மலையகம்

மலையகம்

மலையக தொழிற்சங்கங்கள் ஓரணியில் திரண்டு பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவேண்டும் – இராஜரட்ணம்

080909teawomen.jpgமலையகத் தொழிற்சங்கங்கள் தமக்கிடையில் மோதிக்கொள்வதைத் தவிர்த்து ஓரணியில் திரண்டு அடுத்த பொதுத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.  அவ்வாறு செய்வதன் மூலமே மலையக பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியுமென மத்திய மகாணசபை உறுப்பினர் எஸ்.இராஜரட்ணம் தெரிவித்தார்.

கண்டி நில்லம்ப ஹார்ல் ஓயாவில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுப் போராட்டத்தின் பின் மலையக தொழிற்சங்கங்கள் தமக்கிடையில் மோதிக்கொள்வதையே காணக்கூடியதாகவுள்ளது.  இச்சங்கங்கள் தமக்கிடையிலுள்ள வேற்றுமையைத் தவிர்த்து ஓரணியன் கீழ் திரள்வதன் மூலமே அடுத்த பொதுத்தேர்தலை சந்திக்கவேண்டும். அவ்வாறு ஒன்று திரள்வதன் மூலம் மட்டுமே மலையக பிரதிநிதித்துவத்தினை காப்பாற்றிக்கொள்ளமுடியும்.

மலையகத்திலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, தோட்டத்தொழிலாளர் சங்கம், ஐக்கிய தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து ஒரு கூட்டமைப்பினை உருவாக்கவேண்டும்.  இக்கூட்டமைப்பு பொதுத்தேர்தலில் தனியாக போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களுக்காக பேரம் பேசும் சக்தியினை மீண்டும் பெறவேண்டும். வெற்றிபெற்ற பின் எந்தக்கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தாலும் பரவாயில்லை. ஆனால், தேர்தலை கூட்டாக சந்தித்து தமிழரின் வாக்குகள் சிதறாமல் பிரதிநிதித்துவத்தினைப் பாதுகாக்கவேண்டும்

சகல தோட்டங்களிலும் நேற்று வழமையான பணி

080909teawomen.jpgமலையகப் பெருந் தோட்டங்களில் அனை த்துத் தொழிற்சங்கங் களையும் சார்ந்த தொழிலாளர்கள் நேற்று (19) முதல் வழமையான பணிக்குத் திரும்பினர்.

தொடர்ந்து போராட்டம் நடத்துமாறு சில சங்கங்கள் விடுத்த வேண்டுகோளையும் நிராகரித்துவிட்டு, சகல தொழிலாளர்களும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

இதன்படி தோட்டங்களில் சம்பள உயர்வு தொடர் பாக தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருந்த முரண்பாடான கருத்துகள் நீங்கி அனைவரும் ஒரே தீர்மானத்துடன் போராட்டங்களைக் கைவிட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.

சம்பள உயர்வுக்கான போராட்டம் உக்கிரமடைந்து காண ப்பட்ட பொகவந்தலாவை உள்ளிட்ட சகல தோட்டப் பகு திகளிலும் சுமுக நிலை ஏற்பட்டுள்ளது. ஒரே தடவையில் நூறு ரூபாவுக்கும் அதிகமான தொகை நாளாந்த சம்ப ளத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளமையை வரவேற்பதாக பல தோட்டங்களின் தொழிலாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். பொதுவாக சம்பளத்திற்காகப் போராட்டம் நடத்தியதை மறந்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தொழிற்சங்கப் போட்டிக்காகக் கருத்துக் களை வெளியிட்ட பல தொழிற்சங்கங்களின் தோட்டக் கிளைத் தலைவர்கள், சம்பள உயர்வு தொடர்பான விளக்கத்தை தொழிலாளர்களுக்கு வழங்கி வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

மஸ்கெலிய யுவதிகளின் தாயாரை நீதிமன்றில் சாட்சியமளிக்க உத்தரவு

கொழும்பு பெளத்தாலோக மாவத்தையில் சடலமாக மீட்கப்பட்ட இரு யுவதிகளின் தாயாரை கொழும்பு மஜிஸ்திரேட் முன்னிலையில் அஜர்செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் ஆயிஷா ஆப்தீன், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு இதற்கான உத்தரவை விடுத்துள்ளார். ஒக்டோபர் 29ம் திகதிக்கு முன் தாயாரை ஆஜர் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.

மஸ்கெலியாவைச் சேர்ந்த இரு தமிழ் யுவதிகள், கொழும்பு பெளத்தாலோக மாவத்தையிலுள்ள கால்வாயொன்றினுள் சடலமாக மீட்கப்பட்டனர். இருவரும் வீடொன்றில் பணியாளர்களாகப் பணியாற்றினர். பணிபுரிந்த வீட்டுக்காரரால் இரு யுவதிகளும் துன்புறுத்தப்பட்டனரா என்பது பற்றி நீதிமன்றம் மேற்படி தாயாரிடம் விசாரணைகளை நடத்தும்.

ஒத்துழையாமை போராட்டத்தினால் 1.5 பில்லியன் ரூபா நஷ்டம் – தோட். தொழிலாளர் சம்பள உயர்வு குறித்து தொழிலமைச்சர் திருப்தி

080909teawomen.jpgபெருந் தோட்டத் தொழிலாளர்கள் மேற்கொண்ட ஒத்துழையாமைப் போராட்டத்தினால் நாட்டுக்கு 1.5 பில்லியன் ரூபா நஷ்டமேற்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்தார். சில அரசியல் கட்சிகள் இதன் மூலம் அரசாங்கத்துக்கு அசெளகரியம் ஏற்படுத்தும் சூழ்ச்சியை மேற்கொண்ட போதும் அம் முயற்சிகள் தோல்வியுற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் 405 ரூபா சம்பள உயர்வு தொடர்பில் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்த அமைச்சர் இது தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துக்கு அரசாங்கத்தின் சார்பில் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளான குடியிருப்பு, மின்சாரம், குடிநீர், மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் முதலாளிமார் சம்மேளனத்தினரிடம் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளவுயர்வு தொடர்பில் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளன த்துக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் வர்த்தமானியில் பதிவு செய்வதற்காக அமைச்சர் அதாவுத செனவிரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு தொழிலமைச்சில் இடம்பெற்றுள்ளதுடன் இலங்கை ஊழியர் சேவை சங்கத்தின் பெருந்தோட்டத் துறைப் பிரிவு க்கான தலைவர் லலித் ஒபேசேகர இதனை அமைச்சரிடம் கையளித்தார். இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர், தோட்டத் தொழிலாளர்களுக்கு திருப்திப் படக்கூடிய சம்பளவுயர்வு கிட்டியுள்ள தெனவும் இது சகல தொழிலாளர்களும் மகிழ்ச்சியுறும் விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி சம்பளவுயர்வுக்கு மேலதிகமாக தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியங்களுக்கென தொழிலாளியொருவருக்கு நாளொன்றுக்கு 42.75 ரூபா வழங்க வேண்டியுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

தோட். தொழிலாளர் சம்பள அதிகரிப்பு கூட்டு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து

080909teawomen.jpg* 405 ரூபா சம்பள அதிகரிப்பு
* 6 மாத சம்பள நிலுவையை 3 கட்டங்களாக வழங்க முடிவு
* மருத்துவ சிகிச்சையில் சலுகை
* ஞாயிறு, போயா தினங்கள் விடுமுறை தினங்களாக கருதப்படும்

தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 405 ரூபாவை வழங்குவதற்கான கூட்டு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. தொழிற்சங்க பிரதிநிதிகளும், முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகளும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் சம்பள அதிகரிப்பு அமுலுக்கு வரும் விதத்தில் இவ்வொப்பந்தம் நேற்று ராஜகிரியவிலுள்ள முதலாளிமார் சம்மேளன அலுவலகத்தில் கைச்சாத்தானது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் கே. வேலாயுதம், தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் எஸ். இராமநாதன் ஆகியோர் முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

அதிகரிக்கப்பட்ட சம்பளத்திற்கான நிலுவைத் தொகையை மூன்றுகட்டங்களாக வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

எதிர்வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்துடன் 50 வீத சம்பள நிலுவையை வழங்கவும் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் முற்பணத்துடன் 25 வீத சம்பள நிலுவையையும் ஜனவரி மாதம் தைப்பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும் பண்டிகை முற்பணத்துடன் எஞ்சிய 25 வீதத்தை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் 75 வீத வருகைக்கு ஞாயிற்றுக்கிழமை, போயா தினம் மற்றும் விடுமுறை தினங்களும் இதுவரை காலம் உள்வாங்கப்பட்டிருந்தது. இனிமேல் ஞாயிறு, போயா தினம், விடுமுறை தினங்கள் நீக்கப்பட்டுள்ளன.

தொழிலாளி ஒருவர் சுகயீனம் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் 75 வீத வருகை இல்லாத இடத்து அவர் தொழிலுக்கு வந்தவராகவே கருதப்படுவார்.

சம்பள அதிகரிப்புடன் தோட்டத் தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 285 ரூபாவாகவும், 75 வீத வருகைக்கான கொடுப்பனவு 90 ரூபாவாகவும், உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவு 30 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட தொகையைவிட கூடுதலான கொழுந்து அல்லது இறப்பர் பால் சேகரிப்பவர்களுக்கு முறையே 12 ரூபா 15 ரூபாவை வழங்குவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் 2009 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. இதன்படி தற்போது செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2009 ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2011 மார்ச் 31ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிற்சங்க கூட்டுக் கமிட்டி என்பன செய்து கொண்ட சம்பள அதிகரிப்பு ஒப்பந்தத்துக்கு எதிராக மலையகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றனவே என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவர் ஆர். யோகராஜனிடம் கேட்டபோது 90 வீதமான தோட்டத் தொழிலாளர்கள் இதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். 40 வீத சம்பள அதிகரிப்பு ஒன்று இன்று கிடைத்திருக்கிறது. சில தொழிற் சங்கங்கள் இதனை வைத்துக்கொண்டு அரசியல் நடத்த முயற்சி செய்கின்றன என்று கூறினார்.

வாங்கும் சக்தி எங்களுக்கு இருப்பது போன்று கொடுக்கும் சக்தி முதலாளிமாருக்கு இருக்கிறதா என்பது பற்றியும் நாம் பார்க்க வேண்டும். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தையும் ஆராய்ந்த பின்னரே ஒரு முடிவுக்கு வந்தோம் என்றும் இ. தொ.கா உப தலைவர்களில் ஒருவரான ஆர். யோகராஜன் தெரிவித்தார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள இ. தொ. காவின் ‘செளமிய பவன்’ கட்டடத்தில் செய்தியாளர் மாநாடு ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும்போதே ஆர். யோகராஜன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரூபா 500 சம்பள உயர்வுகோரி நேற்றும் தோட்டங்களில் ஆர்ப்பாட்டம்

sri-lanka-upcountry.jpgகைச் சாத்திடப்படவிருக்கின்ற கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 500 ரூபா சம்பள உயர்வு கோரியும் மலை யகத்தின் பல்வேறு தோட்டப் பிரதேசங்களிலும் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

அட்டன் – யுனிபீல்ட் வெலிங்டன், கிரிஸ்லஸ் பாம் தோட் டங்களிலும் கொட்டகலை டிரைட்டன், எதென்சைட், லொக் கில் தோட்டங்களிலும், தலவாக்கலை சென் என்றூஸ் தோட்டங்களிலும், பொகவந்தலாவை கொட்டியாகலை, பொகவானை, குயினா, கில்லானி, செல்வகந்தை, டின்சின் ஆகிய தோட்டங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.

பொகவந்தலாவை பகுதியிலுள்ள கொட்டியாகலை, பொக வானை, செல்வகந்த, குயினா ஆகிய தோட்டங்களில் தொழிலாளர்கள் முற்றாக பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், “எங்களை இரண்டு வருடத்திற்கு விற்காதே, அடிப்படை சம்பளம் 500 ரூபா கொடு, துரோ கத்திற்கு துணை போகாதே” போன்ற பதாதைகளை ஏந் திய வண்ணம் கோசங்களை எழுப்பினர். சிலர் கறுப்புப் பட்டிகளை அணிந்தும் கறுப்பு கொடிகளை காட்டியும் தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர்.

ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதனால் பதற்ற நிலை நிலவியது. பொலிஸார் தலையிட்டு சுமுக நிலைக்குக் கொண்டுவந்தனர்.

ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியிலிருந்து தொழிலாளர் தேசிய சங்கம் வெளியேறியது.

080909teawomen.jpgதோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி உரிய அழுத்தத்தினை வழங்காத காரணத்தினால் ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியிலிருந்து விலகி தொழிலாளர் தேசிய சங்கம் தனித்து செயற்படுவதற்கு முடிவெடுத்துள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபா எதிர்பார்க்கப்பட்ட போதும் 405 ரூபா சம்பளத்தினை வழங்கக்கூடிய கூட்டொப்பந்தத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத்தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் கைச்சாத்திட்டுள்ளது.

தொழிலாளருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யமாட்டோம்

080909teawomen.jpg“நாம் எமது தொழிலாளர்களின் நிலையை நன்கு அறிந்தவர்கள். அதனால் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்யமாட்டோம். எமது சமூகத்தைப் பற்றி நன்கு சிந்தித்துத்தான் கூட்டு ஒப்பந்தத்தை செய்யவிருக்கிறோம்.

அடிப்படைச் சம்பளமாக 285/= ரூபாவையும், மேலதிகக் கொழுந்து கிலோவிற்கு 9/= ரூபாவிலிருந்து 12/= ரூபாவாகவும் உயர்த்தியுள்ளோம். அதே நேரத்தில் வரவு நாட்களுக்கு 75% சதவீதம் என்ற நிலையை மாற்றி வேலை நாளுக்கு 405/= ரூபாய் என்ற நிலையில்தான் ஒப்பந்தம் செய்யவிருக்கி ன்றோம்”. இவ்வாறு இ.தொ.க பொதுச் செயலரும் இளைஞர் வலுவூட்டல் சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

டிக்கோயா தரவறைத் தோட்டத்தில் நட ந்த கூட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;

ஏப்ரல் மாதம் தொடங்கி புதிய முறை யில் சம்பளம் கணக்கிடப்படும். பாக்கிச் சம்பளத்தை தீபாவளிக்கும், கிறிஸ்மஸ் திருநாளுக்கும், தைப் பொங்கலுக்குமாக பிரித்து கொடுக்கப்படும். அரை நாள் சம்ப ளம் என்று இனிமேல் கணக்கிடப்படமாட்டாது. நாம் மக்களுக்கு தெளிவுப்படுத்தவே இந்த கூட்டங்களை ஏற்பாடு செய்து, தொழிலாளர்களை சந்தித்து வருகிறோம்.

வேலை நாட்களில் குறிப்பிட்ட 75% சத வீதம் என்று சம்பளம் கணக்கிடப்படமாட் டாது. அதேநேரத்தில் வைத்தியத்திற்கு மருத்துவமனையில் மூன்று நாட்களிருந்தால், அதனையும் வேலை நாளாக கணிக்கப்படும். குறிப்பாக முன்னர் வழங்கிய தேயிலை கொழுந்துக்கு மூன்று ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆறு மாதம் சரியாக வேலை செய்தால் 7வது மாதம் சுகவீனம் என்றதால் அதனையும் வேலை நாட்களாக கணிக்கப்பட வேண்டும். இதேநேத்தில் எமது மக்களின் நன்மைக்காக,  இந்தியா இன்னும் 30 பஸ் வண்டிகளை அனுப்பி வருகின்றது. அத்தோடு எமது தொழிலாளர்களின் வீட்டுப் பிரச்சினை களுக்கு தீர்வுகாண வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு இந்திய அரசை கோரியுள்ளோம். ஆகவே, எந்தவித வேலை நிறுத்தமுமின்றி 405/= சம்பள உயர்வை பெற்றுள்ளோம்.

இன்றைய நிலையில் தற்போது இ.தொ.கா ஒப்பந்தத்தை செய்யவிருக்கின்றது. உற்பத் தித் துறையிலும் நாம் அநுசரித்தாக வேண் டும். இந்த ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி 405/= ரூபாயாக அமுலுக்கு வரும் பாக்கிச் சம்பளத்தில் 50% வீதம் திரு நாட்களில் மூன்று தவணையாகப் பிரித்து கொடுக்கப்படும். எமது மக்கள் தீபாவளி, கிறிஸ்மஸ், தைப்பொங்கல் என்ற வகையில் அந்த பாக்கிச் சம்பளம் வழங்கப்படுமென்றார்.

பொகவந்தலாவையில் பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம்!

150909police22.jpgபொகவந்த லாவைப் பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்று பொகவந்தலாவை நகரில் நடத்திய பேரணியைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

தோட்டப் பகுதிகளில் இன்று 500 ரூபா சம்பள உயர்வு கோரி பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தெழிலாளர்கள் மறியல் போராட்டம் ஒன்றையும் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கட்டம் ஒன்றுக்கு கல் வீசியதையடுத்து இவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் வீதி மறியல் போராட்டம் : அட்டனில் பதற்றம் நிலவியது

080909teawomen.jpgதோட்டத் தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளவுயர்வை வலியுறுத்தி மலையக மக்கள் முனனணியின் ஏற்பாட்டில் அட்டனில் 13 ஆம் திகதி நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப்போராட்டம் பொலிஸாரின் தலையிட்டினால் இறுதி நேரத்தில் இடம் பெறவில்லை.

இதனைத்தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரனின் தலைமையில் இந்த முன்னணியின் ஆதரவாளர்கள் அட்டன் நகரின் பிரதான வீதியில் வீதி மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணிநேரம் வாகனப்போக்குவரத்துக்கள் இடம் பெறவில்லை. இந்த நிலையில் அட்டன் பொலிஸாரால் கண்ணீர் புகை ஏற்படுத்தப்பட்டதாகத்தெரிவிக்கப்படுகின்றது.