ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் விசேட பணிப்புரைக் கமைய டிசம்பர் 05 ஆம் திகதி மெளலவி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கப்படவுள்ள தாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்தார்.
மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப் பேகடுவையின் கண்டி உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற மத்திய மாகாண ஸ்ரீல. சு. கட்சி அமைப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.
மேல்மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை நிதி அமைச்சு மற்றும் திறை சேரியின் செயலாளர் கலாநிதி பீ. பி. ஜயசு ந்தரவைச் சந்தித்து நடாத்திய பேச்சு வார்த்தையையடுத்து இந்நியமனங்களுக்கான நிதியை உடனடியாகக் கல்வியமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு பணிப்புரை விடுக்கப்ப ட்டது