July

July

உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்தும் கனணி மயப்படுத்தப்படும் – அமைச்சின் செயலாளர் தகவல்

நாடு பூராவும் உள்ள உள்ளுராட்சி மன்றங்களைக் கனணி மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளதாக உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் கெசன் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலைங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபண வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, இத்திட்டத்திற்கு தகவல் தொழிநுற்ப இலத்திரணியல் உள்ளுராட்சி மன்ற சேவை திட்டம் என்று பெயரிடபட்டுள்ளது. முதலாவது செயற்திட்டம் தற்பொழுது நீர் கொழும்பு மாநகரசபை, சீதவாக்க நகரசபை மற்றும் ஹோமாகம பிரதேசசபை ஆகியவற்றை மையமாகக் கொண்டு; ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழிநுற்பதொடர்பாடல் முகவர் நிறுவனத்தின் இச்செயற்திட்டமானது அடுத்த வருடம் சகல உள்ளுராட்சி மன்றங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு தேவையான மென்பொருட்களைத் தயாரிக்கும் பணி அடுத்த வருட முற்பகுதியில் நிறைவடையுமென தகவல் தொழிநுற்பதொடல்பாடல் முகவர் நிறுவணத்தின் பணிப்பாளர் வசந்தந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்படடுள்ளவாறு நாட்டில் தகவல் தொழிநுற்பத்தையும் வலுவடையச்செய்யும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் வெள்ளநிலை பிரகடனம்

images.jpgமலையகப் பிரதேசங்களில் தொடராக மழை பெய்து வருகின்ற நிலையில் இரத்தினபுரி மாவட்டத்தில் சிறிய வெள்ள நிலைமை ஏற்பட்டிருப்பதாக நேற்று பிரகடனப்படுத்தப்பட்டது.

களுகங்கையின் நீர் மட்டம் 19 அடிகள் வரை உயர்ந்திருப்பதால் இம் மாவட்டத்தில் உள்ள தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதன் காரணத்தினால் இரத்தினபுரி மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் சிறிய வெள்ள நிலைமையைப் பிரகடனப்படுத்தியதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் இரத்தினபுரி மாவட்ட இணைப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் பிரியந்த அபேரட்ன தெரிவித்தார். இதேநேரம், களுகங்கையின் இருமருங்கிலும் வாழும் மக்கள் திடீர் வெள்ளம் குறித்த முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் : இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது. நேற்று காலை 9.00 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீச்சு பதிவுப்படி 120 மி. மீ. மழை பெய்திருக்கின்றது. இதனால் இரத்தினபுரி, எலப்பாத்த, குருவிட்ட, கிரியெல்ல, அயகம, கலவான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்தும் மழை பெய்கிறது. ஆகவே தான் சிறிய வெள்ள நிலமை பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார். இதேவேளை, காலி, மற்றும் களுத்துறை மாவட்டங்களின் தாழ் நிலங்களும் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

“தோட்டப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை உரியமுறையில் மேற்கொள்ளப்படவில்லை’

aedes_aegypti.jpgமத்திய மாகாணத்திலுள்ள தோட்டப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் இதுவரை உரியவகையில் மேற்கொள்ளப்படவில்லையென ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிரகாஷ் கணேஷன் தெரிவித்துள்ளார். இச் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவித்ததாவது;

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையில் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள், பொதுசுகாதார தரப்புகள், சிவில் பாதுகாப்புக் குழுக்கள் என்பனவற்றின் ஒத்துழைப்புடன் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் நகரங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் தோட்டப் பகுதிகளில் இவ்வாறான நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியிலேயே இடம்பெற்று வருகின்றன. தோட்டப் பகுதிகளைப் பொறுத்த வரையில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்பு நிறுவனமே பொதுசுகாதார வைத்திய சேவைகளுக்குப் பொறுப்பாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளில் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை இந்த நிறுவனமும் சுகாதர அமைச்சும் உரிய வகையில் முன்னெடுக்கப்படாமை கவலைக்குரிய விடயமாகும். ஏற்கனவே பெருந்தோட்டப் பகுதிகளில் அடிப்படை சுகாதாரம் மற்றும் வைத்திய சேவை உரிய வகையில் ஏற்படுத்தப்படவில்லை. எனவே, இவ்விடயம் குறித்து மத்திய மாகாண சபை சுகாதார அமைச்சு, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்பு நிறுவனம் என்பன உரிய கவனம் செலுத்த வேண்டும்.

ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் பாரிய மோசடிகள் இல்லை – சிறிய மோசடிகள் பெரிய வெற்றியைப் பாதிக்காது

ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் பாரியளவான மோசடிகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் எதிர்க்கட்சிக் காரர்களின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றதென்றும் உயர் பாதுகாப்பு சபைத் தலைவர் ஜனாதி தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் பத்து சதவீதமானவை எண்ணப்பட்டன. இதற் கென 12 பேர் கொண்ட விசேட குழு அமைக்கப்பட்டது. இதற்கு ஜனாதி தலைமையேற்றார். வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் அரச தொலைக்காட்சி ஜனாதியின் செய்தியை வெளியிட்டது. அதில் அவர் கூறியதாவது,

ஜனாதிபதித் தேர்தலில் பாரியளவான வாக்கு மோசடிகள் இடம்பெறவில்லை. சிறிய மோசடிகள் இடம்பெற்றுள்ள போதும் தேர்தல் முடிவுகளில் இது மாற்றத்தை ஏற்படுத்தாது. தேர்தல் சட்டங்களுக்கமைய முடிவுகள் வெளியாகி பத்து நாட்களுக்குள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டோம்.

எதிர்க்கட்சிக்காரர்கள் சொல்வதைப் போன்று பெரிய மோசடிகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை என குவார்டியன் குழுத் தலைவர் ஆயதுல்லா அஹமட் ஜனாதி சொன்னார். 63 வீதமான வாக்குகளை ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் பெற்றுள்ளதால் சிறிய மோசடிகள் இவ்வெற்றியைப் பாதிக்காது என்பதையே அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இது குறித்த விரிவான கடிதமொன்று குவார்டியன் குழுவால் நாட்டின் உள்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரச தொலைக்காட்சி தெரிவித்தது.

திங்கட்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டதையடுத்து தலைநகர் தெஹ்ரானில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நகரைச் சுற்றி பெருமளவிலான படையினர் குவிக்கப்பட்டனர். வாகனங்கள் கடுமையாகச் சோதிக்கப்பட்டது. சாரதிகளின் அடையாள அட்டைகள். உடல்களும் சோதனை செய்யப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கும் வகையில் பொலிஸார் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.கைதுகள் அச்சுறுத்தல்கள் அடக்கு முறைகள் என்பவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. ஈரானில் நடப் பவற்றை ஐரோப்பாவும், அமெரிக்காவும் நன்கு அவதா னிப்பதாக ஹிலாரி கிளின்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜோஸி மானுவெல் ஆகியோர் தெரிவி த்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை ஈரான் அடக்கிய முறைக ளுக்கெதிராக ஐ. நா.வில் கடும் கண்டனத்தையும் தடைகளையும் கொண்டுவரவும் ஆலோசிக்கப்பட்டது.

அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆராய சர்வகட்சி குழு – ஜனாதிபதி தீர்மானம்

he_president.jpgஅபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கென சர்வகட்சிக் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இதன் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராய்வதுடன் இக் குழு ஜனாதிபதியின் தலைமையில் மாதமொரு முறை கூடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டம் 2ம் திகதி நடைபெறவுள்ளது.

ஈராக் பாதுகாப்பை அந்நாட்டு இராணுவம் பொறுப்பேற்றது – அமெரிக்க இராணுவம் முகாம்களுக்குள் முடக்கம்

ஈராக்கின் முக்கிய நகரங்கள், மாகாணங்களின் பாதுகாப்பை ஈராக் அரச படைகள் பொறுப்பேற்றன. தற்போது இங்குள்ள அமெரிக்கப் படைகள் வெளியே செல்லாமல் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளன. ஜுன் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து ஈராக்கிலுள்ள அனைத்து அமெரிக்கத் துருப்பினரும் தங்களது பாதுகாப்பு பொறுப்புகளை ஈராக் அரச படைகளிடம் ஒப்படைத்துள்ளதாக அங்குள்ள அமெரிக்க கட்டளைத் தளபதி தெரிவித்தார்.  

பாரிய குண்டு வெடிப்புகள் வன்முறைகளுக்கு மத்தியிலும் ஈராக் அரசாங்கம் இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. எனினும் ஈராக் இராணுவத்துக்குத் தேவையான ஆலோசனைகள், பயிற்சிகள் போன்றவற்றை அமெரிக்க இராணுவம் வழங்கவுள்ளது. இரண்டு நாடுகளிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி கடந்த எட்டு மாதங்களாக படிப்படியாக அமெரிக்க இராணுவத்தினர் பாதுகாப்பை ஈராக் இராணுவத்திடம் வழங்கி வருகின்றனர்.

ஈராக்கின் பாதுகாப்பை அந்நாட்டு இராணுவம் முழுமையாக பொறுப்பேற்றுக் கொண்டது. நேற்று ஜூன் 30ம் திகதியுடன் அமெரிக்கப்படைகள் ஈராக்கில் ஆற்றி வந்த பாதுகாப்புப் பணிகள் யாவும் நிறுத்தப்பட்டு ஈராக் இராணுவத்திடம் வழங்கப்பட்டது.

சுமார் 8 மாதங்களாக இவ்வாறு படிப்படியாக ஈராக்கின் பாதுகாப்பு பிரதமர் நூரி அல்மாலிகி தலைமையிலான அரசாங்கத்தின் படையினரிடம் வழங்கப்பட்டு வந்தது. நேற்றுடன் முற்று முழுதாக ஈராக் இராணுவம் தனது நாட்டின் பாதுகாப்பை பொறுப்பேற்றுக் கொண்டது. கட்டம் கட்டமாக மாகாணங்கள் மாவட்டங்கள் நகரங்கள் எனப் பாதுகாப்புகள் கையளிக்கப்பட்டுவந்தன.

அமெரிக்கா, ஈராக்கிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் நேற்று 30ம் திகதியுடன் அமெரிக்கப்படைகள் தங்கள் பணிகளை நிறுத்தி ஈராக்கின் பாதுகாப்பை ஒப்படைக்க வேண்டும் 2010ம் ஆண்டுக்குள் ஈராக்கை விட்டே அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டுமென்றும் அந்த ஒப்பந்தம் கூறுகின்றது. இதற்கமைய பாதுகாப்புகளை ஒப்படைத்த அமெரிக்கப்படைகள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளன.

இவர்கள் விரைவில் படிப்படியாக அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. அதுவரை ஈராக் இராணுவத்துக்குத் தேவையான இராணுவ ஆலோசனைகள் பயிற்சிகளை வழங்கவுள்ளன. வன்முறைகள் குண்டு வெடிப்புகள் ஈராக்கில் இடம்பெற்று வருகின்ற போது ஈராக் படைகள் பாதுகாப்பை பொறுப்பேற்றமை துணிச்சலான விடயம் எனக் கருதப்படுகின்றது.

ஈராக்கின் பாதுகாப்பு சொந்த இராணுவத்திடம் வந்த பின்னர் மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பட்டாசுகளைக் கொளுத்தினர், தேசிய விடுமுறை தினமாக நேற்றுப் பிரகடனம் செய்யப்பட்டது. பல் நாட்டு படைகளின் ஆட்சி முடிவடைந்தமைக்கான அடையாளம் இதுவென அவதானிகள் தெரிவித்தனர். 2003ஆம் ஆண்டு ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டமையிலிருந்து நான் விசேட பைவங்களில் பங்கேற்றதில்லை.

ஈராக் மக்கள் முழு மையான சுதந்திரத்தை அனுபவித்த மனமகிழ்ச்சியில் காணப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில் ஈராக்கின் எதிரிகள் குழப்பம் விளைவிக்கலாம் என்பதால் ஈராக் படைகள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

விபத்துக்களான யேமன் நாட்டு விமானத்தில் கோளாறு இருந்தது

image-air-team.jpgஇந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏமன் நாட்டைச்சேர்ந்த விமானத்தில் கோளாறு இருந்ததாக, 2007 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட அந்த விமான நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறையின் ரகசிய கண்காணிப்பில் இருந்து வந்ததாகவும் பிரான்ஸ் நாட்டின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த 310 ரக ஏர் பஸ் விமானம், அதன் தயாரிப்பு நிறுவன அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கடந்த மேமாதம் முழுமையாக சோதனை செய்யப்பட்டதாகவும் யேமென் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோமொரோஸ் தீவுகளுக்கு அருகே இந்த விமானம் விபத்துக்குள்ளானபோது அதில் 153 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். இவர்களில் ஒரே ஒரு குழந்தை மட்டும் தப்பிப்பிழைத்தது. யெமெனியா விமான நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைசெய்யப்பட்ட விமான நிறுவனங்களின் பட்டியலில் இல்லை என்று தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்குவரத்து அமைச்சர், இந்த பட்டியல் உலகம் தழுவிய அளவில் விரிவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

முன்னாள் தமிழ்க் கல்வி அமைச்சர் இணைப்பு இயக்குநராக நியமனம்

முன்னாள் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சரும் தொழிலாளர் விடுதலை முன்னணியின் செயலாளரும் ஆசிரியர் விடுதலை முன்னணியின் தலைவருமான எஸ்.அருள்சாமி ஜனாதிபதியின் இணைப்பு இயக்குனராகக் கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அலரிமாளிகையில் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற வைபவத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்படி நியமனக் கடிதத்தை அருள்சாமியிடம் கையளித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளராக அருள்சாமியை ஏற்கனவே ஜனாதிபதி நியமித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.தேர்தல் பணிகளுக்கு டக்ளஸ் தலைமை: வவுனியா நகர சபைக்கு ரிஷாத் பொறுப்பு

susil1111.jpgயாழ்ப் பாண மாநகர சபைத் தேர்தல் பணிகளை முன்னெடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குழுவொன்றும் வவுனியா நகரசபைத் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார்.

1976ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் யாழ். மேயராகத் தெரிவானார். 33 வருடங்களின் பின் மீண்டும் எமது கட்சியைச் சேர்ந்த ஒருவர் மேயராகத் தெரிவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, யாழ். மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ். மாநகர சபைக்கென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதோடு அநுராதபுரம் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் சிலரும் இந்தக் குழுவில் அடங்குவர்.

வவுனியா நகரசபைக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன், சுமதிபால அடங்களான குழு நியமிக்கப்பட்டுள்ளன. இரு உள்ளூராட்சி சபைகளிலும் சுதந்திரக்கட்சி, ஈ.பி.டி.பி, டெலோ, ஈரோஸ். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அடங்கிய குழு போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் யாழ், வவுனியா மக்களின் கருத்து மிக முக்கியமாகும்.

வவுனியாவில் இயல்பு நிலை காணப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இரு பாடசாலைகளுக்கும் நாம் விஜயம் செய்தோம். அங்கு ஆசிரியர் பற்றாக்குறை எதுவும் கிடையாது. தொண்டர் ஆசிரியர்களுக்கு தேர்தலின் பின்னர் நியமனம் வழங்க உள்ளோம். ஏ-9 வீதியினூடாக லொறிகளில் யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதால் அங்கு பொருட்களின் விலைகள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

30 வருடங்களாகக் கிடைக்காத கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் வடபகுதி மக்களுக்குத் தற்பொழுது கிடைத்து வருகிறது. அந்த மக்கள் அதிகாரப் பகிர்வு குறித்து எதுவும் கோரவில்லை.

பயங்கரவாதத்தால் நன்மையடைந்தவர்களே நாட்டில் அப்பிரச்சினை இருக்க விரும்புகின்றனர் – அமைச்சர் திஸ்ஸ கரலியத்த

பயங்கரவாதத்தினால் நன்மை பெற்றவர்களே இன்னும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறுகின்றனர். மேலும் நாட்டில் பயங்கரவாதம் தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்பதே இவர்களின் எதிர்பார்ப்பாகும் என சுதேச வைத்தியத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார். கலன் பிந்துனுவௌ, படிகார மருவ பகுதியில் வசிக்கும் 780 குடும்பங்களுக்கு இலவச மட்பாத்திரங்கள் பகிர்ந்தளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாடு ஒன்றுபடுத்தப்பட்டுள்ளது. நாம் அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. வடக்கின் வசந்தத்தின் கீழ் வடக்குப் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

யார் எதைச் சொன்னாலும் எமது நாட்டில் இருந்து பயங்கரவாதம் முற்றாகத் துடைத்தெறியப்பட்டு விட்டது. இது எமக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும். தற்போது எமக்கு இருக்கும் பெரும் சவால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பதேயாகும்.

இதற்கான திட்டமிடல்கள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் பொருளாதார ரீதியிலான முன்னேற்றத்தையும் எம்மால் எட்ட முடியும். இதற்காக எம்மாலான உதவிகளையும் நாம் அரசுக்கு வழங்க வேண்டும்.

ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய அநுராதபுர மாவட்ட வாழ் மக்களுக்கு, இலவசமாக மட்பாத்திரங்கள் சுதேச வைத்தியத்துறை அமைச்சினூடாக பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் அநுராதபுர மாவட்டத்தில் வாழும் எண்பதாயிரம் குடும்பங்களுக்கு மட்பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து துடைத்தெறிந்த எமது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றதெனவும் அவர் கூறினார்.