ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இன்னிங்ஸ் நடைமுறையை கொண்டு வர அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முடி வெடுத்துள்ளது.
இதற்கு அவுஸ்திரேலிய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். எனினும் இந்த முறையை சச்சின் டெண்டுல்கர் வரவேற்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் இனிமேல் நடை பெறும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கள் 2 இன்னிங்ஸ் முறையில் நடைபெறும் என அந்த நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்து உள்ளது.
தன்படி ஒரு நாள் ஆட்டத்தில் இரு அணிகளும் 45 ஓவர்கள் விளையாட வேண்டும். முதல் இன்னிங்ஸ் 20 ஓவர் களைக் கொண்டதாக இருக்கும். இரண் டாவது இன்னிங்ஸ் 25 ஓவர்களைக் கொண்டதாக இருக்கும். அவுஸ்திரேலி யாவில் நடைபெற உள்ள மாகாணங்களுக்கு இடையேயான தேசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமுள்ள 31 ஆட்டங்களும் இந்த முறையிலேயே நடைபெறும் என அந்தநாட்டு கிரிக்கெட் சபை கூறியுள்ளது.
இந்த முறைக்கு ரிக்கி பொண்டிங், மைக் ஹசி உள்ளிட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்த முறையால் அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் எதிர்காலத்தில் பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் 20 ஓவர் போட்டிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி முறையை ஒழிக்கவே இந்தமுறை கொண்டுவரப்படுவதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.
எனினும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்த முறையை வரவேற்றுள்ளார்.
இது குறித்து மும்பையில் வெள்ளிக் கிழமை அவர் கூறியது: அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் முயற்சி வரவேற்கத் தக்கது.
ஒரு நாள் போட்டிகளில் 2 இன்னிங்ஸ் முறையை அமுல்படுத்தும் யோசனை எனக்கு 2002ம் ஆண்டிலேயே தோன்றியது. அதை 2009ம் ஆண்டு வெளிப்படுத்தினேன்.
ஒரு நாள் போட்டிகளின் போது ஆட் டத்தின் பிற்பகுதியில் மழை குறுக்கிட்டால் 2வதாக துடுப்பெடுத்தாட்டம் செய்யும் அணி அதிகம் பாதிக்கப்படுகிறது. அதே போல பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாட்டம் செய்யும் அணி பகலில் துடுப்பெடுத்தாடு வதை முடித்து விடுகிறது. மற்றொரு அணி இரவில் விளக்கு வெளிச்சத்தில் விளையாட வேண்டி உள்ளது. இன்னிங்ஸ் முறை கொண்டுவரப்பட்டால் இரு அணிகளுமே பகலிலும், விளக்கு வெளிச்சத்திலும் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்ப டும் இது வரவேற்கத்தக்கதே. சர்வதேச போட்டிகளிலும் இந்த முறை கொண்டு வரப்பட வேண்டும் என்றார் டெண்டுல்கர்.