தேசம் திரை

தேசம் திரை

சினிமா அறிமுகம், விமர்சனம் மற்றும் பதிவுகளும் செய்திகளும்.

பிரபாகரன் குறித்த படத்தில் பிரகாஷ் ராஜ்

prakash-raj.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. இந்தப் படத்தில் பிரபாகரன் வேடத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ். இந்தத் தகவலை  அவரே வெளியிட்டார். வித்தியாசமான வேடங்களைத் தேடித் தேடி செய்யும் பிரகாஷ் ராஜ், பிரபாகரன் வேடத்தில் நடிப்பது தனது கேரியருக்கே பெருமை சேர்க்கும் விஷயமாகும் என்கிறார்.

இந்த வேடத்துக்காக பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்கள் மற்றும் அவர் சம்பந்தப்பட்ட வீடியோக்களை தேடிப்பிடித்து பார்க்கிறாராம் பிரகாஷ்ராஜ்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பதை இன்னும் அவர் வெளியிடவில்லை.  விரைவில் படம் குறித்த முழு விவரங்களைச் சொல்வதாக அறிவித்துள்ளார் பிரகாஷ்ராஜ்.

மனித அவலத்தில் இருந்து மீண்ட வன்னி மக்களை நோக்கி – சந்திப்பு

Wanni_Warமிகக் கொடிய மனித அவலத்தில் இருந்து மீண்டு தொடர்ந்தும் துயர்மிகு வாழ்வை எதிர்நோக்கியுள்ள வன்னி மக்களுக்கு முடிந்த அளவு உதவிகளை மேற்கொள்வதற்கான சந்திப்பு ஒன்றினை தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைக்கலை அமைப்பும் ஏற்பாடு செய்துள்ளனர். இச்சந்திப்பில் முக்கிய அம்சமாக வன்னியில் ஏற்பட்ட மனித அவலத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உதவித் திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட உள்ளது. ஏற்கனவே ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் தேசம்நெற்றும் தனித்தனியாக முன்னெடுக்க முற்பட்ட உதவி நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ளவும் எவ்வாறு உதவி நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் கலந்துரையாடப்பட உள்ளது.

கடந்த ஆண்டு முதல் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் தேசம்நெற்றும் இணைந்து நடாத்தும் குறும்படக் காட்சிப்படுத்தலின் 5வது காட்சிப்படுத்தலைத் தொடர்ந்து இச்சந்திப்பு சறேயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கலந்துரையாடலில் முக்கியமாக உடனடி மற்றும் நீண்டகால உதவி நடவடிக்கைகள், உதவ முன்வருபவர்களை நேரடியாக உதவித் திட்டங்களில் இணைப்பது, அனைத்து உதவி நடவடிக்கைகளிலும் வெளிப்படையான தன்மையைக் கொண்டிருப்பது இதன் மூலம் நம்பகத் தன்மையை ஏற்படுத்துவது என்பன பற்றியும் ஆராயப்பட உள்ளது. குறிப்பாக அப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொள்வதால் காத்திரமான உதவித் திட்டங்களை செயற்படுத்த முடியும்.

மே 2 குறும்படக் காட்சி நிகழ்வில் சந்திரியின் கதை மெமறிஸ் ஒப் பாஸ்ற் ஆகிய இரு குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. ஜானகி விஸ்வநாதனின் சந்திரியின் கதை சாதிய ரீதியான சமூக ஒடுக்குமுறையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட குறும்படம். மெமறிஸ் ஒப் பாஸ்ற் தேம்ஸ்வலி பல்கழைக்கழக மாணவர்களின் தயாரிப்பு. இவற்றுடன் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட துறூத வின்டோ – யன்னலினூடாக என்ற ஆர் புதியவனின் குறும்படமும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

சந்திப்பு விபரங்கள்:

6.30 pm on 2nd of May 2009.

The Corner house
116 Douglas Road
Surbiton

தேசிய சினிமா மற்றும் ரூபவாஹினிக் கல்லூரி

anura.jpgதேசிய சினிமா மற்றும் ரூபவாஹினிக் கல்லூரியொன்றை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை தகவல் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா முன்வைத்திருந்தார்.

அரசாங்க திரைப்படப் பிரிவுடன் இணைந்தாக இது இயங்கும். இதன் இயக்குணநராக பேராசிரியர் தர்மசேன பதிராஜ நியமிக்கப்பட்டுள்ளார். கல்லூரியால் நிரந்தர வருமானம் கிடைக்கும்வரை இவருக்கு மாதாந்தம் 40 ஆயிரம் ரூபா அரச நிதியத்திலிருந்து சம்பளமாக வழங்கப்படும்.

கலைஞர் திஸ்ஸ அபேசேகரவின் இறுதிக் கிரியைகள் இன்று

thissa-abeysekara.jpgகாலஞ் சென்ற பிரபல சினிமாக் கலைஞர் திஸ்ஸ அபேசேகரவின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை கொழும்பு, ராஜகிரியவிலுள்ள சந்திரா டி சில்வா விளையாட்டரங்கில் பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

அன்னாரின் பூதவுடல் இன்று காலை 6.00 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை கொழும்பு தேசிய கலாபவனத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து மாலை 3.00 மணிக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ள நடைபெற மைதானத்துக்குக் கொண்டு வரப்பட்டு 3.30 மணிக்கு இறுதிக் கிரியைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகயீனமுற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கலைஞர் திஸ்ஸ அபேசேகர கடந்த 18ஆம் திகதியன்று காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்லம்டாக் மில்லியனர்”- சிறுமி ருபீனா விற்பனைக்கு : விலை $400,000

rubina.jpgபல ஆஸ்கார்களை குவித்துள்ள “ஸ்லம்டாக்  மில்லியனர்” திரைப்படத்தில் வரும் சிறுவர்களை யாராலும் எளிதில் மறக்க முடியாது. அதில் தேவன் படேல் மற்றும் ப்ரீடோ – லத்திக்காவின் சிறு வயது சிறுவர்களாக இஸ்மாயிலும் ருபீனாவும் நடித்திருந்தார்கள். நேற்று ஒரு பிரிடிஷ் நாளிதழ் “ஸ்லம்டாக்  மில்லியனர்”- சிறுமி ருபீனா விற்பனைக்கு விலை USD $400,000 என்று அறிவித்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ருபீனாவின் தந்தை ” குப்பத்தில் கஷ்டப்படும் எங்களுக்கு ஸ்லம்டாக்  மில்லியனர் படக்குழு ஒரு பைசாகூட தரவில்லை. எங்கள் குழந்தை ருபீனாவின் நட்சத்திர அந்தஸ்தால் அவரை தத்தெடுக்க பலர் முன் வரலாம். அதனால் இந்த விலையை நிர்ணயித்துள்ளோம். இவரது விலையால் அவளது எதிர்காலத்திற்கும், எங்கள் குடும்பத்திற்கும் நல்லது” என தெரிவித்திருந்ததாக பிரிடிஷ் நாளிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சிஎனென்-ஐபிஎன்னுக்கு நேரடியாக பேட்டியளித்துள்ள அவரது தந்தை இந்த செய்தியில் உண்மையில்லை. ஆனால் நாங்கள் வறுமையில் வாடுவதும், எங்களுக்கு ஸ்லம்டாக்  மில்லியனர் படக்குழு ஒரு பைசாகூட தரவில்லை என்பதும் உண்மை என தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கௌரவ கலாநிதி பட்டம்

arrahma.jpgஒஸ்கார் விருது பெற்ற தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக் கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கத் தீர்மானித்துள்ளது.  மிடில்செக்ஸ் பல்கலையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் ஜோ விக்டர், சென்னையில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவர் ஆரம்பித்துள்ள இசைப் பள்ளியின் முதன்மை நிர்வாக அதிகாரி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன் போது எதிர்வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் பல்கலைக்கழக விழாவில் ரஹ்மானுக்கு கலாநிதி பட்டம் வழங்க உள்ளதாக ஜோ விக்டர் தெரிவித்துள்ளார்.

நாளை- மார்ச் 29- நான்காவது குறும்படக் காட்சி – ‘லண்டன் மாப்பிள்ளை’

Vili Clipதேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைக்கலை ஒன்றியமும் இணைந்து நடாத்தும் 4வது திரையிடு நிகழ்வு மார்ச் 29 அன்று சறேயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாலை 5:30 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்வில் விழி, ஆய்சா ஜன்னலூடாக ஆகிய படங்கள் திரையிடப்பட உள்ளது. (திரைப்பட நிகழ்வு : நானும் நீங்களும் விழித்தெழுதலும் : யமுனா ராஜேந்திரன்) திரையிடலைத் தொடர்ந்து சிறு கலந்துரையாடலும் இடம்பெறும். காட்சி விபரங்கள் கீழே.

பெப்ரவரி 21 அன்று அதே இடத்தில் சறேயில் இடம்பெற்ற திரையிடலில் நூறு பேர்வரை கலந்து கொண்டதுடன் கலந்துரையாடலிலும் தங்களை ஈடுபடுத்தி இருந்தனர். இவ்வாறான முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களுடைய கருத்துக்களில் வெளிப்பட்டு இருந்தது.

வழமைக்கு மாறாக அந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் புதிய பார்வையாளர்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் லண்டனில் குறிப்பாக கிழக்கு லண்டனில் மட்டும் திரையிடப்பட்டு வந்த குறும்படக் காட்சிகள் எதிர்வரும் காலங்களில் லண்டனின் ஏனைய பகுதிகளிலும் திரையிடப்பட உள்ளது.

கடந்த ஆண்டு முதல் தேசம்நெற்றும் ஈழ நண்பர்கள் திரைப்படக் கழகமும் ஏற்பாடு செய்துவரும் குறும் திரைப்பட முயற்சிகளின் 4வது காட்சி நிகழ்வாக இது அமைகிறது. புலம்பெயர் சினிமாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்பட்டு வரும் மற்றுமொரு குறுந்திரைப்படக் காட்சி இதுவாகும்.

காட்சியைத் தொடர்ந்து இராப்போசனம் வழங்க உள்ளதால் 12 வயதிற்க்கு உட்பட்ட சிறுவர் தவிர்த்து ஏனையோரிடம் £3 கட்டணம் அறவிடப்படும்.
 
தேசம்நெற் ஈழநண்பர்கள் திரைப்படக் கழகத்தின் காட்சியிடலில் உங்கள் படைப்புகளையும் காட்சிப்படுத்தி கலந்துரையாடலை மேற்கொள்ள விரும்புபவர்கள் தேசம்நெற்றுடன் தொடர்பு கொள்ளவும்.

London_Maappillaiமேலும் ஈழத்து சினிமா படைப்புகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஆவணக்காப்பாளரும் நூலகவியலாளருமான என் செல்வராஜா ஈடுபட்டு உள்ளார். உங்கள் படைப்புகளையும் ஆவணப்படுத்திக் கொள்ள தேசம்நெற்றுடன் தொடர்புகொள்ளவும்.

புலம்பெயர் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஆர் புதியவன் மாற்று கனவுகள் நிஜமானால் மண் ஆகியவற்றைத் தொடர்ந்து லண்டன் மாப்பிளை என்ற மற்றுமொரு படத்தை இயக்குகிறார். லண்டனில் படமாக்கப்படும் இம் முழுநீளப்படம் ஆர் புதியவனின் நகைச்சுவை இயல்பை அடிப்படையாகக் கொண்டு இயக்கபட்டு வருகிறது. ஜீட் ரட்ணசிங்கத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த நகைச்சுவைச் சினிமாவுக்கான ஒளிப்பதிவை ரியாஸ்கானும் படத்தொகுப்பை சுரேஸ் ஆர்ஸ்ம் இசையை பாலாஜியும் மேற்கொண்டு உள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ளது. விரைவில் இது திரைக்கு வழவுள்ளது.

Vili Clipகாட்சி விபரங்கள்:

5.30 pm on 29th March 2009.

The Corner house
116 Douglas Road
Surbiton
Surrey
KT6 7SB

பிக் பிரதர் புகழ் ஜேட் கூடி புற்றுநோய்க்கு பலி

_jadebigbro.jpgபிரிட்டிஷ் தொலைக்காட்சியின் ரியாலிடி ஷோ நட்சத்திரமான ஜேட் கூடி 27 வயதில் உயிரிழந்துள்ளார்.  அவரது வாழ்க்கையின் பிற விஷயங்களைப் போலவே அவர் புற்றுநோயுடன் போராடிவந்ததையும் ஊடகங்கள் உற்று அவதானித்துவந்துள்ளன.

ஜேட் கூடி ஒரு தைரியமான பெண் என்றும் அவரை அனைவரும் அன்பாக நினைவுகூறுவார்கள் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் கூறியுள்ளார். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்கை தொண்டு நிறுவனங்கள் பாராட்டியுள்ளன.

2002ஆம் ஆண்டு பிக் பிரதர் ரியாலிட்டி ஷோ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பிரபலம் அடைந்திருந்தார். ஐந்து ஆண்டுகளின் பின்னர் மீண்டும் அதே நிகழ்ச்சியில் இந்திய நடிகை ஷில்பா ஷெட்டி மீது இனத்துவேஷம் பாராட்டும் வகையில் நடந்துகொண்டார் என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து அவரது தொழில் வாழ்க்கை கிட்டத்தட்ட குலையும் நிலைக்கு சென்றிருந்தது.

பிரிட்டிஷ் பிரபல நடிகை பனிச்சறுக்கில் விழுந்து மரணம்

natasha-richardson.jpgபிரிட்டிஷின் பிரபல நடிகை நடாசா ரிச்சர்ட்சன் கனடாவில் பனிச்சுறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த வேளை திடீரெனச் சறுக்கி விழுந்ததால் உயிரிழந்தார். 45 வயதான நடாசா கனடாவிலுள்ள பிரபல பூங்காவில் நேற்று முன்தினம் பனிச்சறுக்கில் ஈடுபட்டார். பின்னர் திடீரென கிழே விழுந்ததால் தலையில் கடும் காயம் ஏற்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தாங்க முடியாத வலியால் துடித்த அவரை கனடா நாட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அமெரி க்காவில் உள்ள நியூயார்க் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால் நேற்றுக் காலை அவர் மரணம் அடைந்தார். நடாஷாவின் கணவர் நீசலும் நடிகராவார். அவர் நடாஷாவுடன் இருந்து அவரைக் கவனித்து வந்தார். நடாஷாவின் தந்தை டோனி சினிமா டைரக்டர் ஆவார். அவர் 1991ம் ஆண்டு மரணமடைந்துவிட்டார்.

இரான் தொலைக்காட்சியில் ஸ்லம்டாக்

Slumdog_Millionaire_Sceneஆஸ்கர் விருதுகள் பல பெற்றுள்ள ஆங்கிலத் திரைப்படமான ஸ்லம்டாக் மில்லியனர் படத்தையும், ஹாலிவுடன் திரைப்படமான தி டார்க் நைட் திரைப்படத்தையும் இஸ்லாமிய புத்தாண்டு கொண்டாட்டக் காலத்தில் தாம் தொலைக்காட்சியில் திரையிடப் போவதாக இரான் நாட்டின் அரச தொலைக் காட்சி அறிவித்துள்ளது.

திரைக்கு வந்து சில காலமேயான புது திரைப்படங்களை திரையிடுவது இரான் நாட்டு தொலைக்காட்சியில் வழக்கமேயல்ல. இரானுக்கு வெளியேயிருந்து வரும் பாரசீக மொழி செயற்கைக் கோள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் இருந்து இளைஞர்களின் கவனத்தை திருப்பவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று நிருபர்கள் கூறுகின்றனர்.