August

August

இலங்கையில் எலிக்காய்ச்சலை கட்டுப்படுத்துதல் கியூபா நாட்டு பக்ரியா நுண்ணங்கியை பாவிப்பது குறித்து அரசாங்கம் ஆராய்வு

ratss.jpgஇலங் கையில் எலிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கும் கியூபா நாட்டு பக்ரியா நுண்ணங்கியொன்றைப் பாவிப்பது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையும் இந்நாட்டில் 2100 பேர் எலிக்காய்ச்சலுக்கு உள்ளாகினர். இவர்களில் 80 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் நோய் பரவுவதைத் தடுப்பு பிரிவு அறிவித்திருக்கின்றது.

இந்நாடடில் வருடா வருடம் எலிக்காய்ச்சலுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உள்ளாவதும், பலர் உயிரிழப்பதும் அண்மைக் காலம் முதல் இடம்பெறுகின்றது. இந்த அச்சுறுத்தலிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பத ற்காகவே எலிக்காய்ச்சல் நோய்க் காரணியைக் கட்டுப்படுத்தவும் கியூபநாட்டில் பயன்படுத்தப்படும் பக்aரியா நுண்ணங்கியைப் பாவிப்பது தொடர்பாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இந்நாட்டில் டெங்கு வைரஸ் காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கியூபநாட்டு பி.ரி.ஐ பக்aரியாவைப் பாவிப்பதற்குத் தேவையான நிபுணத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொடுக்கவென அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் இருவர் கொழும்புக்கு வருகை தந்திருந்தனர். இவர்கள் கியூபாவில் எலிக்காய்ச்சலும் மற்றொருவகை பக்aரியாவைப் பாவித்துக் கட்டுப்படுத்தப்பட்டி ருக்கின்றது. அதனால் தேவைப் படும் பட்சத்தில் அப்பக்aரியா

நுண்ணங்கி தொடர்பாகவும் நிபுணத்துவ ஆலோசனை பெற்றுத்தர முடியும் என்று கூறியுள்ளனர். இதனடிப்படையில் இங்கும் எலிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு பக்aரியா நுண்ணங்கியைப் பாவிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.

இந்நாட்டில் மாத்தளை, கொழும்பு, கம்பஹா, குருநாகல், கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் வருடா வருடம் அதிகமானோர் எலிக்காய்ச்சலுக்கு உள்ளாகின்றனர்.

மழைக் காலம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளதால் தங்கள் பாதங்களில் காயங்களுடன் இருப்பவர்கள் காயங்கள் குணமடை யும் வரையும் வயல் வேலையிலும், இரத்தினக்கல் அகழ்வு மற்றும் கால்வாய் பணிகளிலும் ஈடுபட வேண்டாமென சுகாதார அமைச்சு கேட்டுள்ளது.

அதேநேரம் வயல், இரத்தினக்கல் அகழ்வு இடங்கள், வடிகான்களில் தொழில் புரிபவர்கள் எலிக்காய்ச்சலை தவிர்ப்பதற்கான மாத்திரைகளை பிரதேசத்தில் கடமைபுரியும் மருத்துவ அலுவலகர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளுமாறும் அமைச்சின் அதிகாரியொருவர் கேட்டுக்கொண்டார்.

முல்லை, புதுக்குடியிருப்பு பகுதியில் படகு இயந்திரங்கள் மற்றும் கிளேமோர் குண்டுகள் மீட்பு

udaya_nanayakkara_brigediars.jpgபுதுக் குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து படகு இயந்திரங்கள், அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

9.9 குதிரை வலுக்கொண்ட படகுகளுக்கு பொருத்தப்படும் வெளி இயந்திர எஞ்சின்கள், 2.5 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள்-4, 81 மி.மீ. மோட்டார் குண்டுகள்-05, 60 மி.மீ ரக மோட்டார் குண்டுகள்-20, ரி-56 ரக துப்பாக்கிகள் 50 மற்றும் பல வகையான குண்டுகள் மீட்டெடுத்துள்ளனர்.

பிரிட்டிஷ் இராஜதந்திரி வவுனியா விஜயம்

பிரித் தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மார்க்குட்டிங் வியாழக்கிழமை செட்டிகுளத்தில் வன்னி மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள அகதி முகாம்களுக்கு விஜயம் செய்து அந்த மக்களின் நிலைமைகளை அவதானித்தார். பின்னர் வவுனியா கச்சேரியில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட அவர், இடம்பெயர்ந்த வன்னி மக்களின் மீள் குடியேற்றம், அகதி முகாம்களின் தற்போதைய வெள்ள நிலைமை மற்றும் அம்மக்களின் அன்றாட பிரச்சினைகள் குறித்து உரையாடினார்.

இந்த மக்களின் மீள்குடியேற்றம், நிவாரண உதவிகள் குறித்தும் பிரதி உயர்ஸ்தானிகர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா அரசாங்க அதிபர் பீ.எம்.எஸ். சார்ள்ஸ், வன்னி கட்டளைத் தளபதி ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.

பாகிஸ்தானில் கார்க் குண்டுத் தாக்குதல்; அன்ஸாருல் இஸ்லாம் முக்கியஸ்தர் பலி

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கடந்த சனிக்கிழமை நடந்த கார்க் குண்டுத் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், ஐந்து பேர் காயமடைந்தனர். ரிமோட் கருவி மூலம் தூரத்திலிருந்து இக் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. அரசாங்க வைத்திய சாலைக் கருகாமையில் இக்கார் குண்டு வெடிக்கவைக்கப்பட்டது.

பலியான இருவரும் அன்ஸாருல் இஸ்லாம் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என பெஷாவர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். பலியான முபீன் அப்ரிடி இவ்வியக்கத்தின் பேச்சாளராவார். மற்றவர் இவரின் கார் சாரதியாவார். காயமடைந்தோர் பொது மக்களாவர்.

லக்ஷர் இ இஸ்லாம் என்ற அமைப்பு இக் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குண்டு வெடித்த இடம் சன நெருக்கமுள்ள பகுதியாகும். ரமழான் மாதம் ஆரம்பமானதால் பெருந் தொகையானோர் வீதிகளில் நடமாட வில்லையென்பதால் இழப்புகள் குறைவாக இருந்தன.

பாகிஸ்தான் இராணுவத்தின் பாரிய நடவடிக்கைகள் வஸிரிஸ்தான் பகுதியில் ஆரம்பித்துள்ளதால் இஸ்லாமிய அமைப் புகளிடையே பிளவுகள் ஏற்பட்டுள்ளதை இந்த தாக்குதல் உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.

ஆஷஸ் தொடரை வென்றது இங்கிலாந்து!

eng0000.jpgஅவுஸ்தி ரேலியாவிற்கு எதிரான சாம்பல் கிண்ணத்துக்கான ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இங்கிலாந்து-ஆஸ்‌ட்ரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே வரலாற்று புகழ்மிக்க ‘ஆஷஸ்` டெஸ்ட் தொடர் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி 65-வது ஆஷஸ் டெஸ்ட் கடந்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கியது. இதில் முதல் 4 டெஸ்டில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற்றன. இரு போட்டி டிராவாகின.

இதனால் தொடர் சமன் ஆன நிலையில் கோப்பையை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 20ஆ‌ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332 ஓட்டங்களும், ஆஸ்‌ட்ரேலியா 160 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் 172 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 373 ஓட்டங்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்‌ட்ரேலிய அணிக்கு 546 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

கடினமான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்‌ட்ரேலிய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. முந்தைய நாள் சிறப்பான தொடக்கம் அமைத்து தந்த வாட்சன், சைமன் கேடிச் இருவரும் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து எல்.பி.டபிள்யூ. ஆனார்கள். கேடிச் 43 ஓட்டங்களுடனும் வாட்சன் 40 ஓட்டங்களுடனும் அவுட் ஆனார்கள்.

இதை தொடர்ந்து அ‌ணி‌த் தலைவ‌ர் ரிக்கி பாண்டிங்கும், மைக் ஹஸ்ஸியும் அணியை வீழ்ச்சியில் இருந்து மீட்கும் போராட்டத்தில் இறங்கினார்கள். அணியை ஓரளவு தூக்கி நிறுத்திய இந்த அபாயகரமான கூட்டணி துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட்டில் பிரிந்தது. பிளின்டாப்பால் ரன்-அவுட் செய்யப்பட்ட பாண்டிங் 66 ஓட்டங்களுடன் (103 பந்து, 10 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய துணை தலைவ‌ர் மைக்கேல் கிளார்க்கும் (0) வந்த வேகத்தில் ரன்-அவுட் ஆகவே ஆஸ்‌ட்ரேலிய அணி தோல்வி பாதைக்கு தள்ளப்பட்டது. 5-வது விக்கெட்டுக்கு உள்ளே வந்த மார்கஸ் நார்த்தும் (10 ரன்) நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

இதன் பின்னர் ஒரு முனையில் ஹஸ்ஸி தனது 10-வது சதத்தை பூர்த்தி செய்து கொண்டு போராட, மறுபக்கம் வேகமாக விக்கெட்டுகள் சரிந்தன. ஹேடின் (34 ஓட்டங்கள்), ஜான்சன் (0), சிடில் (10), ஸ்டூவர்ட் கிளார்க் (0) ஆகியோர் சிறிய இடைவெளியில் வெளியேறினர்.

கடைசி விக்கெட்டாக மைக்ஹஸ்ஸி (121 ஓட்டங்கள், 263 பந்து, 14 பவுண்டரி) ஆட்டம் இழக்க ஆஸ்‌ட்ரேலிய அணி 2-வது இன்னிங்சில் 348 ஓட்டங்களு‌க்கு அனை‌த்து ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்தது. இதன் மூலம் 197 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இங்கிலாந்து அணி மீண்டும் ஆஷஸ் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது. இங்கிலாந்து அணியில் ஸ்வான் 4 விக்கெட்டுகளும், ஹார்மிசன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வெற்றி கொண்டாட்டத்துடன் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பிளின்டாப் டெஸ்ட கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் ஆஸ்‌ட்ரேலியாவை நிலை குலைய செய்த இங்கிலாந்து ப‌ந்து ‌வீ‌ச்சாள‌ர் ஸ்டூவர்ட் பிராட் ஆட்டநாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து அ‌ணி‌த் தலைவ‌ர் ஸ்டிராஸ் (மொத்தம் 474 ஓட்டங்கள் ), ஆஸ்‌ட்ரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் (448 ஓட்டங்கள் ) ஆகியோர் தொடர் நாயகன் விருது பெற்றனர்.

இந்த தோல்வியின் மூலம் ஆஸ்‌ட்ரேலிய அணி முதல் முறையாக ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்தை இழந்துள்ளது.

வன்னி முகாம்களின் அவலங்கள்: வன்னியில் இருந்து ஒரு மின் அஞ்சல்

IDP_Camp_Aug09நண்பர்களே

இலங்கையில் யுத்தம் உக்கிரமடைந்த காலங்களின்போது உலகமே சனங்கள் சனங்கள் என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தது. இப்போது யுத்தம் முடிவடைந்து விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பிறகான காலத்திலும்‌ அந்தச் சனங்களின் வாழ்நிலையில் மாற்றமேதும் வந்துவிடவில்லை – சாவின் கரங்கள் மூர்க்கமான எறிக்ணைகளாகத் தம்மைத் தாக்கிச் சிதைக்கும் என்ற பயத்தில் மருளத் தேவையில்லை என்பதைத் தவிர்த்துப் பார்த்தால். ஆனால் போரின் கடைசிக் கணம்வரை பெருங்குரலெடுத்துக் கதறிக் கொண்டிருந்த உலகு சட்டென்று மௌனமாகிக் கிடப்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப்பற்றிப் பேசுபவர்கள் அதற்குக் கபடத்தனமான அரசியற் சாயம் பூசியே அதைச் செய்கிறார்கள்.

IDP_Camp_Aug09260 000க்கும் மேற்பட்ட தமிழ் அகதிகள் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் செட்டிக்குளம் பகுதியில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை நிலைமையைப் படுமோசமாக்கியிருப்பதாகக் கண்டு வந்தவர்கள் சொல்கிறார்கள்.. (இணைக்கப் பட்டிருக்கும் படங்கள் சாட்சி). தற்காலிகமாக அமைக்கப்பட்ட‌ மலக்குழிகளில் பல நிரம்பி வழிந்தபடியிருப்ப‌தாகவும் பல முற்றாகச் சீர்கெட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள். எங்கும் தாங்க முடியாத‌ துர்நாற்றம். இது பெருத்த சுகதாரச் சீர்கேட்டுக்கும் நோய்களுக்கும் வழிவகுக்கும் என்பது திண்ணம். இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் மனிதக் கழிவின் மீது நெளியும் புழுக்களைக் காணலாம்.. (அரசாங்கம் நெடுநாளைக்கு மக்களை இந்த முகாம்களில் வைத்திருக்கக் கூடாது என்பதற்காகவே ஐ.நா தற்காலிக மலசலக் குழிகளை அமைத்துக் கொடுத்திருந்தது. ஆனால் அரசாங்கத்துக்கு அவர்களை இப்போதைக்கு மீளக் குடியேற்றும் எண்ணம் சற்றேனும் இருப்பதாகத் தோன்றவில்லை. குறைந்த பட்சம் வெளியே உறவினர்களோடு சென்று தங்கி வாழக்கூடிய நிலையிலுள்ள குடும்பங்களையாவது சோதனைகளை முடித்து விட்டுச் செல்ல அனுமதிப்பதாயில்லை. அப்படிச் செய்வது முகாம்களில் நிலவும் மிகுந்த சனநெரிசலை வெகுவாகக் குறைக்கும்)

IDP_Camp_Aug09இங்கே இலங்கையில் ஜனநாயகம் நாளுக்கு நாள் சீர் கெட்டுக் கொண்டிருக்கிறது. அனைவரும் ஒரேகுரலில் ஒரேதொனியில் ஒரேபொருளையே உரைக்க வேண்டுமென்று நிர்ப்பந்திருக்கிறது. ஒரு சில பேரால் மட்டுமே இயக்கப்படும் அரச யந்திரம். பெருத்த மௌனம் சனங்கள் மீது ஒரு கரும்போர்வையாகப் படர்ந்திருக்கிறது. ஆனால் வெளியுலகிலும் அப்படியா? இலங்கை அரசுக்கெதிரான குரல் விடுதலைப் புலிகள் அழியும் மட்டும் தான் ஒலித்தென்றால், அவ்வளவும் புலிகளுக்கு ஆதரவாக ஒலித்த குரல் மட்டும் தானா? சனங்களைப் பற்றிய கரிசனை..? இனியான எதிர்காலம் என்ன?

நண்பர்களே, இப்பிரச்சனை குறித்து நான் பணிபுரியும் பத்திரிகைக்காக எழுதிய செய்தியில் எனது பெயரைப் போடுவதற்கே திராணியற்ற நிலையில், அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலை செய்யும் நபரொருவர் அனுப்பி வைத்த இப்படங்களை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். இவற்றை உங்களின் வலைத்தளங்களில் பிரசுரிப்பதன் மூலமும், வெகுஜன ஊடகங்களில் பணிபுரிபவர்கள் தத்தமது ஊடகங்களில் வெளியிடுவதன் மூலமும் பரந்தவொரு சனத்திரளின் பார்வைக்கு இந்தப் பிரச்சனையைக் கொண்டு செல்லலாம் என்ற நம்பிக்கையில்…

முல்லைத்தீவு மாவட்டம்: சிவில் நிர்வாகத்தை மீளவும் ஆரம்பிப்பது குறித்து ஆராய்வு

mullai-ga.jpgமுல்லைத் தீவு மாவட்டத்தில் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக அம்மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டக் கட்டளைத் தளபதியும் சந்தித்து ஆராய்ந்துள்ளனர். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரும், மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவுமே இது விடயமாக நேற்று முன்தினம் ஆராய்ந்திருக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டக் கட்டளைத் தளபதியின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் நிர்வாகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்குக் கண்னி வெடிகளைத் – துரிதமாக அப்புறப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இச்சமயம் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை முல்லைத்தீவு மாவட்ட மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாடு, புனரமைப்பு பணிகள் என்பன தொடர்பாகவும் இச்சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளன.

இதேவேளை மாங்குளத்தில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி கிளைகளை மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியப் பாடுகளையும் அவ்வங்கிகளின் அதிகாரிகள் அரசாங்க அதிபருடன் ஸ்தலத்திற்கு நேரில் சென்று ஆராய்ந்திருக்கின்றனர்.

வணங்காமண் நிவாரணப் பொருட்கள் தொடர்ந்தும் கொழும்புத் துறைமுகத்தில்

06-cargo-ship.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துக்கு கொலராடோ கப்பல் மூலம் அனுப்பப்பட்ட பொருட்களை துறைமுகத்திலிருந்து வெளியிலெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. அடுத்தவாரம் முற்பகுதியில் அவற்றை வெளியில் கொண்டுவருவதற்கான சாத்தியமுள்ளதாக நம்பிக்கை இலங்கை செ.சங்கம் தெரிவித்தது. இது தொடர்பில் அச்சங்கத்தின் தேசிய செயலாளர் நிமால் குமார் கருத்துத் தெரிவிக்கையில்;

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தால், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ளவர்களுக்கு விநியோகிக்குமுகமாக எமது சங்கத்துக்கு 650 தொன் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டிருந்தன. இப்பொருட்கள் கொலராடோ கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இன்னும் துறைமுகத்திலிருந்து வெளியிலெடுக்கப்படவில்லை.

சங்கம் இப்பொருட்களை துறைமுகத்திலிருந்து வெளியிலெடுப்பதற்கு அனுமதிப்பதற்குத் தேவையான நடைமுறை செயற்பாடு பூர்த்தியாகாததன் காரணமாகவே வெளியிலெடுக்க முடியாதுள்ளது. இப்பொருட்களை வெளியிலெடுப்பதற்கு நாம் தொடர்ந்து நடவடிக்கையெடுத்து வருகிறோம்.

அநேகமாக வார முற்பகுதியில் இப்பொருட்கள் வெளியிலெடுக்கக் கூடியதாகவிருக்குமென நினைக்கிறேன். இதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுடன் தொடர்புகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

கொலராடோ கப்பல் மூலம் சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் இப்பொருட்கள் துறைமுகத்துக்குக் கொண்டுவரப்பட்டன. வன்னி அகதிகளுக்கென புலம்பெயர் சமூகத்திடம் சேகரிக்கப்பட்ட பொருட்கள் ஐரோப்பாவிலிருந்து கடந்த ஏப்ரலில் கப்டன் அலி கப்பல் (வணங்காமண்) நிவாரணப் பொருட்கள் தொடர்ந்தும் கொழும்புத் துறைமுகத்தில் மூலம் கொண்டுவரப்பட்டது. இலங்கை கடல் எல்லைக்குள் கப்பல் அனுமதிக்கப்படாத நிலையில் திருப்பி அனுப்பப்பட்டு இக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு சென்று கொலராடோ கப்பலுக்கு பொருட்கள் மாற்றப்பட்டு கொழும்புக்கு பொருட்கள் கொண்டுவரப்பட்டன.

கிரேக்கத்தில் காட்டுத் தீயால் கடும் பாதிப்பு

greece_athens_fires.gifகிரேக்கத்தில் பரவிவரும் காட்டுத்தீ அந்நாட்டின் தலைநகரில் சேதங்களை ஏற்பபடுத்தும் என்று அஞ்சப்படும் நிலையில், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான சுற்றுச்சூழல் பேரவலம் இதுதான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரும் சீற்றத்துடன் காற்று வீசுவதால் தீ வேகமாக பரவி வரும் நிலையில், அதென்ஸ் நகரின் வடக்கு மற்றும் கிழக்கு புறநகர்ப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்களை வீடுகளை துறந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இத்தாலி, பிரான்ஸ் சைப்ரஸ் போன்ற நாடுகளிலிருந்து தீயணைப்பு விமானங்கள் உள்ளிட்ட சர்வதேச உதவிகளை காட்டுத் தீயை அணைப்பது தொடர்பில் கிரேக்க அரசாங்கம் பெற்றுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் இதேபோல் காட்டுத் தீ பரவியதில் எழுபதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர்.

அடுத்துவரும் தினங்களில் இடி மின்னலுடன் மழை; அவதானமாகயிருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை

flood1111.jpgகிழக்கு,  ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யுமென வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்த டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

அதன் காரணத்தினால் இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்வதில் பொது மக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மேற்படி பகுதிகளில் பெரும்பாலும் மாலை வேளையிலேயே இடி, மின்னலுடன் மழைபெய்யும்.

இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்வதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இவ்வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் இடி, மின்னல் தாக்கம் காரணமாக சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆகவே இடி, மின்னலுடன் மழை பெய்யும் வேளையில் திறந்த வெளியில் நடமாடவோ, வயல் வேலைகளில் ஈடுபடவோ வேண்டாம். மோட்டார் பைசிகிள், பைசிகிள் போன்ற வாகனங்களில் பயணம் செய்ய வேண்டாம். தொலைக்காட்சி, வானொலி என்பவற்றைப் பயன்படுத்த வேண்டாம், மின்சார உபகரணங்களின் மின் இணைப்பை துன்டித்து விடவும் வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.