::அரசியல் தஞ்சம்

::அரசியல் தஞ்சம்

அரசியல் தஞ்சம் தொடர்பான செய்திகள் கட்டுரைகள்

பொருளாதார வங்குரோத்தை மறைக்க பிரித்தானிய அரசு அகதிகளுக்கு எதிராகத் திரும்புகிறது! முன்னணி சட்டத்தரணி கணநாதன், லண்டன் வட்டுக்கோட்டை ஒன்றிய ஒன்று கூடலில்

பிரித்தானிய அரசு, தாங்கள் எதிர்நோக்கும் பொருளாதார வங்குரோத்தை மறைக்க அகதி அந்தஸ்து கோரும் விளிம்புநிலை மக்களை பகடைக்காயாகப் பயன்படுத்துவதாக அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். பிரித்தானியாவில் உள்துறை அமைச்சுக்கு எதிராக பல தஞ்சக் கோரிக்கை வழக்குகளை முன்னெடுத்து அவற்றில் சிலதை முன்மாதிரியான வழக்குகளாக்கியவர் சட்டத்தரணி அருண் கணநாதன். அவருடைய 25 வருடகால சட்ட சேவையை கௌரவிக்கும் வகையில் அவருக்கு கௌரவிப்பும் நடந்தது. அவரோடு மருத்துவ கலாநிதி லோகேந்திரன் மற்றும் பத்மநாபஐயர் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர். இந்கிழ்விற்கு முன்னாள் யாழ் நீதிபதி விக்கினராஜா பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்தார்.

அருண் கணநாதன் யாழ் வட்டுக்கோட்டை சித்தங்கேணியைச் சேர்ந்தவர், இவர் கௌரவிப்பை ஏற்று சில வார்த்தைகள் குறிப்பிட்ட போது தற்போது பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம்கோருவோருக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவற்றுக்கு எதிராக போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அதற்கு மக்களின் ஆதரவையும் வலியுறுத்தி இருந்தார். இதனை மக்கள் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்றே சபையினர் அர்த்தப்படுத்தி இருந்தனர். இது தொடர்பாக தேசம்நெற் விளக்கம் கேட்ட போது, சட்டப் போராட்டங்களையே தான் குறிப்பிட்டதாகவும் அரசியல் தஞ்சம்கோருவோரும் அவரைச் சார்ந்தவர்களும் தங்களோடு முழுமையாக ஒத்துழைத்தாலேயே நீதியைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்தார். ‘அரசியல் தஞ்சம் கோருவோருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உங்களிடம் இருக்கின்றதா’ என தேசம்நெற் கேட்டபோது, “பிரித்தானிய நீதிமன்றங்களில் அரசின் கொள்கைகள் மீது விசனம் கொண்ட பல நீதிபதிகள் இன்னும் உள்ளனர். நாங்கள் தக்கமுறையில் சட்டப் போராட்டங்களை முன்னெடுத்தால், நீதி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு” என்றார்.

தற்போதைய கொன்சவேடிவ் கட்சியின் போக்குகளை மிகக்; கடுமையாக விமர்சித்த சட்டத்தரணி அருண் கணநாதன் இக்கட்சியும் இவர்கள் சார்ந்த வலதுசாரி ஊடகங்களும் துவேசத்தைத் தூண்டி அகதி அந்தஸ்து கோரும் விளிம்புநிலை மக்களுக்கு எதிராக துவேசிகளை ஏவிவிடுவதாகக் குற்றம்சாட்டினார். சில நாட்களுக்கு முன் தீவிர வலதுசாரியான ஒருவர் இங்கிலாந்தின் கென்ற் என்ற பகுதியில் உள்ள தி வியடக்ட் அகதிகள் தடுப்பு மையத்தின் மீது தாக்குதலை நடத்தி விட்டு தானும் தற்கொலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதிஸ்ரவசமாக இத்தாக்குதலில் இருவர் மட்டுமே சிறு காயங்களுக்கு உள்ளாகினர். இத்தாக்குதலையடுத்து இங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 700 அகதி அந்தஸ்து கோரியோர் கென்ற் பகுதியில் உள்ள மேஸ்ட்ரன் தடுப்பு மையத்திற்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இடமாற்றப்பட்டனர்.

ஏற்கனவே மேஸ்ட்ரன் தடுப்பு மையம் தஞ்சம் கோருவோரோல் நிரம்பி வழிக்ன்றது. 1500 பேர்களை மட்டுமே கொள்ளக் கூடிய முன்னாள் இராணுவத்தளத்தில் அரசு 4,000 பேரைத் தடுத்து வைத்திருப்பதாகவும் அங்கு பலரும் நிலத்தில் படுக்க வேண்டி இருப்பதாகவும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலை ஹமன்ஸ்வேர்த் தடுப்பு மையத்திலும் உள்ளதாக சட்டத்தரணி அருண் கணநாதன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இத்தடுப்பு மையங்களின் பாதுகாப்பு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் இந்நிறுவனங்கள் தஞ்சம்கோருவோரை மிருகத்தனமாக நடத்துவதாகவும் அருண் கணநாதன் குற்றம்சாட்டினார். இதனை உறுதிப்படுத்தும் செய்திகள் அண்மையில் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளது. இன்று ஹெமன்ஸ்வேர்த் தடுப்பு மையத்தில் மூன்று மணிநேரங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் கணநாதன் சுட்டிக்காட்டினார்.

சில வாரங்களுக்குள்ளேயே மூன்று பிரதமர்களைக் கண்ட பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரதமரும் அவருடைய முக்கிய அமைச்சர்களும் சிறுபான்மைச் சமூகங்களாக இருந்தபோதும் அவர்களுடைய அரசியல் கொள்கைத் திட்டங்கள் மோசமான வலதுசாரித் தன்மையுடையதாகவும் சிறுபான்மையினருக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் எதிரானதாகவே உள்ளது. குறிப்பாக பொறிஸ் ஜோன்சன் பிரதமாராக இருந்த போது உள்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ப்ரித்தி பட்டேல் அவரைத் தொடர்ந்து 44 நாட்கள் பிரதமராக இருந்து நாட்டின் பொருளாதாரத்தை ஆதாள பாதாளத்துக்கு இட்டுச்சென்ற லிஸ் ரஸ் பிரதமராக இருந்த போது உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சுவலா ப்ரவர்மன், தனது சொந்த மின் அஞ்சலைப் பயன்படுத்தி பாதுகாப்பு விதிகளை மீறியமைக்காக லிஸ் ரஸ்ஸால் பதவியில் இருந்து தூக்கப்பட்டவர். ஆனால் தற்போதைய பிரதமர் ரிஷி சுனாக் பதவியேற்றதும் சுவலா ப்ரவர்மன் மீண்டும் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இவர் இந்திய வம்சாவழியாக இருந்த போதும் பிரித்தானியாவுக்கு குடிபெயரும் அகதிகள் பற்றி மோசமான கருத்துக்களை வெளியிடுவதுடன் வலதுசாரிகளையும் துவேசிகளையும் தூண்டிவிடும் வகையிலேயே கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். முன்னாள் உள்துறை அமைச்சர் ப்ரிதி பட்டேல் தஞ்சம் கோரி பிரித்தானியா வருபவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்க அந்நாட்டு அரசோடு ஒரு உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அவருடைய காலப்பகுதியில் தஞ்சம் கோரியவர்களை ருவாண்டாவுக்கு அனுப்ப எடுத்த முயற்சி முற்றிலும் தோல்வி கண்டது. பிரித்தானியாவினதும் ஐரோப்பாவினதும் நீதிமன்றங்கள் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சின் ருவாண்டா திட்டத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கின.

நிலைமை அப்படியிருக்கையில் சுவாலா ப்ரவர்மன் “பிரித்தானியாவுக்கு தஞ்சம் கோரிவருபவர்கனை ருவாண்டாவுக்கு அனுப்புவது தனது கனவு என்று குறிப்பிட்டிருந்தார். தற்போது இன்னுமொரு படி மேலே சென்று அகதிகள் படகுகளில் பிரித்தானியா மீது படையெடுப்பதாகத் தெரிவித்துள்ளார். வாழ்வதற்கு வழியற்று நிர்க்கதியாகி அகதிகளாக வருபவர்களை ‘படையெடுக்கிறார்கள்’ என்று சுவாலா ப்ரவர்மன் குறிப்பிட்டது, அகதி அந்தஸ்து கோருபவர்கள் தொடர்பான அவருடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது முதல் பிரான்ஸ் ஆங்கிலக் கால்வாய் ஊடாக படகு மூலம் பயணிப்பவர்கள் மீதான கண்காணிப்பை கைவிட்டது. பிரித்தானியாவின் எல்லையை பாதுகாப்பது தமது பொறுப்பல்ல என பிரான்ஸ் தீர்மானித்தது. இதனால் ஆங்கிலக் கால்வாய் ஊடாக பிரித்தானியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாக அதிகரித்து வருகின்றது. இது பிரித்தானியாவின் முன்யோசணையற்ற பிரிக்ஸிற் கோரிக்கையின் பலாபலன்.

ரிஷி சுனாக் அரசு என்ன தான் தீவிர வலதுசாரித்துவத்தின் பக்கம் சாய்ந்தாலும் 2024 இல் நடைபெறும் தேர்தலில் ரிஷி சுனாக் வேறும் காரணங்களோடு அவருடைய நிறத்திற்காகவும் பிரதமராக ஏற்றுக்கொள்ளப்படமாட்டார். ஆனாலும் இவர்கள் தங்களை தீவிர வலதுசாரி துவேசிகளுடன் இணைத்துக்கொள்வார்கள்.

300 பேர்வரை கலந்துகொண்ட இந்நிகழ்வை தேவசேனா மற்றும் சந்துரு ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வட்டுக்கோட்டையின் விருந்தோம்பல் வெளிப்பாடாக உணவை விரயம் செய்யாமல் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் வீட்டுக்கும் உணவை எடுத்துச் செல்லும் வகையில் ஒழுங்குகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வு மூலம் திரட்டப்படும் நிதி வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் உள்ள முன்பள்ளிகளின் வளர்ச்சிக்கு வழங்கப்படும் என தேவசேனா தெரிவித்தார். குறிப்பாக காட்டுப்புலம் மற்றும் மூளாய் போன்ற பகுதிகளில் உள்ள முன் பள்ளிகளின் வளர்ச்சிக்கு இந்நிதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இலங்கையின் வடக்கில் உள்ள சனத்தொகை அடர்த்தி கூடிய தொகுதி வட்டுக்கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொழும்பிற்கு அடுத்ததாக புதிய ஸ்ரைல் வருவது வட்டுக்கோட்டையிலும் மானிப்பாயிலும். காரணம் இப்பகுதிகளில் கிறிஸ்தவர்களின் தாக்கம் கணிசமான அளவில் காணப்பட்டமை. துரதிஸ்ட் வசமாக சாதிய முரண்பாடு அன்று மட்டுமல்ல இன்றும் கூர்மையாக உள்ள பிரதேசங்களில் வட்டுக்கோட்டையும் ஒன்று. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய அரசியலைத் தீர்மானிக்கும் ‘தமிழீழ பிரகடனம்’ செய்யப்பட்டது வட்டுக்கோட்டையில் உள்ள பன்னாகம் என்ற இடத்திலேயே. இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை வட்டுக்கோட்டையைத் தவிர்த்து எழுத முடியாது. சோமசுந்தரப் புலவர், எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், அல்பிரட் துரையப்பா, ரெலி ஜெகன் என்று முக்கிய புள்ளிகளும் இம்மண்ணில் வாழ்ந்துள்ளனர்.

தமிழர்களுக்கு ஆதரவு தந்த அந்த உயர்ந்த மனிதன் டேவிட் பேர்ஜஸ் க்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் : கவுன்சிலர் போல் சத்தியநேசன்

David_Burgess_SoniaDavid_Burgessடேவிட் பேர்ஜஸ் இன் இறுதி நிகழ்வு நேற்று (நவம்பர் 17, 2010) சென் மார்டின் இன் தி பீல்ட் இல் நடைபெற்றது. முற்போக்குத் தன்மைக்கு வரலாற்றுப் புகழ்பெற்ற தேவாலயம் சென் மார்ட்டின் இன் தி பீல்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தேவாலயம் தற்பால் உறவுகளை அங்கீகரிக்கின்ற தேவாலம். இங்கு டேவிட் பேர்ஜஸ், சோனியா என்ற பெயரில் சேவையில் ஈடுபட்டு இருந்தவர். இங்கு ஓலையால் வேயப்பட்ட பெட்டியில் உடலை வைத்து பாடல்களுடன் அவரது இறுதி அஞ்சலி இடம்பெற்றது. மனித உரிமை அமைப்புகள், மெடிக்கல் பவுண்டேசன், சட்ட நிறுவனங்கள், தற்பால் சமூகத்தினர், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த சமூக அமைப்புகள் என நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகைளச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இறுதி அஞ்சலியில் டேவிட் பேர்ஜஸ் இன் பிள்ளைகள் தங்கள் இறுதி அஞ்சலியை அவர்களின் தந்தைக்குச் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர்.

இக்கட்டுரை சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் உடன் அரசியல் தஞ்ச வழக்குகளில் நீண்ட காலம் இணைந்து பணியாற்றிய அவரின் நண்பர் கவுன்சிலர் போல் சத்தியநேசன் வழங்கும் ஒரு அஞ்சலிக் குறிப்பு. கவுன்சிலர் சத்தியநேசன் ஒலிப்பதிவாக வழங்கிய அஞ்லியை ரி சோதிலிங்கம் கணணிப்படுத்தி உள்ளார்.

._._._._._.

‘அப்போது தமிழ் அகதிகள் லண்டனில் பெருமளவு வந்திறங்கிய காலம். தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிராக குரல் எழுப்பிய பல தமிழர்கள் என்ன செய்வது என்று தெரியாது இருந்த காலம். தம்மால் ஆன எந்த உதவிகளைச் செய்தும் ஏதும் பலன் இல்லை என்றிருந்த காலம்.’ லண்டன் ஏஞ்சலில் உள்ள JCWIல் பணியாற்றிய Jane Coker இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு அப்போது உதவி வந்தவர். அவர், அகதிகள் திருப்பி அனுப்பப்படவதற்கு எதிரான அதாவது தஞ்சம் கோருவோரை மீண்டும் நாட்டுக்கு அனுப்புகின்ற பிரித்தானிய உள்நாட்டு அமைச்சின் கொள்கைகளை எதிர்த்து, உயர்நீதிமன்றில் சட்டப்படி சவால்விடுக்க, டேவிட் பேர்ஜஸ் ஜ TRAG (Tamil Refugee Action Group – Co-Ordinator Mr V Varathakumar) க்கு அறிமுகப்படுத்தினார். இன்று இந்த Jane coker ஒரு பிரித்தானிய நீதிபதிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

”1985 காலப்பகுதிகளில் பிரித்தானிய உள்நாட்டமைச்சு இலங்கைத்தமிழ் அகதிகளை உனடியாகவே திருப்பி அனுப்பவதில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக இரவு, பகல் பாராது அகதிகளை ஏற்றிச்செல்லும் பொலீஸ் வாகனங்களுக்கு பின்னால் கலைத்து திரிந்தும், ஓடித்திரிந்தும் பொலிசார் அகதிகளை ஒளித்து வைத்திருக்கும் இடங்களுக்கு இரகசியமாக சென்று, அவர்களிடம் வாக்கு மூலங்களைப் பதிவுசெய்தும் அந்த அகதிகளை நாடுகடத்த விடாமல் செய்த பணிகளில் டேவிட் பேர்ஜஸ் இன் பணி அளப்பரியது. பொலீசார் டேவிட் பேர்ஜஸ் இவர்களுடைய வழக்குகளில் ஈடுபடுகிறார் என்று தெரிந்ததும், அகதிகளை Holiday Inn போன்ற ஹோட்டல்களில் ஒளித்து வைத்தபோதும் அகதிகளை ஹோட்டல்களின் வாசல்களில் சந்தித்து வாக்கு மூலங்களை பதிவு செய்து அந்த அகதிகளை திருப்பி அனுப்பவிடாது தடுத்து நிறுத்தியவர் டேவிட் பேர்ஜஸ். பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் அவர்களுக்கு நன்றிக் கடமை உடையவர்கள்.” என்று TRAG – தமிழ் அகதிகள் நடவடிக்கைக் குழுவின் முன்னாள் இணைப்பாளர் திரு வி வரதகுமார் குறிப்பிடுகின்றார்.

1985 காலப்பகுதிகளில் இலங்கையில் நடைபெற்ற இனக்குரோத நடவடிக்ககைளில் பாதிக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறும் தமிழர்கள், உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, அவர்களுக்கு தான் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் சேவையாற்றியவர் திரு டேவிட் பேர்ஜஸ்.

இலங்கையின் இனப்பிரச்சினை முழுஅளவிலான வன்முறை வடிவம் எடுக்க ஆரம்பித்த காலங்களில் 1985ம் ஆண்டு பிரித்தானியா தனது குடிவரவுச் சட்டத்தில் கொமன்வெல்த் நாடுகளில் இருந்து வருபவர்களில் முதலாவதாக இலங்கையருக்கு விசா முறையை அமுல்ப்படுத்துகின்றனர். இதன்படி விசா இல்லாமல் வரும் அகதிகள் உடனடியாகவே திருப்பி அனுப்பப்படுவார்கள். இது இலங்கைத் தமிழர்களுக்கு பாரிய பாதிப்புக்களை கொடுத்திருந்தது.

யூலை 11 1986 உள்நாட்டு அமைச்சராக இருந்த டக்ளஸ் ஹேட், இலங்கைத் தமிழர்க்கு Exceptional Leave to Remain தரப்படும் என தெரிவிக்கிறார். இது இலங்கையில் இருந்து வரும் தமிழர்கள் இலங்கையில் இனரீதியாக பாதிப்படைந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளாது அகதிகளின் தனிப்பட்ட நிலைமைகளை ஆராய்ந்தே அவர்களுக்கு தங்குமிட அனுமதி வழங்குவது என்ற சட்டமாகும். இது தமிழர்கள் பாதிக்கப்பட்ட இனம் என்று பிரித்தானிய அரச ஏற்கவில்லை என்பதேயாகும்.

1987 ஹீத்துரோ விமான நிலையம் Terminal 3 அல்லது Terminal 4ல் தமிழர்கள் தமது உடுப்புக்களை கழற்றி எறிந்துவிட்டு தம்மை நாடு கடத்த வேண்டாம் எனப் போராட்டம் நடாத்திய நேரம். போராட்டம் நடத்தியவர்களை Ford House Hotelல் தடுத்து வைத்திருந்தனர். Winstanly Burgrs சட்ட நிறுவனம் சட்டத்தரணிகள் டேவிட் பேர்ஜஸ், Chris Landel ஆகிய இருவரும் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படுவது தொடர்பான இந்த வழக்கை உயர் நீதிமன்றுக்கு எடுக்க முன்வந்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றுக்கு எடுத்துச் செல்ல UNHCR அன்றைய உதவி உயர் ஸ்தானிகர் Irin Khan இன்றைய IOM Secretary General இதற்கான பின்புல உதவிகளை செய்ய முன்வந்திருந்தார்.

இந்த வழக்கில் டேவிட் பேர்ஜஸ் வெற்றிபெற்று தமிழர்கள் நாடு கடத்தலை தடுத்து நிறுத்தினார். இந்த வழக்கின் வெற்றியில் இன்று வரையில் இலங்கைத் தமிழ் அகதிகள் மட்டுமல்ல பல்வேறுபட்ட நாட்டு அகதிகளும் பயன்பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி இலங்கைத் தமிழ் மக்களால் அகதிகள் சமூகத்திற்கு வழங்கிய பெரிய விடயமாகும்.

1987 கீத்துரோ விமான நிலையத்தில் நாடுகடத்த முற்பட்ட வேளை தம்மை நாடு கடத்த வேண்டாம் என போராட்டம் நடாத்தியவர்களை Ford House Hotel ல் இருந்து தடுப்புக்காவல் முகாமிற்கு மாற்றப்பட்டனர் பின்னர் இவர்கள் படிப்படியாக நாட்டுக்குள் வசிக்க அனுமதிக்கப்பட்டனர். இதே காலகட்டத்தில் ஆறு எகிப்தியர்களை நாடுகடத்தப்பட இருந்ததும் அவர்களும் இந்த தமிழ் அகதிகளின் நீதிமன்றின் வெற்றியினால் பலன் பெற்றனர். இந்தக் காலகட்டத்தில் சனல் 4 இந்த விடயங்களை Black Back Series என்ற தொடரில் நிகழ்ச்சிகளாக ஒளிபரப்பப்பட்டது.

நீதிமன்றில் பெற்ற வெற்றியின் பின்னர் டேவிட் பேர்ஜஸ் இலங்கைத் தமிழ் அகதிகள் பிரச்சினைகளில் மிகவும் அக்கறையுடன் செயற்பட ஆரம்பித்தார். இதன் காரணமாகத் தான் இலங்கைக்குச் சென்று நிலமைகளை ஆய்வுசெய்து வந்தும், வேறு சில சட்டத்தரணிகளை அனுப்பி நிலைமைகளை அவதானித்தும் தமிழ் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை தொடர்ந்திருந்தார். பிரித்தானிய உள்நாட்டு திணைக்களம் முன்னர் எப்போதும் இப்படியான ஒரு சட்டச் சவாலை எதிர்கொள்வில்லை. பிற்காலங்களில் அகதிகளை ஏற்றி வரும் விமான நிறுவனங்களுக்கு 2000 பவுண்ஸ் அபராதம் போன்ற சட்ட நடவடிக்கைகளை உருவாக்கி இருந்த காலத்திலும், டேவிட் பேர்ஜஸ் வெற்றிபெற்றார். இந்த வெற்றி பலருக்கு நின்மதி அளித்திருந்தது.

பிரித்தானிய சட்டத்துறைக்கும் பிரித்தானிய அரசுக்கும் அதன் சட்டவாக்க கொள்கை வகுப்புக்களுக்கு டேவிட் பேர்ஜஸ் இன் நீதிமன்ற வெற்றி உதவியது. இது பிரித்தானியாவின் சட்டத்துறையில் மாற்றங்களை உருவாக்கியது. டேவிட் பேர்ஜஸ் ஒவ்வொரு அகதியையும் தனது முழுமையான அர்ப்பணிப்புடனும் உத்தியோக சிறப்புடனும் அணுகினார். அகதிகளிடம் வாக்கு மூலம்பெறுவதற்கும் இலங்கை பற்றி அறிவதற்கும் மிகுந்த நேரத்தைச் செலவிட்டார். டேவிட் பேர்ஜஸின் கடுமையான உழைப்பின் பயனை தனிப்பட்ட அகதிகள் மட்டுமல்லாமல், அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளும் கூட வெற்றியின் பயனைப்பெற்றனர். இந்தக் காலத்தில் லண்டனில் இருந்த பல தமிழ் சட்டத்தரணிகளில் அனுபவம், சட்டத்தேர்ச்சி பெற்றவர்கள் ஒருசிலரே. பல சட்டத்தரணிகள் தமது தொழில் ரீதியாக தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை டேவிட் பேர்ஜஸ் உருவாக்கி இருந்தார்.
டேவிட் பேர்ஜஸ் உடைய வழக்கு வெற்றியினை ஆதாரமாகக் கொண்டு தமது வழக்குகளை வெல்ல அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. இதனை இலங்கைத் தமிழ் சட்டத்தரணிகள், தங்களுக்கு பெரும் பணமீட்டும் உழைப்பாக்கிக் கொண்டனர். அதிலும் சாதாரணமாக உள்ளுராட்சி திணைக்களத்துடன் தொடர்பு கொண்டால் கிடைக்கக்கூடிய Exceptional Leave to Reamin ஜ கூட பல நூறு பவுண் பணங்களை வாங்கிக் கொண்டே தமிழ் அகதிகளுக்கு உதவி செய்வோர் என்ற பெயரையும் பெற்றுக் கொண்டனர்.

தமிழ் அகதிகள் பெருமளவு பிரித்தானியாவுக்கு வந்த காலத்தில் அகதிகளுக்கு சேவை செய்து கொண்டிருந்த British Refuge Council, UKIAS, AI, UNHCR போன்ற பல அமைப்புக்களுக்கும் இந்த டேவிட் பேர்ஜஸ் இன் வெற்றி உதவிக்கரமாக இருந்தது.

மேலும் பல தமிழ்அகதிகள் அமைப்புக்கள் அரசிடமிருந்து நிதி உதவிகளையும் பெற்று மேலும் பல அகதிகளுக்கு உதவும் வாய்ப்பும் கிட்டியது. இந்தப் பரீட்சார்த்த வழக்கு வெற்றிகளினால் வேறு பல நாட்டு அகதிகளின் வழக்குகளும் வெற்றி வாகை சூடிக்கொண்டது. பங்களாதேஸில் இருந்த வந்திருந்த அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு டேவிட் பேர்ஜஸ் இனால் கிடைத்த சட்ட வெற்றியைப் பயன்படுத்தி, அடுத்த தொகுதி பங்களாதேஸ் அகதிகள் திருப்பி அனுப்பப்படாமல் தடுக்க இந்த வழக்கு வெற்றி உதவியது. இன்று பிரித்தானியாவில் தமிழ் சமூகம் வல்லமையும் ஆளுமையும் கொண்ட சமூகமாக இருப்பதற்கு டேவிட் பேர்ஜஸ் செய்த உதவிகள் முக்கியமானவை.

டேவிட் பேர்ஜஸ் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் தனது சேவையினை மனப்பூர்வமாக வழங்கியுள்ளார். டேவிட் பேர்ஜஸ் தமிழ் மக்களுக்கும் ஏனைய அகதி மக்களுக்கும் ஒரு பாதுகாக்கும் கரமாக இருந்துள்ளார். இன்று பிரித்தானியாவில் தமிழர்களும் மற்றைய நாட்டவர்களும் அகதிகளாக வந்து பயனை அடைந்திட டேவிட் பேர்ஜஸ் ன் பங்களிப்பு அளப்பரியது.

பாதிக்கப்பட்ட இனமான தமிழ் இனம் சர்வதேச அகதிகளுக்கான மனித உரிமைகளுக்கான சட்டங்களான 1951 Convetion, 1967 Protocol ஆகியவற்றின் கீழ் பாதுகாப்பு தரப்படவில்லையானாலும் பிரித்தானிய சட்டதிட்டங்களில் மாற்றங்களை உருவாக்கி தமக்கான சட்டப் பாதுகாப்பினை இலங்கைத் தமிழர்கள் பெற்றுள்ளனர். டேவிட் பேர்ஜஸ் பணத்தையும் பெருமையயும் முதன்மைப்படுத்தாமல் பிரித்தானிய உள்நாட்டு சட்டத்துக்கு சவாலாகவும் பாதிக்கப்பட்ட இனத்திற்காக உதவி செய்வதையும் முதன்மைப்படுத்தி தமிழர்களுக்கு ஆதரவு தந்த அந்த உயர்ந்த மனிதனுக்கு நான் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

டேவிட் பேர்ஜஸ் தொடர்பான முன்னைய பதிவுகள்:

தமிழர்களுக்கு ஆதரவு தந்த அந்த உயர்ந்த மனிதன் டேவிட் பேர்ஜஸ் க்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன் : கவுன்சிலர் போல் சத்தியநேசன்

டேவிட் பேர்ஜஸ் உடைய இறுதி நிகழ்வு இன்று நவம்பர் 17ல்

தஞ்சம் கோரிய பல நூற்றுக்கணக்கான தமிழர்களின் வாழ்வுக்கு வழிகாட்டிய சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் மரணத்தைத் தழுவினார்! அவருடைய மரணம் தொடர்பாக தமிழ்ப் பெண் கைது!

சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் கொலைச் சந்தேக நபர் பெண்ணாக மாறிய ஆண்!

டேவிட் பேர்ஜஸ் உடைய இறுதி நிகழ்வு இன்று நவம்பர் 17ல்

David_Burgessபிரபல சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் இன் இறுதி நிகழ்வுகள் நவம்பர் 17ல் நடைபெற உள்ளது. கிங்குரொஸ் நிலக்கீழ் புகையிரத நிலையத்தில் ஒக்ரோபர் 25ல் இவர் உயிரிழந்தார். இவருடைய மரணம் தொடர்பாக நீனா கனகசிங்கம் (34) நவம்பர் 01ல் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.

டேவிட் பேர்ஜஸ் இன் இறுதிநிகழ்வு தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட மின் அஞ்சல்.

Subject: David Burgess’s funeral
Dear all,
I am advised that David’s funeral will be held at 11am at St. Martin in the fields (Trafalgar Square) on weds 17th november. It is open to all who would like to pay their respects, with a  reception afterwards in the parish hall.
Regards
David
David Rhys Jones

தமிழ் சமூகத்திற்கு அரசியல் தஞ்ச வழக்குகளில் சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸின் உழைப்பு மகத்தானது. டேவிட் பேர்ஜஸின் கடுமையான உழைப்பாலம் நேரடியாக நூற்றுக்கணக்கான தமிழர்களும் குறிப்பிட்ட வழக்குகளில் வெற்றி பெற்றமையினால் ஆயிரக்கணக்கானவர்களும் இன மத மொழி பேதம் கடந்து நன்மை பெற்றனர்.

Related Article:

தஞ்சம் கோரிய பல நூற்றுக்கணக்கான தமிழர்களின் வாழ்வுக்கு வழிகாட்டிய சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் மரணத்தைத் தழுவினார்! அவருடைய மரணம் தொடர்பாக தமிழ்ப் பெண் கைது!

சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் கொலைச் சந்தேக நபர் பெண்ணாக மாறிய ஆண்!

சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் கொலைச் சந்தேக நபர் பெண்ணாக மாறிய ஆண்!

David_Burgessஅரசியல் தஞ்சம் கோரிய தமிழர்களுக்கு தன்னலமற்ற சேவையை வழங்கிய சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் யை கிங்குரொஸ் ரெயில் நிலையத்தில் தள்ளிவிட்டு மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர் நவம்பர் 1ல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். நீனா கனகசிங்கம் (34) என அறியப்பட்ட இப்பெண் உண்மையிலேயே ஒரு ஆண் என அறிய வந்துள்ளது. பெண்ணாக மாற்றுப் பால் சிகிச்சை செய்து கொண்ட இவருடைய சிகிச்சை இன்னமும் முற்றுப்பெறவில்லை என்பதும் நீதிமன்றத்தில் தெரியவந்தள்ளது.

நீதிமன்றத்திற்கு மீசை மற்றும் தாடி மயிர் முளைத்த முகத்துடன் கொண்டுவரப்பட்ட கனகசிங்கம் தன்னைப் பெண்ணாகவே அடையாளப்படுத்தும்படி நீதிமன்றைக் கேட்டுள்ளார்.

கிறிக்கல்வூட்டைச் சேர்ந்த கனகசிங்கம் வொன்ஸ்வேர்த் சிறைச்சாலையில் ஆண்கள் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். இவர் பெப்ரவரி 3 வரை வழக்கு விசாரணைகளுக்கு தடுத்து வைக்கப்பட்டு உள்ளார். இவரைப் பிணை எடுப்பதற்கான விண்ணப்பம் எதுவும் மேற்கொள்ளவில்லை.

ரெயிலில் தள்ளிவிடப்பட்டதால் மரணத்தை தழுவிய டேவிட் பேர்ஜஸ் ஆணாக இருந்த போதும் பெண்களின் உடைகளை அணிவதில் நாட்டம் கொண்டிருந்தவர். மாற்றுப்பால் இயல்புடைய டேவிட் பேர்ஜஸ் தன்னை இணையத்தில் பாலியல் உறவுக்கு விளம்பரப்படுத்தி இருந்தமை அவரது மரணத்தைத் தொடர்ந்து வெளிவந்தள்ளது.

டேவிட் பேர்ஜஸ் இன் தனிப்பட்ட பாலியல் இயல்புகளுக்கு அப்பால் அவர் தனது தொழிலில் நேர்மையாகவும் திறமையாகவும் இருந்ததை அவரது வேலை நண்பர்கள் மதிப்புடன் தெரிவித்துள்ளனர். அவருடைய பாலியல் நடத்தைகளையும் இரட்டை அடையாளத்தையும் அவரது குடும்பமும் வேலை நண்பர்களும் அறிந்தும் இருந்தனர்.

”தமிழ் மக்களுக்கு தன்னலமற்ற சேவைகளை வழங்கிய போதும் டேவிட் பேர்ஜஸ் இன் மரணம் தொடர்பாக தமிழ் மக்கள் தரப்பில் இருந்து எவ்வித இரங்கலும் தெரிவிக்கப்படவில்லை. ஒருவருடைய பாலியல் இயல்பு என்பது அவருடைய தனிப்பட்ட உணர்வு சம்பந்தப்பட்ட விடயம். ஒரு சமூகத்திற்கு வழங்கிய தன்னலமற்ற சேவையை அவருடைய பாலியல் இயல்புகளுக்காக மறப்பது அழகல்ல” என்பதே எனது (த ஜெயபாலன்) நிலைப்பாடு.

._._._._._.

Oct 29 2010

தஞ்சம் கோரிய பல நூற்றுக்கணக்கான தமிழர்களின் வாழ்வுக்கு வழிகாட்டிய சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் மரணத்தைத் தழுவினார்! அவருடைய மரணம் தொடர்பாக தமிழ்ப் பெண் கைது!

அரசியல் தஞ்ச வழக்குகளில் தனக்கென முத்திரை பதித்த சட்டத்தரணி டேவிட் பேர்ஜஸ் ஒக்ரோபர் 25ல் கிங்குறொஸ் நிலக்கீழ் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் வீழ்ந்து உயிரிழந்தார். டேவிட் பேர்ஜஸ் இன் மரணம் தொடர்பாக தமிழ்ப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். கிங்குரொஸ் நிலக்கீழ் ரெயில் நிலையத்தில் நின்ற டேவிட் பேர்ஜஸ்யை குறிப்பிட்ட தமிழ் பெண் புகையிரதத்தின் முன் தள்ளிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சந்தேக நபர் 34 வயதான நீனா கனகசிங்கம் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

63 வயதான டேவிட் பேர்ஜஸ் 3 பிள்ளைகளின் தந்தை. மத்திய லண்டனில் வாழ்பவர். இவர் மாற்றுடையணியும் பழக்கம் கொண்டவர் என்றும் தெரியவருகிறது. சம்பவத்தின் போது பெண்ணுடை அணிந்து நின்ற டேவிட் பேர்ஜஸ் புகையிரத்தின் முன் வீழ்ந்ததால் புகையிரதத்தில் அடிபட்டு மரணமாகி உள்ளார். இவருடைய மரணம் தொடர்பாக நீனா கனகசிங்கம் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.

David_Burgessடேவிட் பேஸ்ஜசின் மரணச் செய்தி பிரித்தானிய சட்டத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பிரித்தானிய தமிழ் சமூகத்திற்கு டேவிட் பேர்ஜஸ் வழங்கிய சட்ட சேவை அளவுக்கு எவருமே தன்னலமற்று பணியாற்றி இருக்கவில்லை. பலநூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு பிரித்தானிய மண்ணில் வாழும் உரிமையைப் பெற்றுக்கொடுத்த டேவிட் பேர்ஜஸ் தனது சட்ட நிபுணத்துவத்தால் எதிர்காலத்திலும் தஞ்சம் கோரும் பலருக்கு வாழும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க காரணமாய் இருந்தவர்.

1970க்களில் சட்டத்துறைக்குள் நுழைந்த இவர். ஏனையவர்களுடனும் இணைந்து வின்ஸ்ரான்லி பேர்ஜஸ் என்ற பிரித்தானியாவின் பெயர்பெற்ற குடிவரவுச் சட்ட நிறுவனத்தை நிறுவினார். அரசு சட்ட உதவிகளை இறுக்கமாக்கியதை அடுத்து தராதரமான சேவையை தங்களால் தொடர்ந்தும் வழங்க முடியாது என்ற நிலையில் வின்ஸ்ரான்லி பேர்ஜஸ் நிறுவனம் 2003 ஓகஸ்டில் மூடப்பட்டது.

அதன் மரணமாகும் வரை டேவிட் பேர்ஜஸ் லுக்மானி தொம்சன் அன் பார்ட்னர்ஸ் என்ற வூட் கிரீனில் உள்ள சட்ட நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

தமிழர்கள் பிரித்தானியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரிப் புறப்பட்ட எண்பதுக்களின் நடுப்பகுதி முதல் டேவிட் பேர்ஜர்ஸ் தமிழ் சமூகத்துடன் மிக நெருக்கமாகப் பணியாற்றியவர். தமிழர் தகவல் நடுவம் அரசியல் தஞ்சம் தொடர்பாக எடுத்துக் கொண்ட வழக்குகளை டேவிட் பேர்ஜஸ் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றியும் கண்டார். உள்துறை அமைச்சின் பல்வேறு முடிவுகளையும் எதிர்த்து அவற்றை மாற்றி அமைக்கவும் காரணமாக இருந்தவர்.

எப்பொதுமே சவாலான விடயங்களையே தெரிவு செய்து வாதிடும் டேவிட் பேர்ஜஸ் அண்மைக்காலத்தில் கூட வெளிநாடுகளில் பாரபட்சமற்ற வழக்குகளுக்காகவும் அகதிச் சட்ட வரையறைக்குள் வராத வழக்குகளையும் பாதுகாப்பு அமைச்சின் சட்டவிரோதமான தடுத்துவைப்புகளுக்கு எதிரான சிவில் சட்ட வழக்குகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி வந்திருந்தார்.

David_Burgess_Soniaமாற்றுடைப் பழக்கமுடைய டேவிட் பேர்ஜஸ் சோனியா எனவும் அழைக்கப்படுபவர். இவருடைய மறைவு மிக ஆழமான வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

டேவிட் பேர்ஜஸ் தீபெத்திய பெண்ணை மணந்தவர். அவருடைய மகள் (குசாங் நைமா) தனது தந்தையின் பெயரைப் பயன்படுத்தாமல் சட்டத்துறையில் சாதிக்க வேண்டும் என்று கடினமாக உழைப்பவர். அவர் தனது தந்தையின் பெயரைப் பயன்படுத்தி அதில் செல்வாக்குப் பெறாமலேயே அவரது கடின உழைப்பால் தான் டேவிட் பேர்ஜஸ் இன் மகள் என அறியப்படுபவர்.

சட்டத்துறையில் உள்ள அகதிகள் அமைப்புகளில் உள்ள தமிழ் சமூக அமைப்புகளில் உள்ள தமிழர்களுக்கு டேவிட் பேர்ஜஸ் மிக அறிமுகமானவர். அவருடைய இழப்பு தமிழ் சமூகத்திற்கு ஆழ்ந்த சோகமே.

சந்தேக நபரான நீனா கனகசிங்கம் கிரிக்கல்வூட் பகுதியில் உள்ள சிசிலி வீதியில் வாழ்பவர் எனத் தெரியவருகின்றது. நவம்பர் 1ம் திகதி இவர் ஓல்ட் பெய்லியில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

பிரிட்டனிலிருந்து இலங்கை திரும்பிய இளைஞன் பொலிஸாரினால் கைது!

Stop_the_War_on_Asylumபிரிட்டனில் இருந்து இலங்கைக்கு வந்த யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரிட்டனிலிருந்து விமானத்தில் வந்திறங்கிய யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த மயில்வாகனம் சிவநேசன் (வயது 30) என்பவரே பெரிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்

இவர் 12 வருடங்களுக்கு முன்னர் பிரிட்டனுக்குச் சென்று அரசியல் தஞ்சம் கோரியிருந்தார் எனவும். இவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இவரை நாடு கடத்துவதற்காக ஒரு வருடத்திற்கு முன்னர் இவர் கைது செய்யப்பட்டு  தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர் இலங்கைக்குத் திரும்பிச் செல்வதில் எதுவித பிரச்சனைகளும் இல்லை எனவும், இவரது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச ஸ்தாபனம் இவருக்கு வாக்குறுதி வழங்கியிருந்ததாம். இதனையடுத்து இவர் இலங்கைக்குத் திரும்பிச்செல்ல சம்மதித்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Refugees face 150th day at sea – Grant asylum now! : Tamil Solidarity

Boat Refugees254 Sri Lankan Tamil-speaking refugees have been trapped on a tiny boat in the port of Merak in Indonesia. It will be 150 days on march 10th. We cannot let their suffering go on for longer.

Come to the protest on 10th of march -Time: 4pm-6pm
Place: The Australian High Commission, Strand, London WC2B 4LA
(corner of the Aldwych and the Strand. Nearest Tube station: Temple) (If you are working on this day, please come after work -protest will go on for long time)

Call 07908050217 if you need more informationor mail us on info@tamilsolidarity.org

They have been detained as a direct result of a request by the Australian prime minister Kevin Rudd to the Indonesian president Susilo Bambang Yudhoyono.

The refugees are threatened with being incarcerated in a horrific detention centre or sent back to Sri Lanka to face torture and death.

These refugees are demanding respect for their right to have a decent life, freedom of movement and education for their kids – very basic rights that everyone on the planet deserves.

Crammed into the boat, in the rain, they fear storms and other disasters and are under constant threat of the Indonesian navy.

Crammed into the boat, in the rain, they fear storms and other disasters and are under constant threat of the Indonesian navy.

Activists who travelled to Merak to help the refugees have been deported. Journalists and humanitarian activists have been denied access.

Currently:
No humanitarian agencies apart from the International Organisation for Migration (IOM) are allowed to visit the boat.
The IOM, which gets $12 million a year from the Australian government (as part of Australia’s ‘Indonesian Solution’) to provide humanitarian assistance to asylum seekers warehoused in Indonesia, is refusing to visit this boat.
No independent monitors, including the Indonesian Human Rights Commissioner himself, have been given access to the boat. (He visited the boat twice, in October and November 2009, and has applied for access to the boat again, but has still not received authorisation from the Indonesian Department of Foreign Affairs.)
The media is not allowed access.

People on the boat:
There are 35 children on the boat including a baby, born in the conflict area during the last stages of war in Sri Lanka, who just had its first birthday on the boat. Children cannot get sleep as they suffer from an extremely irritable rash and other skin conditions.

There are 27 women on the boat including one woman who is eight months pregnant.

Over 100 people on the boat already have UNHCR cards issued in Malaysia. Regardless the Australian and Indonesian governments refuse to accept them as refugees.

Conditions on the boat:
The boat is designed to hold 40 people and there is only one toilet.
The food supplied is unhygienic and lacks nutritional value.
Fuel for the boat is not supplied. The refugees buy a little fuel from the locals. Each person can only have a shower every two days, since the water has to be pumped onto the boat by motor.

The lack of medical facility has already resulted in one death.

Many are suffering from illness on this boat. Already 29 year-old George Jacob Samuel Christin died due to severe food poisoning and lack of proper medical facility. The authorities constantly refuse to take suffering patients to the hospital.

Those who volunteered to get off the boat:
They are like the canary in the mine. Here is what happened to them:

One man was returned to Sri Lanka with assistance from the IOM. As soon as he landed in Sri Lanka he disappeared and was found in a detention camp in Boosa Galle. Australian Refugee rights activists visiting Indonesia in December 2009 brought this to the attention of the Indonesian Foreign Ministry and the Indonesian Human Rights commission. The latest they heard from his family is that he has finally been released but the family is afraid to reveal details of this.
The others have been held inside a detention cell in Jakarta for more than two months (24 hours, seven days a week). The cell holds 12 men and is about 15 meter square. People are allowed to smoke in the cell. The food that is provided is not varied according to the health needs of the detainees.

Captain Kapil and two other Sri Lankan navy officials from the Sri Lankan Embassy in Jakarta visited this cell and interrogated these men.

Primary concerns and fears of those on the boat:
They are fearful if that if they disembark they will be placed in detention and also be interrogated by Sri Lankan government officials. Indonesian officials have threatened to forcibly remove them from the boat and deport them back to Sri Lanka. There is no protection from harassment from local police and immigration officials. There have been a number of assaults on asylum seekers by the police. Immigration officials have confiscated badly needed medicines, food supplements for the pregnant woman and other supplies provided by humanitarian workers.

உலகமே நத்தார் புதுவருடத்தை கொண்டாட இந்தோனேசியக் கடலில் தமிழ் அகதிகள் தத்தளிக்கின்றனர்.

Boat Refugees_03இந்தோ னேசியக் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் அகதிகளின் அவலம் முடிவின்றித் தொடர்கின்றது. உலகமே நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களில் திளைத்திருக்கின்ற வேளையில் கடலில தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த அகதிகள் மறக்கப்பட்டு உள்ளனர். கொழும்பைச் சேர்ந்த சாமூவேல் ஜேக்கப் (29) என்ற இளைஞர் கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாள் உயிரிழந்தார். இவ்வாறான மிக மோசமான படகு விபத்து ஒன்றில் 200 வரையானவர்கள் மரணமடைந்த சம்பவம் கிறிஸ்மஸ் தினத்திற்கு மறுதினம் பொக்ஸிங் டே அன்று இத்தாலியில் இடம்பெற்றது. தொண்ணுறுக்களின் நடுப்பகுதியில் இடம்பெற்ற இப்படகு விபத்தில் மரணமாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இலங்கையர்கள். இதுவே தமிழ் அகதிகளுக்கு இடம்பெற்ற மோசமான விபத்தாக உள்ளது.

தற்போது எரிமலை மையமாகவும் சுனாமியின் மையமாகவுமுள்ள இந்தோனேசியக் கடலில் 250 அகதிகள் சாதாரண படகில் தவிக்க விடப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சம் உலகமே கொண்டாடுகின்ற நத்தார் புதுவருடத்தையொட்டி இவர்களை மனிதாபிமான முறையில் அணுக அவுஸ்திரேலியா தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.

Boat Refugees_03ஒக்ரோபர் 10 மலேசியாவில் இருந்து புறப்பட்ட கப்பல் இந்தோனேசிய கடற்படையால் வழிமறிக்கப்பட்டது. அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட், இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பாம்பாங்க்கு விடுத்த அவசர வேண்டுகோளை அடுத்து ஜகார்ற்றா அருகில் உள்ள மேர்க் துறைமுகத்தில் 250 இலங்கைத் தமிழ் படகு அகதிகள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவுஸ்திரேலியா நோக்கி வரும் படகு அகதிகளை அவுஸ்திரேலிய கடற்பரப்பினுள் நுழைவதற்கு முன்னரே தடுத்து அவர்களை இந்தோனேசியாவிலேயே தஞ்சம்பெற வைக்கின்ற ‘இந்தோனேசியத் தீர்வு’ என்ற திட்டத்தை அவுஸ்திரேலியா கடைப் பிடிக்கின்றது. இதன் மூலம் தனக்கு வரும் அகதிகள் பிரச்சினையை கைகழுவி விட்டு வருகின்றது.

இந்த அகதிகளை பலவந்தமாக வெளியேற்றி இந்தோனேசியாவில் தரையிறக்குவதை ஒரு தீர்வாக இந்தோனெசிய அதிகாரிகள் கொண்டுள்ளனர். ஓசானிக் வைக்கிங் கப்பலில் இருந்த அகதிகளுக்கு வழங்கப்பட்டது போன்ற ஒரு ஒறுதி மொழியை இந்த அகதிகளுக்கு வழங்க அவுஸ்திரேலிய அரசு மறுத்து வருகின்றது. இதே காலப்பகுதியில் ஓசானிக் வைக்கிங் என்ற அவுஸ்திரேலிய சுங்கக் கப்பலால் காப்பாற்றப்பட்ட 78 தமிழ் அகதிகள் தரையிறங்க மறுத்தனர். அவர்களது தஞ்ச விண்ணப்பங்கள் சில வாரங்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசு வழங்கிய உறுதி மொழியை அடுத்து அவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்கச் சம்மதித்தனர். தற்போது அவர்கள் உண்மையான அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டு அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

ஆனால் மேர்க் இந்தோனேசியத் துறைமுகப் பகுதியில் தத்தளிக்கும் அகதிகள் வரும் ஜனவரி 10 மூன்றாவது மாதத்தை கடலில் கழித்து உள்ளனர். அவர்களது எதிர்காலம் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளது.

 இச்செய்தி தொடர்பான முன்னைய பதிவுகள்:

உலகமே நத்தார் புதுவருடத்தை கொண்டாட இந்தோனேசியக் கடலில் தமிழ் அகதிகள் தத்தளிக்கின்றனர்.

இந்தோனேசியக் கடலில் தொடரும் தமிழ் படகு அகதிகளின் போராட்டம் : த ஜெயபாலன்

8வது வாரமாகத் தொடரும் படகு அகதிகளின் அவலமும் பதட்டமும்.

ஒசானியா வைக்கிங்கில் இருந்து ஒரு பகுதி அகதிகள் வெளியேறுகின்றனர்!

மனித உரிமைகள் விடயத்தில் அவுஸ்திரேலிய பிரித்தானிய அரசுகள் இரட்டைவேடம்!

படகு அகதிகளின் தொடரும் அவலங்களும் மரணங்களும் – அவுஸ்திரேலியாவின் இந்தோனேசியத் தீர்வு – மேற்குலகு சொல்லும் மனித உரிமைகள் : த ஜெயபாலன்

இந்தோனேசியக் கடலில் தொடரும் தமிழ் படகு அகதிகளின் போராட்டம் : த ஜெயபாலன்

Boat Refugeesஇந்தோனேசிய அரசு படகு அகதிகளின் தஞ்ச உரிமையை அங்கிகரிக்க வேண்டும் அவர்களுக்கு வழங்க வேண்டிய மனிதத்துவ உதவிகளைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரி பிரித்தானியாவில் உள்ள இந்தோனேசியத் தூதரகத்திற்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை தமிழ் சொலிடாரிட்டி – தமிழ் ஒருங்கிணைப்பு அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இந்தோனேசியவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகு அகதிகள் தொடர்பான தொடர்ச்சியான கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் தமிழ் சொலிடாரிட்டி மேற்கொண்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது.

கவனயீர்ப்புப் போராட்டம்
Indonesian Embassy
Grosvenor Square (nearest tube: Bond Street)
4pm Friday 4 December 09.

ஒக்ரோபர் 10 மலேசியாவில் இருந்து புறப்பட்ட கப்பல் இந்தோனேசிய கடற்படையால் வழிமறிக்கப்பட்டது. அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூட், இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பாம்பாங்க்கு விடுத்த அவசர வேண்டுகோளை அடுத்து ஜகார்ற்றா அருகில் உள்ள மேர்க் துறைமுகத்தில் 250 இலங்கைத் தமிழ் படகு அகதிகள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவுஸ்திரேலியா நோக்கி வரும் படகு அகதிகளை அவுஸ்திரேலிய கடற்பரப்பினுள் நுழைவதற்கு முன்னரே தடுத்து அவர்களை இந்தோனேசியாவிலேயே தஞ்சம்பெற வைக்கின்ற ‘இந்தோனேசியத் தீர்வு’ என்ற திட்டத்தை அவுஸ்திரேலியா கடைப் பிடிக்கின்றது. இதன் மூலம் தனக்கு வரும் அகதிகள் பிரச்சினையை கைகழுவி விட்டு வருகின்றது.

Alexஇலங்கைப் படகு அகதிகளின் பேச்சாளராகியுள்ள அலெக்ஸ் என்றறியப்பட்ட குகனேந்திரராஜா சஞ்சீவ் (27)வின் தாயார் சத்தியா ராஜரட்ணம் (46) சென்றவாரம் கனடா வன்கூவரில் இருந்து இந்தோனேசியா சென்று தனது மகனை விடுவிக்க முயற்சி செய்தார். அதற்காக ஐநா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் ஆலயம், இந்தோனேசிய அதிகாரிகள், கனடிய தூதரகம் ஆகியவற்றுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்த முயன்றார். ஆனால் அம்முயற்சி பலனளிக்கவில்லை.

எவ்வித நிபந்தனையும் இன்றி படகில் இருந்து வெளியே வரும்படி கேட்டதாக இலத்திரனியல் வியாபாரப் பெண்மணியான அலெக்ஸின் தாயார் சத்யா ராஜரட்ணம் தி குளோப் அன்ட் மெயில் பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார். ‘எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை’ என்றும் ‘வேதனையாக உள்ளது’ என்றும் தெரிவித்துள்ள அவர் ‘எனக்கு எதுவும் செய்ய முடியவில்லை’ என்றும் தெரிவித்துள்ளார். ‘இந்தோனேசிய அரசினை நம்ப முடியாது’ எனத் தெரிவித்த அலெக்ஸின் தாயார் மேலும் தெரிவிக்கையில் ‘அவர்களுக்கு தொலைத்தொடர்பு வசதிகள் கிடைக்கும்படியும் சமூகமான வாழ்வுக்கான உத்தரவாதத்தையும் வழங்கினால், அவர்கள் தரையிறங்குவது பற்றி ஆராய்வார்கள். ஆனால் யாரும் அந்த உத்தரவாதத்தை வழங்கமாட்டார்கள்’ என்றும் குறிப்பிட்டார்.

அந்த ‘இந்தோனேசியத் தீர்வு’ திட்டத்தில் தற்போது 250 இலங்கைத் தமிழ் அகதிகள் சிக்கி உள்ளனர். தற்போது மேர் துறைமுகத்தில் உள்ளவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்க மறுக்கின்றனர். நேரடியாக இலங்கையில் இருந்து புறப்படாத இப்படகுக் கப்பல் மலேசியாவில் இருந்தே புறப்பட்டு உள்ளது. இலங்கையில் இருந்து ஏற்கனவே மலேசியா, இந்தோனேசியாவிற்கு புலம்பெயர்ந்திருந்த பலரும் அங்கு சமூகமான ஒரு வாழ்வை மேற்கொள்ள முடியாத நிலையில் இக்கப்பலில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லப் புறப்பட்டு இருந்தனர். மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் தொடர்பான ஜெனிவா உடன்பாட்டில் கைச்சாத்திட்டு இருக்கவில்லை. இங்கு வாழும் அகதிகள் மிகவும் நெருக்கடியான இக்கட்டான இருண்ட எதிர்காலத்தையே கொண்டிருந்தனர். அதனால் அவர்கள் அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்டனர். அதற்கு ஒருவருக்கு 12000 வெள்ளிகள் கட்டணம் செலுத்த வேண்டியும் இருந்தது.

இவ்வாறு இக்கப்பலில் ஏறியவர்களில் ஒருவரான அலெக்ஸின் கடந்த காலம் சர்ச்சைக்கு உரியது. 5 வயது முதல் கனடாவில் வளர்ந்த அலெக்ஸ் அங்கு பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏ கெ கண்ணன் குழுவைச் சேர்ந்தவர். இவர் கொலை மிரட்டல், வாள், செமி ஓட்டோமற்றிக் துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்தமைக்காக கனடாவில் சிறைத் தண்டனை பெற்றவர். 2003ல் இவர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்ட்டு இருந்தார். ஊடகப் பேச்சாளராக இவரது ஆங்கிலப் பேச்சு கனடியச் சாயலுடன் வெளிவந்தவுடன் இவரது கடந்தகாலம் வெளிச்சத்திற்கு வந்தது. http://www.scribd.com/doc/22355905/Kulaendrarajah-Sanjeev-a-k-a-SANJEEV-KUHENDRARAJAH-a-k-a-Alex அது கப்பலில் இருந்த அகதிகள் மீதும் தவறான பார்வையை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்தது.

Boat Refugees250 இலங்கைப் படகு அகதிகளின் இருண்ட எதிர்காலம் இரண்டாவது மாதமாகவும் தொடர்கிறது. இலங்கை அரசு மனித உரிமைகளை மீறுகிறது, யுத்தக் குற்றங்களைப் புரிந்துள்ளது என்றெல்லாம் சர்வதேச நாடுகள் குரல் எழுப்பிய போதும் இந்த அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற போக்கே இந்த மேற்கு நாடுகளிடம் காணப்படுகின்றது. இந்தக் காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த பிரித்தானியாவின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி டெஸ் பிரவுணி இலங்கைப் படகு அகதிகளை இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். ‘தமிழர்கள் உட்பட இலங்கையர்களைத் திருப்பி அனுப்புவதற்கு இலங்கை பாதுகாப்பானது என்று நாங்கள் கருதுகிறோம்’ என்று நவம்பர் 10ல் கன்பராவில் டெஸ் பிரவுணி தெரிவித்து இருந்தார்.

இந்தோனேசிய கடற்படையினர் இதுவரை பலாத்காரமாக அவர்களை வெளியேற்றுவதில்லை என்ற நிலையிலேயே உள்ளனர். ஆனால் அவர்கள் தாங்களாக வெளியேறுவதற்கான நெருக்கடிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அவுஸ்திரேலியா முழுமையாகத் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்துள்ள நிலையில் இரண்டாவது மாதமாகவும் அவர்களின் அவுஸ்திரேலியா செல்வதற்கான போராட்டம் தொடர்கின்றது.

 இச்செய்தி தொடர்பான முன்னைய பதிவுகள்:

8வது வாரமாகத் தொடரும் படகு அகதிகளின் அவலமும் பதட்டமும்.

ஒசானியா வைக்கிங்கில் இருந்து ஒரு பகுதி அகதிகள் வெளியேறுகின்றனர்!

மனித உரிமைகள் விடயத்தில் அவுஸ்திரேலிய பிரித்தானிய அரசுகள் இரட்டைவேடம்!

படகு அகதிகளின் தொடரும் அவலங்களும் மரணங்களும் – அவுஸ்திரேலியாவின் இந்தோனேசியத் தீர்வு – மேற்குலகு சொல்லும் மனித உரிமைகள் : த ஜெயபாலன்

படகு அகதிகளின் தொடரும் அவலங்களும் மரணங்களும் – அவுஸ்திரேலியாவின் இந்தோனேசியத் தீர்வு – மேற்குலகு சொல்லும் மனித உரிமைகள் : த ஜெயபாலன்

Oceanic_Viking_Refugeesஅவுஸ்திரேலியாவின் வடமேற்குக் கடற்பரப்பில் இடம்பெற்ற விபத்தில் மூவர் இறந்துள்ளதாகவும் ஒன்பது பேரைக் காணவில்லை என்றும் அவுஸ்திரேலிய அரசு உறுதிப்படுத்தி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 01) இரவு அவுஸ்திரேலிய கடற்பரப்பில் இருந்து 350 கடல்மைல் தொலைவில் உள்ள கோகோஸ் தீவுக்கு அண்மையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த போது 39 பேர் படகில் இருந்துள்ளனர். அகதிகளை ஏற்றி வந்த படகு மூழ்கிக் கொண்டிருக்கையில் திரவ வாயுவை ஏற்றி வந்த ‘எல்என்ஜி பைனியர்’ரும் யப்பானிய மீன்பிடிப் படகில் வந்தவர்களும் மூழ்கிக் கொண்டிருந்த படகில் இருந்து 27 பேரைக் காப்பாற்றி உள்ளனர். ஏனையவர்கள் பற்றிய அச்சம் கவலையளிப்பதாக இவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே 39 பேர் பயணித்த படகிற்கு பின்னால் 59 பேருடன் சென்ற மற்றுமொரு படகு கோகோஸ் தீவுகளுக்கு அண்மையில் காணாமல் போயுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இவ்வாண்டு மட்டும் 30க்கும் மேற்பட்ட படகுகள் இந்தோனேசியக் கடற்படையினரால் தடுக்கப்பட்டு உள்ளனர். 2000 பேர்வரை தஞ்சம் கோரி உள்ளனர்.

அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்கு தங்கள் கதவுகளை அடைக்கின்ற போக்கு ஆண்டுக்கு ஆண்டு கடுமையாக்கப்பட்டு வருகின்றது. தஞ்சம் கோருபவர்களுக்கான கதவுகள் அடைக்கப்பட்டு வருவதால் தஞ்சம் கோருபவர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பயணத்தை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இந்தக் கதவடைப்பானது தமிழ் மக்களுக்கு மட்டுமான நடவடிக்கையாக இல்லாது போனாலும் இதனால் தமிழ் மக்கள் கணிசமான அளவில் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

2002ம் ஆண்டு கணிப்பின் படி உலகம் முழுவதும் 20 மில்லியன் மக்கள் கரிசனைக்குரிய மக்களாக கணிக்கப்படுகின்றனர். இவர்களில் 12 மில்லியன் பேர் அகதிகள். ஒரு மில்லியன் வரையானவர்கள் தஞ்சம் கோருபவர்கள் என்ற கணிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள அகதிகளில் மூன்றில் இரண்டு பங்கினரை உலகின் வறிய நாடுகளே பொறுப்பேற்றுள்ளன. உதாரணத்திற்கு 2002ல் 7 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட கினி 3 மில்லின் சியரலியோன் அகதிகளுக்கும் 150 000 லைபீரியன் அகதிகளுக்கும் இடமளித்தது. பாகிஸ்தானிலும் தன்சானியாவிலும் மாதாந்தம் அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை ஐரோப்பாவின் முழு ஆண்டுக்கும் வரும் அகதிகளின் எண்ணிக்கைக்கு ஒப்பிடக் கூடியது.

பிரித்தானியா உலகின் 2 வீதமான அகதிகளுக்கே அடைக்கலம் வழங்கி உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 300 பேருக்கு ஒருவர் என்ற அடிப்படையிலேயே அகதிகள் உள்வாங்கபட்டனர். 1000 மக்கள் தொகைக்கு பிரித்தானியா இருவரினதும், நோர்வே, சுவீடன் நால்வரினதும் சுவிஸ்லாந்து, அயர்லாந்து மூவரினதும் தஞ்ச விண்ணப்பங்களை ஏற்கின்றன. இத்தரவுகள் 2001 ம் ஆண்டுக்கு உரியவை. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை 50 வீதம் வரை குறைந்துள்ளது. தரவுகள் இவ்வாறு அமைய இந்நாடுகளைச் சேர்ந்த பொது மக்கள் மத்தியில் உலகின் 25 வீதமான அகதிகள் தங்கள் நாடுகளுக்கே வருவதாகக் கருதுகின்றனர். வலதுசாரி ஊடகங்களும் அரசியல் வாதிகளும் இவ்வாறான தவறான கருத்துக்களை பரப்பி அகதிகள் பற்றிய தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்த வழிகோலினர்.

இந்தப் பின்னணியிலேயே தற்போது அவுஸ்திரேலியாவில் விபத்துக்கு உள்ளான கப்பல் அகதிகளின் நிலையையும் இந்தோனேசியாவின் கடலில் தத்தளிக்கும் 260 அகதிகளையும் மற்றுமொரு முனையில் இந்தோனேசியாவில் தத்தளிக்கும் 76 அகதிகளையும் கனடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 78 அகதிகளின் நிலையையும் பார்க்க வேண்டும்.

2ம் உலகமகா யுத்தத்திற்குப் பின் தங்கள் பொருளாதார வளர்ச்சிக்காகவும் பனிப்போர் அரசியல் காரணங்களுக்காகவும் பின்னைய சூழலில், தங்கள் சனத்தொகை வீழச்சி அடைவதையும் தங்கள் வயதடையும் சனத்தொகையை சமப்படுத்தவும் தங்கள் எல்லைகளைத் திறந்துவிட்ட மேற்கு நாடுகள் பனிப்போர் முடிவுக்குப் பின் தங்கள் ஐரோப்பிய எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டன. தொண்ணூறுக்களின் பின் ஆண்டுக்கு ஆண்டு தங்கள் எல்லைகளை இறுக்கி வந்துள்ள மேற்கு நாடுகள் மெலனியத்தற்குப் பின் தங்கள் எல்லைகளை இறுக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கின. தங்கள் எல்லைகளை இறுக்குவதற்காக தங்களுடன் இணைந்துள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு வேண்டிய உதவிகளை வழங்கின.

இக்கடுமையான கட்டுப்பாடுகளையும் மீறி உயிரைப் பணயம் வைத்து மாண்டவர்கள் பலநூறு. அவ்வாறு மாண்ட தமிழர்களும் பலநூறு. கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பனிக் காடுகளுக்குள் பனிக்குள் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட தமிழ் உயிர்கள் பல. மேற்கு ஐரோப்பா நோக்கி வந்த ஐவர் பராகுவேயில் கைவிடப்பட்டு பனிக்குளிரில் சில தினங்கள் விடப்பட்டதால் அவர்களுடைய கால்கள் அழுகி அவை நீக்கப்பட வேண்டி ஏற்பட்டது. கொன்கிறீட் கலக்கும் வாகனத்தில் ஒழிந்து வந்தவர்கள் சிலர் எல்லைக் காவலாளி இயத்திரத்தை இயக்கிய போது மரணமடைந்தனர். பிரித்தானியாவின் வாயிலில் 58 சீனர்கள் மூச்சுத் தினறி இறந்த சம்பவம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள். இவ்வாறான கொள்கலன்களில் அடைக்கப்பட்டு பிரயாணத்தை மேற்கொண்ட பல தமிழர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உயிரிழந்துள்ளனர்.

தொண்ணுறுக்களின் நடுப்பகுதியில் இத்தாலிக் கடலில் இடம்பெற்ற விபத்து தமிழ் அகதிகளின் புலம்பெயர்வில் ஏற்பட்ட பெரும் விபத்து. இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இவ்விபத்தில் கொல்லப்பட்டனர். அவர்களில் இலங்கையர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். இத்தாலிக் கடலில் நின்ற கப்பலில் இருந்து படகுக்கு இறங்கும் பொழுது ஏற்பட்ட இவ்விபத்தில் படகு கவிழ்ந்து இவ்விபத்து நிகழ்ந்தது. கனடா கடல் பகுதியில் படகில் இறக்கப்பட்டவர்கள் நடுக்கடலில் சிக்கித் தவித்ததும் அதில் உயிரழந்தவருடன் படகு அகதிகள் காப்பாற்றப்பட்டதும் ‘வெல்கம் ரு கனடா’ என்று ஆவணமானது. எரித்திரியாவின் கடலில் வீழ்ந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஏழு பேர் இலங்கைத் தமிழ் அகதிகள். தற்போது அவுஸ்திரேலியாவில் ஒரு அவலம் நடந்துகொண்டுள்ளது. இவ்வாறு ஒரு சில சம்பவங்களை மட்டுமே நாம் அறிந்துள்ளோம். இவ்வாறு செய்தியாகாத பல சம்பவங்கள் உலகின் பல பாகங்களிலும் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் நீண்ட யுத்தம் காரணமாக இலங்கையின் தமிழ் மக்களின் சனத்தொகையில் மூன்றிலொருவர் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் மேற்கு நாடுகளை நோக்கிப் புறப்பட்டு தங்கள் இலக்குகளை அடையாமல் இன்னமும் உலகின் பல்வேறு பாகங்களில் சிக்குண்டு இருண்ட எதிர்காலத்துடன் உள்ளனர். தங்கள் இலக்குகளான மேற்குலகை வந்தடைந்தவர்கள் மட்டும் ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர் எனக் கொள்ள முடியாது என்றாலும் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான சூழலில் உள்ளனர். இவ்வாறு தங்கள் இலக்குகளை அடைய முடியாமல் உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழ்பவர்கள் பெரும்பாலும் மறக்கப்பட்ட மனிதர்களாகவே வாழ்கின்றனர். இவர்கள் யார் எங்கு உள்ளனர் என்பது யாருக்கும் தெரிவதில்லை. தெரிந்த கொள்ளவும் முயற்சிக்கப்படவில்லை.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள அகதி அமைப்புகள் மனித உரிமை அமைப்புகள் கூட எதற்காக ஆரம்பிக்கப்பட்டனவோ அதனைக் கைவிட்டு அரச உதவிகள் எதற்குக் கிட்டுமோ அந்த நடவடிக்கைகளை மட்டும் செய்து கொண்டிருக்கின்றன. பிரித்தானியாவில் உள்ள தமிழ் அகதிகள் நடவடிக்கைக்குழு தற்போது நீரிழி நோயைத் தடுப்பது பற்றியும் யோகாசனம் பற்றியும் தான் சொல்லிக் கொடுக்கின்றது. உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழ்ந்த போதும் கைவிட்பட்ட இவர்கள் பற்றிய எவ்வித கவனமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

இந்தோனேசியக் கடலில் அரசியல் தஞ்சம் கோரியவர்கள் தொடர்பில் தமிழ் ஒருங்கிணைப்பு மட்டுமே அவுஸ்திரேலிய தூதரலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழக்கக் கோரியது. அவுஸ்திரேலியா தமிழ் கொங்கிரஸ்ம் அதற்காக குரல் எழுப்பி வருகின்றது.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட பொழுது அதனைத் தடுத்து மனித அழிவையும் அவலத்தையும் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்காத மேற்குலகம் தற்பொழுது இலங்கை அரசு மனித உரிமைகளை மீறிவிட்டதாக அறிக்கை மேல் அறிக்கை வெளியிட்டு வருகின்றது. அதே இலங்கை அரசினால் மனித உரிமைகள் மீறப்பட்ட அகதிகள் 260 பேர் இந்தோனேசியக் கடலில் தவிக்கின்றனர். அந்த அகதிகளுக்கு எந்தவொரு மேற்கு நாடும் தஞ்சம் அளிக்க முன்வரவில்லை. கடந்த நான்கு வாரங்களாக நடுக்கடலில் தவிக்கும் இவர்களுக்கு தஞ்சம் வழங்கும்படி இந்த நாடுகள் அவுஸ்திரேலிய அரசை வலியுறுத்தவும் இல்லை. மறுமுனையில் கனடாவில் தஞ்சம் கோரியவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மேற்குலகின் மனித உரிமைக் கோசங்கள் அவர்களின் அரசியல் சதுரங்கத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது என்பதற்கு ஆய்வுகள் அவசியமற்றது.

அவுஸ்திரேலியாவின் எல்லையில் மூன்று அவலங்கள் இடம்பெற்றுக் கொண்டுள்ளது.

ஒன்று: அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவில் நவம்பர் 1ல் கப்பல் மூழ்கி பயணித்தவர்கள் மரணமுற்றிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அவுஸ்திரேலிய கடல் பாதுகாப்பு ஆணையம் – அம்சா வுக்கு ஞாயிறு காலை அவல அழைப்பு விடுக்கபட்டது. அழைப்பு விடுக்கப்பட்டு ஒன்பது மணிநேரத்திற்குப்பின்னரே ஜப்பானிய மீன்டிபிடிப் படகு சம்பவ இடத்தை அடைந்துள்ளது. அதற்குப் பின் பல மணி நேரங்களுக்குப் பின் திரவ வாயுவை ஏற்றும் எல்என்ஜி பைனியர் அவ்விடத்தை அடைந்தது. ஆனால் அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எல்என்ஜி பைனியர் மூழ்கிக் கொண்டிருந்த படகைக் காணும் தூரத்திலேயே நின்றதாக செய்தி வெளியிட்டு உள்ளது. ஆனால் அவுஸ்திரேலிய சுங்கத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளது.

இரண்டு: ஒக்ரோபர் 18ல் இந்தோனேசிய அவுஸ்திரேலிய சர்வதேசக் கடலில் தவித்துக் கொண்டிருந்தவர்கள் அவுஸ்திரேலியாவின் ஓசானிக் வைக்கிங் கப்பலால் காப்பாற்றப்பட்டு இந்தோனேசியாவின் யாவா தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்பகுதி மாகாண ஆளுநர் இந்தோனேசியா தஞ்சம் கோருவோரைக் கொட்டும் இடமல்ல என அவர்களைத் தரையிறக்க மறுத்துவிட்டார். பின்னர் காப்பாற்றப்பட்டவர்கள் பின்ரன் தீவுக்கு கொண்டுவரப்பட்டனர். தற்போது அவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்க மறுத்து வருகின்றனர். அவர்கள் தங்களை அவுஸ்திரெலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லும்படி கோருகின்றனர். ஆனால் தஞ்சம் கோருபவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாது என அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மூன்று: அவுஸ்திரேலியாவை நோக்கிப் புறப்பட்ட 260 பேர் கொண்ட கப்பல் இந்தோனேசியப் பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க சர்வதேசக் கடல் எல்லையில் வைத்து இந்தோனேசிய கடற்படையினரால் தடுக்கப்பட்டு மேர்க் துறைமுகத்தில் ஒக்ரோபர் 10 முதல் தடுத்து வைக்கப்பட்டு உள்ளது. அதில் உள்ளவர்கள் தங்களுக்கு அடைக்கலம் வழங்குமாறு அவுஸ்திரேலியாவை கோரி வருகின்றனர். அவர்கள் இந்தோனேசியாவில் தரையிறங்க மறுக்கின்றனர்.

ஆனால் அவுஸ்திரேலிய அரசியல் களம் தஞ்சம் தொடர்பில் யார் கடும்போக்கானவர்கள் என்ற போட்டியில் இறங்கி உள்ளது. அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியின் முன் வரிசை உறுப்பினர் ரொனி அபோர்ட் குடிவரவு தொடர்பில் அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் றொட் மேற்கொண்ட மென் போக்கே இவற்றுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டி உள்ளார்.

ரொனி அபோட் மேலும் தெரிவிக்கையில் இந்தோனேசியாவில் உள்ள கப்பல் அகதிகளை இந்தோனேசியா ஏற்காத பட்சத்தில் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுவரப்பட்டு வழமையான குடிவரவு விதிகளுக்கு அமைய நடத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். குடிவரவு கொள்ளையை இறக்கமாக்குவதற்குப் பதில் தளர்த்தியதால் அவுஸ்திரேலியா நோக்கி படகு அகதிகள் கவரப்படுவதாகவும் அவர் தன் குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார்.

அவர் தன் குற்றச்சாட்டை அத்துடன் நிறுத்தவில்லை அவ்வகதிகள் கிறிஸ்மஸ் தீவுகளுக்க கொண்டுவரப்பட்டால் அது அகதிகளை நாடுகடத்தலில் ஈடுபடுவோருக்குக் கிடைக்கும் வெற்றியாகும் என்றும் அது அவுஸ்திரேலியப் பிரதமர் கெவின் றொட்டின் கொள்கைகளுக்கு கிடைக்கும் தோல்வி என்றும் தெரிவித்தார்.

கடந்த நான்கு வாரத்தில் இடம்பெற்றுள்ள இந்த மூன்று சம்பவங்களும் இந்தோனேசிய – அவுஸ்திரேலிய அரசுகளின் தஞ்சம் தொடர்பான கடும்போக்குகளை அம்பலப்படுத்தி உள்ளது. அவுஸ்திரேலிய அரசு தஞ்சம் கோருபவர்களை தனது கரைகளில் இறங்கவிடாது இந்தோனேசிய கடற்படையினரைக் கொண்டு தடுத்து வைக்கின்றது. இவற்றைவிட இவ்வாண்டு இவ்வாறான 30க்கும் மேற்பட்ட படகுகள் இந்தோனேசிய கடற்படையினரால் தடுக்கப்பட்டு உள்ளனர். அவுஸ்திரேலிய இந்தோனேசிய அரசுகளுக்கு இடையேயான உடன்பாட்டின் படி தஞ்சம் கோருவோரை இந்தோனேசியாவில் வைத்துப் பராமரிப்பதன் மூலம் தனது கையைக் கழுவிக்கொள்கின்றது அவுஸ்திரேலியா. இந்தோனிசிய அதிகாரிகள் தஞ்சம் கோருவோரை அடிப்பதாகவும் அவர்களுக்கு சுத்தமான குடிநீரை மருத்துவ வசதிகளை வழங்குவதில்லை அவர்கள் மோசமான நிலையில் உள்ளனர் என்றும் அவுஸ்திரேலிய சட்டத்தரனியும் அகதிகளுக்காகக் குரல் கொடுப்பவருமான ஜெசி ரெய்லர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அகதி நிலைதொடர்பான மேலதிக பேச்சுவார்த்தைகளை அவுஸ்திரேலிய – இந்தோனேசியப் பிரதமர்கள் நவம்பரில் மேற்கொள்ள உள்ளனர். சிங்கப்பூரில் இன்னும் சில தினங்களில் நவம்பர் 8ல் சிங்கப்பூரில் இடம்பெவுள்ள ஏபெக் மாநாட்டிலும் அதன் பின் அவுஸ்திரேலியாவில் நவம்பர் 18 – 19ல் நடைபெறவுள்ள சந்திப்பிலும் இவ்வகதிகள் விடயம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அகதிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் ‘இந்தோனேசியத் தீர்வு’ எவ்வளவுதூரம் தீர்வாக அமையும் என்ற சந்தேகங்கள் ஏற்கனவே கிளம்பி உள்ளது.

தமிழக முகாம்களில் நலிந்து வாழும் ஈழத்தமிழருக்கு என்னென்ன செய்ய வேண்டும்! : மறவன்புலவு க சச்சிதானந்தன்

Refugee_Camp_Mandapam1.0 கள நிலை

1.1 அகதிகளாக வாழும் காலப் பகுதி 26 ஆண்டுகள் (1983-2009)

1.2 முகாம்களின் எண்ணிக்கை: 26 மாவட்டங்களில் 115.

1.3 முகாம்களுள் வாழ்வோர் தொகை: 19,340 குடும்பங்களைச் சேர்ந்த 73,241 பேர். (2.11.2009)

1.4 முகாம்களுக்கு வெளியே 11,288 குடும்பங்களைச் சேர்ந்த 31,802 பேர். (2.11.2009).

1.5 காவல்துறையில் பதிவுபெற்ற ஏறத்தாழ 100,000 பேர் வாடகைக் குடியிருப்புகளில் தமிழகமெங்கும். 

1.4 யாவரும் ஈழத் தமிழர். 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் சிங்கள இன வெறித் தாக்குதல்களால் உயிரச்சம் மேவத் தப்பி வந்தவர்கள்.

1.5 இன்றுள்ள இலங்கை அரசியல் சூழ்நிலை தொடருமானால், அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தாமாக இவர்கள் இலங்கைக்குத் திரும்பும் வாய்ப்பே இல்லை.

2.0 வாழ் தகுதி

2.1 இவர்களுட் பலரிடம் முகாம் பதிவு அட்டை உண்டு. பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், இலங்கையில் வாழ்ந்ததற்கான சான்றிதழ் என எதுவும் இல்லை. ஆதாரச் சான்றிதழ் கோரும் விதிகளைப் புறந்தள்ளி, கட்டணம் எதுவும் கேட்காமல், முகாம் பதிவு அட்டையைச் சான்றாகக் கொண்டு இவர்களுக்கு உடனடியாக 5 அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும். அனைத்துலகப் பயண இலங்கைக் கடவுச் சீட்டை (Sri Lankan passport valid for 10 years for all countries) சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் வழங்க வேண்டும். இந்திய நடுவண் அரசு இதை இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

2.2 முகாம் வழங்கிய அட்டையைச் சான்றாகக் கொண்டு, அகதியாக வந்து சேர்ந்த நாள், பிறந்த நாள், பிறப்பிட முகவரி ஆகிய விவரங்களுடன் 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் நிலையான வதிவுரிமை அட்டையை (Permanent Resident Card), இந்திய நடுவண் அரசு வழங்கவேண்டும். வாக்குரிமை, பெருந்தோட்ட நிலங்களையும் வேளாண் நிலங்களையும் மட்டும் விலைக்கு வாங்கும் சொத்துரிமை ஆகிய உரிமைகள் தவிர்ந்த அனைத்து உரிமைகளையும் கொண்ட தகுதியை இந்த அட்டை வழங்கும். இப்பொழுதுள்ள இந்தியச் சட்டங்களுள் இந்த அட்டையை வழங்கலாம். ஏற்கனவே இந்திய அரசு இத்தகைய அட்டைகளை (PIO), இதே உரிமைகளுடன் வெளிநாடு வாழ் இந்தியருக்கு வழங்கி வருகிறது.

2.3 முகாம்களிலுள்ள ஈழத் தமிழர், இலங்கைக் கடவுச் சீட்டுடன் இலங்கை தவிர்ந்த பிறநாடுகளுக்குப் பயணம் செய்தபின், நிலையான வதிவுரிமை அட்டை இருப்பதால் இந்தியாவுக்கு மீளலாம். புகலிடம் கொடுக்கும் பல நாடுகள் தம்மிடம் வரும் அகதிகளுக்கு இந்த வசதியைக் கொடுத்து வருகின்றன.

2.4 காவல்துறைப் பதிவுமுறையில் மாற்றம் கொணர்ந்து, புகைப்படம் ஒட்டிய காவல்துறைப் பதிவு அட்டையை வழங்க வேண்டும். பதிவுக்கு விண்ணப்பித்த ஒரு வாரத்துள் தகுதியெனில் காவல்துறைப் பதிவட்டை வழங்கும் நடைமுறை வேண்டும்.

3.0 வாழ்விடம் (கூழும் கூறையும் கூரையும்)

3.1 இந்த 30,000 குடும்பங்களுட் பலர், கடந்த 26 ஆண்டுகளாக முகாம்களுக்குள் வாழ்கின்றார்கள். இவர்களுக்கு அரச நிலங்களில் (சமத்துவபுரங்கள் போலக்) குடியிருப்புகள் அமைத்து, கழிவறை, குழாய் நீர், மின்சாரம், சமையல் வாயு இணைப்பு உள்ள 35,000 இரண்டு அறைக் கல்வீடுகளைக் கட்டிக் கொடுத்துக் குடியமர்த்தவேண்டும். இதற்காக ஐநாஅகதி ஆணையரிடம் (UNHCR) கேட்டாலோ, புலம்பெயர் ஈழத் தமிழரிடம் கேட்டாலோ நிதி கிடைக்கும். இத்தகைய வாழ்விட வசதிகள் அமையும் கால எல்லையாக 2010 ஆனி அமைய வேண்டும்.

3.2 அடைக்கலம் கேட்டுப் புதிதாக வருவோரும் 6 மாதங்களுக்கு மேல் முகாம்களுள் வாழாது இத்தகைய குடியிருப்புகளுக்கு மாறிவிடவேண்டும்.

3.3 நிலையான வதிவுரிமை அட்டையுள்ளோருக்குக் குடும்பப் பங்கீட்டு அட்டைகள் (Family ration card) வழங்க வேண்டும். அணித்தாக உள்ள பொதுவிநியோகக் கூடத்தில் (PDS Shop) பங்கீட்டு உணவுப் பொருள்களைக் குடியிருப்பாளர்களே காசு கொடுத்து வாங்குவர்.

3.4 குடியிருப்புகளுக்குப் போனபின்பு அடுத்த ஓராண்டு காலத்து, அரசு இப்பொழுது வழங்கி வரும் மானியத் தொகை (2.11.2009இல் குடும்பத் தலைவருக்கு ரூ. 400, குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு ஏற்ற தொகை) அக்கால விலைவாசிக்கு ஏற்பத் தொடர்ந்து வழங்க வேண்டும்.

3.4 பங்கீட்டு அட்டைகள் வைத்திருப் போருக்கான நலத்திட்ட வழங்கல்கள், (இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி போன்றவை) இவர்களுக்கும் கிடைக்க வேண்டும்

4.0 தொழில்

4.1 நிலையான வதிவுரிமை அட்டை உள்ளோர் தத்தம் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புப் பெறும் சுதந்திரம் வேண்டும். இந்த வசதியை அனைத்து வெளிநாட்டவருக்கு இந்திய அரசு இப்பொழுது வழங்கியுள்ளது. இதற்கெனப் புதிய விதிகள் தேவையில்லை.

4.2 தத்தம் திறமை, அநுபவம், முதலீட்டு வலிமை கொண்டோர், தொழில் தொடங்கவும், குறுகிய கால முதலீட்டு மற்றும் செலவாக்க வங்கிக் கடன் பெறவும் சுதந்திரம் வேண்டும். இதற்கெனவும் புதிய விதிகள் தேவையில்லை.

4.3 தனி ஆற்றலருக்கு வாகன ஓட்டுநர் உரிமம் போன்ற ஆற்றலுரிமங்கள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இருக்கும் விதிகளுள் வழங்கலாம்.

4.4 தொழில் தொடங்குவோருக்கு அரச நிலங்களைக் குத்தகைக்கு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

4.5 தொழில் முனைவோர் பயிலரங்குகள், சிறுதொழில் தொடங்க ஊக்குவிப்புகள், மகளிர் சுய உதவிக்குழுக்களாதல் போன்ற சுய முன்னேற்ற வழிகாட்டல்கள் வேண்டும்.

5.0 கல்வி

5.1 மழலையர் வகுப்புத் தொடக்கம் உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரையும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டம், மற்றும் முதுநிலைப் பட்டம் வரையும் இதுவரை காலமும் இருந்த சிறந்த அணுகுமுறை தொடரவேண்டும்.

5.2 பலதொழினுட்பப் பயில் நிலையங்களுக்கும் (polytechnic) இந்த அணுகுமுறையை நீட்டவேண்டும்.

5.3 1983இல் தொடங்கிய தொழிற்கல்வி (professional courses) அனுமதிக்கான இட ஒதுக்கீடுஇ 1991இல் தடையாகிப் பின்னர் 1996இல் மீளமைந்து, 2000களில் நீதிமன்றத் தீர்ப்பால் முடங்கியது. இந்திய நடுவண் அரசு ஒதுக்கீடாக அமைய வேண்டும் என்றதால் தேங்கி நிற்கிறது. இந்திய நடுவண் அரசின் அயலுறவுத் துறையின் மாணவர் பகுதியே (Students cell of the Minstry of External Affairs located at Shahstri Bavan, New Delhi) வெளிநாட்டு மாணவருக்கு இட ஒதுக்கீடு செயுமிடமாகும். அப்பகுதியினரே, வெளிநாட்டுவாழ் இந்தியருக்கான (NRI) ஒதுக்கீடுகளைச் செய்வோர்கள். மருத்துவக் கல்விக்கு 30, பொறியியல் கல்விக்கு 60, வேளாண் கல்விக்கு 40, விலங்கு மருத்துவக் கல்விக்கு 20, மீன்வளக் கல்விக்கு 10, சட்டக் கல்விக்கு 20 என இட ஒதுக்கீடுகளை அப்பகுதியினர் வழங்குமாறும் 2010 கல்வியாண்டில் நடைமுறைக்கு வருமாறும் இப்பொழுதிருந்தே முயலவேண்டும். புதிய விதிகள் எதுவும் இயற்றத் தேவை இல்லை.

5.4 உயிரச்சத்தால் தப்பி வருவோர் புகலிடம் தேடுகையில் பிறப்பு, பள்ளிமாற்ற, கல்வித் தராதரச் சான்றிதழ்களுடன் பயணிக்கார். இத்தகையோரிடம் சான்றிதழ் கோருவது மனித நேயமல்ல. முடிந்தவரை சான்றிதழ் பெறக் கோரலாம். முடியாதவிடத்து உறுதிச் சான்றிதழ் (Affidavit) பெற்றுக் கல்விநிலையங்களில் அனுமதிக்கலாம். இதற்கான அரச ஆணை தேவை.

5.5 ஈழத்தமிழர் அகதி மாணவர் புலமைப் பரிசில் நிதியத்தைத் (முதலமைச்சர் நிவாரண நிதியம் போன்றாதாக) தமிழக அரசு தொடங்கி. அரசு நிதி ஒதுக்கியும். புரவலர்களிடம் நிதிபெற்றும், வசதி குறைந்த மாணவருக்குக் கல்விக் கட்டணம், விடுதிக்கட்டணம் போன்ற செலவுகளுக்கு வழங்க வேண்டும்.

5.6 பட்ட மற்றும் பட்டமேற்படிப்பு மாணவருக்கு வங்கிக்கடன் வழங்கலாம் என்ற திட்டத்தையும் எடுத்து நோக்க வேண்டும்.

6.0 மருத்துவம்

6.1 கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துள் இந்த 31,000 குடும்பங்களுக்கும் மருத்துவ வசதிகிடைக்க வேண்டும்.