சோதிலிங்கம் ரி

சோதிலிங்கம் ரி

இன்று வதிவிட அனுமதி வழங்குமாறு பிரான்ஸ் அரசை கோரி ஆர்பாட்ட ஊர்வலம்.

No_One_Is_Illegalபிரான்சில் வாழும் வதிவிட அனுமதி அற்ற அனைத்து மக்களுக்கும் வதிவிட அனுமதி வழங்குமாறு பிரான்ஸ் அரசை கோரி ஆர்பாட்ட ஊர்வலம் இன்று சனிக்கிழமை (14.03.2009) அன்று பிற்பகல் 14.00மணிக்கு பாரிசில் மெற்றோ Barbés Rochchouart முன்றலில் நடைபெற இருக்கிறது.

இவ் ஊர்வலத்தை 9வது கொலற்றீவ் (9ème COLLECTIF ) அமைப்பினரும் சமூகப்பாதுகாப்பு அமைப்பினரும் ( Comité de Défense Social) சேர்ந்து ஒழுங்கு படுத்தியுள்ளனர். எனவே பிரான்சில் வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட அனைவரையும் மற்றும் சக அக்கறையாளர்களையும் இவ் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொள்ளுமாறு தோழமையோடு அழைக்கிறார்கள் .

அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் கரிசனையும் அக்கறையும் கொண்டு செயற்பாட்டுத்தளத்தில் இயங்கும் சமூகப்பாதுகாப்பு அமைப்பினர் சென்ற ஞாயிறு (07.03.2009) இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை பாரிசில் நடத்தினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ் ஊர்வலத்தில் வதிவிட அனுமதியற்ற இலங்கை மக்களுக்கு பிரான்சில் வதிவிட அனுமதி வழங்கவேண்டுமென்ற கோசத்தையும் முன்வைத்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னி மக்களுக்கான தமிழக மக்களின் போராட்டமும் தமிழக அரசியலும். – CWI உறுப்பினர் சேனனுடன் உரையாடல் : ரி சோதிலிங்கம்

Protest_TamilNaduயுத்தப் பொறிக்குள் சிக்குண்ட மரணத்தின் விளிம்பில் நிறுத்தப்பட்டுள்ள வன்னி மக்களுக்காக தமிழக மக்கள் பெரும் உணர்சிப் போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர். இந்த உணர்ச்சிப் போராட்டங்கள் பல்வேறு அரசியல் சக்திகளாலும் தமது அரசியல் நோக்கங்களுக்காகக் கையாளப்படுகின்ற நிலையும் அங்கு மிகுதியாகவே உள்ளது. இக்காலப்பகுதியில் நண்பர் சேனன் பெப்ரவரி நடுப்பகுதியில் தனது கட்சி நடவடிக்கைகள் தொடர்பாக தமிழகம் சென்றிருந்தார். வன்னி மக்களுக்காக தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் உணர்ச்சிப் போராட்டங்கள் பற்றியும் தமிழக மற்றும் இந்திய அரசியலில் அது ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் நண்பர் சேனனுடன் அவர் தமிழகத்தில் இருந்த போது தொலைபேசியில் பதிவு செய்யப்பட்ட உரையாடலின் தொகுப்பு.

தேசம்நெற்: CWI – Committe for Workers International உறுப்பினரான உங்களுடைய இந்திய பயணத்தின் நோக்கம்?

சேனன்: இலங்கையில் 2லட்சம் மக்களளின் அவல நிலையை ஒட்டி உலகெங்கும் பேரெழுச்சிகள் நடைபெறுகின்றன. இத்தருணத்தில்CWI அந்தந்த நாடுகளில் இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தலில் ஈடுபட்டது.

இங்கிலாந்திலும் 100 000 மக்கள் எதிர்ப்பு ஊர்வலம் நடாத்தியபோது CWI  யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்! வன்னி மக்களுக்கான  உதவிகள் வழங்கப்பட வேண்டும்! ஒன்றுபட்ட தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியின் அவசியத்தை முன்னிறுத்திய கோட்பாடுகளை முன்வைத்து ஊர்வலத்தில் பங்கெடுத்தது. அதில் கலந்துகொண்ட மக்களின்  நிறைய ஆதரவும் கிடைத்தது.

இதன் தொடர்ச்சியாக 2 லட்சம் மக்கள் கொலையை எதிர்நோக்கியிருக்கும் நிலையில் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து CWI பிரச்சாரங்களை செய்ய முற்பட்டுள்ளது. இம்முயற்சியை முன்னெடுக்க தமிழ்நாடு சார்ந்து தான் முன்னெடுப்பு செய்ய வேண்டும் அதேநேரத்தில் தமிழ்நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒன்றிணைத்து இந்த பிரச்சார வேலைகளை ஆரம்பிக்க CWI கடமைகளுக்காக தமிழ்நாட்டுக்கு வந்தேன்.

தேசம்நெற்: தமிழக அரசியல் கட்சிகள் இந்த உணர்வை எவ்வாறு கையாளுகின்றன?

சேனன்: தமிழகத்தில் உள்ள  மோசமான வலதுசாரி கட்சிகளாக திமுக, அதிமுக, காங்கிரஸ் இவர்களுடன் சிபிஜ. தா. பாண்டியனும் பாரதிராஜா தமிழ்நாட்டு அனைத்து கட்சிகளும் போர் நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று சொல்வது நல்ல விடயம். ஆனால் அத்துடன்  அவர்கள் நிறுத்திக் கொள்ள முடியாமல் உள்ளது. இவர்கள் இப்படிப் பேசுவது தங்களுடைய கட்சி சார்ந்த விடயங்களுக்காக மட்டும்தான்.

இன்று கருணாநிதி ஆட்சியில் இருப்பதால் இது இவ்வளவு நடக்கிறது என்று சொல்கிறார்கள். அது தவறு. கருணாநிதி இந்த எழுச்சியை எந்தளவு கட்டுப்படுத்த முடியுமோ அந்தளவு மிகக் கெட்டித்தனமாக கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

உதாரணமாக முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபின்  ஏற்பட்ட மாணவர் போராட்ட எழுச்சியை கட்டுப்படுத்த அனைத்து கல்லூரிகளும்  மூடப்பட்டது. மாணவர்கள் ஏதாவது மோசமாக நடந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்து கல்லூரிகள் மூடப்பட்டது. இது மாணவர் எழுச்சியை அடக்கவே செய்யப்பட்டது. தொடர்ந்து மாணவர் போராட்டங்கள் அடக்கப்படுகின்றது. சில தினங்களுக்கு முன்பு இலங்கைப் பிரச்சினை பற்றிய துண்டுப் பிரசுரங்கள் கொடுத்துக் கொண்டிருந்த மாணவர்கள் தாக்கப்பட்டு கைதுசெய்யப் பட்டார்கள்.

அதே போல லோயலா, பச்சயப்பன் கல்லூரி மாணவர்களும் தாக்கப்பட்டனர். அவற்றிற்கும் மேலாக இலங்கை இனப்பிரச்சனை பற்றி ஈடுபட வேண்டாம், துண்டுப் பிரசுரங்கள் கொடுக்க போக வேண்டாம் என இமெயில்கள் அனுப்பபபடுகின்றன. இதேபோல பல்வேறு தளங்களில் மாணவர் போராட்டங்கள் கட்டுப்படுத்தப் படுகிறது.

இலங்கைப் பிரச்சினைபற்றி பேசிய சட்டத்தரணிகளுக்கு என்ன நடந்தது என்பது உலகறிந்த விடயம். அவர்களது போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்பதற்காக ஒருபோக்கிரித்தனமான பார்ப்பண அரசியல் செய்யும் சுப்பிரமணியசுவாமியை பிரயோகித்து ஒரு பிரச்சினையை உருவாக்கி தமிழ்நாட்டு பொலிசாரால் சட்டத்தரணிகள் மிக மோசமாக வரலாற்றில் என்றுமே நடக்காத ஒருவிடயத்தை மேற்கொண்டனர். இப்படியான தாக்குதல்கள் மேலும் தொடர்கிறது. அதற்கு முன்பும் தேனாம்பேட்டையில் ஒரு வழக்கறிஞர் தாக்கப்பட்டு மிகவும் மோசமான காயங்களுக்குள்ளானார்.
 
எங்கெங்கு போராட்டங்கள் நடக்கின்றனவோ அங்கங்கு அதிகாரிகள் நின்று நிலைமைகள் கட்டுப்படுத்தப் படுகிறது. மற்றப் பக்கத்தில் இது மக்களை சாந்தப்படுத்தவே தாங்களே தமது கட்சிசார்ந்த  நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம், ஜெயலலிதா உண்ணாவிரதம், பிறகு கருணாநிதி உண்ணாவிரதம் இருக்கிறார். தாங்கள் குரல் கொடுக்காமல் இருந்தால் நிலைமைகளை மீறி மக்கள் வெடித்தெழும் சாத்தியக்கூறுகள் உண்டு என்பதால் இதை சமாளிக்கவே முயற்ச்சிக்கிறார்கள்;.

திமுக ஒரு மனிதச் சங்கிலிப் போராட்டம் நடாத்தினால் 2000-3000 பேர்தான் கலந்துகொள்கிற நிலமையுண்டு. யாரும் இவர்களை நம்பத் தயாராயில்லை. யாரும் இவர்களை நம்பி ஈடுபடத் தயாராயில்லை. இவர்களது நாடகம் மிக மோசமாகியுள்ளது. இந்த நாடகம் பற்றி எமது CWI தோழர் ஜெயசூரியா பலமாக பேச்சை எழுப்பியுள்ளார்.

இதைவிட இவர்கள் தனித்தனியான கூட்டமைப்புகள் வைத்து நாடகம் ஆடுகிறார்கள். அதுமட்டுமல்ல நெடுமாறன் ஒரு கூட்டமைப்பு. மிகமோசமான தமிழ்த் தேசியம் பேசியவர் இன்று பார்ப்பண ஆதிக்க சக்திகளுடன் இணைந்து செயற்பட தயாராகவுள்ளார். இவர் இந்த அரசியல் சகதிக்குள் நன்றாக பந்தாடப்படுகிறார்.

அரசியல் கட்சிசாராமல் யாரும் யுத்த நிறுத்த கோரிக்கையை முன்வைப்பதில்லை. எல்லோரும் அடுத்த இருமாதத்தில் நடக்கவிருக்கும் தேர்தலை நோக்கியே இந்நாடகங்களை நடத்துகிறார்கள்.

தேசம்நெற்: இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான உணர்வலைகள் தமிழகத்தில் மேலொங்கி உள்ளது. அவர்களுடைய இந்த உணர்வு பற்றி…..?

இன்று தமிழ் நாட்டில் ஊடகங்களே பலவிடயங்களை நடாத்திச் செல்கிறது. அது பரவலாக எந்த நாடுகளிலும் இப்படித்தான் என்றாலும் தமிழ்நாட்டு ஊடகங்களைப் பார்த்தால் இலங்கைச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதேயில்லை. அதில் அக்கறையேயில்லை.  மாறாக கட்சி சார்ந்த ஊடகங்கள் மக்கள் தொலைக்காட்சிகள் சிறு பத்திரிகைகளே இலங்கை பற்றிய செய்தியை எடுத்துச் செல்லும் ஊடகங்களாக இன்று உள்ளன. இவை யாவற்றையும் மீறி இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவது சம்பந்தமான உணர்வு எல்லாத் தமிழகத் தமிழர்களிடமும் உள்ளது.

இந்த உணர்வலைகள் புலிகளுக்கு ஆதரவாகவோ அன்றி சிங்கள மக்களுக்கு எதிராக வெளிப்படுத்தும் நிலைமைக்கும் அப்பால் தமிழர்கள் வன்னியில் உள்ள மக்கள் கொல்லப்படக் கூடாது என்ற உணர்வு எல்லா மக்களுக்கும் உண்டு. இந்த தமிழர்களுக்கான உணர்வலைகளுக்குத்தான் காங்கிரஸ் உட்பட எல்லோரும் இன்று பயப்படுகிறார்கள். முத்துக்குமார் இறந்த பின்பு ஒரு குறுகிய கால இடைவெளிக்குள் பெருந்தொகையான மக்கள் ஒன்றுதிரண்டது ஒரு முக்கிய புள்ளியாகிவிட்டது. இது பின்னர் இங்கு தமிழ் நாட்டில் நடக்கும் போராட்டங்கள் பற்றி பேசும்போது முத்துக்குமாருக்கு முன்பு முத்துக்குமாருக்கு பின்பு என்ற காலக்குறியீட்டுடன் பேசுமளவுக்கு அந்த நிகழ்வு மிக குறுகிய கால இடைவெளியில் ஏற்பட்டுள்ளது. இபபடியான இவ்வுணர்வுகள் இப்படி மிகவிரைவாக பலமாக வெடிக்கும் என்ற பயம் எல்லா கட்சிகளுக்கும் ஏற்ப்பட்டுள்ளது. 

தேசம்நெற்: இந்திய மற்றும் தமிழக ஊடகங்கள் இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினையை எவ்வாறு பார்க்கின்றனர்?

சேனன்: இன்று இலங்கையில் நடைபெறும் பிரச்சினைகளை பேசுவதற்கு ஒரு பொதுப்படையான கருத்தாக்கத்தை வைத்துக் கொண்டு செய்ய வேண்டிய விடயம் ஒன்று மட்டும்தான். 2 லட்சத்திற்கு மேற்ப்பட்ட மக்கள் சுத்தி வளைக்கப்பட்டு யுத்தத்தில் அகப்பட்டுக் கொண்டுள்ளார்கள் என்ற விடயத்தை மீறி வேறு எந்த விதமான விடயத்தையும் நம்ப முடியாத சூழ்நிலைதான் ஏற்ப்பட்டுள்ளது. ஏனெனில் வெளிவரும் எல்லா செய்திகளும் ஏதோ ஒரு பக்கச்சார்பாகவே வெளிவருகிறது. ஏனெனில் வன்னியில் சுயாதீன செய்தியாளர்களும் இல்லை. சுயாதீன செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவுமில்லை.

தமிழ் நாட்டில் ஊடகங்கள் தமது சொந்த லாபம் கருதி (சில தேசிய கட்சிகள் சார்ந்த ஊடகங்களும்) மிகவும் மோசமான முறையில் இயற்றி இயற்றி பல்வேறு இயற்றல்களை பேசிக் கொண்டு இருக்கிறார்கள், அதேமாதிரி மற்றய ஊடகங்கள் கண்டு கொள்வதேயில்லை. முக்கியமாக வலது சாரி ஊடகங்கள், கண்டு கொள்வதேயில்லை.

இலங்கைத் தமிழர் பற்றிய விடயத்தில் பொதுவான உரையாடலை நடாத்த உண்மையை ஆராய்வு செய்யும் நோக்கம் எந்த ஊடகங்களுக்கும் கிடையாது.

தேசம்நெற்: ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் போராட்டத்தை முன்னெடுக்கின்ற விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புப் பற்றியும் அதன் தலைவர் திருமாவளவன் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?

சேனன்: ஒடுக்கப்பட்ட மக்களே தமிழர்க்காக குரல் கொடுக்கிறார்கள். சென்னையில் ஏசி கார்களில் திரிபவர்கள் இதை பற்றி கவலைப்படுவதே இல்லை. பெரிய உத்தியோகத்தவர்கள் மத்தியதர வர்க்கம் இவர்களுக்கும் இது பற்றி கவலையே இல்லை. அவர்கள் தனித்துவமான வாழ்க்கையுடன் இருக்கிறார்கள். இன்றும் இலங்கைத் தமிழர்க்காக குரல் கொடுப்பவர்கள் ஒடுக்கப்படும் மக்களே தான்.

அது இருக்க அவர்களை பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லிக் கொள்ளும் கட்சிகள் விடுதலைச் சிறுத்தைகள் திருமாமளவன் போன்றோர் ஒடுக்கப்படும் மக்களின் மேல் இருந்து சவாரி தான் செய்கிறார்கள். வெறும் உதட்டு உதவி மட்டுமேதான் செய்கிறார்கள். இவர்களுக்கு இந்த பிரச்சினையை சரியான வழியில் எடுத்துச் செல்லும் நோக்கம் இல்லை. அடுத்த தேர்தலை நோக்கியே அவர்களது கவனம் உள்ளது.

முக்கியமாக திருமாவளவனைப் பொறுத்த வரையில் அவருக்கு தமிழர்க்கு தீர்வு தமிழீழத்தை தவிர வேறு இல்லை என்ற அடிப்படையில் பேசுகிறார். தான் இதை தேர்தலுக்காக பேசவில்லை என்றும் அடிக்கடி சொல்லிக் கொள்கிறார். ஆனால் இவர்கள் எல்லோரிடமும் தேர்தல் கூட்டணியை நோக்கிய செயல்களே பின்னணியில் இருப்பது அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அதுமட்டுமல்ல இனவாதிகளுடனும் பார்ப்பணியத்துடனும் இணைந்து செயற்ப்படும் நிலைக்கும் வந்துள்ளார்கள். இது மிக மோசமானதே என்பது எமது கருத்து.

தேசம்நெற்: தீக்குளிப்பு பற்றி தமிழகத்தில் உள்ள மக்களின் நிலைப்பாடுகள் எப்படி உள்ளது?

சேனன்: தமிழகத்தில் முத்துக்குமாருடைய தீக்குளிப்பு தனியாக பார்க்கப்பட வேண்டிய கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. முன்பு தமிழகத்தில் கட்சி உறுப்பினர்கள் கட்சித் தோழர்கள் தீக்குளிப்பார்கள். காசு கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த தீக்குளிப்பு வரலாறு நீண்ட வரலாறு. கரும் புலிகள் உருவான காலத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்த வரலாறு. அது ஒரு கலாச்சார ரீதியாகவும் பார்க்க்க கூடியது. அதைபின்பு பார்ப்போம்.

முத்துக்குமாருடைய தீக்குளிப்பு வலதுசாரிகள் இடதுசாரிகள் யாரும் கொச்சைப்படுத்திப் பார்ப்பதில்லை. காரணம் இன்றைக்கு இங்கே ஒரு இயலாமை என்று ஒன்று உள்ளதை எல்லோரும் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

முத்துக் குமாருடைய கடிதம் எழுதப்பட்டது யாரால்? எப்படி எழுதப்பட்டது? என்பது வேறுவிடயம். அதற்கு அப்பால் அக்கடிதம் தமிழ்நாட்டு அரசுக்கு எதிராகவும் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரங்களுக்கு எதிராவும் அதைப் பார்க்கலாம். எல்லோரும் கைவிட்ட நிலையில் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி. தனி ஒரு மனிதனாக 2 லட்சம் மக்கள் ஏதும் செய்ய முடியாமல் கொலைக் களத்தில் நிற்கும்போது இன்னோரு சக மனிதன் என்ன செய்ய முடியும் என்பதுதான் இந்த தீக்குளிப்பு நடவடிக்கை. இந்த அதிகாரங்களுக்கு எதிராக என்ற கேள்விக்கு ஒன்றும் செய்ய முடியாது என்ற ஒருவனின் போர் யுக்தியாக இது இன்று பார்க்கப்படுகிறது.

இலங்கைத் தமிழரிடம் இப்படியான போக்கு கடந்த காலங்களில் இருந்ததில்லை. ஆனால் இது உடனடியாக இலங்கைத் தமிழர்களாலும் பிரதி பண்ணப்பட்டு செய்யப்படுகிறது. இன்று இது உலகத்தளவுக்கு இந்த தீக்குளிப்பு நகர்த்தப்பட்டுள்ளது. காசாவில் இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக சிறுவர்கள் கல்லால் எறிவார்கள். இது இயலாமையின் வெளிப்பாடு. இது யுக்தியுமாக உள்ளது. அதே மாதிரி இந்த விடயமும் எடுக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்த யுக்தி காசா மக்களாலும் எடுக்கப்பட்டால் கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை என்றளவுக்கு இவ்விடயம் ஒரு இயலாமையின் வெளிப்பாடாகத்தான் பார்க்க வேண்டும். கொச்சைப்படுத்திப் பார்க்க முடியாது. அதே நேரம் இதை ஊக்குவிக்க முடியாது. இதனால் வெல்ல முடியாது என்ற பிரச்சினையையும் அழுத்திச் சொல்ல வேண்டியுள்ளது. இதை அழுத்தமாக சொல்லும் போது இதற்கு மாற்றீடான போராட்ட வடிவத்தையும் முன்வைக்க வேண்டிய தேவை எழுகிறது. இந்த முயற்ச்சியைத்தான் நாங்கள் CWI செய்ய முயற்ச்சிக்கிறோம்

தேசம்நெற்: தமிழக இடதுசாரி அரசியல் கட்சிகள் இலங்கை தொடர்பான என்ன நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன?

சேனன்: இன்று தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் யாராவது வேலை செய்கிறார்கள் என்றால் இடதுசாரிகள் மட்டும்தான். இருந்தாலும் குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் தா பாண்டியன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவரது கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த ஒரு சொட்டு நம்பிக்கையும் இல்லாமல் பண்ணும் வேலைதான் செய்து கொண்டிருக்கிறார்.

அவர் சரியான சில கருத்துக்களை பேசிக் கொண்டிருக்கும் போதிலும் இலங்கைத் தமிழ் மக்களை இந்துக்களாகவும் அதனால் இந்தியா உதவி சேய்ய வேண்டும் என்ற பார்வைகள். இப்டியான பார்வைகளுடன் உடன்படுதல் இது மிகமோசமான இடதுசாரி வரலாற்றில் இல்லாத ஒரு எல்லையை அவர் தொட்டுள்ளார். அது அப்படி இருக்க CPM என்ன செய்கிறது என்றால் இந்த நிலையில் ஒரு நடுநிலைப் போக்கை கடைப்பிடிக்கிறார்கள். இன்றைய இலங்கை இனப்பிரச்சினைக்கு ஒரு போராட்டத்தை ஆரம்பித்து நடத்துவது சரியா? என்று ஒரு கேள்வியை அவர்களை நோக்கி கேட்க வேண்டியள்ளது. அது எங்கே இருந்து வருகிறதுதென்றால் அவர்களது கூட்டமைப்பு எங்கே இருக்கிறது என்பதிலிருந்து வருகிறது. அவர்கள் காங்கிரஸ் கட்சியுடனான முரண்பாட்டை தவிர்பபதில் இருந்து வருகிறது. அதைவிட அவர்கள் மூன்றாம் அணி என்ற அகில இந்திய அளவில் கூட்டமைப்பை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். வருகிற தேர்தலுக்காக அந்த தேர்தலையிட்டு காங்கிரசை பகைக்கக் கூடாது என்றே அவர்களது திட்டங்கள் செயற்த்திட்டங்கள் அமைகிறது. அதன் வடிவம் தான் இந்த CPM வடிவம்.

இன்று CPM இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வெளிப்படையாக குரல் கொடுக்க மறுத்துவிட்டது என்ற குற்றச்சாட்டை வைத்துத்தான் ஆகவேண்டும். இதற்கு அப்பால் நான் அப்படி CPM மீது குற்றச்சாட்டை வைத்தபோதும் அது நியாயம் அற்றதாயும் இருக்கலாம். ஏனெனில் CPM க்கு கீழ் இருக்கும் பல தொண்டர் அமைப்புகள் தோழர்கள் வந்து இந்த ஈழ மக்களுக்கான போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தில் பேசுகின்றார்கள். இது ஒரு சிக்கலான விடயமாகவும் உள்ளது. இந்தியாவைப் பற்றிப் பேசுவது எப்படிச் சிக்கலோ அதே போல இந்த இடதுசாரிகளைப் பற்றிப் பேசுவதும் சிக்கலானது.

இதைவிட இந்த ஈழப்போராட்ட நடவடிக்கைகளிலும் வழக்கறிஞர் போராட்டங்களிலும் இக்கடும் வெய்யிலிலும் உழைப்பவர்களாகவும் இப்போராட்டத்தை ஒரு வழிக்கு கொண்டுவர வேண்டும் என்று போராடிக் கொண்டிருப்பவர்கள் முன்னாள் மாவோ தோழர்கள (மாக்ஸீய லெனிஸிய ML தோழர்கள்) இவர்கள்  நிறையவே செயற்ப்படுகிறார்கள் அவர்களது கருத்து நிலையிலும் மாற்றமும் வந்துள்ளது. தமிழீழத்தை ஆதரிக்கும் போக்கும் உள்ளது. அதையும் தாண்டி ஒரு முற்போக்கான நிலையையும் பார்க்க்க கூடியதாக இருக்கிறது. ML களிடம் இருந்து பிரிந்து உருவான “புதிய போராளிகள்” என்ற அமைப்பு மிகமுற்ப்போக்கான நிலையை உருவாக்கியிருப்பதையும் பார்க்க்க கூடியதாக உள்ளது. இதில் தான் ஒரு ஒளிமயமான போக்கை இந்தக் கட்டத்தில் பார்க்க்க கூடியதாக இருக்கிறதே தவிர வேறு எந்த முற்போக்கான நிலைகளையும் பார்க்க்க கூடியதாக இல்லை என்றே கூறலாம்.

தேசம்நெற்: தமிழகத்தில் உள்ள உணர்வலையை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உணர்வாக கருத முடியுமா? அல்லது அது வெறுமனே இன உணர்வா?

சேனன்: இதற்கு நேரடியான பதில் தரமுடியாது. இது இன உணர்வு என்ற அடிப்படையில்லத்தான் உலகம் முழுவதும் தமிழ் இனம் என்ற அடிப்படையில்த் தான் உலகெங்கும் தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் பேசும் முஸ்லீம்கள், தமிழ் பேசும் தலித்துக்கள் குரல் கொடுக்கிறார்கள். இது தமிழர்கள் கொல்லப்படுவதற்கு எதிரான குரலாகவும் உள்ளது. யார் இதன் நியாயமான முறையில் குரல் கொடுக்கிறார்கள் என்று பார்த்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் தான்  ஒடுக்கப்படும் மக்களுக்குத் தான் ஒடுக்கப்படும் மக்களின் நிலைபுரிகிறது.

தமிழகத்தில் இன்று இலங்கைத் தமிழர்களுக்காக போராடுபவர்கள் தலித்துக்களே. ஒடுக்கப்படும் மக்களே இந்த கடும் வெய்யிலில் போராடுகிறார்கள். மேட்டுக்குடி மக்கள் நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆங்காங்கு பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் யாரும் இங்கு இல்லை. தெருத் தெருவாக வந்து போராட தயாராக இல்லை. அந்த ஒடுக்கப்படும் மக்கள் செய்யும் போராட்டத்தில் தமது பெயரை நிலை நாட்டவே இந்த நடிகர்கள் அரசியல்வாதிகள் தாமும் நாடகம் ஆடுகிறார்கள். இதில் ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற விடயமே தலை தூக்கி நிற்கிறது. இருந்தாலும் தமிழ் இன உணர்வு தேசியவாதம் கக்கிக் கொண்டு அது தன் பக்கம் இழுப்பதையும் காணலாம்.

தேசம்நெற்: இலங்கைத் தமிழர்களின் உரிமைப்போராட்டம் பற்றியும் அதில் இந்திய அரசியல் நிலைப்பாடுகள் சூழ்நிலைகள்?

சேனன்: இந்திய அரசுக்கு இந்திய பிராந்திய நலன்தான் முக்கியம். ஒடுக்கப்படும் மக்களோ அல்லது இலங்கையில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் காஷ்மீரில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது ஒவ்வொரு இந்திய மாநிலங்களிலும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் பற்றி எந்தவிதமான அக்கறையும் கிடையாது. ப.சிதம்மரம் காங்கிரஸ் கட்சி மகாநாட்டில் அண்மையில் சொன்னார். தாங்கள் காஷ்மீரில் நடக்கும் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் போது எப்படி இலங்கைத் தமிழர் போராட்டத்தை ஆதரிப்பது என பச்சையாக கேட்டார். இதுதான் இவர்களது நிலைப்பாடு. பிராந்திய நலன்கள் மட்டுமேதான். எல்லா பெரிய கம்பனிகளும் வரிசையாக நிற்கிறது. தமிழர் பிரதேசத்தில் வியாபாரம் செய்யத் தொடங்குவதற்கு தயாராக உள்ளனர். அந்த நோக்கத்தில் இருந்துதான் இவர்களது அரசியல் வருகிறதேயொழிய வேறு எந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நோக்கத்திலிருந்தும் வருவதில்லை வேறு எந்த முற்போக்கு எண்ணமும் கிடையாது.

தேசம்நெற்: இந்திய CWI ன் இலங்கை பற்றிய நிலைப்பாட்டு என்ன?

சேனன்: இன்றைக்கு படுபாதகமான செயலில் இறங்கி இருக்கிறது இலங்கை அரசு. 2000 புலிகளை அழிப்பதற்காக இரண்டரை லட்சம் தமிழர்களை அழித்தாவது புலிகளை கொல்ல வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

ஆனால் நாங்கள் என்ன சொல்லுகின்றோம் என்றால் இந்த 2000 புலிகளை காப்பாற்றி என்றாலும் இந்த இரண்டரை லட்சம் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதே. இந்த அடிப்படையில்த்தான்  இந்த பிரச்சினையை எப்படி அணுகுவது என்பதை நாம் CWI  பார்க்கிறோம்.

இன்றைக்கு உள்ள உடனடித்தேவை என்ன? உடனடியாக யுத்தம் நிறுத்தப்பட வேண்டும். இந்த மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் வெளியேறிய மக்கள் முகாம்களில் அடைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

ஓருநாளைக்கு 5.5 லட்சம் மில்லியன் செலவழித்து யுத்தம் செய்யும் இந்த அரசு வெளியேறும் மக்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க முடியாதா? ஏன் மீண்டும் அவர்களை முகாமில் போட்டு அடைக்கிறது ஏன் துன்புறுத்துகிறது? ஏன் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் இவை எல்லாம் மிக மோசமான மனித உரிமைமீறல்கள் இதை நிறுத்துவதற்கான குரல்கள் ஒன்றிணைந்து செயற்படுதல் அவசியமானதாகும்.

இன்றைக்கு இந்த வலதுசாரிகள் போகிற போக்கில் ஏதாவது செய்து ஒடுக்கப்படும் மக்களின் எழுச்சியை மந்தப்படுத்தி வைத்திருக்கும் இந்தருணத்தில் இதற்கும் அப்பால் ஒன்றிணைந்து செய்யப்பட வேண்டிய அவசிய தேவையள்ளது.

மற்றறுமொரு முக்கிய விடயம் இங்கு தமிழ்நாட்டில் ஒரு கூட்டமைப்புக்கு தெரியாது மற்ற கூட்டமைப்பு என்ன போராட்டம் செய்கிறது என்று, சில கூட்டமைப்பு திட்டமிட்டு வலதுசாரிகளால் இந்தப் போராட்டத்தை குழப்பும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

சில போராட்டங்களில் பத்து பதினைந்து பேர்களும், சில போராட்டங்களில் சில நூறு பேர்களும் சில போராட்டங்களில் ஆயிரக்கணக்கானவர்களும் இப்படி பிளவுபட்ட நிலையில் பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை ஒழுங்குபடுத்த முடியாதா? என்பதையே நாம் CWI எல்லாக் குழுக்களிடமும் கேட்டுள்ளோம் அதை ஒழுங்குபடுத்த முயற்ச்சிக்கின்றோம்.

அடுத்து இலங்கையை பொறுத்த வரையில் ஒன்றுபட்ட போராட்டம் தான் பிரச்சினைக்கு தீர்வு என்று இருப்பதால் இங்கு தமிழ் நாட்டில் சிங்களம் சிங்களவர்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது எமக்கு தெரிந்ததொன்றே. அதற்கு எதிராக தோழர் சிறீதுங்கா ஜெயசூரியா இங்கு வந்து பெங்களுர் கர்நாடகா தமிழ் நாடு போன்ற பல இடங்களில் ஒரு சிங்கள இடதுசாரி தமிழ்பேசும் மக்களுக்காக குரல் எழுப்பியது மிகமுக்கிய வரலாற்று நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. அத்துடன் இது கருத்தியல் மாற்றங்களையும் ஏற்ப்படுத்தியுள்ளது.

மற்றது இந்த எல்லா கூட்டமைப்புக்கள் கட்சிகளுக்கு முன்னால் நாம் வைக்கும் முக்கியமான கேள்வி என்னவென்றால் இந்த இலங்கைத் தமிழ்பேசும் மக்களின் பிரச்சினையை தனிபட்ட கட்சி நலனுக்காக பாவிக்காமல் ஒன்றுபட்ட குரல் இந்த கஸ்டப்படும் மக்களுக்காக செய்தோம் என்ற ஒன்றையாவது பதிய முடியாதா?

ஓன்றிணைக்கும் பணி மிக கடினமானது. எமது CWI தோழர்கள் மிக கடுமையான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த சனிக்கிழமை 7ம் திகதி CWI ஒரு  கூட்டம் கூட்டப்பட்டு அதில் பல முக்கியமான பல்வேறு விடயங்கள் பரிமாறப்பட்டது. இக் கூட்டத்தில் பல்வேறு விதமான கருத்துக்கள் கொண்டவர்களும் பங்கு பற்றினர்.

இதன் பின்னர் ஒரு செயற்ப்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டது. இந்த செயற்குழு திங்கட் கிழமை தனது முதலாவது கூட்டத்தை கூடியது. மேலும் இந்தக் குழு  மற்ற கூட்டமைப்புக்களுடனும் கருத்துக்களை பரிமாறி அவர்களில் சில கூட்டமைப்பினரின் ஆதரவினையும் பெற்றும் வேறு சில கூட்டமைப்பினர் ஆதரவினைத்தர முன்வந்தும் உள்ளனர்.

தற்போது தமிழ்நாட்டடில் 6 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வைத்து இந்த பிரச்சார வேலைகள் நடைபெறவுள்ளது.

1. யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்
2. இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும்.
3. வெளியேறிய மக்களுக்கு உணவு மற்றும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட மக்கiளின் சுதந்திரத்திற்கு அனுமதியளித்தல்
4. ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தல்
5. தொழிற்சங்கங்கள் உருவாக்கும் உரிமையும் தொழில்சங்கங்க உரிமைகளைப் பாதுகாப்பும்.
6. அரசியல் நிர்ணய சபையை உருவாக்குதல்;: வாக்கெடுப்பின் மூலமாக ஒரு சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரித்தல்.

மேற்கண்ட இந்த பிரச்சாரங்களின் ஊடாக ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியுமா?
இந்த தமிழர் போராட்டத்தை வலதுசாரிகளிடமிருந்து கைப்பற்றி தனித்துவமாக இயக்க முடியுமா? இதுதான் இன்று CWI  தோழர்களின் முன் முயற்ச்சி அதற்காக அவர்கள்  மிகவும் கடுமையாக உழைக்கிறார்கள்.

தேசம்நெற்: முன்னைய 1980-90 களில் இருந்த தமிழகத்திற்கும் இன்றய தமிழகத்திற்கும் என்ன வேறுபாடுகள் தெரிகின்றதா?

சேனன்: கஸ்டப்படுபவர்கள் ஒடுக்கப்படுபவர்கள் அதிகரித்துள்ளனர் ஒரு விஷேட மத்திய தரவர்க்கத்தினர் உருவாகியுள்ளனர். வர்க்க இடைவெளி வரலாறு காணாத அளவு அகன்று போயுள்ளது. ஒடுக்கப்படும் கஸ்டப்படும் மக்கள் தற்போது தம்மை இன்னுமொரு தனி இனமாக அடையாளம் காணத் தொடங்கியுள்ளனர்.

ஆளும்வர்க்கத்தின் ஒடுக்கு முறையில் கொடூரம் அதிகரித்துள்ளது. இந்த பொருளாதார மாற்றம் இதை மேலும் அதிகரிக்கப்பண்ணியுள்ளது.

தேசம்நெற்: தற்போது இலங்கையில் நடைபெறும் படுகொலைகளை genocide என்ற அடிப்படையில் பார்க்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கிறது அது பற்றி.

சேனன்: Genocide என்பது ஒரு இனம் இன்னோரு இனத்தை அழித்தல் என்றே  கருதப்பட்டது உதாரணமாக ய+த இனம் ஜேர்மனியரால் அழிக்கப்பட்டது கொசோவாவில் ரூவாண்டாலில் 800000க்கு மேற்ப்பட்ட மக்கள் அழிக்கப்பட்டது. இதை genocide என்ற பொதுவான விளக்கம் தரப்படுகிறது இதனால் இன்று இலங்கையில் நடக்கும் கொலைகள் genocide என்று சொல்ல முடியாதது காரணம் சிங்கள இனம் தமிழ் இனத்தை கொல்லவில்லை என்றும் இந்த பதத்தை பாவிக்க விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதற்கும் அப்பால் சிலர் genocide என்ற பதத்தை  பாவிக்க விரும்பவில்லை. காரணம் அது ஒரு loaded word அதை இப்ப பாவிப்பது எமக்கு உபயோகமானதாக இருக்காது என்கிறார்கள். காரணம் இந்த எழுச்சிகளில் முன்வைக்கபபடும் genocide என்ற கோசம் பலம் பெறும் என்றும் இதனால் புலிகள் பலம் பெறலாம் என்ற நோக்கங்கள் இதற்குப் பின்னால் இருக்கலாம்.

இதற்கும் அப்பால் இப்படி genocide என்ற பதத்தை சொல்வது சரிதானா என்ற கேள்வி உண்டு. ரூவான்டாவில் 14 விகிதமான மக்கள் கொலலப்பட்ட கோரமான சம்பவம், அப்படிப் பார்த்தாலும் இந்த தமிழர் போராட்ட யுத்தம் காரணமாக இராணுவ நடவடிக்கைகளில் 10 – 13 சதவிகித மக்கள் கொலைவாசலில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதை genocide என்று சொல்லாமல்  என்ன என்று சொல்லுவது. இதை வெறுமனே கொலைகள் என்று சொல்லாமல் என்ன என்று சொல்லுவது. வேறு எந்த சொல்லைக் கொண்டு சொல்வது இதை வெறுமனே கொலைகள் என்று சொல்வதா? அல்லது அரச கொலைகள் என்று சொல்வதா?

சிங்கள மக்கள் கொல்லவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளலாம். சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டுள்து என்று சொல்லும் அரசு இப்பாதக செயலைச் செய்கிறது. இதை வெறும் கொலைகள் என்ற சொல்லை சொல்லிவிட்டுப் போக முடியுமா?

இந்த genocide என்ற பதம் பற்றி சர்வதேச அளவில் ஆராய வேண்டியுள்ளது. இக்கொலைகள் எந்த நோக்கில் எந்த அடிப்படையில் செய்யப்படுகிறது என்றும் பார்க்க வேண்டியுள்ளது.

genocide என்ற சொல்லுக்கான அடிப்படைத்தேவை இலங்கையில் இல்லையா? இலங்கை அரசால் இந்நிலை உருவாக்கப்பட்டிருக்கும் இந்நிலையில் நாம் இந்த சொல்லைப் பாவிப்பது பற்றி கடுமையாக சிந்திக்க வேண்டியுள்ளது.

மரணங்கள் அதிகரிக்கிறது! முல்லையில் 1000 பொது மக்களுக்கு மேல் உயிரிழப்பு!! வன்னி மக்கள் மரணத்துள் வாழ்வு!!! : த சோதிலிங்கம்

Eelam_Girl300 000 வன்னி மக்களுக்கும் மரணத்துள் வாழ்வு. மரணங்களின் எண்ணிக்கை ரொக்கற் வேகத்தில் அதிகரிக்கிறது. முல்லையில் 1000 பொது மக்களுக்கு மேல் உயிரிழப்பு – பெப்ரவரி 10 வரையான இவ்வாண்டின் கடந்த 40 நாட்களில் வன்னியில் கொல்லப்பட்ட பொது மக்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த 40 நாட்களில் தினமும் 25க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இலங்கையின் கடந்த 30 ஆண்டு கால உள்நாட்டு யுத்தத்தில் எப்போதுமே இவ்வளவு தொகையான பொதுமக்கள் ஒரு குறுகிய காலத்தில் கொல்லப்பட்டு இருக்கவில்லை. புலிகளிடமுள்ள கடைசிச் சில கிராமங்களுக்காக நடைபெறும் இந்த வன்னி யுத்தத்தில் 5000 முதல் 10000 தமிழ் மக்கள் கொல்லப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

மிக மோசமான வார்தைகளுக்குள் அடக்க முடியாத மனித அவலம் ஒன்று முல்லைத்தீவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சர்வதேச ஊடகவியலாளர்களோ சர்வதேச மனிதாபிமான அமைப்புகளையோ இலங்கை அரசு அனுமதிக்காத நிலையில் வன்னி அவலம் சர்வதேசத்தின் பார்வையில் இருந்து மறைக்கப்பட்டு உள்ளது. உண்மைநிலையை அறிந்துகொண்ட சர்வதேச அரசுகள் குறிப்பாக இணைத் தலைமை நாடுகள் இலங்கை அரசுக்கு அழுத்தங்களை வழங்காமல் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று கோரியுள்ளன.

‘பயங்கரவாதிகளான புலிகளை’ அழிக்கிறோம் என்ற போர்வையில் இலங்கை அரசு ஒட்டுமொத்த வன்னித் தமிழ் மக்கள் மீதும் தாக்குதலை நடாத்துகிறது. உணவு மற்றும் மருத்துவ சேவைகளை அம்மக்களுக்கு வழங்காது வன்னி மக்களுக்கு கூட்டுத் தண்டனை வழங்கும் இலங்கை அரசு, தான் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்திய பகுதிகளையும் மருத்துவமனையையுமே கொலைக்களமாக்கி உள்ளது. அங்குள்ள மருத்துவர்களையும் மருத்துவப் பணியாளர்களையும் உடனடியாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுமாறு இலங்கை அரசு பெப் 11 அன்று உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 300 000 வரையான மக்கள் யுத்தமுனையில் மருத்துவ வசதியின்றி உயிருக்குப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

உலகத்தின் மிகக் கட்டுக்கோப்பான செல்வந்த விடுதலை அமைப்பாக கருதப்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டப்பாட்டில் இருந்து அனைத்து பிரதேசங்களில் இருந்தும் மக்களுடன் பின்வாங்கி முல்லைத்தீவின் விரல் விட்டு எண்ணக் கூடிய சில கீராமங்களில் மக்களை அரணாக வைத்து தாக்குவதாக அனைத்து முக்கிய சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும் குற்றம்சாட்டுகின்றன.

யுத்தப் பகுதியில் இருந்து வெளியேற முயலும் மக்கள் மீது புலிகளும் தாக்குதல்கள் மேற்கொண்டதாக வன்னியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் புலிகளின் அரசியல் பொறுப்பாளர்களில் ஒருவரான இளம்பருதி பெப் 11ல் அதனை மறுத்துள்ளார். மக்கள் வெளியேறிச் செல்லும் முன்னரங்க நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தமிழ் பொது மக்களும் இராணுவதினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இத்தாக்குதலுக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்றும் புலிகள் மறுப்புத் தெரிவித்து உள்ளனர். மேலும் புலிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த வந்த பல நூற்றுக் கணக்கானவர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மூன்று இளைஞர்கள் தீக்குளிக்குமளவிற்கு தமிழக மக்கள் கொந்தளித்த போதும் தமிழக மாநில அரசும் குறிப்பாக இந்திய மத்திய அரசும் இலங்கை அரசின் யுத்த நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளன. புலிகளுக்கு இந்தியா எடுக்கும் கடைசிப் பாடமாக இது கருதப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் படுதோல்வியை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒரு பிளவு ஏற்படலாம் எனச் செய்திகள் கசிகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய இலங்கை அரசு சார்பான அணி ஒன்று உருவாகலாம் என எதிர்வு கூறப்படுகிறது. விடுதலைப் புலிகளிடமுள்ள கடைசியான முல்லைக் கிராமங்கள் பறிபோகும் போது இந்தப் பிளவு எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின் உயிரிழப்புகள் ஆயிரக் கணக்கில் செல்லும் போது அந்த மனித அவலத்தில் இருந்து மீண்டும் புலிகள் தாங்கள் இழந்த அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் கடைசி முயற்சியாகவே இந்த முல்லைக் கிராமங்களில் நடைபெறும் யுத்தம் கருதப்படுகிறது. இங்கு சிக்குண்ட மக்கள் அனைவரையும் புலிகள் பயங்கரவாதிகள் என்ற தோரணையில் இலங்கை அரசு தாக்குதலை நடத்துகிறது. அங்கு கொல்லப்படும் பச்சிளம் குழந்தையையும் புலிக்குட்டி என்று சொல்வதற்கு இலங்கை அரசு எவ்வித தயக்கமும் காட்டவில்லை.

தமிழ் மக்களின் குருதியில் முல்லை மண் சிவக்கிறது என்றால் அது மிகையல்ல. அவலம் முடிவின்றித் தொடர்கிறது. சொல்லி அழ நாதியில்லை! கேட்பதற்கும் யாரும் இல்லை!! வேலிகளே பயிரை மேய்கிறது.

லண்டன் குரல் : இதழ் 27
————————
இலங்கை அரசின் கண்மூடித்தனமான தாக்குதலும் புலிகளின் உதாசீனமும் வன்னி மக்களை சொல்லொனாத் துயரத்திற்குள் தள்ளியுள்ளது. பாதுகாப்பாக இருக்க இடமும் இல்லாமல் தப்பிச் செல்ல வழியுமில்லாமல் அவர்கள் படுகின்ற அவஸ்தை கொடூரமானது. சிங்கத்திடமும் புலியிடமும் சிக்கித் தவிக்கும் இந்த வன்னி மக்கள் கூட்டம் இவ்வாறான ஒரு கொடுமையை கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஒருபுறம் மரணங்கள் மறுபக்கம் பிரசவங்களும் நிகழ்கின்றன.

வடக்கு கிழக்கின் சகல பிரதேசங்களிலும் பின்வாங்கிய போதும் புலிகள் மக்கள் செறிந்துள்ள பகுதியை யுத்த மையமாக்கி உள்ளனர். இலங்கை அரசோ எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை வெற்றிக் கொடி ஏற்றினால் போதும் என்றளவில் யுத்தத்தை முடுக்கிவிட்டுள்ளது.

பெப் 9 இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மக்கள் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுக்கவே புலிகளால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த தாக்கதல் இராணுவ இலக்கு மீதான தாக்குதல் என்பதிலும் பார்க்க மக்கள் வெளியேறுவதைத் தடுப்பதையே நோக்கமாகக் கொண்டு உள்ளது. இது மனித உரிமைகளை மீறும் செயல். புலிகள் மேலும் மேலும் தவறிழைக்கின்றனர். அதுமட்டுமல்ல இப்படியான தவறுகள் தாக்குதல்கள் நடைபெற்றால் அவற்றை நியாயப்படுத்தும்; அப்படியான நியாயங்களை பரப்புரை செய்யும் முறையும் கண்டிக்கப்பட வேண்டியது.

முற்றிலும் இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப புலிகளும் புலிகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இலங்கை அரசும் செயற்படுவதையே காணக் கூடியதாக இருக்கிறது. அவ்வாறே புலிகளை ஆதரிப்பவர்களும் அரசாங்கத்தை ஆதரிப்பவர்களதும் செயற்பாடுகள் உள்ளது. புலிகளை ஆதரிப்பவர்கள் புலிகள் மீதும் அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள் அரசாங்கததின் மீதும் அழுத்தங்கள் கொடுப்பதில்லை.

மக்கள் தாம் சுயமாக வெளியேற முடியுமாயின் எப்பவோ புலிகளின் பிடியை மீறிக் கொண்டு வெளியேறியிருப்பார்கள். அப்படி அவர்கள் வெளியேற முடியாமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. மக்களுக்கு இலங்கை அரசு மீதும் அரச படைகள் மீதுமுள்ள அவநம்பிக்கை மிக முக்கியமானது. அங்குள்ள மக்களில் பெம்பாலானவர்கள் விரும்பியோ விரும்பாமலோ புலிகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டவர்கள். இன்னுமொரு பகுதியினரது குடும்ப உறுப்பினர்கள் புலிகளின் உறுப்பினர்களாக உள்ளனர் அல்லது அவர்கள் மாவீரர் குடும்பத்தினராக உள்ளனர் அல்லது விடுதலைப்புலிகள் அமைப்பின் மிகநெருங்கிய அல்லது முக்கிய உறுப்பினர்கள் அல்லது தொடர்புடையவர்கள் இப்படியான புலிகளுடன் தொடர்புடையவர்களுக்கு யாழ் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் கடந்த காலங்களில் அரசின் ஆதரவுடன் காணாமல் போகும் செயல்கள் நடந்தேறியுள்ளன இவற்றின் காரணமாக மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வர அஞ்சுகின்றனர். அந்த அச்சம் மிகவும் நியாயமானது. அவர்களது அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே அரச தரப்பில் பாதுகாப்பு செயலர் பல கருத்துக்களை தெரிவித்து உள்ளார். மேலும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வரும் மக்கள் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு முகாம்களில் என்ன நடக்கும் என்பதைத் தமிழ் மக்களுக்கு விரிவாககச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதனை ரைம்ஸ் பத்திரிகையாளர் தனது கட்டுரையில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார்.

வன்னியில் உள்ள அத்தனை இளைஞர்களும் புலிகளின் பயிற்ச்சி பெற்றவர்கள் அல்ல. ஆயினும் அவர்கள் அத்தனை பேரையும் புலிகளாக அரசு நோக்கும் தன்மையை அவதானிக்க முடிகிறது. தப்பி வந்த இளைஞர்களை அகதி முகாம்களிலிருந்து தனித்து அழைத்துச் செல்லப்படுவதாகவும் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது இதுவரையில் யாருக்கும் தெரியாத நிலை உள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகிறது இதில் சில மிககவும் பயமூட்டும் செய்திகளாளாகும். இது தமிழர் வரலாற்றில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ரெலோ(TELO) – ஈபிஆர்எல்எப்(EPRLF) அழிப்பு அல்லது வெருகலில் நடைபெற்ற சம்பவத்திற்க்கு ஒப்பானதொரு செயலாகும். இவை மக்களின் மனதிலிருந்து அகற்ற முடியாத மனித நேயமற்ற செயலாகும்.

வன்னியில் புலிகளின் பிடியில் இருக்கும் தமிழ் மக்களில் பெருந் தொகையானோர் புலிகளை சுயவிருப்பில் ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருப்பதால் அவர்களின் சட்ட திட்டங்களுக்கு பணிந்து செயற்பபடுவதாலும் அவர்கள் புலிகளின் ஆயுததாரிகள் என்ற தப்புக் கணக்கில் அரசும் இராணுவமும் செயற்படுவது மிகத் தவறாகும்.

புலிகள் கடந்த காலங்களின் செய்த தவறுகளும், மனித உரிமை மீறல்களும், அரசியல் ஸ்திரமற்ற தன்மையும், அவர்கள் வழிபின்பற்றி வந்த ரிஎன்ஏ(TNA) யினரின் பம்மாத்து அரசியலும் இன்றுள்ள இந்த இக்கட்டான நிலைக்கு தமிழ் பேசும் மக்களை கொண்டுவந்து விட்டுள்ளது.

புலிகள் இறுதியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய போது தமது பாதுகாப்பிற்காக தம்முடன் இழுத்து வந்த மக்களை இன்று இன்னுமொரு தடவை தமது பாதுகாப்பிற்காக வன்னியில் கேடயமாக்கி உள்ளனர். ஒவ்வொரு தடவையும் தமது பாதுகாப்பிற்கு குந்தகமான சூழ்நிலைகள் வரும் போதெல்லாம் புலிகளின் செயற்ப்பாடானது தமிழ் மக்களை போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தியும் மக்களுக்கு இக்கட்டான சூழ்நிலைகளைத் தோற்றுவித்துமே வந்துள்ளனர். இவ்வாறான நிலைகளிலும் புலத்தில் உள்ள புலிகள் ஆதரவு அமைப்புக்கள் புலிகளின் மீது எந்தவித அழுத்தங்களையும் கொடுப்பதில்லை. இந்த விடயத்தில் ரிஎன்ஏ(TNA) யும் தவறிழைத்துள்ளது.

இலங்கை அரசு இந்த இக்கட்டான காலகட்டத்தில் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளை யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற்றியது மிக மோசமான நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை இலங்கை அரசு எப்படியான மனித உரிமை நடவடிக்கைகளை செய்யப் போகின்றது என்பதை முன்கூட்டியே அறிவிக்கின்றது. அப்பாவி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த யுத்தம் தொடரும் வரை மக்களுடைய அவலங்களும் தொடரும்.

அரசும் அரசியற் கட்சிகளும் குறிப்பாக கொழும்புத் தமிழ் அரசியற் கட்சிகளும் அரசியல் இயக்கங்களும் போராட்டவாதிகளும் மக்களுக்காகவே என்று சொல்லிக் கொள்கின்ற போதிலும் வன்னி மக்களைப் பொறுத்தவரை அவர்கள் வெறும் பகடைக்காய்களாகவே உள்ளனர். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகளின் கொள்கைகளும் நடைமுறைகளும் மக்களுக்காவே இருக்க வேண்டும். இந்த மக்கள் அவர்களின் இனம், மொழி போன்றவற்றிக்கு அப்பால் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த வன்னி மக்களை பாதுகாக்காமல், இந்த மக்களின் உயிர் அழிவிற்கு மேல் இனிமேல் என்றுமே மக்ளுக்கான அரசியல் செய்ய முடியாது. இந்த அரசியல்வாதிகள் தம்மை மக்கள் பிரதிநிதிகள் என்று கூறுவது அபத்தமாகி விடும். மக்களை பாதுகாக்க முடியாத இந்த கட்சிகள் மக்களின் பெயரால் இனிமேல் தமது அரசியல் நடவடிக்கைகளை செய்ய முடியாது போகும் இந்த அரசியற் கட்சிகள் அர்த்தமற்றதாகி விடும்.

பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கு இனவாதத்தை ஊட்டி அடுத்த தேர்தலை சந்திக்கத் தயாராகும் ஆளும் கட்சியும் வன்னியில் உள்ள மக்களை புலிகளாகக் காட்டி அவர்களது அவலத்தின் மீது வெற்றியை நிலைநாட்டத் துடிக்கிறது. அந்த வெற்றியின் மீது இந்த தேர்தலை சந்திக்க தயாராகுகின்றது மகிந்த அரசு. இதற்கான ஒத்திகையாக மாகாணங்களுக்கான தேர்தல்களை அரசு பரீட்சார்த்தமாக (14 பெப்) சந்தித்துள்ளதது.

தமிழ் தேசியப் போராட்டம் ஆரம்பித்த காலம் தொடக்கம் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்ச்சி அளித்து ஆயுதபாணிகளாக்கி தனது பிராந்திய வல்லாதிக்கத்தை பயிற்ச்சி செய்த அதே இந்தியா இன்று வன்னி யுத்த களத்திலும் இலைமறை காயாக நிற்கின்றது. தமிழக மக்கள் கொதித்தெழுந்த போதும் அதனைக் கண்டுகொள்வதாக இல்லை. வன்னி யுத்த களத்தில் இருக்கும் தமிழ் மக்களின் உயிரில் அக்கறையில்லாமல் உள்ளது. தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு இந்தியாவுக்கும் பொறுப்புள்ளது.

வன்னி மக்கள் மீதான இராணுவ தாக்கதல்களுக்கு முற்படும் அரசும், அரச ஆதரவு தமிழ் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் அமைப்புக்களும் – வன்னி மக்களை தமது மிக குறுகிய பிரதேசத்தில் அடக்கி வைத்திருக்கும் புலிகளும், புலிகள் ஆதரவு இயக்கங்களும், ரிஎன்ஏ(TNA) யும் வன்னி மக்கள் மீது நடாத்தப்படும் படுகொலைகளை முடிவுக்கு கொண்டு வந்து அவர்கள் பாதுகாப்பாக சுயகௌரவத்துடன் வாழ அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

Ramalingam Muttiah – தமிழ் தட்டச்சின் தந்தை

ramalingam.JPGதமிழ் தட்டச்சின் தந்தை – ONE HUNDRED TAMILS OF THE 20TH CENTUR today is his 50th death Anniversary.
(courtesy: கா. மாணிக்க வாசகர், சரஸ்வதி இதழ், 1959 ) [Nominated by Visagaperumal Vasanthan]

ஆங்கிலேயர் அரசியல் நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கும் ஆங்கில மொழிகளும் உலகமொழியானதற்கும் ஆங்கிலத் தட்டச்சு (டைப்ரைட்டர்) ஒரு முக்கியமான காரணம். 1875-ம் ஆண்டில் “ரெம’ங்டன்” தட்டச்சு விற்பனைக்கு வந்தபொழுது வர்த்தக ஸ்தாபனங்களே பெரும்பாலும் அவைகளை வாங்கி உபயோகித்தன. பின்பு அரசினரும் பிற ஸ்தாபனத்தாரும் தனி மனிதர்களும் தட்டச்சை விரும்பி வாங்கினார்கள்.

ஆங்கிலத்தில் இருபத்தாறு எழுத்துக்களே இருக்கின்றன. தமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, உயிர்மெய் எழுத்துக்கள் 216, ஆய்த எழுத்து 1 ஆக மொத்தம் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. இவை தவிர எண்களும் குறியீடுகளும் வடமொழி மூலம் வந்த சில முக்கியமான எழுத்துக்களும் இருக்கின்றன. ஆகவே ஆங்கிலத்தைவிட ஏறக்குறைய பத்து மடங்கு அதிகமான எழுத்துக்களை உடைய தமிழ் மொழியை ஒரு யந்திரத்தில் அமைப்பது சுலபமான விஷயம் அல்ல. ஆங்கில மோகம் வானளாவின்ற அந்த நாளில் இதைச் செய்ய நினைத்தவர் சிலர் இருந்தாலும் செய்து முடிக்கும் உடையோர் இல்லை.

பெரு எண்கையில் செய்விக்க பண முதலீடு செய்யும் துணிவு வேண்டுமே பண முதலீடு செய்தாலும் விற்பனை ஆகுமா? இந்தப் பிரச்னைகளையெல்லாம் கருத்தில் கொள்ளாது துணிச்சலுடன் செயலில் இறங்கினார் ஒரு தமிழர்.

ஈழ நாட்டில் வாழும் தமிழர்களின் தலைநகராக விளங்கும் யாழ்ப்பாணம் அப்போது சிறந்த அறிஞர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் உலகுக்கு அளித்துக் கொண்டேயிருக்கிறது. இந்தத் திருநாட்டின் ஒப்பற்ற ஒருவர்தான் தமிழ் தட்டச்சின் தந்தையான ஆர் முத்தையா அவர்கள்.

முத்தையா யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிற்குளியில் 24-2-1886-ல் பிறந்தார். இவருடைய தந்தையாரான ராமலிங்கம் பண்பாடு மிக்கவர், கல்வியாளர், பக்திமான். ராமலிங்கம் அவர்களுக்கு ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் பிறந்தார்கள். இறுதி ஆண் பிள்ளைதான் முத்தையா. இவர் ஏழு வயதாயிருக்கும்பொழுது, இவருடைய தந்தையார் இறந்துவிட்டார். பின்பு தாயின் பராமரப்பிலேயே வளர்ந்து கலாசாலையில் பயின்று வந்தார். சில வருஷங்களில் தாயும் நோய் வாய்ப்பட்டு இறந்தாள். இவர் 1907-இல் மலாயா நாட்டுக்குப் புறப்பட்டார்.

சிங்கப்பூரை அடைந்ததும் தொடர்ந்து போர்னியாவுக்குப் போக எண்ணியபொழுது டானியல் போதகர் என்பவர், தாம் அங்கேயே இவருக்கு வேலை வாங்கித் தருவதாகச் சொல்ல அப்படியே இவரை ரெயில்வே இலாகாவில் வேலைக்கு அமர்த்தினார். சில நாட்களில் அந்த வேலையை விட்டு ஐல்ஸ்பெரி அண்ட கார்லாண்ட என்ற பிரபலமான வர்த்தக ஸ்தாபனத்தில் வேலையேற்றார். இரண்டாண்டுகளுக்குப் பின், அதன் பிரதம குமாஸ்தாவாக உயர்ந்து 1930ஆம் ஆண்டு வரையில் பணி புரிந்தார். இந்தக் காலத்தில் இவர் உயர்தரக் கணக்குப் பதிவு, பொருளாதாரம், அச்சடித்தல், சுருக்கெழுத்து ஆகியவைகளைக் கற்றார். 1913-இல் நடைபெற்ற ஸ்லோன் டுப்ளோயன் சுருக்கெழுத்துப் போட்டியில் சர்வதேச வெள்ளிப் பதக்கம் இவருக்குக் கிட்டியது. அதோடு ஆங்கில இலக்கியம். தமிழ் இலக்கியம் கைத்தொழில் நூல்கள். சமய நூல்கள் ஆகியவற்றையும் கற்றார். இவ்வளவு திறமை வாய்ந்தவராயிருந்தும் அரசாங்க உத்தியோகத்தை இவர் நாடியதே இல்லை. சுயமுயற்சியில் அதிக நம்பிக்கை உடையவர், அஞ்சா நெஞ்சம் படைத்தவர். தமக்குச் சரியென்று பட்டதைத் துணிவுடன் இவர் எடுத்துச் சொல்வார்.

இவர் கடமையாற்றிய ஸ்தாபனத்தில் இருந்த ஒழுங்கும் நிர்வாகத் திறமையும் இவரைக் கவர்ந்தன. அவர்களைப் போல் தமிழனும் ஏன் இருக்க முடியாது என்று சிந்தித்தார். தமிழில் ஒரு தட்டச்சு இல்லாக் குறையையும் உணர்ந்தார். ஆகவே, அன்று தொடங்கி இந்த முயற்சியில் ஈடுபட்டார். தனிமையாக ஓர் அறையில் 247 எழுத்தின் வடிவங்களை ஒரு புறமும் தட்டச்சின் 46 விசைகளை மறு பக்கமும் வைத்து எழுத்துக்களை எப்படி விசைகளில் அமைப்பது என்று சிந்தித்தார். கிடைத்த நேரங்களை யெல்லாம் இந்த ஆராய்ச்சிக்கே செலவிட்டார். தம் தமிழ் நண்ர்பர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடைய அபிப்ராயங்களையும் சேகரித்தார். எவ்வளவு முயற்சி செய்தும் எழுத்துக்களை 72-க்கு மேல் குறைக்க முடியவில்லை. அதுவரையில் கிடைத்த வெற்றியைக் கொண்டு தட்டச்சை நிறைவேற்றும் பணியை மேற் கொண்டார்.

முத்தையா அவர்கள் தாம் கண்டு பிடித்த தட்டச்சை “ஸ்டாண்டர்ட்” பெரிய தட்டச்சு என்று குறிப்ப’ட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது. தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அசைக்க முடியாது. எனவே பல எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத்தனித் தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக்கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய வேண்டும். பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டு பிடித்தார். அதாவது “ந“” என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சியுள்ள “ந”வை அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள்.

ஆங்கிலத் தட்டச்சைப் போலல்லாது தமிழ்த் தட்டச்சுக்களின் விசைப்பலகை அமைப்பு வேறு விதமாக இருக்கிறது. ஒரு யந்திரத்தில் பழகியவர் அதே முறையில் வேறொரு யந்திரத்தில் அச்சடிக்க முடியாது. ஆகவே, இதை ஒருமைப்படுத்த எண்ணிய சென்னை அரசினர் 1955-ஆம் ஆண்டில் ஒரு குழுவை நிறுவினார்கள். அதன் சிபார்சுப்படியும் பிறருடைய ஆலோசனையின் பேரிலும் இப்பொழுது விசைப் பலகையமைப்பில் ஒருமைப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ஆயினும், முத்தையா அவர்களின் கண்டு பிடிப்பிலிருந்து அதிக மாற்றம் புதிய முறையில் இல்லை. புதிய அமைப்பில் இல்லாத சில சிறப்பான அம்சங்களும் இவருடைய தட்டச்சில் உண்டு. இவை புதிய அமைப்பில் சேரவில்லை. இப்பொழுது க’.த’ ஆகிய எழுத்துக்களின் விசிறிகள் அந்த எழுத்துக்களின் மேற்கோட்டின் நுனியில் இருக்கின்றன. இது தமிழ் எழுத்தைப் பிழையாக்குவதாகும். முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பில் க’. த’ போன்ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும். ண’. ன’ போன்ற எழுத்துக்களுக்கு வேறு ஒரு விசிறியும் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

இப்பொழுதிருக்கும் சில தட்டச்சுகள் இரண்டு கை விரல்களுக்கும் சமமாக வேலை கொடுக்கவில்லை. இந்தக் குறையைத் தம் தட்டச்சில் இவர் நீக்கியிருக்கிறார். தமிழெழுத்துக்களில் ய, ள, க, ப, ர, ம, ட, ந, ச, வ, ல, ன, டி ஆகிய எழுத்துக்கள் அடிக்கடி உபயோகமாகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டார்கள். ஆகவே. அரசினருடைய விசைப்பலகையில் கீழ் திட்டத்தில் இவை அமைந்திருக்கின்றன. முத்தையா அவர்களின் விசைப்பலகையமைப்பும் இதையொட்டியே இருக்கிறதென்றால் இவர் எவ்வளவு ஆராய்ச்சியின் பின் இதை உருவாக்கியிருக்க வேண்டுமென்று நாம் ஊகிக்கலாம்.

முதலாவது உலக யுத்தம் முடிந்த பின்பு, தாம் கண்டு பிடித்த விசைப்பலகையை ஜெர்மனியிலுள்ள சைடல் அன்ட் நளமான் என்ற வியாபர ஸ்தாபனத்திடம் இவர் ஒப்புவித்து அச்சுக்களை உருவாக்கினார். பெரும் எண்ணிக்கையில் அதை இறக்குமதி செய்து விற்றும் வந்தார். இதோடு இவருடைய முயற்சி முற்றுப்பெறவில்லை. தாம் அமைத்த விசைப் பலகையில் சில குறைகள் இருக்கக் கண்டார். அவைகளை நீக்க’. “பிஜோ”. “ஐடியல்” ஆகிய “போர்ட்டபிள்” தட்டச்சுக்களை உருவாக்கினார். இவைகளைப் பின்பற்றியே “ஆர் ஸ’”. “எரிகோ”. “யுரேனியா”. “ஹால்டா” போன்ற தட்டச்சுகள் வெளியாயின.

முத்தையா அவர்கள் சிறந்த சமூக சேவையாளராகவும் விளங்கினார். காலஞ்சென்ற தெய்வசிகாம ஆசாரியருடன் சேர்ந்து குடிசைக் கைத்தொழிலின் அபிவிருத்திக்கு அரும்பாடு பட்டார். இலங்கையில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்று எழுதி அதை அச்சேற்றுவதற்கு முன்பே காலமாகி விட்டார்

”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு புலிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதை வரவேற்கிறோம்” சிவாஜிலிங்கம் – நேர்காணல் : ரி சோதிலிங்கம் & த ஜெயபாலன்

Sivajilingam M K”ஆயுதங்களை சர்வதேச கண்காணிப்பில் வைத்துவிட்டு பேச்சுவார்த்தையை நடத்தி இறுதித் தீர்வு எட்டப்படுமாக இருந்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்” என்று ரெலோ பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தேசம்நெற்றுக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் தெரிவித்தார். இணைத்தலைமை நாடுகள் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற வேண்டுகோளைவிடுத்த 24 மணி நேரத்தினுள் பெப்ரவரி 3ல் தேசம்நெற்றுக்கு பேட்டியளித்த பா உ சிவாஜிலிங்கம் விடுதலைப் புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சில தவறுகளை விட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக பலவீனமானதாக இருந்தது என்ற வகையில் கருத்து வெளியிட்ட அவர் விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று ஒரு தீர்வுத் திட்டதை முன்வைக்காமல் போனது மிகப்பெரிய தவறு என்று தான் கருதுவதாகவும் கூறினார். தமிழ் மக்கள் இன்றொரு நெருக்கடி மிக்க சூழலில் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர் தமிழ் மக்களுக்கான கௌரவமான ஒரு அரசியல் தீர்வை பெறுவது மிகவும் அவசியமானது என்று குறிப்பிட்டார்.

லண்டன் மிச்சம் பகுதியில் அவர் தங்கியிருந்த இல்லத்தில் அவரைச் சந்தித்து இரண்டரை மணிநேரம் இச்சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் தேசம்நெற் ஆசிரியர்கள் ரி சோதிலிங்கமும் த ஜெயபாலனும் பா உ எம் கே சிவாஜிலிங்கத்தை நேர்கண்டனர். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உணர்ச்சிகரமாகப் பதிலளித்த பா உ சிவாஜிலிங்கம் இலங்கை இனப்பிரச்சினை தீர்க்கப்படாதவரை இலங்கை அரசால் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள முடியாது என்று தெரிவித்தார். அது விடுதலைப் புலிகளின் மிகப்பெரிய பலம் என்றும் கூறினார்.

தேசம்நெற் வாசகர்களுக்காக பா உ எம் கே சிவாஜிலிங்கத்துடனான பேட்டி:

Sivajilingam M K & Jeyabalan Tதேசம்நெற்: இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயான யுத்தத்தில் சிக்கியுள்ள 250 000 தமழ் மக்களை யுத்த பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றுவது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டைக்கொண்டு உள்ளது?

சிவாஜிலிங்கம்: முதலில் 250 000 என்பது தவறு. 400 000 இருந்து 500 000 வரை இருக்கிறார்கள். சர்வதேச சமூகமே 300 000 டின்று மதிப்பிட்டு இருக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் 150 000 என்றும் சிலசமயம் 100 000 கூறிக்கொண்டு உள்ளது.

வன்னியுத்தம் இன்று நேற்று ஆரம்பிக்கப்படவில்லை. மாவிலாற்றிலேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஜனவரி 2008ல் இலங்கை அரசாங்கம் யுத்தநிறுத்தத்தை மீறி பிரகடனப்படுத்திய ஒரு யுத்தத்தை நடத்துகிறது. இதனை தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போராகத்தான் நாங்கள் பார்க்கிறோம்.

தேசம்நெற்: மாவிலாறு அணைக்கட்டை மறித்து நீர் விநியோகத்தை தடுத்தது புலிகள். 2007 மாவீரர் உரையில் யுத்தப் பிரகடனம் செய்து தெற்கில் குண்டுகளை வெடிக்கச் செய்ததும் புலிகள். அதனைத் தொடர்தே அரசாங்கம் யுத்த நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. இந்த யுத்தத்தை ஆரம்பித்ததில் புலிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அல்லவா?

சிவாஜிலிங்கம்: மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக வந்ததில் இருந்து ஜேவிபி மற்றும் ஜாதிக ஹெலஉறுமய போன்றவற்றின் ஆலோசனையுடயேனே செயற்படுகின்றார். அந்த நிகழ்ச்சி நிரலிலேயே செல்கிறார். தமிழ் தேசிய உணர்வாளர்களை யாழ்ப்பாணத்திலும் ஏனைய பகுதிகளிலும் வேட்டையாடியதைத் தொடர்ந்தே இந்த யுத்தம் ஆரம்பித்தது என்றே சொல்ல வேண்டும். அதன் தொடர்ச்சியாகத்தான் மாவிலாறு அமைந்தது. 2007ல் பெரிய குண்டுவெடிப்பு என்று எதுவும் இடம்பெறவில்லை.

யுத்த நிறுத்த மீறல்கள் என்று சொன்னால் 3000 – 5000 என்று புலிகள் சம்பந்தப்பட்டு இருந்தாலும் ஒருவரை இயக்கத்தில் சேர்திருந்தால் அதுவும் மீறல்தான். மற்றும்படி பெரிய மீறல்கள் என்று குறிப்பிட எதுவும் இல்லை. ஆனால் மகிந்த ராஜபக்ச ஒரு இராணுவத் தீர்வை நோக்கித் தான் செல்ல எண்ணியிருந்தார். அது தான் நடைபெறுகிறது.

தேசம்நெற்: மகிந்த ராஜபக்ச இராணுத் தீர்வுக்கு செல்லக் கூடியவர் என்பதனாலேயே புலிகள் அவரை வெற்றியடைச் செய்வதற்காக அதற்கு ஏற்ற வகையில் தமிழ் மக்களை வாக்களிப்பில் ஈடுபடவிடாமல் தடுத்தனர். அந்த அடிப்படையிலேயே புலிகளின் தலைவர் பிரபாகரனது அப்போதைய மாவீரர் தின உரையும் அமைந்தது.

சிவாஜிலிங்கம்: மகிந்த ராஜபக்சவை விடுதலைப் புலிகள் தெரிவு செய்தார்கள் என்பது தவறானது. சிங்களவர்கள் தங்களுடைய தலைவரை தாங்களே தெரிவு செய்ய வேண்டும் என்பதே விருப்பமாக இருந்தது. ஆனால் தமிழர் தரப்பில் சிலருக்கு ரணில் விக்கிரமசிங்கவைத் தெரிவு செய்திருந்தால் அவர் கொஞ்சம் மென்மையான போக்கை கொண்டிருப்பார் என்ற நம்பி;க்கை இருந்தது. இன்றைக்கு ரணில் விக்கிரமசிங்க இந்த இராணுவத் தீர்வை ஆதரித்து நிற்பதில் இருந்து எந்த சிங்களத் தலைவருமே ஒரு தீர்வுக்கு தயாரில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. ஆகவே நாங்கள் இதில் பிரேத பரிசோதணை செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. எவர் அந்த ஆட்சியில் இருந்திருந்தாலும் இந்த நிகழ்ச்சி நிரலிலேயே நடந்திருக்கும் ஆனால் வேகம் கூடலாம் அல்லது குறையலாம்.

தேசம்நெற்: இந்த யுத்தத்தை வலிய ஆரம்பித்ததில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் நிறைந்த பங்கு உள்ளது. பொங்கு தமிழ் போன்ற நிகழ்ச்சிகளில் இன உணர்வுகளை உசுப்பி போருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா உ க்களும் அழைப்பு விட்டிருந்தனர். தெற்கிற்கு சவப்பெட்டிகள் வரும் என்ற பேச்சுக்கள் பாராளுமன்றத்திலும் ஒலித்தது. அந்த தவறுகளை நீங்கள் இப்போது உணர்கிறீர்களா?

சிவாஜிலிங்கம்: இல்லை. இல்லை. அடக்குமுறையை நீங்கள் திணித்தால் அந்த அடக்குமுறைக்கு எதிராக நாங்கள் போராடுவோம். அந்த நேரத்திலே 40 000 சவப்பெட்டிகள் தெற்குக்கு வரும் என்று ரிஎன்ஏ பா உ கூறியிருந்தது யுத்த நிலமையல்ல. அதன் பிறகு பல தடவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடாத்த முன்வந்திருந்தது. ஆனால் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா உ க்களை படுகொலை செய்தது அரசாங்கம். தமிழ் மக்களின் அரசியல் சக்திகள் எல்லாவற்றையும் அழித்தது அரசாங்கம். தமிழ் மக்களுக்காக யார் போராடுவார்களோ போராட முற்படுவார்களோ அவர்களை எல்லாம் வேட்டையாடப்படுவார்ட்கள் என்பது தான் சிங்களத்தினுடைய தெளிவான செய்தி.

தேசம்நெற்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயாதீனமாக செயற்பட முடியாமல் விடுதலைப் புலிகளின் அறிவுறுத்தலின் படியே செயற்பட வேண்டிய ஒரு நிலை இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

சிவாஜிலிங்கம்: 2004 தேர்தலின் போதுதான் தமிழீழ விடுதலைப் புலிகளோடு நேரடியாகக் கலந்துபேசி தேர்தல் அறிக்கைகளை தயாரிக்க வேண்டிய நிலை இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் தான் தமிழ் மக்களுடைய உண்மையான பிரதிநிதிகள். பேச்சுவார்த்தைகள் புலிகளுடன் தான் மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றது 2003ல் விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை செயற்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் கோரி இருந்தோம். அதற்கு இலங்கை அரசு தவறிவிட்டது. தமிழ் தேசிய விடுதலை இயக்கத்துடன் இணைந்து செயற்படுவது அவர்களுடைய பினாமி என்பதல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சுயாதீனமாகவே செயற்பட்டு வருகிறது.

தேசம்நெற்: விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி உரையாட முன்வரவேண்டும் அதுவே மக்களின் இழப்புகளைத் தவிர்ப்பதற்கு வழிவகுக்கும் என இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளும் 2002 பேச்சுவார்த்தையின் போது மத்தியஸ்தம் வகித்த இணைத் தலைமை நாடுகளும் இன்று கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன?

Sivajilingam M Kசிவாஜிலிங்கம்: மக்களை வெளியே கொண்டுவருவது என்பது இரண்டு தரப்பும் தீர்மானிக்க வேண்டிய விடயம். இலங்கை அரசாங்கம் பிடிவாதமாக எல்லோரையும் ஒழிக்க வேண்டும் என்ற நினைக்கின்ற வகையிலே மக்கள் வெளியேற விரும்பவில்லை. வேண்டுமென்றால் சர்வதேச சமூகம் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் மிசன் அங்கு செல்லட்டும். அல்லது அவர்களுடைய பிரதிநிதிகள் அங்கு சென்று பார்வையிடட்டும்.

இன்றைக்கு புலிகள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏனைய இயக்கங்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டது ஒடுக்குமுறையின் அடக்குமுறையின் வெளிப்பாடு. சிங்களப் பெரினவாதம் எங்களை அழிப்பதைத் தடுப்பதற்கே ஆயும் ஏந்தப்பட்டது. அதனைக் கீழே வைப்பதை மக்கள் விரும்பவில்லை. இந்த இடத்திலே சர்வதேசம் தன்னுடைய நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையினுடைய தலையீட்டின் ஊடாக அரசியல் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்பது தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

அதைவிடுத்து இன்னொருவரின் நிகழ்ச்சி நிரலுக்கு உதவி செய்வதற்குத்தான் சர்வதேச சமூகம் வருகின்றது என்று சொன்னால் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் போராடி அழிவதற்கு ஆய்த்தமாக இருக்கின்றோம். அடிமை வாழ்வை ஏற்றுக் கொள்வதற்கு நாங்கள் யாரும் தயாராக இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தயாராக இல்லை.

தேசம்நெற்: சர்வதேச சமூகத்தினுடைய தலையீடு என்று எதனைக் கேட்கறீர்கள். சமாதானப் படை ஒன்று வரவேண்டும் என்று கேட்கறீர்களா? அல்லது பாதுகாப்பு வலயத்தை சர்வதேசத்தின் பொறுப்பில் விட வேண்டும் என்று கேட்கிறீர்களா? அவ்வாறு சர்வதேசத்தின் பொறுப்பில் பாதுகாப்பு வலயம் ஒப்படைக்கப்பட்டால் மக்களை பாதுகாப்பு வலயத்திற்கு அனுமதிக்கும்படி நீங்கள் கோருவீர்களா?

சிவாஜிலிங்கம்: இந்த நிலைமைகளை நேரில் வந்து பார்க்குமாறு விடுதலைப் புலிகள் அழைப்பு விட்டு இருக்கிறார்கள் அதனை ஏன் இன்னமும் செய்யவில்லை. அதனைச் செய்து விட்டு விடுதலைப் புலிகளோடு சர்வதேச சமூகம் பேசலாமே. இதனை நாங்கள் தீர்மானிக்க முடியாது. அங்கிருக்கின்ற மக்களும் புலிகளும் தான் தீர்மானிக்க வேண்டும்.

அங்கு ஆபத்தில் இருக்கின்ற மக்களுக்கு பாதுகாப்பைச் செய்யாமல் இலங்கை அரசாங்கத்தை நம்பி போகச் சொல்ல முடியாது.

தேசம்நெற்: இன்றைக்கு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக சொல்ல முடியாது. இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் கொல்லபடுவது பற்றிய கரிசனை இல்லாமல் இருக்கலாம்.

சிவாஜிலிங்கம்: இல்லாமல் இருக்கலாம் இல்லை துப்பரவாக இல்லை. இன்றைக்கு இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் தான் செய்து கொண்டிருக்கிறது.

தேசம்நெற்: அதனால் தான் தமிழீழ விடுதலைப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் தமிழ் மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் முக்கிய பங்கிருக்கிறது ஏனென்றால் அவர்கள்தான் தமிழ் மக்களுடைய ஏகபிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அப்படி இருந்தும் வடக்கு கிழக்கின் எல்லாம் பகுதிகளில் இருந்தும் பின்வாங்கிய புலிகள் மக்கள் செறிவாக உள்ள பகுதியில் பின்வாங்காமல் நின்று சண்டையிடுவதன் நோக்கம் என்ன? இப்பகுதியில் சண்டையிட்டால் பெரும் மனித அவலம் நிகழும். இந்த அழிவை எப்படி நிறுத்துவது?

சிவாஜிலிங்கம்: சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு துணைபோவதை முதலில் நிறுத்தட்டும். பின்னர் வன்னி சென்று மக்களுடன் பேசட்டும். புலிகளுடன் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும். இதற்கு மேல் சிறிலங்கா அரசாங்கத்தினது கொடுமைகள் தொடருமாக இருந்தால் போராடுகிற சக்தியைக் கொண்டிருக்கின்ற நாங்கள். தாங்கும் சக்தியையும் கொண்டிருக்கிறோம். ஒரு படைபலமோ படைபத்தினுடைய எண்ணிக்கையோ ஆயுதங்களோ வெற்றியைத் தீர்மானிக்காது. தாங்குகிற சக்தி தான் தீர்மானிக்கும். இறுதி வெற்றி எங்களுக்கெ என்றதிலை நாங்கள் உறுதியாக இருக்கிறம்.

இதுவரை ஒரு லட்சம் மக்கள் கொல்லபட்டு இருக்கிறார்கள் 25 000 போராளிகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் இதன் முடிவென்ன? இதுக்கு விலையென்ன? வெறும் 13வது திருத்தம் அந்தத் திருத்தம் இந்தத் திருத்தம் என்று சொல்லி எங்களை ஏமாற்ற முற்படுவதற்கு சர்வதேச சமூகம் துணைபோகுமாக இருந்தால் நாங்கள் ஒரு போதும் சர்வதேசத்திற்கு அடி பணிய மாட்டோம். ஒட்டுமொத்த இனமும் அழிய வேண்டி ஏற்பட்டாலும் அதைச் சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் இது தான் எங்களுடைய நிலைப்பாடு.

தேசம்நெற்: ஒட்டுமொத்த இனமும் அழிவதற்கு தயாராக இருக்கிறம் என்று ஒரு மக்கள் பிரதிநிதியாக இருந்துகொண்டு நீங்கள் எப்படிச் சொல்ல முடியும்?

சிவாஜிலிங்கம்: மக்களுக்கு எங்களுக்கு சுயமரியாதை என்ற அடிப்படையில் தான் நாங்கள் போராட ஆரம்பித்த நாங்கள். சுயமரியாதையை இழந்து நாங்கள் சரணாகதியடைந்து மீண்டும் இரண்டாம் தரப் மூன்றாம் தரப் பிரஜைகளாக வாழ்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. மக்கள் எங்களைத் தெரிவு செய்திருக்கிறார்கள் தங்களுக்கு நீதியான கௌரவமான வாழ்வை ஏற்படத்தித் தருவதற்கு.

தேசம்நெற்: ஒட்டுமொத்த இனத்தையும் அழிப்பதற்கு அல்லவே. வெளிநாடுகளுக்கு வந்துள்ள மூன்றிலொரு பகுதி தமிழர்களதும் சுயமரியாதை என்ன?

சிவாஜிலிங்கம்: அதை எங்களால் செய்ய முடியவில்லை என்றால் அடிமையாக செல்லுங்கள் என்று சொல்வதற்கு நாங்கள் தயாராக இல்லை. இதற்கு மேல் நீங்கள் வேறு விடயத்திற்கு செல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

வெறுமனே புலிகள் தான் விடுவிக்க வேண்டும் என்றால் விடுவிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நடந்தது. யாழ்ப்பாணம் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலை. ஆறு லட்சம் மக்கள் இருக்கிறார்கள். வேட்டையாடப்படுகிறார்கள். அதே போல் வவுனியா நகரம் மன்னார் நகரத்தில் மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். கிழக்கு மாகாணம் கொழும்பு நகரம் எங்கும் தமிழ் மக்கள் வேட்டையாடப்படுகிறார்கள். சரி வன்னி நிலப்பரப்பில் தான் அவலங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சரி வேறு எங்கும் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறவில்லையா? இந்த அவலங்களுக்கு முடிவில்லாத நிலையில் வன்னியைவிட மோசமான அவலத்திற்குள் அந்த மக்களைத் தள்ளுவதற்கு நாங்கள் தயாரில்லை. அதற்கு துணை போக முடியாது.

Sivajilingam M K & Sothilingam Tதேசம்நெற்: அண்மையில் இந்தியா சென்று திரும்பிய நீங்கள் பல இந்தியத் தலைவர்களையும் சந்தித்து இருந்தீர்கள். இலங்கை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

சிவாஜிலிங்கம்: நான் அறிந்தவரை இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடு தவறானது என்பது தான் என்னுடைய கருத்து. பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையின் புலிகளை அழிக்கும் யுத்தத்திற்கு முழுமையாக உதவி வருகிறார்கள். இராணுவ ரிதியாக புலிகள் பலமிழந்து போயுள்ளனர். இலங்கை பெரும்பாலும் சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட நிலையே காணப்படுகிறது. ஈரான் நிதியுதவியை அள்ளிக் கொடுக்கிறது. இந்தியாவிற்கு எதிரானவர்கள் இலங்கையில் ஆளுகை செலுத்துகையில் குறைந்தது மூன்றில் ஒரு நிலப்பரப்பாவது தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் பழிவாங்கத் துடிப்பது சீனா, பாகிஸ்தான் நாடுகளின் கையை அங்கு ஓங்கச் செய்யும். இதனை இந்தியா விரைவில் உணரும்.

ஆனால் எமது தொப்புள்கொடி உறவுகளான தாய்த் தமிழக மக்கள் உணர்வாகவும் விழிப்பாகவும் இருக்கிறார்கள். 

தேசம்நெற்: இந்தியக் காங்கிரஸ் கட்சி தான் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். அடுத்த தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சி அமைந்தால் அது விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக அமையும் என்று நினைக்கிறீர்களா?

சிவாஜிலிங்கம்: இந்தியாவின் தேர்தலில் யார் வெற்றி பெறவேண்டும் என்பது பற்றி இந்திய மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் மாற்றங்கள் ஏற்பட்டால் வாய்புகள் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் அவ்வளவுதான்.

பிஜேபி ஆட்சியின் போது அன்ரன் பாலசிங்கம் பயணம் செய்த கப்பல் இந்திய கடற்படையால் வழிமறிக்கப்பட்டது. அப்போது தங்கள் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு தொடர்பு கொண்டு தாங்கள் என்ன செய்வது என்று கப்பலில் இருந்தவர்கள் கேட்டுள்ளனர். அவர்களை சற்றுப் பொறுக்கும்படி சொல்லிவிட்டு விடுதலைப் புலிகள் நெடுமாறன் ஐயாவுடன் தொடர்புகொண்டனர். நெடுமாறன் ஐயா அப்போது பாதுகாப்புச் சௌலாளராக இருந்த ஜோர்ச் பேர்னான்டஸ் உடன் தொடர்பு கொண்டு பின்னர் மனிதாபிமான அடிப்படையில் பயணத்தைத் தொடர அனுமதி வழங்கப்பட்டது.

தேசம்நெற்: தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை படிமுறையாக வெற்றி பெற்றிருப்பதற்கான வாய்ப்பு ஒன்று இருந்தள்ளது. குறிப்பாக இலங்கை – இந்திய ஒப்பந்தம் சந்திரிகாவின் காலத்தில் முன்வைக்கப்பட்ட தீர்வுகள். இதில் தமிழ் அரசியல் தலைமைகள் தவறுவிட்டுள்ளனவா?

Sivajilingam M Kசிவாஜிலிங்கம்: தமிழ் தரப்பில் எவ்விதமான தவறும் இல்லை. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூட தலைமை தாங்கிய வரதராஜப்பெருமாள் என்ன சொல்லிச் சென்றார். அதை நடைமறைப்படுத்த இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்கவில்லை. உண்மையான அதிகாரம் வழங்கப்படவில்லை. ஆனால் அப்படிச் செய்திருந்தால் அடுத்த பக்கம் கொண்டு சென்றிருக்கலாம். 2002 பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட தீ;ர்மானங்களை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை. ஐஎஸ்ஜிஏ க்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையே. பி ரொம்ஸ்க்கு என்ன நடந்தது.

தமிழ் தேசியத்தின் போராட்டம் ஓயாது. வேணும் என்றால் அது மிகவும் நசுக்கப்படலாம். அழிக்கப்படலாம் ஆனால் சாம்பல் மேட்டில் இருந்து பீனிக்ஸ் பறவை எழும்புவது போன்று இந்தப் போராட்டம் திருப்பி வெடிக்கும். எல்ரிரிஈ தவறுக்ள் விட்டுருக்கிறது. நாங்கள் தவறுகள் விட்டிருக்கிறம். ஆனால் அடுத்த தலைமுறை அந்தத் தவறை விடாது என்றதை நான் டெல்லியில் ஒரு திங் ராங்க் அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் சொல்லி இருக்கிறேன். புலிகள் அழிக்கப்பட்டாலும் ஒரு எதிர்ப்பு இயக்கம் ஒன்று எஸ் ஓ வை ஓ என்ற பெயரில் இருக்கட்டும் லோங்ரேமில் ஒரு வரலாறு படைக்கட்டும்.

தேசம்நெற்: தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள முரண்பாடுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?

சிவாஜிலிங்கம்: கட்சிகள் கூட்டமைப்புகள் அனைத்தையும் பிளவுபடுத்திய மகிந்த ராஜபக்சவால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 22 பா உ க்களில் ஒருவரையும் விலைக்கு வாங்க முடியாமல் போனது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று நான் கருதுகிறேன். 

தேசம்நெற்: இன்று இந்த ஆபத்தான சூழலில் தமிழ் மக்கள் தள்ளப்பட்டதற்கு பல்வேறு தவறான முடிவுகள் காரணமாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய பொறுப்பை சரிவரச் செய்யவில்லை என்று நீங்கள் கருதவில்லையா?

சிவாஜிலிங்கம்: விடுதலைப் புலிகளின் ஆதரவைப் பெற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசியல் தீர்வுத் திட்டதை முன் வைக்கத் தவறிவிட்டது என்றே நான் கருதுகிறேன். அவ்வாறான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்காதது மிகப்பெரிய தவறு என்றே நான் கருதுகிறேன்.

தேசம்நெற்: மீண்டும் பழைய விடயத்திற்கே வருகிறேன். இந்த யுத்த்தில் சிக்குண்ட மக்கள் லட்சக்கணக்கான மக்களை எப்படி இந்த அவலத்தில் இருந்து மீட்க முடியும்?

சிவாஜிலிங்கம்: சர்வதேச கண்காணிப்பில் ஆயுதங்களை வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்குப் பொவது தான் மக்களுக்கும் நல்லது எல்லவற்றுக்கும் நல்லது. அப்படி பேச்சுவார்த்தையை நடாத்தி இறுதித் தீர்வு எட்டப்படுமாக இருந்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் புலிகள் சரணடைவதை ஒரு போதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

“விடுதலைப்புலிகளை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர யு எஸ் ஜரோப்பிய ஒன்றியம் யப்பான் நோர்வே கூட்டாக அவசர வேண்டுகோள்”

BBC NEWS: 03 FEB2009

விடுதலைப்புலிகளை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர யுஎஸ், ஜரோப்பிய ஒன்றியம், யப்பான், நோர்வே கூட்டாக அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது ஆயுதங்களை கீழே வைத்து விட்டு இந்த யுத்தத்தையும் மனித அவலத்தையும் தவிர்த்துக் கொள்ளும்படி கூட்டாக அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

விடுதலைப்புலிகள் மிக குறைந்தளவிலான தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து தமது இறுதி யுத்தத்தை செய்யும் இவ்வேளையில் இலங்கை அரசு இலகுவாக இராணுவரீதியாக வெற்றி பெறக் கூடிய வாய்ப்புக்கள் உள்ள இந்த வேளையில் இந்த அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் தமது கடைசித் துண்டு நிலத்தில் உள்ள 250 000 மக்களையும் போராளிகளையும் மனித அவலங்களிலிருந்து தவிர்க்கும்படி கேட்டுள்ளது. இந்த வேண்டுகோளில் அந்தப் பிரதேசத்தில் அகப்பட்டுள்ள மக்களின் கவனத்திலேயே இந்த மேற்குறிப்பிட்ட நாடுகள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது.

மேலும் இந்த நாடுகள் புலிகளை ஆயுதங்களை கீழே வைத்து விட்டு வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறும் அரசினால் அளிக்கப்படும் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுமபடியும் இலங்கைத் தமிழர்க்கான இறுதியான அரசியல்த்தீர்வை எட்டும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முல்லைத்தீவிலுள்ள ஒரே ஒரு மருத்துவமனை கடந்த சில தினங்களாக பல தடவைகள் மோட்டார் தாக்குதலுக்குள்ளாகி பலர் இறந்துள்ள நிலையிலேயே இந்த கூட்டறிக்கை வெளிவந்துள்ளது.

இக் கூட்டறிக்கையில் இரு தரப்பினரம் சர்வதேச சட்டதிட்டங்களை மதித்து செயற்ப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதிற்கு தாம் பொது மக்களை அந்தப் பிரதேசத்திலிருந்து விலகிப்போகும்படி கேட்டுக் கொண்டதாயும் அவர்கள் அப்படிபோக முடியாததிற்கு தாம் பொறுப்பில்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம் தொடர்ந்து குறுகிய வண்ணமே உள்ளது. ஆயுதபாணிகள் வடக்கு நோக்கி நகர்ந்து செல்வதும், விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் என யுஎஸ் ஜரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகள் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது

இந்த கூட்டறிக்கையில் முன்னைய பேச்சுவார்த்தகைளில் நோர்வே மத்தியஸ்த்தம் வகித்து செயற்ப்பட்டபோதிலும் அரசுக்கும் – புலிகளுக்குமிடையிலான பேச்சு வார்த்தை பயனளிக்காது போனதே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் – ஒரு நோக்கு : ரி சோதிலிங்கம்

Protest_UKலண்டன் புலம்பெயர் வாழ்வில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்களில் முன் மாதிரியாகவும் தமிழர்களை ஒன்று சேர்க்கும் பக்குவத்துடனும் BTF-TYO வினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட ஊர்வலம் நடந்தேறியது. இந்த ஊர்வலத்தில் 50000 – 100000 பேர் வரை கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஊர்வலம் கடந்த காலங்களில் புலிகளை முதன்மைப்படுத்தி செய்ய்பபட்ட  நிகழ்வுகள் போலல்லாது பொதுவான வாசக – கோசங்களுடன் நடைபெற்ற போதிலும் புலிகள் தரப்பினர் ஏற்படுத்தும் தவறுகளையோ மனித உரிமை மீறல்களையோ வெளிப்படுத்தி இருந்திருக்கவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலிருந்து மக்களை வெளியேற்ற ஜ நா மற்றும் சர்வதேச அமைப்புக்களின் வேண்டுகொள்களை பிரதிபலித்தோ இருக்கவில்லை என்பதும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

கடந்த கால ஈழப் போராட்ட வரலாற்றில் ஏற்பட்ட பல அரசியற் தவறுகளை, சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவற்றை  புலிகள் தமிழர்கள் பிரதேச சுயாட்ச்சியை  ஏறப்படுத்தும் மைல்கற்களாக பயன்படுத்தாமல் போனது பற்றி பலரிடமும் விமர்சனங்கள் உள்ள போதிலும் நேரிடையாக இன்று வரை புலிசார்பு ஊடகங்கள் அதனை வெளிப்படுத்தவில்லை. இதை ஒரு சுய விமர்சனமாகக் கூட பார்க்கப்படவில்லை என்பது பலரின் ஆதங்கமாக உள்ளது.

இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் அரசுக்கெதிரான கோசங்களும் யுத்த நிறுத்தம் கோரிய கோசங்களும் இந்திய ஆதரவு கோசங்களும் முன்வைக்கப்பட்ட அதேவேளை புலிகளின் தவறுகள் எதுவும் சுட்டிக்காட்டப் படவில்லை.

கடந்த சில வாரங்களாக ஜரோப்பாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் எடுத்து வரப்பட்ட புலிக் கொடி, பிரபாகரனின் படம் போன்றவைகள் இம்முறை லண்டன் ஊர்வலத்தில் முன்வைக்கப்படாமல் இருந்தது மிகவும் வரவேற்க்கத்தக்கதே. இது எதிர்காலதில் சரியான வழிவகைகளை தேட உதவி செய்யும்.

லண்டன் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட பல முக்கிய பதாகைகளில் யுத்தத்தை நிறுத்து; தமிழர்களை கொல்லாதே; பேச்சு வார்த்ததையை ஆரம்பி போன்ற கோசங்களுடன் இந்தியாவே தமிழர்கள் உனது நண்பன் என்ற பதாகை தாங்கப்பட்டதும் குறிப்பிட்டாக வேண்டும். இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் இந்திய இராணுவத்துடன் ஏற்படுத்தப்பட்ட முறுகல் முற்றி சமாதானப் படை கொடூரப்படையாகியது. இன்று இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் எதிரி அல்ல என்ற பதாகையுடன் நிற்கின்றனர்.

இதே போல BBC க்கு எமது போராட்டத்தில் அக்கறை செலுத்தும் படியான பதாகைகள் தாங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கதே. ஆர்பபாட்டங்களில் ஆளும் அரசகளுக்கு எதிராக பதாகைகள் வருவது வழமையே ஆனால் கடந்த வாரம் BTF-TYO வினர் பிபிசி அலுவலகத்திற்கு எதிரான ஓர் ஆர்ப்பாட்டத்தை செய்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொது ஊடகங்கள் தமிழர் போராட்டங்களை பாராமுகமாக இருப்பதற்கான காரணங்களை அறிந்து அவற்றின் ஊடாக அந்த ஊடகங்களின்  கவனத்தை ஈர்ப்பதே சரியானது. அதைவிடத்து அந்த BBC க்கு எதிராக போர்க்கொடி ஏந்தி பலவந்தமாக பாடம் கற்பிக்கும் தன்மைக்கு எப்படியான பதில் கிடைக்கும் என இனிவரும் காலங்களில் அறிந்து கொள்ளலாம்.

BTF ன் முக்கிய உறுப்பினர் சுரேந்திரன் SKY ற்கு கருத்தப்பரிமாறிய போது  தமிழர்களின் பிரதிநிதி புலிகள் என்றும் புலிகளுடன் அரசு யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார். இதன் மூலம் BTF தமிழர்களின் ஏகபோக பிரதிநிதி புலிகள் மட்டுமே என்ற கருத்தை வெளிப்படுத்துவதாகவே தெரிகிறது. கடந்த சில வருடங்களாக இலங்கையில் வட – கிழக்கு பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை BTF சுரேந்திரன் புரிந்து கொள்ள தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.

ஏதிர்பார்த்ததைவிட மிக அதிகமானோர் ஊர்வலத்திற்கு வந்திருந்ததாலும், லண்டன் பொலீசாரின் இக்கட்டான நிலைமைகளினாலும், ஊர்வலத்தில் பங்கு பற்றிய ஒரு பகுதியினர்க்கு சில அசௌகரியங்கள் ஏற்பட்டதும் அந்த குளிரிலும் அந்த அசௌகரியங்களை தமிழர்கள் பொறுமையாக ஒத்தழைத்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

ஊர்வலத்தின் இறுதியில் 5000 பேர் வரையிலானவர்கள் பாராளுமன்றதின் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்  பாராளுமன்றத்தில் மகஜர் கையளித்தனர். கையளிக்கப்பட்ட மகஜருக்கு பதில் ஓரிரு தினங்களில் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரம் 4ம் திகதி இலஙகையின் சுதந்திர தின நாளை கரி நாளாக அறிவித்து போரட்டம் ஒன்றை BTF-TYO ஒழுங்கு செய்துள்ளனர்.

வன்னி மக்கள் விடுவிக்கப்பட வேண்டும்!! யுத்தம் நிறுத்தப்பட வேண்டும்!!! – ஜனவரி 31 லண்டனில் ஆர்ப்பாட்டப் பேரணி : ரி சோதிலிங்கம்

Jan31_London_Protestவன்னியில் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் அகப்பட்டு ஒருசிறிய பிரதேசத்தில் மிகப் பெருந்தொகையான மக்கள் தவிக்கும் இக்காலத்தில் இம் மக்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடாத்த லண்டனில் ஒழுங்கு செய்ய்பட்டடுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை பிரித்தானிய தமிழர் ஒன்றியம் (BTF) ஒழுங்கு செய்துள்ள போதிலும் இதில் தமிழ் மக்களின் தர்மீக போராட்டத்தை ஆதரிக்கும் பெரும்பாலான மக்களும் அமைப்புக்களும், இயக்கங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

கடந்த காலங்களில் லண்டனில் நடைபெற்ற பல பொதுவான தமிழ்ரகள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் தமிழர்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்று கூடும்படி கேட்டுக் கொண்டபோதும் இறுதியில் ஆர்ப்பாட்டங்கள் புலிகளின் ஆதரவு ஆர்ப்பாட்டங்களகவும் புலிகள் மட்டும் தனித்த ஏகபோக தலைமை என்ற அங்கீகாரம் கேட்கும் கூட்டங்களாகவே அமைந்திருந்தது. அப்படி ஒழுங்கு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்களினால் எந்தவித பலாபலனும் கிடைக்காமல் போனதும் புலம் பெயர்வாழ்வின் வரலாறாகிவிட்டதை நாம் மறந்துவிட முடியாது.

குறைந்தபட்சம் 40 பேர் கூடும் ஆர்ப்பாட்டங்களை BBC – ITV பெரிய செய்திகளாக்கி தேசிய தொலைக்காட்சில் வெளிப்படுத்தி கொடுக்கும் ஆதரவின் ஒரு துளியைக் கூட 50,000 தமிழ் மக்கள் பங்கேடுத்து நடாத்தும் போராட்டங்களுக்கு கொடுக்காததின் உண்மையை விளங்க முன்வர வேண்டும்.

இப்டியான ஆர்ப்பாட்டங்களில் ஒன்று மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிராக கடந்த ஆண்டு யூனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம். இதன் போது எல்லோரும் வருகை தாருங்கள், பழையதை மறவுங்கள், தமிழர்கள் ஒன்று என்பதை மட்டும் நினைவில் கொண்டு வாருங்கள் என்றெல்லாம் அழைப்புக்கள் விடுக்கப்பட்ட போதிலும் ஆர்ப்பாட்டத்தில் நடந்த பல சம்பவங்களினால் அதன் பலாபலனை சரியாக வெளிக் கொணர முடியாது போனதும் நாம் தெரிந்து கொண்டதொன்றே. இப்படியான சம்பவங்களக்கு BTF தரும் விளக்கங்களும் வழமைபோல யாரோ வாறாங்கள், என்னவோ செய்யிறாங்கள் அதற்கும் எமக்கும் தொடர்பில்லை என்ற பொறுப்பற்ற பதிலாகும்.

ஏதிர் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட ஊர்வலம் அப்படியான சம்பவங்களை எதிர்பார்துள்ள போதிலும் தமது சுதந்திரமின்றி அவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள நிர்ப்பந்தத்திலிருந்து அம் மக்கள் வெளியே அனுமதிக்கும் படியான நிர்ப்பந்தத்தை அடக்குபவர்கள் மீது செலத்தும் நிகழ்வாகவும் அக்கோரிக்கையில் அம்மக்கள் வெற்றி கொள்ளும் படியாகவும் அமைய வேண்டும்.

போர்ச் சூழலில் வன்னி மக்கள் மிகக் குறைந்த பிரதேசத்தில் மிகப் பெருந்தொகையாக மிகசெறிவாக வாழ்வது மரணங்களையும் அதிகரிக்வே செய்யும். இந்த மக்களை விடுவிக்கக் கோருவதும் யுத்தத்தை நிறுத்தக் கோருவதும் மிகவும் முக்கியமான விடயம். இன்று வன்னியில் ஏற்ப்பட்டுள்ள மிக இக்கட்டான சூழநிலைகளைப் பயன்படுத்தி புலிகள் தமது ஏகபோக பிரதிதநிதித்துவம் பெறுவதற்கு இவற்றை பயன்படுத்தக் கூடாது. இந்த விடயத்தில் எல்லா தமிழர்க்கும் பொதுவானதாகச் செயற்படுவதாகக் கூறும் பிரிட்டிஸ் தமிழ் போரம் (BTF) இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கடந்த சில நாட்களாக வன்னி மக்களுக்காக நடைபெற்ற இப்படியான ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் இந்த மக்களின் பிரதிபலிப்புக்கு மேலாக அந்த அந்த ஆர்ப்பாட்டங்களில் பறக்கவிடப்படும் புலிகளின் கொடிகளும் படங்களும் புலிகளுக்கு அங்கீகாரம் தேடும் மற்றும் புலிகளே  ஏகபோக பிரதிநிதித்துவம் பெறும் நிகழ்வாக நடைபெறுவது அவதானிக்கப்படுகிறது. வன்னி மக்களின் பரிதாபகரமான நிலையில் அவர்களின் பரிதாபத்தில் அவர்களின் துன்பத்தில் அவர்களின் உதவிகளற்ற மரண அனுதாபத்தை புலிகளின் தேவைகளுக்கு பாவித்துவிடக் கூடாது. இப்படி செய்யப்படுவதன் மூலம் பெறவேண்டிய பலனை இந்த நிகழ்வு பெறாது போய்விடும்.

புலிகளுக்கு அங்கீகாரம் பெறும் அல்லது புலிகளுக்கு ஏகபோக பிரநிதித்துவம் பெற தனிப்பட்ட தனியான ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதே சாலப் பொருத்தமானதும் அதற்குரிய பலனை பெறக் கூடியதும் ஆகும்.

யாழ்பாணத்தை விட்டு மக்கள் வெளியேறியபோதும் இதே போன்றதொரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஏற்பபாடு செய்து விட்டு ஏற்பாட்டாளர்கள் புலிகளின் கொடியையும் படங்களையும் வைத்து ஆர்ப்பாட்டத்தை நடாத்தியது நினைவிருக்கலாம். அந்த ஆர்பாட்டம் மிகச்சிறிய சலசலப்பைக் கூட ஜரோப்பிய நாடுகளில் ஏற்பபடுத்தாது போனதும் நினைவிருக்கலாம்.

கடந்த காலத்தில் போராட்ட அணுகு முறைகளிலும் மனிதாபிமான நடத்தைகளிலும் எற்ப்பட்ட தவறுகளே இன்று தமிழ் மக்களின் அரசியற் தீர்விற்கான பாதையற்றுப் போன காரணங்களாகும். இப்படியான தவறுகளை தொடர்ந்தும் ஏற்படுத்தாது இருக்க வேண்டும்.

நாளை (ஜனவரி 31) நடைபெறும் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் அந்த வன்னி மக்களின் சுதந்திர நடமாட்டத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இருத்தல் வேண்டுமே ஒழிய புலிகளின் பிரதி நிதித்துவத்திற்கு அங்கீகாரம் கேட்பதாக இருக்கமாயின் அந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் நோக்கத்தை அடைய முடியாத போய்விடும். இதுவும் கடந்த காலங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் போலவே பிரயோசனம் அற்றதாகிவிடும்.

இந்த வாரம் வெளிவந்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின், ஜக்கிய நாடுகளின் மன்றத்தின் அறிக்கைகள் யாவும் இதுவரையில் விடுதலைப் புலிகள் முக்கியமாகவும், இலங்கை அரசும் மக்களின் நடமாட்டத்திற்கு தடையாக இருப்பதாகவும், காயமடைந்த குழந்தைகள், வயோதிபர்களின் மக்களின் வெளியேற்றத்திற்கு தடையாக இருப்பதாயும் தெரிவிக்கின்றன. இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலமும் இந்த இருதரப்பினரையும் (விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும்) வன்னி மக்கள் மீதுள்ள தடைகளை நீக்க கோரும் ஆர்ப்பாட்டமாக நடைபெற வேண்டும் அம் மக்கள் பலன்பெற வேண்டும்.

யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு வன்னி மக்களை சுதந்திரமாக செயற்ப்பட புலிகளும் அரசும் அனுமதிக்க வேண்டும்.

.
ஜனவரி 31 லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம் பற்றிய விபரம்:

STOP SRI LANKA’S GENOCIDE OF TAMILS
      MASS PROTEST MARCH
on
SATURDAY, 31st JANUARY 2009

in
Central London
Begins 1:00 PM at MILLBANK
(Nearest station Vauxhall or Pimlico)

இலங்கை அரசின் ஊடகங்கள் மீதான தாக்குதலுக்கு லண்டன், அயர்லாந், ஜேர்மனி, சுவீடன், பெல்ஜியம் இலங்கைத் தூதரகங்களின் முன் ஆர்ப்பாட்டம் : ரி சோதிலிங்கம்

Rivira_Editorஇன்று (ஜனவரி 23) இலங்கையில் மற்றுமொரு ஊடகவியலாளர் மீது கொலை முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இலங்கை அரசு மீதான கடுமையான விமர்சனங்களைக் கொண்ட ‘ரவீர’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் மீதும் அப்பத்திரிகையின் ஊழியர் மீதும் கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்று உள்ளது. காயங்களுக்கு உள்ளான ரவீர ஆசிரியர் உப்பாலி தென்னக்கோன் உயிராபத்து இன்றி தப்பித்துள்ளார்.

இன்று காலை அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த உப்பாலி தென்னக்கோனை வழிமறித்த கறுத்தத் துணி அணிந்த நால்வர் முகத்தில் கத்தியால் குத்தி தடியால் அடித்ததாக உபாலி தென்னக்கோணின் சகோதரர் தம்மிக்க ஜெயக்கொடி தெரிவிக்கிறார்.

இச்சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உப்பாலி தென்னக்கோணின் அருகில் இருந்த பெண்ணினால் தான் உப்பாலி தென்னக்கோணின் உயிர் தப்பியது. இல்லாவிட்டால் லசந்தவிற்கு நடந்தது தான் தென்னக்கோனிற்கும் நடந்திருக்கும் என்று தெரிவித்தார்.

வடக்கில் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றிகளைக் குவித்துக் கொண்டு அந்த வெற்றி அலையில் தனக்கு எதிரான சக்திகளை வேரறுப்பதில் மகிந்த அரசு முனைப்புடன் செயற்படுகிறது. ஊடகங்களுக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தியத்தில் மகிந்த அரசு முன்னணியில் நிற்கிறது. 
 
‘நான் இறுதியாக அரச தரப்பினராலேயே கொல்லப்படுவேன்.” என்பதை தனது மரணத்திற்கு முன்பே ஒரு ஊடகவியலாளன் எழுதிவிட்டுச் செல்லுமளவிற்கு அரசு மீது விமர்சனங்களுடைய ஊடகங்கள் மீதும் நபர்கள் மீதும் மகிந்த அரசு திட்டமிட்ட தாக்குதலை நடத்துகிறது. ஜனவரி 8ல் சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். அதற்கு 24 மணிநேரத்திற்கு முன் எம்ரிவி தாக்கப்பட்டது. இவற்றுக்கு எதிரான சர்வதேச கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் ரவீர ஆசிரியர் உப்பாலி தென்னக்கோன் தாக்கப்பட்டுள்ளார்.

சண்டே லீடர் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலையை கண்டித்து இலங்கைத் தூதரகங்கள் முன் ஆர்ப்பாட்டங்களை கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல்  (Comittee for Workers International) ஒழுங்கு செய்திருந்தது. இந்த ஆர்பாட்டங்கள்  14 ஜனவரி அயர்லாந்திலும், 16 ஜனவரி லண்டனிலும், 16 ஜனவரி சுவீடனிலும் மற்றும் ஜேர்மனி, பெல்ஜியம் ஆகிய இடங்களிலுமுள்ள இலங்கைத் தூதரகங்களின் முன்னால் நடைபெற்றன. இந்த ஆர்ப்பாட்டங்களில் இலங்கையில் நடைபெறும் போர் கொலைகள் ஜனநாயக மறுப்பு போன்றவற்றிற்கான எதிர்ப்பு கோஷங்களும் எழுப்பப்பட்டன. கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல் லண்டன் இலங்கைத் தூதரகம் முன்னால் ஏற்பாடு செய்த எதிர்ப்புப் போராட்டத்திற்கு தேசம்நெற் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்திருந்தது.

வன்னிப் பிரதேசத்தில் நடைபெறும் மனித அவலங்கள் பற்றியும் காஸாவில் நடைபெறும் மனித அவலங்கள் பற்றியும் குரல்கள் ஒலித்தது. மனித அவலங்களையும் யுத்தத்தையும் உடனடியாக நிறுத்தவும் ஜனநாயக நடவடிக்கைகளை உடன் அமுல்ப்படுத்தவும் கோரி  மகஜர்கள் கையளிக்கப்பட்டதுடன்  அவை உலகின் முக்கிய தலைநர்களில் பிரசுரங்களாக வெளியிடப்பட்டது.

லண்டன் இலங்கைத் தூதரகம் முன்னால் கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல் ஏற்பாடு செய்த போராட்டத்தில் தங்கள் கட்சி பனரை கட்டிய போது அதேநேரம் அங்கு வந்திருந்த சில எஸ்எல்டிஎப் – இலங்கை ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் அந்த பனரை அவிழ்த்து அசிங்கமாக நடந்துகொண்டனர். மற்றும்படி வேக்கர்ஸ் இன்ரநசனல் உலகின் முக்கிய தலைநகரங்களில் இலங்கைத் தூதரகம் முன்னால் மேற்கொண்ட எதிர்ப்பு போராட்டங்கள் இலங்கை அரசை சர்வதேச ரீதியில் அம்பலப்படுத்த உதவியுள்ளது.

ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமடைந்து உள்ளதால் இலங்கையிலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேறிச் செல்வதைத் தடுப்பதுடன் நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர்களை மீண்டும் நாட்டுக்குத் திரும்பியழைப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென எல்லைகள் கடந்த ஊடகவியலாளர் அமைப்பு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக எல்லைகள் அற்ற ஊடக அமைப்பின் ஆசிய பசுபிக் பிராந்தியத் தலைவர் வின்சன்ற் புறொசல் கூறியுள்ளதாவது;

”இலங்கையை விட்டு பல ஊடகவியலாளர்கள் வெளியேறி வருவதால் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி அவர்கள் வெளியேறுவதைத் தடுக்கும் முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். சர்வதேச சமூகம் குடிவருவோரைத் தடுப்பதில் தீவிரமாகவுள்ளது. ஆனால் அவர்கள் இலங்கை அரசு பயங்கரமான சூழ்நிலைகளை உருவாக்குவதைத் தடுத்து நிறுத்துவதே புத்திசாலித்தனமானது. இலங்கை அரசின் வன்முறைகளால் தான் அதிக ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இலங்கையில் ஊடகவியலாளர்கள் இரத்தம் சிந்துவது தனக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதைத் தடுக்கும் அரசின் உத்திகளில் ஒன்று. ஊடகவியலாளர்கள் இல்லாத நாடு ஜனநாயக நாடாக இருக்க முடியாது.

இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் உயர் அதிகாரிகள் நேரடியான அச்சுறுத்தல்களை விடுத்து வருவதனால் அங்கு ஊடகவியலாளர்கள் வாழ்வது சாத்தியமற்றது என்ற நிலை தோன்றியுள்ளது. முக்கியமான ஊடகங்களில் பணியாற்றி வந்த பல ஊடகவியலாளர்கள் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களினால் நாட்டை விட்டு வெளியேறவில்லை. மாறாக அவர்கள் அரசின் அழுத்தங்களினால் தான் வெளியேறி வருகின்றனர். “சண்டேலீடர்’ ஆசிரியர் லசந்த விக்கிரம துங்கவின் படுகொலையைத் தொடர்ந்து ஐந்து ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது ‘எம்.ரி.வி.’ தொலைக்காட்சியின் தலைவரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இலங்கையிலிருந்து ஊடகவியலாளர்களும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பொதுமக்களும் வறுமை காரணமாக வெளியேறவில்லை அரசியல் பழிவாங்கல்கள் காரணமாகவே வெளிவருகின்றனர்” என்றும் கூறியுள்ளார்.

சர்வதேச தூதரகங்களுக்கு முன் இடம்பெற்ற  ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக கொமிற்றி போர் வேக்கர்ஸ் இன்ரநசனல் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு கிழே:

Berlin_SL_Embassysocialistworld.net

20 January 2009
Sri Lanka
International protests against killing of Lasantha Wickrematunge
Socialists call for media freedom, peace, democracy and socialism

On Friday 16 January, solidarity protests were organised at embassies and consulates around the world, in response to the murder of Lasantha Wickmeratunge, Sri Lankan journalist and editor of the Sunday Leader, by thugs apparently protected by state authorities. Lasantha’s killing represents yet another atrocity perpetrated with impunity under the dictatorial Rajapakse regime, determined to crush all opposition to its corruption, and the waging of its bloody war against Tamil-speaking people.

In the latest developments, the government has been claiming ‘victories’ at the expense of the LTTE (Liberation Tigers of Tamil Elam), recently having driven the Tigers, along with 100,000 innocent civilians, out of the town of Kilinochchi. More than 300,000 refugees are now crammed into an area 25 miles wide around Mullaitivu, where the ‘Tigers’ are resisting the Sri Lankan Army onslaught. A human tragedy on the scale of Gaza is in train.

Berlin_Handing_in_Protest_LetterCWI protestors have condemned the Lasantha killing, but also argued the case for a genuine solution to the 25 year cycle of war and repression in Sri Lanka, on the basis of a socialist alternative to the dead-end of capitalism and communalism.

Protests took place in England, Ireland, Germany, Belgium, and Sweden among other countries. In response to the call from the CWI and the Civil Monitoring Committee for messages of protest to be sent to the Sri Lankan authorities, a flood of letters were sent from around the world, including from elected councillors and trade union activists from Ireland, Australia, Belgium, Sweden, and Britain. Below are some short reports from a number of the protests.

London, England

London_ProtestOn Friday 16 January, around 50 protestors gathered at the Sri Lankan embassy in London at a protest called by the Socialist Party (CWI in England & Wales). Protestors expressed disgust at Lasantha Wickmeratunge’s ( a prominent Sri Lankan journalist and editor of the Sunday Leader newspaper) murder, which was regarded by all present as but one aspect of the Sri Lankan government’s suppression of media freedom. The murder of Lasantha was intended by the government to send a message: that all who seek to speak out about government corruption, or to tell the truth about the government’s persecution and military assaults on Tamil-speaking people in their execution of the 25 year long civil war, face repression or even death. The response of the protestors to this message was a determined demand for media freedom, peace and democracy. Two letters were handed in to the embassy, from the Socialist Party and the CWI International Secretariat, demanding a response from the High Commissioner to the violence against the Sri Lankan media by the government he represents. Our representatives were refused entry to the embassy to relay our concerns.

Socialist Party slogans and placards were unique on the demonstration in the clear programme they put forward, demanding media freedom and an end to attacks and killings. Crucial demands included those for:

A socialist alternative to the quagmire of capitalism and communalism in Sri Lanka
A united struggle of Sinhala, Tamil and all of Sri Lanka’s workers and poor against the war and clan rule in Sri Lanka
The replacement of the dictatorship of warlords and capitalists with a democratic socialist society, in Sri Lanka and throughout the South-Asian region
The use of the resources of society to benefit the majority
Democracy and freedom of speech for all.

Brussels, Belgium
Cédric Gérôme, Brussels

A dozen activists from the PSL/LSP (CWI in Belgium) gathered on Friday morning, in front of the Sri Lankan embassy in Brussels, in reaction to the recent murder of the chief editor of the Sunday Leader, Lasantha Wickrematunge. This action took place within the framework of an international campaign of protest organised by the CWI, on the initiative of the United Socialist Party, our Sri Lankan section.

We intended to protest against the violence (intimidation, ‘disappearances’, murders, kidnappings..) of the Sri Lankan government and its supporters, not only against journalists, but also political and trade union activists, members of humanitarian organisations, and all those who oppose its policy, in particular its war against the Tamil Tigers, being used as a pretext for a campaign of persecution against the Tamil community.

Two of our members were received by the ambassador. He asserted that our action was based on a ‘misinterpretation’ of the ongoing conflict in the country. Asserting without the slightest irony, that Sri Lanka is a ‘socialist state’, and claiming to be an expert on Marxism, the ambassador spoke for some 20 minutes, about what he considers as a ‘good war’ conducted ‘only against the terrorists of the LTTE’ (the Liberation Tigers of Tamil Eelam). He suggested insidiously that those who oppose the policy of the president Rajapakse are on the side of the terrorists and that the civilians killed by the governmental forces are just ‘collateral damage’. We did not wish to pursue this useless dialogue any longer…

The conditions in which our CWI comrades of the United Socialist Party are building support for socialism in Sri Lanka are extremely precarious and dangerous. We want to express to them our unconditional support, and our will to engage other solidarity campaigns if necessary.

Dublin, Ireland

Dublin_ProtestOn Wednesday 14 January, members of the Socialist Party organised a protest outside the Sri Lankan consulate, against the murder of Lasantha Wickramatunge. Protestors held placards declaring: “Stop state collusion in murder of journalists!” and “Lasantha Wickramatunge murdered by thugs connected to President Rajapakse”.

A protest letter from the Socialist Party and Socialist Youth was handed in to the embassy.It condemned the murder and highlighted the trampling on democratic rights in Sri Lanka. It also called for a genuinely independent inquiry into the murder of Lasantha Wickramatunge and expressed the Socialist Party’s determination to continue to expose the harassment and violence against those who speak out against the government.

Stockholm, Sweden
“When finally I am killed, it will be the government that kills me,”

These now famous words of the murdered editor, Lasantha Wickramatunge, were quoted at the protest at the Sri Lankan embassy in Stockholm, Friday 16 January. Angry protesters from Rättvisepartiet Socialisterna (CWI Sweden) and supporters gathered in temperatures of minus 5 degrees, outside the embassy. A protest letter, signed by the party’s eight city councillors, was delivered and embassy staff promised to forward it to the government in Colombo. By the end of the protest, the protesters had been approached by two men, connnected to the embassy, who took photographs of us. The murder of Lasantha Wickramatunge has also been reported in an article, in the newspaper of the Swedish Journalist’s Union.