இதேவேளை, அமெரிக்காவிலிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கடந்த 2007ஆம் ஆண்டு வெள்ளைமாளிகையின் உத்தரவுக்கமைய தடைசெய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் பவுண்டேஷனின் சொத்துக்களை முடக்கிய அமெரிக்காவுக்கு இலங்கை பாராட்டு

எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளுக்கு உதவி வழங்கும் தமிழ் பவுண்டேசனின் சொத்துக்களை முடக்குதவற்குத் தீர்மானித்த அமெரிக்க அரசாங்கத்துக்கு இலங்கை பாராட்டுத் தெரிவித்ததுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை காரணமாக எந்தவொரு அமெரிக்க பிரஜைக்கும் தமிழ் பவூண்டேஷனோடு எந்தவிதக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதும் தடைசெய்யப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இயங்கும் அரக்கட்டளை தமிழ் நிறுவனங்கள் மூலம் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகள் தமது நடவடிக்கைகளுக்கான நிதி சேகரிக்கின்றனா என அமெரிக்க அதிகாரிகள் குற்றம்  சுமத்தியூள்ளனா;.

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாதிகளின் பட்டியலில் 1997 ஆம் ஆண்டில் அமெரிக்கா இணைத்தது. தமிழா புனாவாழ்வூக் கழகமும் புலிகளுக்கு உதவியதால் 2007 ஆம் ஆண்டில் அதன் சொத்துக்களையூம் அமெரிக்க முடக்கியது என்றும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

செயற்கைக்கோள்கள் விண்வெளியில் மோதின

iridium.jpgஅமெரிக்க தொலைதொடர்பு செயற்கைக்கோள் ஒன்றும் ரஷ்ய செயற்கைக்கோள் ஒன்றும் விண்வெளியில் மோதிக்கொண்டுள்ளன. விண்வெளியில் மனிதன் அனுப்பிய பொருட்கள் உடைந்த சம்பவங்களிலேயே இந்த அளவுக்கு மிகப் பெரிய அளவில் ஒரு சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல்முறை என்று கருதப்படுகிறது.

இரிடியம் என்ற அமெரிக்க வர்த்தக செயற்கைக்கோள் ஒன்று பயன்பாட்டில் இல்லாத ரஷ்ய செயற்கைக்கோள் ஒன்றுடன் மோதியிருக்கிறது. வடதுருவத்திற்கு அருகில் சைபீரியாவில் எண்ணூறு கிலோ மீட்டர் உயரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மோதல் நடந்துள்ளது என அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாஸா கூறியுள்ளது.

வாக்களிப்பின் போது குழப்பம் விளைவித்தால் தேர்தல் இரத்துசெய்யப்படும்!

election-commissioner.jpgவட மத்திய மற்றும் மத்திய மகாகண சபைகளுக்கான தேர்தலை நீதியாகவும்  நேர்மையாகவும் நடத்த சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் எவராயினும் வாக்களிப்பு நிலையங்களில் குழப்பம் விளைவித்தால் தேர்தலை இரத்து செய்ய நேரிடும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

தேர்தகள் ஆணையாளர் தலைமையக கேட்போர் கூடத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வாக்களிப்பின் போது குழப்பம் விளைவிக்காமல் இருப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பாக இது தொடர்பாக அரசியல்  கட்சி செயலாளர்களுக்கும் சுயேச்சைக்குழுத் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுப்பதாக கூறினார். வாக்களிப்பு நிலையமொன்றில் குழப்படி ஏற்பட்டாலும் மாகாண சபை தேர்தலின் முழுமையான முடிவை வெளியிடுவதிலும் தடை ஏற்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

குறிப்பிட்ட இரண்டு மாகாணங்களுக்குமான தேர்தலை இதற்கு முன்னர் நடத்த உத்தேசித்திருந்த போதும் பாடசாலை விடுமுறை காரணமாக சற்று பிற்போட நேரிட்டது. கூடுதலான ஆசிரியர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுகின்றமையால் அவர்களுக்கு தபால் மூல வாக்களப்புக்கு விண்ணப்பிப்பதற்காக போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதால் கால தாமதம் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்.

தேர்தல் வரலாற்றில் முதற்தடவையாக கணனி மயமாக்கப்பட்ட வாக்காளர் அட்டை வாக்காளர்களுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளன. அதேபோன்று வாக்காளர் பட்டியலும் கணனிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திணைக்களத்துக்கு கிடைத்துள்ள தகவல்களுக்கு ஏறபவே தேசிய அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலக்கங்களில் தவறுகள் தெண்படின் உரிய அடையாள அட்டையை சமர்பித்து வாக்களிக்க முடியும்.

வாக்களிப்பதற்கு அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தற்காலிக அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் இது வரை  25 ஆயிரம் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் புகைப்படம் உள்ளடக்கப்பட்ட  சாரதி அனுமதிப் பத்திரம்,  கடவைச் சீட்டு,  தபால் திணைக்கள அடையாள அட்டை,  ரயில் போக்கு வரத்து அனுமதிப் பத்திரம்,  ஓய்வூதிய அடையாள அட்டை, மதத் தலைவர்களுக்கான அடையாள அட்டை மற்றும் முதியோர் அடையாள அட்டை போன்றவற்றை சமர்பித்து வாக்களிப்பில் பங்குபற்ற முடியும் எனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டு நலன்புரி நிலையங்களாக மாற்றம்

college1.jpgவவுனியா விலுள்ள பெரும்பாலான பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டு, அவை, வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வருவோருக்கான நலன்புரி நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன. வவுனியா தமிழ் மகா வித்தியாலயமும் இந்துக் கல்லூரியும்  புதன்கிழமை முதல் மூடப்பட்டு நலன்புரி நிலையங்களாக மாற்றப்பட்டு அங்கு இடம்பெயர்ந்த பெருமளவு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

காமினி வித்தியாலயம், முஸ்லிம் மகா வித்தியாலயம், பூந்தோட்டம் பாடசாலை, கல்வியியற் கல்லூரி, நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரி, பம்பைமடு வளாகவிடுதி, செட்டிகுளம் பாடசாலை மற்றும் மெனிக்பாம் பகுதிகளில் 18 ஆயிரத்து 678 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் சமைத்த உணவுகளே வழங்கப்படுகின்றன.  பஸ்கள் மூலம் கொண்டுவரப்பட்ட மக்கள் தமிழ் மகா வித்தியாலயத்திலும், இந்துக் கல்லூரியிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாடசாலைகளின் மைதானங்களில் தற்காலிக குடிசைகள் அமைக்கும் வேலைகளும் நடைபெறுவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

அடுத்த சில தினங்களில் மேலும் பெரும் எண்ணிக்கையானோர் வரும் பட்சத்தில் அவர்களை தங்கவைத்துப் பராமரிக்க பெரும் இடையூறுகளை அதிகாரிகள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். இடநெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

மூடப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நிலை பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து பெற்றோரும் கவலை தெரிவிக்கின்றனர். இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் தங்கியுள்ள பாடசாலைகளை மீளவும் ஆரம்பிக்க குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு மேல் செல்லுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, சைவப்பிரகாச வித்தியாசாலை, திருச்சபை வித்தியாலயம், பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரி மட்டுமே தற்போது இயங்குகின்றன. நகரிலுள்ள ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் நலன்புரி நிலையங்களாக இயங்குவதும் குறிப்பிடத்தக்கது.

பதவி துறக்க மஹேல முடிவு

mahela1102.jpgஇலங்கைக் கிரிக்கெட் அணியின் கப்டன் பதவியிலிருந்து விலகவுள்ளதாக மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். இந்திய அணியுடன் இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்வியை அடுத்தே தனது கப்டன் பதவியைத் துறக்கவுள்ளதாக மஹேல ஜெயவர்தன கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடருக்கான இலங்கை அணிக்கு மஹேல ஜெயவர்தனாவே கப்டனாக நியமிக்கப்பட்டுள்ள போதிலும், அத்தொடருக்கு இலங்கை அணி புறப்படவிருக்கும் நிலையில் தனது கப்டன் பதவியிலிருந்து விலக மஹேல முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக் காலமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மஹேலவின் துடுப்பாட்டம் மிகமோசமாக இருந்து வந்ததால் அவர் விமர்சனங்களுக்கு உள்ளாகியுமிருந்தார். இந்த நிலையிலேயே டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கப்டன் பதவிகளைத் துறக்க அவர் முன்வந்துள்ளார்.

தேர்தலில் அரசு வென்றாலும் புலிகள் தாக்குதலை நிறுத்தமாட்டார்கள் -தோற்றுவிட்டால் அரசும் இராணுவ நடவடிக்கையை நிறுத்தப்போவதில்லை

election_.jpgஅரசாங்கம் இன்று எங்கும் சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம் யுத்தம் பற்றித்தான். மக்களை ஏமாற்றும் இந்தத் தந்திரோபாய வார்த்தைகளை நம்புவதற்கு மக்கள் முட்டாள்கள் அல்லர். வடக்கில் யுத்தத்தை வெல்வதற்கு மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்க வேண்டுமென மகிந்த ராஜபக்ஷ கோருகிறார். இராணுவத்தினர் பெறும் யுத்த வெற்றிகளை மக்களுக்குக் காட்டி வாக்களிக்கக் கோருவது என்பது கடவுளின் உருவப்படத்தைக் காட்டி பூஜைப் பொருட்களடங்கிய தட்டைப் பேய்க்கு சமர்ப்பிப்பது போன்ற செயலை ஒத்ததாகும் என்று ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். கலேவெல நகரில் இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து அவர் தமது உரையில்;

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கேட்பது போல் வடக்கில் யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக மத்திய மாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சுதந்திர முன்னணிக்கு மக்கள் வாக்களித்தால் புலிகளின் அமைப்பு தமது தாக்குதலை இடைநிறுத்தி விடுமா? அல்லது மத்திய மாகாணத்தில் ஐ.ம.சு. முன்னணி தோல்வியடைந்தது என்பதற்காக இராணுவத்தினர் தமது தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தி விடுவரா? அவ்வாறு எதுவுமே நடைபெறப்போவதில்லை. அப்படியானால் ஏன் இவர்கள் இவ்வாறு யுத்தத்தை விற்று இராணுவத்தினரின் வெற்றிகளைக் கொச்சைப்படுத்துகிறார்கள்.

நாளாந்தம் வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் கொண்டு சென்ற போதும் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நாம் கோரிய போதும் யுத்தம் முடிவடையும் வரையில் பொறுங்கள் என்று ஜனாதிபதி கூறினார். வயிற்றுப் பட்டிகளை இறுக்கிக் கொண்டு பொறுத்திருக்கச் சொன்னார். பெப்ரவரி 4 ஆம் திகதி யுத்தம் முடிவடைந்திருப்பதாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவித்தார். நாட்டின் பிரச்சினைகள் இனி எவ்வாறு எப்போது தீர்க்கப்படப் போகின்றன என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஜனாதிபதி பதில் கூறுவாரா?

உருப்படியான திட்டங்கள் எதுவும் தன்னிடம் இல்லாத காரணத்தினால் மகிந்த ராஜபக்ஷ ஒரு புறத்தில் யுத்தம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார். மறுபுறத்தில் சிறிது சிறிதாக தேர்தல்களை நடத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சீர்குலைத்து வருகிறார். இரு வருடங்களாக தேர்தல்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. ஆனால், நாட்டின் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. நாட்டை நிர்வகிக்கும் திறனற்றவர் மகிந்த ராஜபக்ஷ என்பதை இவற்றின் மூலம் உலகிற்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத் தருமாறு நாம் கேட்டபோது மறுத்த அரசாங்கம் தமது அமைச்சர்களின் கொடுப்பனவுகளை வீட்டு வாடகை என்ற பெயரில் ஒரு இலட்சம் ரூபாவினால் அதிகரித்துக் கொண்டது. சொந்த வீடுகளில் வசிக்கும் அமைச்சர்களுக்கும் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் வசிப்போருக்கும் ஒரு இலட்சம் ரூபாவை மாதாந்தக் கொடுப்பனவு மூலம் அதிகரித்துக் கொண்டனர்.

நுகர்வுப் பொருட்கள் பலவற்றின் விலை அதிகரிப்பினால் மக்கள் பல இன்னல்களுக்குள்ளாகி வருவதை அரசாங்கத்திற்கு விளக்கிக் கூறி மானிய அடிப்படையில் பொருட்களைப் பெற உதவுமாறு வேண்டினோம். யுத்தத்தைக் காரணம் காட்டி மக்களுக்கு மானியம் வழங்க மறுத்த ராஜபக்ஷ அரசாங்கம், கோதாபய ராஜபக்ஷவின் “”மிஹின் லங்கா’ விமான நிறுவனத்திற்கு 600 கோடி ரூபாவை நிவாரண உதவியாக வழங்கியது.

எனவே, அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்காவிட்டாலும் பரவாயில்லை. மாதாந்தம் அவர்களுக்கும் வீட்டு வாடகையாக 25 ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வேண்டுகிறோம்.

உலக சந்தையில் பால்மாவின் விலை குறையும் போது மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அதன் பயனை மக்கள் அடைய விடாமல் அரசாங்கம் இரண்டு விதமான வரிகளை விதித்துள்ளது. பால்மாவுக்கு 8 வீதமும் அதனைப் பைக்கற்றுகளில் அடைக்க 5 வீதமும் என வரிகளை விதித்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தினமும் ஐயாயிரம் பேர் வரையிலானோரைக் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துப் பகலுணவுப் பொட்டலங்களையும் அன்பளிப்புப் பொருட்களையும் அரசாங்கப் பணத்தில் தாராளமாக வழங்குகிறார். வாக்காளர்களிடம் வாக்குகளை எதிர்பார்த்து பொருள் பண்டங்கள் மற்றும் அன்பளிப்புகள் வழங்குதல் என்பது தேர்தல் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணான செயல் என 1960 ஆம் ஆண்டின் தேர்தல் சட்ட விதிகளின் 79 ஆவது பந்தியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பால்மாவுக்கான மானியத்தை பெற்றுத் தருவதற்கு முடியாதென மறுக்கும் ஜனாதிபதி தேர்தலையொட்டி மத்திய மாகாணத்தில் ஜனாதிபதி மாளிகையில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வயிறார ஒரு வேளை உணவு கொடுக்கவே வேண்டும் எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. தேர்தல் சட்ட விதிகளை முற்றாக மீறியுள்ள ஜனாதிபதிக்கும் அவர்தம் சகாக்களுக்கும் எதிராக மனுவொன்றை நாம் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்.

கடந்த தனது 3 வருட ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு எவ்வித சேவைகளையும் செய்யாத மகிந்த ராஜபக்ஷ இறுதியாக இப்போது இராணுவ வீரரின் வெற்றிச் செயற்பாடுகளின் பின்னால் ஒளிந்து கொண்டு தனது இயலாமையை மறைத்துக்கொள்ளப் பகீரதப் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருவதை மக்கள் யாவரும் அறிவர் என்று கூறினார்.

இலங்கை பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு: பிரதிபா உரை

prathiba1102.jpgஇலங்கை பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

இலங்கையில் நிரந்தரமாக அமைதி ஏற்பட வேண்டும். இதற்காக அங்கு போர் நிறுத்தம் செய்யவேண்டும். பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பதே இந்த பிரச்சனைக்கு தீர்வாகும். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
 
 

பிரிட்டனில் கடும் வேலைவாய்ப்பின்மை

britain.jpgபிரிட்டனில் ஒரு தாசாப்த காலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இருபது லட்சத்துக்கும் சற்று குறைவான எண்ணிக்கையினர் தற்போது இங்கு வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.

இது பிரிட்டனின் வேலைவாய்ப்புச் சக்தியின் 6.3 வீதமாகும்.

அதேவேளை பிரிட்டன் தற்போது ஆழமான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்வதாக, பாங் ஒவ் இங்கிலண்டின் ஆளுனர் மேர்வின் கிங் கூறியுள்ளார். வட்டி வீதம் மேலும் குறைக்கப்படாவிட்டால், பிரிட்டனின் பொருளாதாரம் இந்த வருட நடுப்பகுதியில், இன்னும் அதிகமாக வீழ்ச்சியடையும் என்று அந்த வங்கி தனது புதிய பொருளாதார எதிர்வுகூறலுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது.