எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தும் நழுவவிட்ட தமிழர் போராட்ட வரலாறு இன்று ஆரம்பிக்கப்பட்ட புள்ளிக்கே மீண்டும் வந்து நிற்கிறது. வன்னியில் மக்கள் மரணத்தின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு தமிழ்பேசுவோரும் இதனை உணர்ந்து செயற்ப்பட வேண்டிய காலம் இது.
கடந்த தமிழ்பேசும் மக்களின் போராட்டப் பாதையில் பல ஒற்றுமைப்படுத்தும் ஒன்றிணைக்கும் கூட்டுமுன்னணி அமைக்கும் செயற்ப்பாடுகள் நடைபெற்றபோதும் அவை முன்னேற்றம் காணாமைக்கான காரணங்களை மீளப்பார்த்து விமர்சித்து தவறுகள் மீளவும் நடைபெறாது செயற்ப்பாடுகளில் ஈடுபடுவதும், தொடரச்சியாக முன்னேறிச் செல்லும் வழிமுறைகளை உருவாக்கிக்கொண்டும் திட்டமிட்டு செயற்ப்படுவது அவசியமானது. அதேவேளை விடுதலைப் புலிகள் உட்பட அத்தனை அமைப்புக்களையும் உள்ளடக்கிய முயற்ச்சிகளில் ஈடுபட வேண்டிய தேவை உள்ளதையும், முரண்பட்ட அரசியல் நோக்கம் கொண்டவர்களும் இணைந்து செயற்ப்படும் தளம் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
மார்ச் 22 அன்று தமிழர் தகவல் நடுவம் TIC ஒழுங்கு செய்த கூட்டம் தமிழர் தகவல் நிலையத்தின் மண்டபத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ் மாணவர் பேரவையின் முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பல தரப்பட்ட அரசியல்ப் பின்னணிகளை கொண்டவர்கள் அங்கு பிரசன்னமாகியிருந்தனர், தமிழ் மாணவர் பேரவையினரின் உரைகளுடன் கூட்டம் ஆரம்பமானது.
தமது போராட்டம் கல்வி தரப்படுத்தலுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது என்றும் திட்டமிட்ட அரசியல் நோக்கு இதற்கு இருக்கவில்லை என்றும் அன்று அப்போதுள்ள பிரச்சினைகளுக்காகவே அது செயற்ப்பட்டது என்றும் மாணவர் பேரவை சார்பாக ஒருவர் கருத்து முன்வைத்தார்.
தமிழ் மாணவர் பேரவையின் ஆரம்பகால கர்த்தாக்கள் பற்றியும் பேசப்பட்டது. இவை போன்ற பல அமைப்புக்கள் ஆரம்பகாலத்தில் உருவாகி அவை தொடர்ந்து செயற்ப்படாமல் போயிருந்தன என்றும் இந்த ஆரம்பகால நடவடிக்கைகளுக்கு இங்கு முன்னுரிமை கொடுக்காமல் தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் தற்போதய ஈழத்து நிலைமைகள் பற்றியும் பேசவேண்டும் என்ற கருத்துக்கள் கூட்டத்தில் எழுந்தன.
கூட்டத்தை ஓழுங்கு செய்தவர்கள் இக் கூட்டமானது எது சரி? எது பிழை? என விவாதிக்க முடியாது, இங்கு யாரும் அதற்கு பதில் வைத்திருக்கவில்லை, இக் கூட்டத்தின் நோக்கம் ஒரு சமூகமாக Political Initiationஜ உருவாக்க தனிப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து செய்யும் முயற்ச்சியே இது என்றனர்.
கூட்டத்தில் இங்கு தமிழர்க்கு positive ஆன கருத்துக்களையே முன்வைக்கும்படி ஒரு கருத்து எழுந்த போது: தமிழர்களுக்கு சார்பான (positive) விடயங்களை முன்வைப்பதே நல்லது என்றாலும் விமர்சனம் மிக மிக முக்கியம் என்றும் கடந்த காலங்களில் நடைபெற்ற தவறுகள்இ எது? என்ன? எப்படி உருவானது? சரி பிழைகள் போன்றன விமர்சனம் மூலமே தீர்க்க முடியும் என்றும் அதிலிருந்தே முன்னேற முடியும் என்றும் அங்கே கருத்து வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் தமிழர்கள் தமிழ் அமைப்புகள் இயக்கங்கள் reactive ஆகவே நடந்துள்ளார்கள் என்றும் proactive ஆக செயற்ப்படவில்லை என்றும் இது ஈழத்திலும் போராட்ட நடவடிக்கைகளிலும் கூட இந்த நிலையே உள்ளதாக எடுத்துக் கூறப்பட்டது.
மேற்கூறிய விடயங்களின் அடிப்படையில் எல்லோரும் சேர்ந்து தமது கருத்துக்களை முன்வைக்கவும் அதனூடாக தமிழர்க்கான எதிர்காலத்தை உருவாக்கும் (நிலைமைகளை) கூட்டணிகளை,
ஆதரவாளர்கள் அமைப்புக்களை, உருவாக்க வேண்டும் என்றும் கருத்து பரவலாக பரிமாறப்பட்டது. வித்தியாசமான கருத்துக் கொண்டவர்களையும் முரண்பாடான கருத்துக் கொண்டவர்களையும் இணைத்துச் செயற்ப்படக் கூடிய நிலைமைகளை உருவாக்கவே TIC விரும்புவதாக அங்கு கூறப்பட்டது. அது இக் கூட்டத்தின் வெளிப்பாடாகவும் இருந்தது. இதற்கு உதாரணமாக இந்திய அமைச்சர் ப சிதம்பரம் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்ப்படாது இருப்பது பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டது.
தொடர்ச்சியாக இராணுவ நடவடிக்கைகளில் நம்பிக்கை வைத்து செயற்ப்பட்டதாலேயே எமது போராட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கப்பட்டுள்ளது என்றும் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் யாழ்ப்பாணத்தில் உருவாகிய மாணவர் பேரவையின் விடயங்கள் ஒரு பொருட்டாக என்றுமே இருந்ததில்லை என்றும் கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்தை விட வித்தியாசானமான சூழ்நிலையில் இருப்பதாயும், கிழக்கு மாகாணத்தவர்களின் அரசியல் நிலைப்பாடு வடக்கு மாகாணத்தவர்கள் போன்று அல்ல என்றும் கருத்து முன்வைக்கப்பட்டது. இதைவிட முஸ்லீம்கள் மலையக மக்கள் பற்றிய அவர்களது நிலைப்பாடுகளும் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது.
ஈழப் போராட்டம் தோல்வியுற்று விட்டது, இப்போராட்ட நடவடிக்கைகள் காரணமாகவே 60சத வீதமான மக்கள் வட கிழக்கு பிரதேசங்களை விட்டு நிரந்தரமாக வெளியேறி வாழும் நிலை உருவானது, ஆகவே சிறுபான்மையினர் இலங்கையின் எந்தப் பிரதேசங்களில் வாழ்ந்தாலும் அவர்களுக்கு அரசியல் உரிமைகள் அளிக்கும் வகையிலும், அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படக் கூடிய வகையிலுமான தமிழ் பேசும் மக்களின் அரசியல்த்தீர்வு பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
இங்கு குறிப்பிட்ட ஈழப்போராட்டத் தோல்வி என்பது தமிழர்களிடையேயும், இலங்கையிலும், இந்திய உறவிலும, சர்வதேச உறவிலும் தோல்விகளை ஏற்ப்படுத்தியுள்ளது என்றும் கருத்து வெளிப்படுத்தப்பட்டது.
புனர்வாழ்வு, அரசியல்ப் புனர்த்தானம் செய்தல் போன்ற வேலைகளினுடாக தமிழர்க்கான அரசியல் தலைமைகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் இபபடியான அரசியல்த் தலைமைகள் மேலெழ முடியாமல் கடந்த காலங்களில் அடக்கப்பட்டுள்ளது என்றும் அங்குகூறப்பட்டது.
நீண்டகாலமாக நடைபெற்ற இப்போராட்டத்தை தொடர்ச்சியான அரசியல்ப் போராட்டமாக, தமிழர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் வரை தொடர நாம் முனைய வேண்டும் என்றும் இந்நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து அமைப்புக்களும் பொதுவான அரசியல்த் தலைமையின் கீழ் உடன்பட வேண்டும் என்றும் கருத்து வெளியிடப்பட்டது.
கூட்டத்தில் அடுத்த கட்டமாக ரவி சுந்தரலிங்கத்தினால் சுருக்கமாகவும் நான்கு பிரிவாகவும் வரையப்பட்ட பிரதிகள் கையளிக்கப்பட்டது. Navigating our peoples struggle through uncharted territories Please read Ravi’s Document here.
இது பற்றி ரவி சுந்தரலிங்கம் தனது கருத்தை முன்வைக்கும் போது தமிழீழம் என்ற பதத்தை கைவிடவேண்டும் இது இன்று சரியான பாதையை தெரிவுசெய்வதற்கு தடையாக இருப்பதையும், அதிகாரப் பரவலாக்கல், எமது பிரதேசத்தை நாமே முன்னேற்றும் உரிமைகள், பாதுகாப்பு போன்ற விடயங்களில் இருந்து எமது பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறினார்.
கடந்த காலங்களில் நடைபெற்ற ஜக்கியத்திற்கான முன்னெடுப்புக்கள் பற்றியும் அதில் ஏற்ப்பட்ட தடங்கல்கள் பற்றியும் அதில் தோழர் டக்ளஸ்சின் ஆதரவுகள் பற்றியும் கூறினார். அதேவேளை ENC (Eelam National Council) ஜ மீள புனரமைப்பு செய்யக்கூடாதா என்றும் கேட்டுக் கொண்டார். இக் கூட்டத்தில் ரவி சுந்தரலிங்கத்தின் எழுத்து சமர்ப்பித்தலும் அவரின் விளக்கமும் முக்கியமாக இடம் பெறவிருந்ததும் பின்னர் வேறு விடயங்கள் இழுத்துச்செல்லும் வழியில் சென்றதாலும் நேரம் போதாமையாகியது.
இந்த அரசியல் முன்னெடுப்புக்களுக்கு முன்னதாக தமிழர்கள் சாரி சாரியாக கொல்லப்படுவது அழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் அதன் பின்னரே அரசியல்த்தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்றும் இதுவே எமக்கு முன் உள்ள முக்கிய விடயம் என்றும் கருத்து முன்வைக்கப்பட்டது.
அதேபோல TYO, BTF போன்ற அமைப்புகள் போராட்டம் பற்றிய தவறான கருத்துகளுடன் செயற்பபடுகின்றது, புலி ஆதரவு மட்டுமேதான் போராட்டம் என்று கருதுகிறார்கள் எனவும் சுட்டிக் காட்டி அவர்கள் புலிகளின் கொடிகளுடனும் பிரபாகரனின் படத்துடனும் செய்யும் போராட்டங்கள் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அதேவேளை BTFன் சமீபத்திய போராட்டங்களில் புலிகளை ஆதரிக்காதவர்களும் பெருவாரியாக பங்குபற்றியுள்ளனர் என்ற கருத்தும் சுட்டிக்காட்டப்பட்டது.
அரசியல் தலைமை வகிப்பில் புலிகள் தவறிவிட்டார்கள், இதன் காரணமாகவே போர் நிலைமைகள் மோசமடைந்தன, அதனாலேயே மக்கள் பாதிப்படைகின்றனர், கொல்லப்படுகின்றனர் என்றும் அதேவேளை யுத்த நிறுத்தம் கொண்டுவர நாம் ஒன்று சேர்ந்து இயங்க வேண்டும் என்றும் தமிழ் மக்களின் மீதான கொலை சாதாரணமானது அல்ல, இது Genicide என்றும் அழிவுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், அது நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும், அதேவேளை அரசியல்த்தீர்வும் நிரந்தர தீர்வாக கொண்டுவரப்பட வேண்டும், என்றும் கருத்து வைக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள மருத்துவமனை இடமாற்றம் செய்யப்ட்டது மனித உரிமை மீறல் எனவும் அதைவிட பாதுகாப்பு வலயத்தினுள் குண்டுகள் போடுவதும் அடிப்படை உணவுகள் வழங்கப்படாது இருப்பதும் மனித உரிமை மீறல்களே என்றும் இவை பற்றிப் பேச எம்மிடம் பொதுவான அமைப்பு இல்லை அப்படியான ஒரு பொது அமைப்பு எமக்கு இப்போதுள்ள தேவை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
ஒரு பொதுத்தளம் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் அனைவரும் உடன்பட்டனர். இதற்கான முன்முயற்ச்சியில் ஈடுபடுவது என்றும் அதில் ஒரு கட்டமாக BTF உடன் கதைப்பதற்கு ஒரு குழு தெரிவாகி உள்ளது. ஜக்கிய இலங்கைக்குள்ளேயே உள்ள சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகள் பற்றிய கூட்டங்களில் இதர சிங்கள முஸ்லீம் மக்களின் பிரதிநிதிகளும் பங்கு கொள்ளும் வகை செய்ய வேண்டும் என்ற கருத்தை எழுப்பிய போது இதற்கு பதிலளித்த வரதகுமார் இதற்கான நடவடிக்கைகளில் தாம் அக்கறையுடன் செயற்ப்படுவதாக கூறினார்.
திம்பு பேச்சு வார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்களின் அடிப்டையிலிருந்தே தமிழர்களின் அரசியல்த் தீர்விற்கான முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இதன் அடிப்டையிலேயே நாம் ஒரு பொது நிலைப்பாட்டை தமிழர்களிடையேயும் தமிழ் அரசியல் அமைப்புக்களிடையேயும் உருவாக்கி தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற கருத்துடன் கூட்டம் முடிவு பெற்றது.