August

August

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 66 பேர் மரணம்

10092009.jpgஇந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் மாநிலங்களில் தலா ஒருவர் இன்று பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத்  மாநிலம் வதோதராவைச் சேர்ந்த ஹஸ்முக் ஹிங்கு என்பவர் இன்று சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார். குஜராத்தில் மட்டும் இதுவரை 6 பேர் இறந்துள்ளனர்.

இதேபோல மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா பகுதியை சேர்ந்த அனில் சேஷ்ராவ் சவான் (26) என்ற வாலிபரும், ஹரியானா மாநிலம் குருசேத்ரா மாவட்டத்தில் 40 வயது நிரம்பிய பெண் ஒருவரும் பன்றி காய்ச்சல் நோய்க்கு பலியானார்கள்.

டெல்லியில் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானதாக தகவல் வெளியானது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை.

2வது கட்ட தாக்குதல் அபாயம்

பன்றிக் காய்ச்சல் பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் 2வது கட்ட பன்றிக் காய்ச்சல் தாக்குதல்  ஏற்படவுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக நாடுகள் இதை சமாளிக்க தயாராகிக் கொள்ளுமாறும் அது எச்சரித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் மழைக் காலம் நெருங்கியுள்ள நிலையில், பன்றிக் காய்ச்சல் கடுமையாக இருக்கும் எனவும் அது கூறியுள்ளது.

உலகம்  முழுவதும் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 1799 பேர் உயிரிழந்துள்ளனர். 177 நாடுகளை பன்றிக் காய்ச்சல் பாதித்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்களில் ஒரு லட்சம் பேரை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை

flood.jpgவவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உள்ளவர்களில் யாழ்ப்பாணம், திருகோணமலை போன்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வயோதிபர்கள், வலது குறைந்தவர்கள் என பல தரப்பட்டவர்கள் அடங்கலாக சுமார் ஒரு லட்சம் பேரை விரைவில் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் சுமார் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் விபரங்கள் திரட்டப்பட்டு, அவர்களைச் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஜனாதிபதி செயலகத்தின் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் வன்னிப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்காகக் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளும், வீதிகள் அமைத்தல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்துதல், மின்சார விநியோகச் செயற்பாடுகள் உட்பட உட்கட்டமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஓமந்தையில் இருந்து புளியங்குளம் வரையிலான பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, அந்தப் பிரதேசத்தின் பாதுகாப்பு குறித்த சான்றிதழை எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டத்தவர்கள் தவிர்ந்த ஏனையோர் சரியான தகவல்களை வழங்கினால் சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதி
 
ga-vavuniya-222.jpgவவுனியா முகாம்களில் தங்கி இருப்பவர்களுள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் தொடர்பான சரியான தகவல்களை வழங்கி அவற்றை உறுதிப்படுத்துவார்களாயின் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தற்போது முகாம்களில் உள்ளவர்களுள் 60 வயதிற்கு மேற்பட்டோர், மனநோயாளர்கள், அங்கவீனர்கள் மற்றும் நோயாளிகள் தங்கள் உறவினர்களோடு சென்று வாழ விரும்பினால் தமது உறவினர்கள் தொடர்பான சரியான விபரங்களை வழங்குவõர்களேயானால் அந்த தகவல்கள் பாதுகாப்பு தரப்பினர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு அவர்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைப்போம்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தாங்கள் தொடர்பான சரியான தகவல்களை வழங்குவார்களானால் அதனை அப்பகுதியை சேர்ந்த அரசாங்க அதிபரிடம் அல்லது கிராம சேவகரிடம் ஒப்படைத்து இவர்களது பதிவுத் தகவல்களை உறுதிசெய்யப்பட்ட பின்னர் அவர்களை அவரவர் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைப்போம். அது தொடர்பான வேலைகளை தற்பொழுது நாம் மேற்கொண்டு வருகிறோம்.

தத்தமது பிரதேசங்களில் சென்று வசிப்பதில் மக்கள் ஆர்வமாகவே உள்ளனர். இவற்றில் பாதுகாப்பு தரப்பினரை நாடி நாங்கள் பேசியுள்ளோம். எனவே அனைவரினதும் ஒத்துழைப்புக்களுடனும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படும்.

கடந்த இரண்டு மூன்று நாட்களாக கடும் மழை பெய்ததால் கூடாரங்கள் உள்ள பகுதிகளில் வெள்ள நீர் பாதிப்பை ஏற்படுத்தினாலும் தற்போது அந்நிலைமை சீர்படுத்தப்பட்டுள்ளது. நீர் தேங்கி நின்ற பகுதியில் உள்ள கூடாரங்கள் அகற்றப்பட்டதுடன் அக்கூடாரங்களில் வசித்த மக்களுக்கு வேறு கூடாரங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர வடிகான்களும் சீரமைக்கப்பட்டுள்ளன. பழுதடைந்திருந்த கூடாரங்கள் புனரமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் மழை காலத்தை சமாளிக்கும் வகையில் அம்மக்களுக்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்றார் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்

ஈழ தமிழர்களின் துயர்நீக்கும் விடிவு விநாயக சதுர்த்தி-அர்ஜூன் சம்பத்

ராஜதந்திரம் என்ற பெயரில் நாடகமாடிய கருணாநிதியை ஈழத்தில் மண்ணாகி போன அத்தனை ஆத்மாக்களும் மன்னிக்காது. இந்த ஆண்டு விநாயக சதூர்த்தி ஈழ விடிவு சதுர்த்தியாக கொண்டாடப்படும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விகடன் இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டி…

தமிழக முதல்வர்  கருணாநிதி, ஈழத்தில் பிஞ்சு குழந்தைகள் கொன்றழிக்கப்பட்ட கொடூரத்தைக்கூட கண்டு கொள்ளாமல், பதவி நாற்காலியை பார்த்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தவர். இதை நன்றாக பயன்படுத்தி கொண்ட இலங்கை அரசு ஈழத்தையே எழவு காடாக்கிவிட்டது.

கருணாநிதி தமிழகத்தின் தலைமகனாக இருந்தும் இந்திய அரசின் ஆயுத உதவிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டும், இலங்கையின் மனிதத் தன்மையற்ற வெறித்தனத்தை தட்டிக் கேட்க தைரியமில்லாமல் இருந்ததால்தான், இன்றைக்கு ஈழத் தமிழர்கள்  நாதியற்றுப் போய்விட்டனர்.

ஆனால், அதற்காகத் தமிழகத்திலிருந்து ஒலிக்கத் தொடங்கி இருக்கும் ஒப்பாரிக் குரல்களைக்கூட நசுக்குவது போல், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவது தவறு என திடீரென தமிழக அரசு மிரட்டல்  அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

ஆனால், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது தவறில்லை என உச்ச நீதிமன்றமே பலமுறை சொல்லி இருக்கிறது. அதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், 1968-ம் ஆண்டு சட்டத்தை நினைவூட்டி தமிழக அரசு மிரட்டுகிறது.

விடுதலைப் புலிகளை அடியோடு நசுக்கி அழித்துவிட்ட பிறகும், எதற்காக இந்த அரசு பயப்பட வேண்டும்?

அரசு எத்தகைய மிரட்டலை அறிவித்தாலும், இந்த வருட சதுர்த்தியை இரத்தமும் கண்ணீருமாகச் செத்தழிந்து கிடக்கும் ஈழத்து மக்களைக் காப்பாற்றுவதற்காக ஈழ விடிவு சதுர்த்தியாகவே வழிபடுவோம். பிரபாகரனையோ புலிகளையோ நாங்கள் துதி பாடவில்லை.

ஆனாலும், ஈழத்தின் பெயரால் நாங்கள் ஏற்பாடு செய்யும் சதுர்த்தி விழாவைத் தடுப்பதற்காக தமிழக அரசு அவசர கதியில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் தமிழகம் முழுக்க எழும் தமிழ் ஈழம் என்கிற பெயரில் கட்-அவுட்களையும் பேனர்களையும் வைத்திருக்கிறார். திசையெங்கும் சிறுத்தைக் கொடியும் புலிக் கொடியும் பறக்கிறது.

பிரபாகரனும் திருமாவளவனும் ஒருசேர போஸ் கொடுப்பது போன்ற காட்சிகள் திரும்பிய பக்கமெல்லாம் தெரிகிறது. ஆனால், இதெல்லாம் கருணாநிதிக்கு தெரியாது.

தோல்வியடையும் நிலையில் அவுஸ்திரேலியா

eng0000.jpgஓவலில் நடைபெறும் ஆஸ்ட்ரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது, இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4ஆம் நாளான இன்று அவுஸ்திரேலியா  அணி சற்று முன் வரை தன் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 102 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தோல்வியை தவிர்க்க அவுஸ்திரேலியா மேலும் 443ஓட்டங்கள் பெற வேண்டும்

பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கையில் பயிற்சிக் கல்லூரி

பயங்கர வாதத்தை முறியடிப்பது எப்படி என்று சர்வதேச நாடுகளின் படையினருக்கு பயிற்சி வழங்குவதற்காக இலங்கையில் விசேட பயிற்சிக் கல்லூரி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினண்ட்  ஜெனரல் ஜகத் ஜயசுரிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைப் படையினர் பயங்கரவாதத்தை உள்நாட்டில் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இந்நிலையில், இலங்கைப் படையினரால் யுத்த நடவடிக்கைகளின் போது பயன்படுத்தப்பட்ட இராணுவ தந்திரோபாயங்களையும் இராணுவ உத்திகளையும்  அறிந்துகொள்வதில் சர்வதேச நாடுகள் மிகுந்த ஆர்வம்காட்டி வருகின்றன.

பாகிஸ்தான் இராணுவத்தினர் ஏற்கனவே  இலங்கை இராணுவத்தினரிடம் பயங்கர வாத ஒழிப்பு நடவடிக்கைகள் சம்பந்தப் பட்ட பயிற்சிகளை பெற்றுள்ளனர்  என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் விழிப்புக்குழுக்கள் – பொலிஸார் நடவடிக்கை

வவுனியா வில் கிராம சேவைப் பிரிவுகள் தோறும் விழிப்புக்குழுக்களை அமைக்கும் பணிகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்ததந்தப் பிரிவுகளில் உள்ள மதத்தலைவர்கள், கிராமசேவை அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்களை உள்ளடக்கிய இந்த விழிப்புக் குழுக்களில் பொலிசார் இருவர் அங்கம் வகிப்பர். பிரதேசத்தில் அமைதியை நிலவச் செய்யும் நோக்கில் பொதுமக்களிடையே ஏற்படும் பொதுவான பிணக்குகள்,  பிரச்சினைகள் போன்றவற்றை தீர்ப்பதில் இக்குழு ஈடுபடம்.

அதேவேளை சமூக விரோதச் செயல்கள்,  இளைஞர்கள், சிறுவர்களின் நலன்கள் என்பவற்றில் இந்தக் குழு கவனம் செலுத்துவதுடன், அப்பகுதியில் ஏற்படுகின்ற கொள்ளைகள் மற்றும் குற்றச் செயல்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளிலும் செயற்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அந்தப் பிரதேசத்தின் பொதுவான பாதுகாப்பு குறித்து விழிப்புடன் இருந்து செயற்படும் இந்தக் குழு,  அந்தப் பிரதேசத்திற்கு வருகின்ற புதியவர்கள் தொடர்பில் விழிப்புடன் செயற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழிப்புக்குழுக்கள் செயற்படத் தொடங்கியதும், அந்தப் பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்கள் தொடர்பான விபரக்கோவையும் பதிவில் வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

பிரபாகரன் உருவத்தில் விநாயகர் சிலை : திருப்பூரில் பரபரப்பு

வருடந்தோறும், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதை ஒட்டி தமிழகம் முழுவதும் வெற்றி விநாயகர், சித்தி விநாயகர், கற்பக விநாயகர், செல்வ விநாயகர் என பல வகையான விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட்டு வந்த பக்தர்கள் இவ்வருடம் ஈழ விநாயகர் என்ற பெயரில் சிலைகளை நிறுவியிருக்கின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு பூசைகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் திருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் பிரபாகரன் உருவத்தோடு ஈழ விநாயகர் சிலை ஒன்றை வைத்து சிறப்பு பூசை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.  இதனால் திருப்பூர் போலீசாரும், உளவுத்துறையினரும் விழிப்போடு அந்த சிலை நிறுவப்படுவதை தடுக்க கண்காணித்து வருகின்றனர்.

இதே போல ராமேஸ்வரம் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளும் இலங்கையை நோக்கி ஈழ விநாயகர் சிலையுடன் செல்லவிருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த முயற்சியை முறியடித்து அவர்களை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது.

காவல்துறையின் கண்காணிப்பை மீறி ஈழ விநாயகர் சிலையை நிறுவி அர்ச்சனை செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள் திருப்பூர் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள். 

முசலியில் 442 தமிழ்-முஸ்லிம் குடும்பங்கள்; சொந்த இடங்களில் மீள் குடியேற்றம்

1111musaly.jpgமன்னார், முசலி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 8 கிராமங்களில் 442 தமிழ் – முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 1898 பேர் தமது சொந்த இடங்களில் மீளக் குடிய மர்த்தப்பட்டுள்ளனர். முசலியில் இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் காலை நடைபெற்ற மீள்குடியேற்ற நிகழ்வின்போது 2007 ஆம் ஆண்டு மோதல்கள் காரணமாக கொக்குபுடையான் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து நானாட்டான் பகுதியில் தங்கியிருந்த 94 தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த 347 பேர் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.

முசலி பிரதேச செயலகத்தின் வேப்பங்குளம், பண்டார வெளி, பூநொச்சிக்குளம், பெரிய புல்லச்சி, பொற்கேணி, பூலான்குளம், புதுவெளி, மேத்தன்வெளி பகுதிகளிலிருந்து 90 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட 348 குடும்பங்களைச் சேர்ந்த 1551 முஸ்லிம்களும் மீளக் குடியமர்த்தப்பட்டனர்.

1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட இவர்கள் புத்தளத்தில் அகதிகளாக தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற மீள்குடியேற்ற நிகழ்வின் போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மன்னார் அரச அதிபர் நிக்கலஸ் பிள்ளை, முசலி பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

மன்னார் மாவட்ட மீள்குடியேற்ற திட்டத்திற்கமைய முதலாவதாக சிலாபத்துறையிலும், முசலி பிரதேச பிரிவிலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றங்கள் நடைபெற்றன. முசலி பிரதேச செயலகத்தின் இரண்டாம் கட்ட மீள்குடியேற்றத்தின் பின்னர் முள்ளிக்குளம் பகுதியில் மீள்குடியேற்றம் நடைபெறும். தற்போது முள்ளிக்குளம் பகுதியில் நிலக்கண்ணிவெடிகள், மிதி வெடிகள் அகற்றும் வேலைகள் நடத்தப்படுகின்றன.

முசலி பிரதேச செயலகத்திலுள்ள எட்டு கிராமசேவகர் பிரிவுகளிலும் நேற்று முன்தினம் மீள்குடியேற்றப்பட்ட மக் களுக்கு, உலர் உணவுகள், சமையல் பாத்திரங்கள், தற்காலிக கூடாரங்கள் போன்றவை நேற்று வழங்கப்பட்டன.யுனிசெப் நிறுவனம், உலக உணவுத் திட்ட நிறுவனம் உட்பட தொண்டர் நிறுவனங்கள் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கின.

வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, அமைச்சர் எஸ். எம். சந்திரசேன உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

கிலானி, ஷபாஸ் ஷெரீப்பை கொல்ல தாலிபான்கள் திட்டம்

shahbazsharif.jpgபாகிஸ் தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி மற்றும் பஞ்சாப் மாகாண முதலமைச்சரும், நவாஸ் ஷெரீப்பின் சகோதரருமான ஷபாஸ் ஷெரீப் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரைக் கொல்ல தாலிபான்கள் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு உளவுத் துறை எச்சரித்துள்ளது.

வடமேற்கு பாகிஸ்தானில் இராணுவத்தின் கடும் தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் சூழ்நிலைக்கிடையேயும், மேற்கூறிய கொலைத்திட்டத்தை தாலிபான்கள் வகுத்துள்ளதாக பாகிஸ்தான் அரசை அந்நாட்டு உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இந்த கொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, 50 பேரை தாலிபான் இயக்கம் அனுப்பியுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் இஸ்லாமாபாத்திலிருந்து ஒளிபரப்பாகும் ஜியோ தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. 

பலமான நிலையில் இங்கிலாந்து

cri0000.jpgஓவலில் நடைபெறும் ஆஸ்ட்ரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது, இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாளான நேற்று இங்கிலாந்து அணி தன் இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 373 ஒட்டங்கள் எடுத்து 545 ரன்கள் முன்னிலை பெற்று பலமான நிலையில் உள்ள போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

ஆஸ்திரேலியா – நேற்று இரண்டாவது இன்னிங்ஸ்ஸில் ஆட்டமுடிவின் போது விக்கெட் இழப்பின்றி 80 ஒட்டங்கள் பெற்றிருந்தது. வாட்சன்  ஆட்டம் இழக்காமல் 31 ஒட்டங்கள் கடிச்  ஆட்டம் இழக்காமல்  42 ஒட்டங்கள்  பெற்றிருந்தனர்.

இங்கிலாந்து – முதலாவது இன்னிங்ஸ் – 90.5 ஓவர்கள்  332 ஒட்டங்கள் 
ஆஸ்திரேலியா – முதலாவது இன்னிங்ஸ் – 52.5 ஓவர்கள்  160 ஒட்டங்கள் 
இங்கிலாந்து – இரண்டாவது இன்னிங்ஸ் –  95 ஓவர்கள்  373 ஒட்டங்களுக்கு ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
ஆஸ்திரேலியா – இரண்டாவது இன்னிங்ஸ்  – 20 ஓவர்கள்  விக்கெட் இழப்பின்றி 80 ஒட்டங்கள்

ஆஸ்திரேலியா வெற்றி இழக்கு 546 ஒட்டங்கள்