கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

முத்துக்குமார் குடும்பத்துக்கு ரூ. 2லட்சம் நிதியுதவி

muthukumar.jpgஇலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க கோரி தீக்குளித்து உயர் நீத்த இளைஞர் முத்துக்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இதற்கான அறிவிப்பை இன்று அவர் வெளியிட்டார். இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது மு.க.ஸ்டாலின் பேசுகையில், முத்துக்குமார் என்ற வாலிபர் தீக்குளித்து உயிரிழந்துள்ளார்.

தீக்குளித்து இறப்பதை யாராலும் ஏற்க முடியாது. இது உணர்ச்சி வசப்பட்டு எடுக்கக் கூடிய செயல். முத்துக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு முதல்வர் ஒப்புதலுடன் ரூ. 2 லட்சம் இழப்பீட்டுத் தொகை, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து அளிக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தமிழகத்தில் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ உதயம்

tamilar-phathukappu.jpgஇந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கொழும்புப் பயணத்தால் எந்தவொரு பயனும் இலங்கைத் தமிழர் தொடர்பாக ஏற்படவில்லையென அதிருப்தியடைந்திருக்கும் தமிழகக் கட்சிகள், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக மும்முரமாக ஆராய்ந்து வரும் நிலையில், “தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுங்கட்சியான தி.மு.க.பெப்ரவரி 3இல் செயற் குழுவை கூட்டி முக்கிய தீர்மானம் எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.

அதேசமயம், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா புலிகளின் ஆதரவைத் தவிர இலங்கைத் தமிழர் தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் தனது கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்குமென தனது கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு புதன்கிழமை உறுதியளித்திருக்கிறார். இதனால் உற்சாகமடைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உடனடியாக இரவு ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர். அக்கூட்டத்தில் பா.ம.க.நிறுவுநர் ராமதாஸ், வைகோ, பழ.நெடுமாறன் உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ உதயமாகியுள்ளது. உடனடியாகவே (இன்று) வெள்ளிக்கிழமை இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக சென்னையில் மௌனவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது. இலங்கை யுத்தத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாவதையடுத்து இப்பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒவ்வொரு கட்சியுமே தினமும் போராட்டம் என்று அறிவித்து சுறுசுறுப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன

ஈராக்கில் 440 மாகாண ஆசனங்களை தெரிவு செய்யும் முக்கிய தேர்தல் நாளை

iraq-elections.jpgஈராக்கில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இத் தேர்தலை வெற்றிகரமாக நடாத்துவதன் மூலம் ஈராக் அரசும் இராணுவமும் உறுதியான நிலைப்பாட்டிலுள்ளதை உலகுக்கு எடுத்துக்காட்டவுள்ளது.

இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதுடன், அனைவரையும் வாக்களிப்பில் பங்கேற்கத் தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சிறைக் கைதிகள், வைத்தியசாலைகளில் உள்ளோர் வாக்களிப்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டதால் இவர்கள் கடந்த புதன்கிழமை வாக்களித்தனர். வைத்தியசாலைகளிலுள்ளோர், கர்ப்பிணித் தாய்மார்கள், சிறைக்கைதிகள் ஆகியோரிடம் வாக்குச் சீட்டுகள் அவர்களது காலடிக்கு கொண்டு செல்லப்பட்டன. சுதந்திரமான ஈராக்கைத் தெரிவு செய்யவும் பங்கரவாதத்துக்கு அடிபணிய மாட்டோம் என்பதை வெளிப்படுத்தவும் நாங்கள் வாக்களித்ததாக அவர்கள் கூறினர்.

பின்னர் வாக்குப் பெட் டிகள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட் டன. இரண்டாம் கட்ட வாக்களிப்பு நாளை நடை பெறவுள்ளது. ஈராக்கில் மொத்தமாகவுள்ள 18 மாகாணங்களில் 14 மாகாணங்களுக்கு நாளை தேர்தல் இடம்பெறுகிறது. இதுவரை ஆபத்தான தாக்குதல்கள் எதுவும் இடம் பெறவில்லை என்பது ஈராக் அரசுக்குக் கிடைத்த வெற்றியாகும். வீதியோரக் குண்டுத் தாக்குதல்களைத் தவிர்க்க பெரும்பாலான வீதிகள் மூடப்பட்டுள்ளதுடன் விமான நிலலயங்களும் இன்றும், நாளையும் மூடப்பட்டுள்ளது. ஈராக் பிரதமர் தலைமையிலான ஷியா அரசுக்குச் சவாலாக உள்ள ஈராக் கெளன்ஸில் குர்தீஷ்க ளைப் பெரும்பான்மை யாகக் கொண்ட சுயாட்சியை வட ஈராக்கில் கோருகின்றது.

ஈரான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவைப் பேணும் ஈராக் கொன் ஸிலின் இக் கோரிக்கையை அமெரிக்காவும், ஈராக்கும் நிராகரித்துள்ளன. மாகாண ரதியான அதிகாரங்களைக் கைப்பற்றுவதனூடாக தங்களது இன அடையாளங்களை ஓங்கச் செய்ய ஷியா, சுன்னி, குர்தீஷ் இனங்கள் கடும் பிரயத்தனங்களில் இறங்கியுள்ளன. ஈராக்கில் தற்போதுள்ள மத்திய அரசு ஷியாக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. ஈராக்கில் நடைபெறும் 14 மாகாணங்களுக்கான தேர்தல்களில் மொத்தம் 14 ஆயிரத்து நானூறு வேட் பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் மூவாயிரத்து தொளாயிரம் பேர் பெண்களாவர். 440 மாகா ண சபை ஆசனங்களுக்கு இத் தேர்தல் நடைபெறு கின்றது. ஈராக் அரசின் நாகரிக சர்வாதிகாரம் இது வென இஸ்லாமிய அமைப்பு விமர்சனம் செய்துள்ளது

வன்னி மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்!! யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்!!! – ஜனவரி 31 லண்டனில் ஆர்ப்பாட்டப் பேரணி : ரி சோதிலிங்கம்

Jan31_London_Protestவன்னியில் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் அகப்பட்டு ஒருசிறிய பிரதேசத்தில் மிகப் பெருந்தொகையான மக்கள் தவிக்கும் இக்காலத்தில் இம் மக்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடாத்த லண்டனில் ஒழுங்கு செய்ய்பட்டடுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் (BTF) ஒழுங்கு செய்துள்ள போதிலும் இதில் தமிழ் மக்களின் தர்மீக போராட்டத்தை ஆதரிக்கும் பெரும்பாலான மக்களும் அமைப்புக்களும், இயக்கங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கடந்த காலங்களில் லண்டனில் நடைபெற்ற பல பொதுவான தமிழ்ரகள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் தமிழர்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்று கூடும்படி கேட்டுக் கொண்டபோதும் இறுதியில் ஆர்ப்பாட்டங்கள் புலிகளின் ஆதரவு ஆர்ப்பாட்டங்களகவும் புலிகள் மட்டும் தனித்த ஏகபோக தலைமை என்ற அங்கீகாரம் கேட்கும் கூட்டங்களாகவே அமைந்திருந்தது. அப்படி ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களினால் எந்தவித பலாபலனும் கிடைக்காமல் போனதும் புலம் பெயர்வாழ்வின் வரலாறாகிவிட்டதை நாம் மறந்துவிட முடியாது.

குறைந்தபட்சம் 40 பேர் கூடும் ஆர்ப்பாட்டங்களை BBC – ITV பெரிய செய்திகளாக்கி தேசிய தொலைக்காட்சில் வெளிப்படுத்தி கொடுக்கும் ஆதரவின் ஒரு துளியைக் கூட 50,000 தமிழ் மக்கள் பங்கேடுத்து நடாத்தும் போராட்டங்களுக்கு கொடுக்காததின் உண்மையை விளங்க முன்வர வேண்டும்.

இப்டியான ஆர்ப்பாட்டங்களில் ஒன்று மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிராக கடந்த ஆண்டு யூனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம். இதன் போது எல்லோரும் வருகை தாருங்கள், பழையதை மறவுங்கள், தமிழர்கள் ஒன்று என்பதை மட்டும் நினைவில் கொண்டு வாருங்கள் என்றெல்லாம் அழைப்புக்கள் விடுக்கப்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டத்தில் நடந்த பல சம்பவங்களினால் அதன் பலாபலனை சரியாக வெளிக் கொணர முடியாது போனதும் நாம் தெரிந்து கொண்டதொன்றே. இப்படியான சம்பவங்களக்கு BTF தரும் விளக்கங்களும் வழமைபோல யாரோ வாறாங்கள், என்னவோ செய்யிறாங்கள் அதற்கும் எமக்கும் தொடர்பில்லை என்ற பொறுப்பற்ற பதிலாகும்.

ஏதிர் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட ஊர்வலம் அப்படியான சம்பவங்களை எதிர்பார்துள்ள போதிலும் தமது சுதந்திரமின்றி அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள நிர்ப்பந்தத்திலிருந்து அம் மக்கள் வெளியே அனுமதிக்கும் படியான நிர்ப்பந்தத்தை அடக்குபவர்கள் மீது செலத்தும் நிகழ்வாகவும் அக்கோரிக்கையில் அம்மக்கள் வெற்றி கொள்ளும் படியாகவும் அமைய வேண்டும்.

போர்ச் சூழலில் வன்னி மக்கள் மிகக் குறைந்த பிரதேசத்தில் மிகப் பெருந்தொகையாக மிகசெறிவாக வாழ்வது மரணங்களையும் அதிகரிக்வே செய்யும். இந்த மக்களை விடுவிக்கக் கோருவதும் யுத்தத்தை நிறுத்தக் கோருவதும் மிகவும் முக்கியமான விடயம். இன்று வன்னியில் ஏற்ப்பட்டுள்ள மிக இக்கட்டான சூழநிலைகளைப் பயன்படுத்தி புலிகள் தமது ஏகபோக பிரதிதநிதித்துவம் பெறுவதற்கு இவற்றை பயன்படுத்தக் கூடாது. இந்த விடயத்தில் எல்லா தமிழர்க்கும் பொதுவானதாகச் செயற்படுவதாகக் கூறும் பிரிட்டிஸ் தமிழ் போரம் (BTF) இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடந்த சில நாட்களாக வன்னி மக்களுக்காக நடைபெற்ற இப்படியான ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் இந்த மக்களின் பிரதிபலிப்புக்கு மேலாக அந்த அந்த ஆர்ப்பாட்டங்களில் பறக்கவிடப்படும் புலிகளின் கொடிகளும் படங்களும் புலிகளுக்கு அங்கீகாரம் தேடும் மற்றும் புலிகளே  ஏகபோக பிரதிநிதித்துவம் பெறும் நிகழ்வாக நடைபெறுவது அவதானிக்கப்படுகிறது. வன்னி மக்களின் பரிதாபகரமான நிலையில் அவர்களின் பரிதாபத்தில் அவர்களின் துன்பத்தில் அவர்களின் உதவிகளற்ற மரண அனுதாபத்தை புலிகளின் தேவைகளுக்கு பாவித்துவிடக் கூடாது. இப்படி செய்யப்படுவதன் மூலம் பெறவேண்டிய பலனை இந்த நிகழ்வு பெறாது போய்விடும்.

புலிகளுக்கு அங்கீகாரம் பெறும் அல்லது புலிகளுக்கு ஏகபோக பிரநிதித்துவம் பெற தனிப்பட்ட தனியான ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதே சாலப் பொருத்தமானதும் அதற்குரிய பலனை பெறக் கூடியதும் ஆகும்.

யாழ்பாணத்தை விட்டு மக்கள் வெளியேறியபோதும் இதே போன்றதொரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஏற்பபாடு செய்து விட்டு ஏற்பாட்டாளர்கள் புலிகளின் கொடியையும் படங்களையும் வைத்து ஆர்ப்பாட்டத்தை நடாத்தியது நினைவிருக்கலாம். அந்த ஆர்பாட்டம் மிகச்சிறிய சலசலப்பைக் கூட ஜரோப்பிய நாடுகளில் ஏற்பபடுத்தாது போனதும் நினைவிருக்கலாம்.

கடந்த காலத்தில் போராட்ட அணுகு முறைகளிலும் மனிதாபிமான நடத்தைகளிலும் எற்ப்பட்ட தவறுகளே இன்று தமிழ் மக்களின் அரசியற் தீர்விற்கான பாதையற்றுப் போன காரணங்களாகும். இப்படியான தவறுகளை தொடர்ந்தும் ஏற்படுத்தாது இருக்க வேண்டும்.

நாளை (ஜனவரி 31) நடைபெறும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் அந்த வன்னி மக்களின் சுதந்திர நடமாட்டத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இருத்தல் வேண்டுமே ஒழிய புலிகளின் பிரதி நிதித்துவத்திற்கு அங்கீகாரம் கேட்பதாக இருக்கமாயின் அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் நோக்கத்தை அடைய முடியாத போய்விடும். இதுவும் கடந்த காலங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் போலவே பிரயோசனம் அற்றதாகிவிடும்.

இந்த வாரம் வெளிவந்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின், ஜக்கிய நாடுகளின் மன்றத்தின் அறிக்கைகள் யாவும் இதுவரையில் விடுதலைப் புலிகள் முக்கியமாகவும், இலங்கை அரசும் மக்களின் நடமாட்டத்திற்கு தடையாக இருப்பதாகவும், காயமடைந்த குழந்தைகள், வயோதிபர்களின் மக்களின் வெளியேற்றத்திற்கு தடையாக இருப்பதாயும் தெரிவிக்கின்றன. இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலமும் இந்த இருதரப்பினரையும் (விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும்) வன்னி மக்கள் மீதுள்ள தடைகளை நீக்க கோரும் ஆர்ப்பாட்டமாக நடைபெற வேண்டும் அம் மக்கள் பலன்பெற வேண்டும்.

யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு வன்னி மக்களை சுதந்திரமாக செயற்ப்பட புலிகளும் அரசும் அனுமதிக்க வேண்டும்.

.
ஜனவரி 31 லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் பற்றிய விபரம்:

STOP SRI LANKA’S GENOCIDE OF TAMILS
      MASS PROTEST MARCH
on
SATURDAY, 31st JANUARY 2009

in
Central London
Begins 1:00 PM at MILLBANK
(Nearest station Vauxhall or Pimlico)

பென்டகனுக்கு பராக் ஒபாமா முதல் விஜயம்: ஈராக், ஆப்கானிஸ்தான் குறித்து சிக்கலான முடிவுகள்

obama-pandagan.jpgஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, உப ஜனாதிபதி ஜோன்பைடன், பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ், முப்படை தளபதி மைகல் முல்லான் ஆகியோர் இராணுவத் தலைமையகமான பெண்டகனில் முக்கிய கூட்டமொன்றில் பங்கேற்றனர். ஈராக், ஆப்கானிஸ்தான் சம்பந்தமாக மிகச் சிக்கலான முடிவுகளை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக பராக் ஒபாமா பாதுகாப்பு தலை மையகமான பென்டகனுக்கு வந்தார்.

உப ஜனாதிபதி ஜோன் பைடன், பாதுகாப்பு அமைச்சர் றொபேர்ட் கேட்ஸ், முப்படைத் தளபதி மைக்கல் முல்லான் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஒபாமா சுமார் ஒரு மணி நேரம் பேசினார். ஆப்கானிஸ்தான், ஈராக் விடயங்கள் பற்றியே முக்கிய கவனமெடுக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு மேலதிகப் படைகள் அனுப்பப்பட வேண்டியதன் அவசியத்தை மைக்கல் முல்லான் ஜனாதிபதி பராக் ஓபாமாவிடம் எடுத்து விளக்கினார். இதற்குத் தீர்வாக ஈராக்கில் உள்ள அமெரிக்கப்படைகளை மீளப்பெறுவதென்ற தீர்மானத்துக்கு பராக் ஒபாமா வந்தார். படைகளை 16 மாத காலத்துக்குள் ஈராக்கிலிருந்து வெளியேற்றுவது என்ற ஒபாமாவின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அவர் கவனமாக உள்ளபோதும் அமெரிக்காவின் நலன்களை முன்னிறுத்தியே படை விலக்கல்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஈராக்கிலிருந்து படைகளை முற்றாக வெளியேற்றுவதா அல்லது கட்டம் கட்டமாக அழைப்பதா என்பதில் இன்னும் முடிவில்லை. எனினும் மிகக் குறுகிய காலத்துள் படைகள் விலக்கப்படவுள்ளன. சுமார் 36 ஆயிரம் படைகள் விலக்கப்பட்டு அவை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்படலாம் என ஒபாமாவின் பேச்சாளர் சொன்னார். உலகெங்கும் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படைகள் மனச்சோர்வடைந்துள்ளது எமக்குத் தெரியும். பொதுமக்கள் அமெரிக்க இராணுவத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் படை விலகல்கள் அமையவுள்ளன.

அது எம்மையும் எமது தாய்நாட்டையும் பாதுகாக்க வேண்டுமென்பதே தனது எதிர்பார்ப்பென பராக் ஒபாமா சொன்னார். அத்துடன் அமெரிக்காவின் அதிகாரங்களை நிலை நிறுத்தவும் அமெரிக்காவுக்கு களங்கம் உண்டுபண்ணவும் இராணுவப் பலமே தூண்டுகோலாகவுள்ளமை தனக்குத் தெரியும் எனவும் ஒபாமா சொன்னார்.

நேட்டோப் படைகளின் சில செயற்பாடுகளால் பொதுமக்கள் பலியாவதும், கற்பழிக்கப்படுவதும் அமெரிக்காவுக்கு கெட்ட பெயர் உண்டு பண்ணியதையும், சில நாடுகளில் படைகள் விலக்கப்பட்டால் தீவிரவாதம் பலமடைவதையும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டும் வகையில் ஜனாதிபதியின் பேச்சு அமைந்திருந்தது.

ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோப் படைகளின் தளபதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படை அதிகாரிகளுடன் பராக் ஒபாமா கடந்தவாரம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். ஈராக்கில் உள்ள படைகளை மிக விரைவாக வாபஸ் பெறவேண்டுமென்ற எண்ணத்தில் ஜனாதிபதி பராக் ஒபாமா செயற்பட்டார்.

ஆனால் அங்குள்ள படை அதிகாரிகள் தற்போது வழங்கிய தகவல்களால் சற்று ஆழ்ந்து யோசனை செய்வதாக அவரது உரையிலிருந்து புலனாகின்றது. 2008ம் ஆண்டுடன் அமெரிக்கப்படைகளின் வெளியேற்றம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென பக்தாத் – வாஷிங்டன் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளபோதும் பின்னர் 2011ம் ஆண்டுவரை பணியாற்றும் வகையில் ஒப்பந்தம் திருத்தப்பட்டமை தெரிந்ததே.  இதனால் ஈராக்கில் உள்ள படைகளை அவசரமாக வெளியேற்ற வேண்டுமென்ற அழுத்தத்தை ஒபாமா வழங்கவில்லை.

விடுதலைப் புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவலாம்

_bort.jpgஇலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடக்கும் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் விடுதலைப் புலிகள்  தமிழகத்திற்குள் ஊடுருவலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து கடலோரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால், விடுதலை புலிகள் அங்கிருந்து கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது. இதையடுத்து தமிழக கடலோர பகுதிகளில் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள டிஜிபி ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட 11 மாவட்டங்களில் கடலோர காவல் நிலையங்கள் உள்ளன. ஏற்கனவே இங்கு பாதுகாப்பை தீவிரப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.தற்போது உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து 24 மணி நேரமும் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

படுகாயமடைந்தோருக்கான போக்குவரத்தை ஐ.நா.வும் சர்வதேச அமைப்புகளும் செய்ய வேண்டும்- நடேசன் கோரிக்கை

hospital.jpgவன்னியில் இடம்பெறும் ஷெல் தாக்குதல்களில் படுகாயமடைந்தவர்களுக்கான போக்குவரத்துகளை ஒழுங்கு செய்ய ஐ.நா.உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமென்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடேசன் கூறியதாக “புதினம்’ இணையத்தளம் தெரிவித்துள்ளதாவது;

இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலயங்களுக்கு ஐ.நா.மற்றும் இதர சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடனடியாக நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள மக்களின் கருத்துகளை சுயாதீனமாக கேட்டறிய வேண்டும். வவுனியாவுக்கு செல்லும் நோயாளிகளை விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருக்கவில்லை. வவுனியாவுக்கு நேற்று வியாழக்கிழமை மட்டும் 200 நோயாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருந்துவ, போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் பல பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களுக்கான மருத்துவ தேவைகளுக்கான போக்குவரத்துகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐ.நா.உள்ளிட்ட அனைத்து சர்வதேச அமைப்புகளும் ஏற்பாடு செய்ய வேண்டும். சர்வதேச மற்றும் ஐ.நா.விதிகளின் படி, படுகாயமடைந்த பொதுமக்களுக்கான சிகிச்சைகளுக்குரிய போக்குவரத்துகளை அரசு அனுமதிக்காமலிருப்பது பாரிய மீறலாகும்.

தங்களது குடும்பங்களுடன் இணைந்து கொள்ள விரும்புவோரையும் கூட படைத்தரப்பு அனுமதிக்க மறுத்து வருகிறது. மோதல் பகுதியிலிருந்து வெளியேற விரும்புவது தனிநபரின் உரிமை என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். எந்த ஒரு தனிநபருக்கு எதிராகவும் எந்த தடையும் விதிக்கவில்லை. சர்வதேச சமூகத்தினர் இதனையும் பொதுமக்களின் உரிமையையும் புரிந்துகொள்ள வேண்டும்.

படையினரின் கரங்களில் சிக்கிக் கொள்ள விரும்பாத தமிழ் மக்களை விடுதலைப் புலிகள் பாதுகாப்பார்கள். பொதுமக்களை படுகொலை செய்யும் நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 

புலிகளின் சிறியரக நீர்மூழ்கிப் படகு கண்டுபிடிப்பு

sub-marine-01.jpgதற்போது முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வரும் படையினர் முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி,  மூன்று சிறிய தற்கொலைத் தாக்குதல் படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.  நேற்று வியாழக்கிழமை காலை உடையார்கட்டுக்குளம் பகுதியில் தேடுதல் நடத்திய விஷேடப் படையணி 3 இவற்றைக் கண்டுபிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னியில் படையினர் இதுவரை காலமும் நடத்திய தாக்குதலின் போது மேற்கொண்ட மிக முக்கியமான கண்டுபிடிப்பு இவையெனவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.  கட்டுமானப்பணிகள் பூர்த்தியடையாத நிலையிலுள்ள இந்த நீர்மூழ்கி 35 அடி நீளமானதும் கவசத் தகட்டினால் உருவாக்கப்பட்டு வருவதுமாகும்.

இதைவிட இந்த நீர்மூழ்கியைத் தாங்குவதற்கும் அதனை இடத்திற்கிடம் நகர்த்துவதற்குமான சக்கரங்கள் பூட்டப்பட்ட “ரெயிலர்’, கவசத்தகடுகள், ஒட்டுவேலைக்கு பயன்படுத்தப்படும் பாரிய சிலிண்டர்கள், ஒவ்வொன்றும் 20 அடி நீளமான 30 கவசத்தகடுகள், மிதித்துச் செல்லக்கூடிய வகையை சேர்ந்த மூன்று தற்கொலைத்தாக்குதல் படகுகள், டோறா வகையைச் சேர்ந்த வேகத்தாக்குதல் படகொன்றும் பெருமளவு நீரிறைக்கும் கருவிகள் (வாட்டர்பம்), இரு லொறிகள், இரு பஸ்கள், ஒரு ட்ரக், அதிசக்தி வாய்ந்த ஒரு ஜெனரேற்றர், வாட்டபவுசர், இழுவை வண்டி, ஒரு பவுசர், மண்ணெண்ணெய், இரு பெரிய லேத்மெசின்கள், சக்தி வாய்ந்த இரு கொம்புறசர்கள், ஓட்டும் இயந்திரம், ஒரு தொகுதி மின்சார மோட்டார்கள், மிகப்பெரியதொரு உயர்த்தி (ஜய்க்), பலபடகுகள், வாகன இயந்திரங்கள், மிகப்பெரியதொரு கட்டிடம், குளிரூட்டப்பட்ட சிறியரக வீடுகள் 15 என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் நீருக்கடியிலான ஆயுத வகைகளைத் தயாரிப்பதில் ஈடுபட்ட முதலாவது அமைப்பாக விடுதலைப் புலிகளே இருப்பது தெரியவந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.

sub-marine-03.jpg

sub-marine-04jpg.jpg

sub-marine-01.jpg

152 மி.மீ. ரக ஆட்டிலறியும் படையினரால் மீட்பு

_army.jpgபுலிகள் பாவித்து வந்த 152 மி. மீ. ரக ஆட்டிலறி ஒன்றை பாதுகாப்புப் படையினர் நேற்றுக் காலை கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். விசுவமடு பிரதேசத்தில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர். இந்த ஆட்டிலறியை கண்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

விசுவமடு கிழக்கு பிரதேசத்தில் இந்த ஆட்டிலறியும் 70 வெற்று ரவைகளும் புதைக்கப்பட்டிருந்த நிலையிலே படையினர் மீட்டெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 58வது படைப் பிரிவின் 10வது கஜபா படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜனக உடுவோவிட்ட தலைமையிலான படைப் பிரிவினர் இந்த ஆட்டிலறியை கைப்பற்றியுள்ளனர். இந்த ஆட்டிலறி மூலம் 17 கி. மீ. தொடக்கம் 24 கிலோ மீற்றர் தூரம்வரை தாக்குதல் நடத்த முடியும்.

இலங்கை அரசும் புலிகளும் 200 000 – 300 000 தமிழர்களை ‘guinea pigs’ ஆக நடத்துகின்றனர் – பொறுப்பற்றவர்களின் யுத்தம் : த ஜெயபாலன்

Wanni Childஇப்போதுள்ள நிலையில் யுத்தத்தில் சிக்குண்ட தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் :
1. யுத்தம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அல்லது
2. அரச படைகளும் புலிகளும் குறைந்த பட்சம் சில தினங்களுக்காவது யுத்தத்தைத் தவிர்த்து மக்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
3. பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
4. பாதுகாப்பு வலயங்களை சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் பொறுப்பில் விடவேண்டும்.
5. விடுதலைப் புலிகளும் பாதுகாப்பு வலயங்களுக்கு மக்கள் செல்வதை அனுமதிக்க வேண்டும்.
6. பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான பாதுகாப்பான வழியை புலிகளும் அரச படைகளும் ஏற்படுத்த வேண்டும்.

கட்டுரைக்கான சில ஆதாரக் குறிப்புகள்:

._._._._._.

“வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்” 

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், 27 ஜனவரி 2009
– – – – –

”சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டு வன்னியில் நடத்தி வரும் மனிதப் பேரவலத்தைக் கண்டித்தும் அனைத்துலகத்திற்கு உணர்த்தும் வகையிலும் லண்டனில் நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறவுள்ள மாபெரும் ஊர்வலத்தில் லண்டன் வாழ் அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொண்டு பேரெழுச்சியைக் காட்ட வேண்டும்”

எஸ்.ஜெயானந்தமூர்த்தி, TNA MP, 28 ஜனவரி 2009

2002 நிலைமை வந்ததன் பின்னரே பேச்சுவார்த்தை! நிச்சயமாக தனி அரசு தான் தீர்வு!!! – ரிஎன்ஏ எம்பி ஜெயானந்தமூர்த்தியுடன் நேர்காணல் : த ஜெயபாலன் )
– – – – –

Liberation Tigers of Tamileelam (LTTE)’s Political Office on Wednesday categorically denied a news originated in Colombo government’s media, the Daily News, and was highlighted in the International media that LTTE prevented UN convoy transporting injured patients from Mullaiththeevu district to Vavuniyaa hospital. Director of LTTE’s Peace Secretariat S. Puleedevan described the news as mischievous. “In fact, the LTTE has been repeatedly urging the ICRC to facilitate unhindered transportation of injured civilians who need urgent attention and also for the provision of medical facilities locally,” Mr. Puleedevan told TamilNet Wednesday night.

TamilNet, 28 January 2009
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28187
– – – – –

Amnesty has received information that the LTTE have, in at least one instance, prevented injured civilians from moving to safer areas or accessing medical care, an act that could constitute a war crime… A convoy of 24 vehicles, arranged by the Red Cross and the UN to transport up to 300 wounded people, including 50 children, was stopped from leaving the area by the LTTE… The government had declared ’safe zones’ to allow civilians to seek shelter, but information made available to Amnesty International indicates that several civilians in the so-called safe zone have been killed or sustained injuries as a result of artillery bombardment.

Yolanda Foster, Amnesty International’s Sri Lanka researcher, 29 January 2009
http://www.amnesty.org.uk/news_details.asp?NewsID=18045
– – – – –

The United Nations in Sri Lanka will attempt for the second time in three days to help evacuate by convoy hundreds of critically wounded civilians from the war-torn north of the country, including at least 50 seriously injured children. The convoy has been trapped for days in the town which lies just across the lines of confrontation in Tamil Tiger-controlled territory. If permission is granted by the Liberation Tigers of Tamil Eelam and, if a lull in fighting permits, the United Nations convoy will cross the frontline at midday Thursday. The injured will then be transported to Ministry of Health hospitals in Vavuniya to help treat their injuries and wounds.

Marie Okabe, Deputy Spokesperson for the Secretary-General, 28 January 2009
http://www.un.org//News/briefings/docs/2009/db090128.doc.htm
– – – – –

The Sri Lankan government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) should take immediate steps to allow thousands of civilians trapped in a shrinking conflict zone safe passage and to ensure that they receive desperately needed humanitarian aid, Human Rights Watch said today. Intense fighting between the Sri Lankan army and the separatist LTTE has caught an estimated 250,000 civilians in deadly crossfire, and in the past week civilian casualties have risen dramatically.

The government-ordered September 2008 withdrawal of all UN and nongovernmental humanitarian organizations (with the exception of the ICRC and Caritas) from the Vanni plunged the region into a serious humanitarian crisis, with acute shortages of food, shelter, medicine, and other humanitarian supplies. The humanitarian crisis was documented by Human Rights Watch in its December 2008 report, “Besieged, Displaced, and Detained.” A companion report, “Trapped and Mistreated,” focused on LTTE abuses against the civilian population in the Vanni.

Brad Adams, Asia director at Human Rights Watch. January 28, 2009
http://www.hrw.org/en/news/2009/01/28/sri-lanka-urgent-action-needed-prevent-civilian-deaths
– – – – –

The Office of the Resident Coordinator in Sri Lanka has issued its strongest possible protest to the Liberation Tigers of Tamil Eelam, or LTTE, for their refusal to allow UN national staff and dependents to return from the Vanni region with the present UN convoy. The staff were part of a UN convoy which travelled to the Vanni on 16 January, delivering urgent food and emergency supplies to displaced populations trapped in the midst of fighting in the Vanni. Due to fighting between the LTTE and Government forces, the convoy has only been able to move safely today. The UN calls on the LTTE to meet their responsibilities and immediately permit all UN staff and dependents to freely move from this area, as its denial of safe passage is a clear abrogation of their responsibility under international humanitarian law.

Michèle Montas, Spokesperson for the Secretary-General. 22 january 2009
http://www.un.org//News/briefings/docs/2009/db090122.doc.htm

குறிப்பு: யுத்தப் பகுதியில் காயமடைந்த பொது மக்கள் (50 வரையான சிறார்கள் உட்பட) அப்பகுதியில் இருந்து ஐநா வாகனங்களில் வெளியே கொண்டுவரப்பட்டு உள்ளதாக ஐநா பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச அழுத்தங்களை அடுத்து இன்று (ஜனவரி 29) காயப்பட்டவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 220 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் நூற்றுக் கணக்காணவர்கள் காயப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
._._._._._.

இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்த பிரதேசத்தின் எல்லைகள் குறுகிக் குறுகி தற்போது சில பத்து மைல்களுக்குள் யுத்தம் குறுக்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள மிகப்பெரிய ஆபத்து இந்த குறுகிய சுற்றளவுக்குள் 200 000 – 300 000 பொதுமக்கள் அகப்பட்டு உள்ளனர். புலிகள் வடக்கு கிழக்கின் நிலப் பிரதேசங்களை பெரும்பாலும் முழுமையாக இழந்த நிலையில் இந்த சில பத்து மைல் சுற்றளவுக்குள் இலங்கை அரச படைகளும் புலிகளும் யுத்தத்தைத் தொடர்கின்றனர்.

வடக்கு கிழக்கின் பெரும்பாலான பகுதிகளை போர்த்தந்திரத்துடன் மெது மெதுவாக தங்கள் ஆயுத தளபாடங்களுடன் நிதானமாக பின்வாங்கிய புலிகள் தற்போது மிகக் குறுகிய மக்கள் செறிவான பகுதியில் ‘போர்த் தந்திரத்துடன்’ யுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். ( முல்லைத்தீவு முற்றுப் புள்ளியல்ல! புலிகளின் புதிய அத்தியாயம்! : த ஜெயபாலன் )

இலங்கை அரசு யுத்தத்தில் காட்டும் வேகத்தில் தமிழ் மக்களின் மனித அவலம் பற்றி அக்கறை கொள்ள மறுக்கிறது. புலிகளுக்கு எதிரான தாக்குதலைத் தொடர முன் யுத்தத்தில் அகப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தத் தவறியுள்ளது. பாதுகாப்பு வலயத்தை அறிவித்த இலங்கை அரசு அப்பகுதிகளை சர்வதேச உரிமை அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட வில்லை. மேலும் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலேயே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. 200 000 – 300 000 மக்கள் உள்ள பகுதியில் ஒரு நாட்டின் சட்டபூர்வமான அரசு யுதத்தை முடக்கி விட்டிருப்பது அந்த மக்களை (human guinea pigs) பரிசோதணைக் கூட விலங்குகளாக்கி உள்ளனர்.

‘வன்னி மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைப்பேன்’ என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் ‘எமது பாதுகாப்பில் வாழ்வதை விரும்பியே கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெயர்ந்து மக்கள் எம்முடன் வருகின்றனர்’ என்று புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா நடேசனும் வாய்த் தர்க்கம் புரிகின்றனர். யுத்தத்தில் அகப்பட்டுள்ள மக்களின் நிலைபற்றி எவ்வித உறுத்தலும் இன்றி அந்த மக்களை யுத்த பிரதேசத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கம் இன்றி வெறும் வார்த்தை ஜாலங்களும் மறுப்புகளும் மட்டுமே இரு தரப்பில் இருந்தும் வந்து உள்ளது. ( தொடரும் யுத்தமும் வன்னி மக்களின் ஏக்கமும் : த ஜெயபாலன் )

இலங்கை அரசுக்கு வேண்டியது விடுதலைப் புலிகளின் முழுநிலப்பரப்பையும் கைப்பற்றி அரச கட்டுப்பாட்டுக்குள் அவை வந்துவிட்டது என்ற செய்தி. அந்தச் செய்தி சுதந்திர தினத்திற்கு முன்னதாகவே வந்துவிட வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது. புலிகளைப் பொறுத்தவரை தங்களுடைய சகல பிரதேசங்களையும் இழந்தவர்கள் இந்த மக்களை வைத்துக் கொண்டு ‘ஒரு யுத்த நிறுத்தம்’, ‘ஒரு யுத்த பேரம்’ நடத்தி ‘வீழ்ந்தும் பிரபாவின் மீசையில் மண்படவில்லை’ என்று எழும்புவதற்கான ஒரு வாய்ப்பு. இந்த பொறுப்பற்ற யுத்தத்தில் ஈடுபட்டவர்களின் நலன்களுக்கு 200 000 – 300 000 மக்கள் பணயம் வைக்கப்பட்டு உள்ளனர். இதில் இருதரப்பினருமே குற்றவாளிகள் தான்.

இலங்கை அரசு சட்ட ரீதியான ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற அடிப்படையில் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடையது. புலிகளைப் பயங்கரவாதிகள் என்று குற்றம்சாட்டும் அரசு, தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சர்வதேச விழுமியங்களுக்கு அமைய செயற்பட வேண்டும். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அவர் அனைத்து ஜனநாயக விழுமியங்களையும் மீறி ‘அரசியல் தாதா’வாகவே செயற்படுகிறார். புலிகளின் இறுதிக் கோட்டையான முல்லைத் தீவையும் கைப்பற்றி தன்னை ஒரு துட்டகைமுனுவாக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முற்பட்டு உள்ளார்.

புலிகளைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று தங்களைத் தாங்களே பிரகடனப்படுத்தி ஈழத் தமிழர்களை ஆள்வதற்கான உரிமை தங்களுக்கு மட்டுமே உண்டென்று மார் தட்டியவர்கள். அப்படியானால் இலங்கை அரசிலும் பார்க்க ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவர்களுடையது. ஆனால் இன்று அந்த மக்களைப் பணயம் வைத்து தங்களது மீசையில் மண்படவில்லை என்று காட்ட முற்பட்டு உள்ளனர். தமது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நிலப்பரப்பில் இருந்தும் பின்வாங்கிய புலிகள் மக்கள் செறிந்துள்ள பகுதிகளுக்குள் பின்வாங்காமல் நின்று தாக்குவதோ அல்லது பதில் தாக்குதல் நடத்துவதோ எந்த விதத்திலும் அந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாது. ‘சிங்கள அரசு தமிழ் மக்களை நரபலி செய்கிறது’ என்று முன்னாள் கூட்டணித் தலைவர்கள் மேடையில் பேசுவது போல ஐபிசியில் செய்தி வாசிக்கவே இந்த தாக்குதல்கள் உதவும். இழப்புகளை அரசியலாக்கும் மூன்றாம்தர அரசியலே தற்போது புலிகளின் கடைசி ஆயுதமாக மாறி உள்ளது. ( தவறிப் போகும் பிரபாவின் தலைமை : த ஜெயபாலன் )

இந்த யுத்த பிரதேசத்திற்குள் சிக்குண்ட ஒவ்வொரு பொதுமகனதும் பொது மகளதும் இழப்புக்கும் அவலத்திற்கும் இலங்கை அரசபடைகளும் புலிகளுமே பொறுப்பு. யார் எங்கிருந்து தாக்குதல் நடத்துகிறார்கள். யார் பதில் தாக்குதல் நடத்துகிறார்கள் என்ற விசாரணை இரண்டாம் பட்சமானது. யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருமே இடையில் சிக்குண்ட மக்கள் பற்றி எவ்வித அக்கறையும் கொண்டிருக்கவில்லை என்பது சுயாதீன அமைப்புகளின் அறிக்கைகளில் இருந்து தெரியவருகிறது. சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் அறிக்கைகள் இரு தரப்பினரதும் பொறுப்பற்ற நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி உள்ளன.

இதற்கிடையே புலம்பெயர் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டு இலங்கை அரசின் மீது தங்களது ஆக்ரோசமான கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். அவர்களுடைய கோபம் நியாயமானது. அது இலங்கை அரசுக்கு எதிராக அமைந்ததிலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

ஆனால் இந்த எதிர்ப்புகளை ஒழுங்கு செய்பவர்கள் விடுதலைப் புலிகளாக அல்லது பெரும்பாலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதராவனவர்களாக இருப்பதாலேயே அந்த எதிர்ப்பு பலமிழந்து போய்விடுகிறது. அந்த எதிர்ப் நடவடிக்கைகளின் போது வைக்கப்படும் கோசங்கள் மக்கள் நலன்சார்ந்ததாக இல்லாமல் புலிகளின் நலன் சார்ந்ததாகவே அமைந்துவிடுகிறது. புலிக் கொடியும் வே பிரபாகரனின் உருவப்படத்தையும் தூக்கிச் சென்று மனித உரிமைகள் பற்றி கதைக்கின்ற அளவுக்கு வே பிரபாகரனினதோ புலிகளினதோ மனித உரிமைப் பார்வை ஒன்றும் மெச்சத்தக்கது அல்ல. ‘புலிகளும் தமிழ் மக்களும் வேறு வேறல்ல. புலிகள் தான் தமிழ் மக்கள். தமிழ் மக்கள் தான் புலிகள்’ என்று கதையளப்பது யுத்தத்தில் சிக்கியுள்ள தமிழ் மக்களை ஆபத்தில் தள்ளவே வழிவகுக்கும்.

லண்டனில் ஜனவரி 31 அன்று பிரித்தானிய தமிழர் பேரவை STOP SRI LANKA’S GENOCIDE OF TAMILS என்ற தலைப்பில் மாபெரும் ஊர்வலம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். ஜனவரி 31 மதியம் ஒரு மணிக்கு மில்பாங்கில் ஆரம்பிக்கும் ஊர்வலம் ரெம்பிள் பலசில் முடிவடைகிறது. ‘We shall gather to fight for our rights’  என்று இந்த எதிர்ப்பு ஊர்வலத்திற்கு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்தள்ளது. ஜனவரி 27 அன்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் லோட் மலோச் பிறவுண் வெளியுறவுச் செயலர் மில்பாங்க் ஆகியோருடன் பிரித்தானியன தமிழர் பேரவையினர் ஒரு சந்திப்பை நடத்தி இருந்தனர். அச்சந்திப்பும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. பிரித்தானிய அரசு இலங்கை அரசின் செயற்பாடுகளைக் கண்டிக்க தயாராக இருக்கவில்லை. வெளியுறவு அமைச்சகம் ஜனவரி 21ல் வெளியிட்ட அறிக்கை தொடர்பாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை அதிருப்தியைத் தெரிவித்து இருந்தது. ( பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் அறிக்கைக்கு பிரித்தானிய தமிழர் பேரவை கண்டனம் )

Protest_Swissபிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மக்களின் சுயாதீனக் குரலாக அல்லாமல் புலிகளின் குரலாகச் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டு அது ஆரம்பிக்கப்பட்டது முதல் இருந்து வருகிறது. ( பிரித்தானிய தமிழ் போறமும் அதன் அரசியலும் : த ஜெயபாலன் ) இலங்கை அரசுக்கு குறையாத வகையில் விடுதலைப் புலிகளும் மனித உரிமை மீறல் செய்துள்ள நிலையில் சுயாதீனமாக அல்லாமல் புலிகள் சார்ந்து இயங்கும் எந்த அமைப்பினதும் நியாயத்தன்மை அடிபட்டுப் போவது இது முதற்தடவையல்ல. இந்தப் பாடத்தை புலம்பெயர் தமிழ் அமைப்புகள் விளங்கிக்கொள்வதாக இல்லை. (  ”புலிகளுக்கும் தமிழீழம் வேணும். பிரிஎப் க்கும் தமிழீழம் வேணும். ஆனால் புலிகளின் மெதடோலஜியை பிரிஎப் சஸ்கிறைப் பண்ணவில்லை” சுரேன் சுரேந்திரனுடன் நேர்காணல் : த ஜெயபாலன்)

காசாவில் இஸரேல் குண்டுகளைப் பொழிந்து பாலஸ்தீனியர்களைக் கொன்றொழித்த போது யாரும் ஹமாஸின் தடையை நீக்கச் சொல்லிக் கேட்கவில்லை. ஹமாஸ் தலைவர்களின் படத்தையும் ஹமாஸின் கொடியையும் தாங்கி ஊர்வலம் செய்யவில்லை. இஸ்ரேலுக்கு எதிராக ஊர்வலத்தில் பாலஸ்தீனியர்கள் மட்டும் பங்கெடுக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பு ஊர்வலத்தை ஏற்பாடு செய்தவர்கள் பாலஸ்தீனியர்கள் அல்ல.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் முதலில் தங்களது புலிவாலாத் தனங்களை கைவிட்டு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக மட்டும் போராடுவதன் மூலமே தமிழ் மக்களின் அடிப்படை நியாயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடியும்.  (  காஸாவில் இருந்து கிளிநொச்சிவரை புரிந்துகொள்ளாத பாடம் : த ஜெயபாலன் )

மேலும் இன்று யுத்தமுனையில் தமிழ் மக்கள் சந்திக்கும் அவலத்திற்கு புலிகளுக்கும் சம பொறுப்பு உண்டு. அப்படி இருக்கையில் புலிக்கொடியையும் பிரபாகரனின் உருவப்படத்தையும் தாங்கிச் சென்று தமிழ் மக்களுக்கு நியாயம் கேட்க முடியாது.

இப்போதுள்ள நிலையில் யுத்தத்தில் சிக்குண்ட தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமானால்
1. யுத்தம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அல்லது
2. அரச படைகளும் புலிகளும் குறைந்த பட்சம் சில தினங்களுக்காவது யுத்தத்தைத் தவிர்த்து மக்கள் பாதுகாப்பாக பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
3. பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
4. பாதுகாப்பு வலயங்களை சர்வதேச மனிதாபிமான அமைப்புகளின் பொறுப்பில் விடவேண்டும்.
5. விடுதலைப் புலிகளும் பாதுகாப்பு வலயங்களுக்கு மக்கள் செல்வதை அனுமதிக்க வேண்டும்.
6. பாதுகாப்பு வலயங்களுக்கு செல்வதற்கான பாதுகாப்பான வழியை புலிகளும் அரச படைகளும் ஏற்படுத்த வேண்டும்.

மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காமல் அறிக்கைவிடுவதும் பதிலறிக்கை விடுவதும் மறுப்பறிக்கை விடுவதும் பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடே.