December

December

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை: மக்கள் இடம்பெயரும் அபாயம்

front.jpgஅம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த வெள்ள அச்சுறுத்தல் நீங்கியுள்ளது. நேற்று முதல் மழை ஓய்ந்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் தேங்கியிருந்த வெள்ளநீர் படிப்படியாக குறைந்து வருகின்றது. இதேவேளை கல்முனை, கல்முனைக்குடி, பாண்டிருப்பு தாழ்ந்த பகுதிகளில் தேங்கியிருக்கும் வெள்ள நீரை அகற்ற கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கிட்டங்கி வாவி நீர் மட்டம் குறைந்துள்ள போதிலும் கிட்டங்கி பாலத்தின் நீரோட்டத்தை சல்வீனியா தாவரம் தடுத்துள்ளதனால் வீதிக்குக் குறுக்காக வெள்ள நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. எனினும் போக்குவரத்து தடை ஓரளவு நீங்கியுள்ளது நீரோட்டத்தை தடை செய்யும் சல்வீனியா தாவரத்தை உடன் அகற்ற வீதி அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளத்தினால் சேமடைந்து இருக்கும் கிட்டங்கி வீதியை திருத்தம் செய்து மக்கள் பாவனைக்கு வழங்குமாறு கிழக்கு மாகாண உறுப்பினர் எஸ். புஸ்பராசா சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மக்கள் இடம் பெயரும் நிலை ஏற்படலாம் என மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

வெள்ளத்தின் காரணமாக செங்கலடி, பெருமாவெளிப் பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் 25 ஆம் கிராமம், வேத்துச்சேனை, ஆணைக்கட்டியவெளி, சின்னவத்தைக் கிராமங்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்த அரச அதிபர், இக் கிராமங்களின் பாலத்தின் ஊடான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஈரலக்குளம் பாதை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுச்சேவை நடாத்தப்படுவதாகவும் தெரிவித்தார். ஐயங்கேணி, பலாச்சேலை, சித்தாண்டி கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவித்த அரச அதிபர் முள்ளாமுனை வயல் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என்றார். கடந்த 81 மணித்தியாலயத்தில் 144.7 மில்லி மீற்றர் மழை மட்டக்களப்பில் பெய்துள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பதில் பொறுப்பதிகாரி எஸ். வசந்தகுமார் தெரிவித்தார். ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று (12) பிற்பகல் 5.30 வரை 1534.6 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுவரொட்டிகள், பதாகைகளை அகற்றுமாறு ஜனாதிபதி உத்தரவு

Mahinda_Posterபொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளையும், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பதாகைகள் மற்றும் கட் அவுட்களையும் வேட்பு மனு தாக்கல் செய்யும் தினமான 17 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

தனது சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட் அவுட்களை உடனடியாக அகற்றி முன் உதாரணமாக செயற்படுமாறும் ஜனாதிபதி தன்னிடம் கேட்டுக் கொண்டதாக பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார். தேர்தல் சட்ட விதிமுறைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்த தேவையான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்ததாக பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றது. தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன, பொலிஸ் சிரேஷ்ட ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் மா அதிபர் மேலும் உரையாற்றுகையில்,

1981 ஆம் ஆண்டு தேர்தல் விதிமுறையின் 15 வது பிரிவுக்கு அமைய பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட் அவுட்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்யும் தினமான எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு பின்னர் இவை காட்சிக்கு வைக்கப்படக் கூடாதென தேர்தல் சட்டம் கூறுகிறது. அந்த திகதிக்கு பின்னர் இவை பலாத்காரமாக அகற்றப்படும்.

இதற்கமைய உடனடியாக இவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்திலிருந்து இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

மயோன் முஸ்தபா ஜனாதிபதி தேர்தலில் போட்டி

ballot-muthaffa.jpgஉயர் கல்வி பிரதியமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை அபேட்சகராகப் போட்டியிட எம். எம். மயோன் முஸ்தபா தீர்மானித்து ள்ளார்.

சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற பிரதேச மக்களுக்கு தனது முடிவை அறிவிக்கும் கூட்டத்திலேயே மயோன் முஸ்தபா இந்த முடிவை தெரிவித்தார்.

மீள்குடியேறிய மக்களுக்காக கிளிநொச்சியில் பஸ் டிப்போ

buss.jpgகிளிநொச் சியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் போக்குவரத்துக்காக கிளிநொச்சி நகரில் இ.போ.ச. டிப்போவொன்று திறந்துவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை நேற்று கூறியது. முதற்கட்டமாக இந்த டிப்போவுக்கு 12 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக இ.போ.ச. பிரதி பொது முகாமையாளர் பி. ஏ. லிவ்னிஸ் தெரிவித்தார்.

முதற்கட்டமாக கிளிநொச்சி நகர பஸ் சேவை, கிளிநொச்சி – முழங்காவில், கிளிநொச்சி – பூனகரி ஊடாக நல்லூர், கிளிநொச்சி – உரித்துபுரம், கிளிநொச்சி – யாழ்ப்பாணம், கிளிநொச்சி – வவுனியா இடையிலான பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை மல்லாவியில் இ.போ.ச. உப டிப்போவொன்றும் ஆரம்பிக்கப்ப ட்டுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் கூறினார்.

அதிகாரப் பரவராக்கத் திட்ட அடிப்படையை இலங்கை இந்தியாவிடம் கையளித்தது?

கடந்த வாரம் இலங்கை உயர்மட்டக் குழுவின் புதுடில்லி விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், அவர் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின் அடிப்படை விடயங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றை இலங்கை, இந்தியாவிடம் கையளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசின் உயர்மட்டக்குழு கடந்த வாரத்தில் புதன், வியாழக்கிழமைகளில் புதுடில்லிக்கு விஜயத்தை மேற்கொண்ட வேளையிலேயே இந்த இரண்டு பக்க ஆவணம் புதுடில்லி அதிகாரத் தரப்பிடம் கையளிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரடங்கிய உயர்மட்டக்குழுவே இந்த ஆவணத்தைப் புதுடில்லியில் கையத்ததாகவும் தெரியவருகின்றது.

புதுடில்லி விஜயத்தின் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் “இலங்கையில் அரசியல் தீர்வு நோக்கிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் இரு தரப்புகளும் இணங்கிக் கொண்டன” என்று குறிப்பிடப்பட்டமை தெரிந்ததே.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஜனாதிபதி மஹிந்தவுக்கே ஆதரவு. தீர்மானத்தில் மாற்றமில்லை என்கிறார் சிவநேசதுரை சந்திரகாந்தன்

pilleyan_mahinda.jpgஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எடுத்துள்ள தீர்மானத்தில் எதுவித மாற்றமும் கிடையாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் முடிவை நாம் மாற்றியுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்து வரும் கருத்தை மறுத்துள்ள அவர் மக்களை குழப்பும் வகையில் அவை செய்தி வெளியிடுவதாக குறிப்பிட்டார். மேற்படி ஊடகங்கள் தங்களையும் குழப்பி மக்களையும் குழப்ப முயல்வதாகக் குறிப்பிட்ட அவர் தொடர்ந்து ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வெற்றிக்கு தமது கட்சி பாடுபடும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் முடிவை தமிழ் மக்கள் விடுதலை முன்னணி மாற்றிக் கொண்டுள்ளதாக சில ஊடகங்கள் கடந்த தினங்களில் செய்தி வெளியிட்டிருந்தன. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

சமூகத்தின் எதிர்காலம் குறித்து தீர்மானம் எடுக்க முடியாமல் ஹக்கீம் தடம்புரள்கிறார் – மு.கா. முன்னாள் உறுப்பினர் அப்துல் கபூர்

அம்பாறை மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்கள் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க திரவெடுத்த தோள்களோடு திரண்டு நிற்கின்றார்கள். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறுவது போன்று சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்கவோ ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கோ முஸ்லிம் சமூகம் அரசியல் சாணக்கியம் அற்றவர்கள் அல்ல. இவ்வாறு கல்முனை பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும், முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளருமான ஏ. அப்துல் கபூர் தெரிவித்துள்ளார். அப்துல் கபூர் இது விடயமாக மேலும் தெரிவிக்கையில்,

முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம். எச். எம். அஷ்ரப் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விடுதலைக்காகவும் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவுமே முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார். கால நேரத்துக்குப் பொருத்தமான வகையில் அரசியல் வியூகம் வகுத்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்களோடு பேசி முஸ்லிம் சமூகத்திற்கு உரிமைகளையும், சலுகைகளையும் பெற்றுக்கொடுத்தார்.

தென் கிழக்குப் பல்கலைக்கழம், ஒலுவில் துறைமுகம் இதற்கு நல்ல உதாரணங்களாகும். மர்ஹும் அஷ்ரபின் மறைவுக்குப் பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ரவூப் ஹக்கீம் அரசியல் வியூகம் அற்று சமூகத்தின் எதிர்காலம் கருதி தீர்மானங்களை எடுக்க முடியாமல் தடம்புரள்கிறார்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த காலம் முதல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் மக்கள் சகல விதமான மத கலாசார உரிமைகளையும் பெற்று தங்களது இருப்பையும் உறுதிப்படுத்தி வாழ்ந்து வருகிறார்கள் என கபூர் மேலும் தெரிவித்துள்ளார்.

‘வார்ட்’ தாழமுக்கம் இன்று காலை யாழ்ப்பாணத்தை கடந்து செல்லும். கடல் கொந்தளிப்புடன் காற்றின் வேகமும் அதிகரிக்கும்

rain2.jpgதிரு கோணமலைக்கு அப்பால் சுமார் 250 கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் காணப்படும் ‘வார்ட்’ தாழ முக்கம் இன்று (14ம் திகதி) அதிகாலையில் அல்லது காலை வேளையில் யாழ்ப்பாணத்தைக் கடந்து செல்லும் என்று வானிலை அவதான நிலையத்தின் பொறுப் பாளர் டி. ஏ. ஜயசிங்க ஆராய்ச்சி நேற்று தெரிவித்தார். இதன் விளைவாக வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வட மேல் மாகாணங்களில் அதிக மழை பெய்யும் எனவும் அவர் கூறினார்.

இந்தத் தாழமுக்கம் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் மன்னார் குடா கடல் பரப்பில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டிருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கடந்த வெள்ளியன்று இந்த தாழமுக்கம் திருமலையிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உருவானது.

அது நேற்று முன்தினம் முதல் நகர ஆரம்பித்தது. நேற்று நண்பகலாகும் போது திருமலைக்கு 250 கிலோ மீட்டர் தூரத்தில் காணப்பட்டது. இது இன்று அதிகாலையில் அல் லது காலை வேளையில் யாழ். குடா நாட்டை அல்லது யாழ்ப்பாணத்திற்கு அருகில் கடந்து செல்ல முடியும். இதன் காரணத்தினால் வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகா ணங்களில் காற்றின் வேகமும் அதிகரித்துக் காணப்படும். சில பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் என்றார்.

இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடுப்பிலி குறிப்பிடுகையில், திருமலைக்கு அப்பால் தாழமுக்கம் காணப்படு வதால் இது குறித்து வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, வட மேல் மாகாண மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தேவை யான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இம் மாகாணங்களில் வாழுகின்ற வர்களுக்கு எஸ். எம். எஸ். மூலமும் இத்தாழமுக்கம் குறித்து அறிவுறுத்தப்பட் டுள்ளது.

நல்லமலை ஸ்பிரிங்வெலி தோட்டத்தில் பாரிய மண்சரிவு; 150 பேர் இடம்பெயர்வு

பதுளை நமுனுகுல பிரதேசத்திலுள்ள நல்ல மலை கிராம சேவகர் பிரிவிலிருக்கும் ஸ்பிரிங்வெலி தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இம்மண்சரிவு காரணமாக 35 தோட்டக் குடியிருப்புக்களில் வசித்து வந்த 150 பேர் இடம்பெயர்ந்து நல்லமலை வித்தியாலயத்தில் தங்கி இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் நிமல் பியசிறி பண்டார நேற்றுத் தெரிவித்தார். கடந்த சில தினங்களாக இப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாகவே இம்மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. என்றாலும் இரண்டு தோட்டக் குடி யிருப்புக்கள் முழுமையாக சேதமடைந்தி ருப்பதாகவும், ஏனையவற்றில் வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

இம்மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடி நிவாரணத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார். சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்டுள்ள இம்மண்சரிவு சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வரை இடம்பெற் றுள்ளது என்றும் அவர் கூறினார்.

கொழும்பு – இத்தாலி நேரடி விமான சேவை 16 இல் ஆரம்பம்

air-lanka.jpgகொழும்பில் இருந்து இத்தாலிக் கான நேரடி விமான சேவை நாளை மறுதினம் (16) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்தது.

இலங்கையில் அமைதியான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதால் இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் அங்குள்ள இலங் கையர்கள் நேரடியாக இலங்கைக்கு வருகை தரும் வகையில் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. வாரத்தில் இரு தினங்கள் புதிய விமான சேவைகள் நடைபெற உள்ளன.